என் மலர்
நீங்கள் தேடியது "சாமியார்"
- தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
- இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர்.
டெல்லியில் பிரபல சாமியாராக வளம் வந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.
வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்தின் இயக்குனராக இருந்த அவர் மீது, ஆசிரமத்தின் கீழ் இயங்கும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 17 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) ஸ்காலர்ஷிப் உடன் முதுநிலை டிப்ளமோ பயின்று வந்த அம்மாணவிகளை அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தனது இச்சைக்கு இணங்க வைக்க பல்வேறு வழிகளில் முயன்றுள்ளார்.
சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சாமியார் எவ்வாறு மாணவிகளை கட்டாயப்படுத்தினார் என்பது குறித்து அந்த கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவர் ஒருவர் முன்வந்து பொதுவெளியில் பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சாமியார், மாணவிகளை இலவசமாக வெளிநாட்டு பயணம், ஐபோன்கள், சொகுசு கார்கள், லேப்டாப்களை வழங்குவதாக அட்மிஷன் போடும் சமயத்தில் இருந்தே ஆசை காட்டத் தொடங்குவார்.
புதிய மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து வகுப்புகளுக்கு வரத் தொடங்கியதும் அவர்களில் யாரை குறிவைப்பது என்ற செயல்முறை தொடங்கும்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிக மதிப்பெண்கள், வெளிநாட்டு இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள், பெரிய நிறுவனங்களில் பிளேஸ்மென்ட் வாய்ப்புகள் ஆகியவை வழங்கப்படும். இதை ஏற்று ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை கல்லூரியில் ஒவ்வொரு நாளும் கடினமானதாக மாறும்.
இந்த மாணவிகள் இரவு தங்குவதற்கு கட்டப்படுத்தப்படுவர். யாருடன் பேச அனுமதிக்கப்படாமல் 24 மணிநேரமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
இருந்தும் அடம் பிடