என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sexual harassment"

    • பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தார்
    • மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் கொல்லேகலில் உள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 13 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பேச முடியாததால், அவர்களில் நிலையைப் பயன்படுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

    • அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.
    • தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரேசிலிய பெண்ணை பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூருவில் மாடலிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரேசிலிய இளம் பெண், மூன்று சக ஊழியர்களுடன் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

    கடந்த சனிக்கிழமை, அந்தப் பெண் ஒரு பிரபலமான செயலி மூலம் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார்.

    பொருட்களை எடுத்து வந்த டெலிவரி ஊழியர் குமார் (21) வாசலில் வைத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார். பயந்துபோன அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு தப்பினார். இந்த சம்பவம் குறித்து அப்பெண் உடன் வசிக்கும் மற்றொரு பெண்ணிடம் கூறினார். அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.

    இதையடுத்து, முதலாளி கார்த்திக் விநாயக் அளித்த புகாரின் பேரில், ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குமாரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

    பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிகெட் வீராங்கனைகளிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்துகொண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

    • மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக விஜயா உள்ளார். இங்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் வேலை பார்க்கின்றனர். கரம்பயம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 53) என்பவரும் 5-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிகிறார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளி வேலையின் போது 5-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாஸ்கர் தனது அருகில் நின்று பாடத்தை படிக்கும்படி கூறியதாகவும், அந்த மாணவி படித்துக் கொண்டிருக்கும் போது அவர் மீது கையை வைத்து தவறாக நடந்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது தோழி களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் சென்று இதுகுறித்து கேட்டு முறையிட்டுள்ளனர்.

    ஆனால் அவர் இதுகுறித்து மேலதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் பாஸ்கர் இதேபோல், 5-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயாவையும் கைது செய்தனர். தொடர்ந்து, 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
    • ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது.

    மும்பை:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகியஅணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.

    கடந்த 25-ந்தேதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தூரில் விளையாடின.

    இந்தூருக்கு சென்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த 23-ந்தேதி (வியாழக்கிழமை)ரேடிசன் புளூ ஓட்டலில் இருந்து ஜாகிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து சென்ற போது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்டு பாலியல் அத்துமீறல் செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மானபங்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நவிமும்பையில் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், அவர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் செல்லும் இடங்களுக்கு போலீசார் பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்
    • நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் தற்கொலை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.

    திருவனந்தபுரம் மத்திய ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என்று அடையாளம் காணப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.

    இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த பதிவில், "நான் தற்கொலை செய்து கொள்வது பெண்ணாலோ, காதல் விவகாரத்தாலோ, கடன் பிரச்சனையாலோ அல்லது அது போன்ற எதனாலோ அல்ல. எனது பதட்டம் மற்றும் மனச்சோர்வு காரணமாக நான் இதைச் செய்கிறேன்.

    எனக்கு ஒரு நபர் மற்றும் ஒரு அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் கோபம் இல்லை. அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம்), என் தந்தை (மிகவும் நல்ல மனிதர்) என்னை அதில் சேரச் செய்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன்.

    ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்" என்று அனந்து எழுதியுள்ளார்.  

    அனந்துவின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் கோரியுள்ளன.

    சிபிஐ(எம்) இளைஞர் பிரிவான டிஒய்எஃப்ஐ மாநில செயலாளர் வி.கே. சனோஜ் பேசுகையில், "அன்று அவர் வெளியிட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்ஸின் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்துகிறது.

    குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று கூறினார்.

    அனந்து ஏற்கனவே மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். அனந்துவின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு, அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் என்று எலிகுளம் பஞ்சாயத்துத் தலைவர் ஜிம்மி ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆர்.எஸ்.எஸ் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. இயற்கைக்கு மாறான மரணமாக மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.    

    • பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்து போராடி வருகின்றனர்.
    • இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத படியே பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது. அதில் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும், நிர்வாண புகைப் படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் துறைத் தலைவர் மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுஉள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துணைவேந்தர் பிரகாஷ்பாபு, பதிவாளர் ரஜினிஸீகுப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    மாலையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் நீடித்தது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

    போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதனால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.   

    • தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
    • இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர்.

    டெல்லியில் பிரபல சாமியாராக வளம் வந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.

    வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்தின் இயக்குனராக இருந்த அவர் மீது, ஆசிரமத்தின் கீழ் இயங்கும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 17 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர்.

    பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) ஸ்காலர்ஷிப் உடன் முதுநிலை டிப்ளமோ பயின்று வந்த அம்மாணவிகளை அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தனது இச்சைக்கு இணங்க வைக்க பல்வேறு வழிகளில் முயன்றுள்ளார்.

    சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சாமியார் எவ்வாறு மாணவிகளை கட்டாயப்படுத்தினார் என்பது குறித்து அந்த கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட  முன்னாள் மாணவர் ஒருவர் முன்வந்து பொதுவெளியில் பேசியுள்ளார். 

    செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சாமியார், மாணவிகளை இலவசமாக வெளிநாட்டு பயணம், ஐபோன்கள், சொகுசு கார்கள், லேப்டாப்களை வழங்குவதாக அட்மிஷன் போடும் சமயத்தில் இருந்தே ஆசை காட்டத் தொடங்குவார்.

    புதிய மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து வகுப்புகளுக்கு வரத் தொடங்கியதும் அவர்களில் யாரை குறிவைப்பது என்ற செயல்முறை தொடங்கும்.

    அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிக மதிப்பெண்கள், வெளிநாட்டு இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள், பெரிய நிறுவனங்களில் பிளேஸ்மென்ட் வாய்ப்புகள் ஆகியவை வழங்கப்படும். இதை ஏற்று ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை கல்லூரியில் ஒவ்வொரு நாளும் கடினமானதாக மாறும்.

    இந்த மாணவிகள் இரவு தங்குவதற்கு கட்டப்படுத்தப்படுவர். யாருடன் பேச அனுமதிக்கப்படாமல் 24 மணிநேரமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

    இருந்தும் அடம் பிடிக்கும் சில பெண்கள் காட்டமாக நடத்தப்பட்டு கல்லூரியில் இருந்தே நீக்கப்படுவார்கள். அந்த பெண்களின் பெற்றோர்களுக்கும் அழுத்தம் தரப்படும்.

    பெண்களை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்று கேட்டால், சைத்னயானந்த சரஸ்வதியே தனிப்பட்ட முறையில் இந்த செயல்முறையில் ஈடுபடுவார்.

    ஒவ்வொரு மாணவியிடமும் தனித் தனியே சுவாமி பேசுவார். இதன் பின் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவரே சில சமயம் பாடம் பெண்களுக்கு தனியே பாடம் எடுக்க வருவார்.

    இந்த சமயத்திலும் அவர் தனக்கேற்ற மாணவிகளை தேர்ந்தெடுப்பார். இதன் பின் சுவாமியால் தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.

    இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர். அவர்கள் சாமியார் அளித்த வெளிநாடு பயணம் உள்ளிட்ட சலுகைகளை ஏற்றுக்கொண்டவர்கள்.

    2016 லேயே சாமியார் மீது ஒரு ஜூனியர் மாணவி போலீசில் புகார் அளித்தார். ஆனால் பின்னர் சாமியாரின் தரப்பு வெளிநாட்டில் வேலை, unlimited ஷாப்பிங் ஆகிய ஆசை காட்டி அவரை சமரசம் செய்ய முயன்றனர்.

    அந்த பெண்ணை ஹாஸ்டலில் அடைத்து வைத்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் செய்தனர்.

    அப்பெண்ணை சாமியாருடன் 2 நாள் மதுரா பயணம் மேற்கொள்ள நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர். அந்த பெண் பயந்து தனது வீட்டுக்கு ஓடிச் சென்றார். ஆனால் சாமியாரின் ஆட்கள் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். பெண்ணின் தந்தை தலையிட்டதை அவர்கள் அங்கிருந்து அகன்றனர்.

    மாணவிகளின் ஒரிஜினல் டாகுமெண்ட்களை அட்மிஷனின் போதே வாங்கி வைத்துக்கொள்வார்கள். இதை வைத்து சாமியார் மாணவிகளை மிரட்டுவார். கல்லூரியில் உள்ள 170 சிசிடிவி கேமராக்களும் சாமியாரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அவர் மீது தற்போது எழுந்துள்ள அனைத்து புகார்களும் முற்றிலும் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் சாமியார் பல அரசியல்வாதிகளுடன் இருப்பதுபோல் போலி புகைப்படங்களை வைத்துக்கொண்டும், சொகுசு கார்கள் வைத்துக்கொண்டும், தன்னை அமெரிக்க தூதர் என கூறிக்கொண்டும் ஏமாற்றி வந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

    • உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க்.
    • எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றது.

    உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் மற்றும் எக்ஸ் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.

    அண்மையில் எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை முட்டாள்தனமானவை, ஆதாரமற்றமவை,போலி என்று எரால் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    • அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சலிட்டுள்ளார்.
    • ஆஷிஷ் குப்தாவை ரயில்வே காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.

    ரெயிலில் பெண் பயணி ஒருவரிடம் ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி டெல்லி-பிரயாக்ராஜ் ரெயிலில் நடந்தது. முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா தவறாக நடந்து கொண்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சலிட்டுள்ளார். மேலும், கான்ஸ்டபிளை கண்டித்து அவரை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தாவை ரயில்வே காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.  

    • 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் சசிகுமார் ஈடுபட்டுள்ளார்.
    • மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

    தற்போது பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சசிகுமார் பாளையங்கோட்டையில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர்களது குடும்பத்தினருடன் அவர் நெருங்கி பழகி வந்த நிலையில் உறவினரின் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது உறவினர் குடும்பத்தினருக்கு தகவல் எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.

    இந்நிலையில் அந்த மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அப்போதுதான் அந்த மாணவிக்கு சசிகுமார் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த விபரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனிடையே அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவிகளிடம் தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்த அந்த மாணவி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக சக மாணவிகளின் அறிவுறுத்தலின் பேரில் 'ஒன் ஸ்டாப்' சென்டரை தொடர்பு கொண்ட அந்த மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் நலன் சார்ந்த அதிகாரிகள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர்.

    இதையடுத்து சிறுமியிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு ஏட்டு சசி குமாரை கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவியின் தாயாருக்கும், தலைமை காவலர் சசி குமாருக்கும் நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே மாணவியின் புகாரை போலீசில் தெரிவிக்க அவரது தாயார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகையை திருமங்கலம் அழைத்து வந்து விசாரிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • நடிகை மினு கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார்.

    14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி 4 பேர் அத்து மீறியுள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமி புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.

    கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகையை திருமங்கலம் அழைத்து வந்து விசாரிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி தற்போது நடிகை மினு கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால் வழக்கு சென்னை திருமங்கலம் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
    • போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.

    "ஐ லவ் யூ" என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் "ஐ லவ் யூ" என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

    அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

    இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ் அகர்வால், "ஐ லவ் யூ" என்று ஒருமுறை மட்டும் சொல்வது, தொடர்ந்து அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் நடத்தை இல்லாமல், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.

    அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா வெர்சஸ் சதீஷ் (2021) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் ரீதியான சைகை பாலியல் தொல்லையின் வரம்பிற்குள் வர வேண்டுமானால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதையடுத்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை நீதிபதி உறுதி செய்தார். 

    ×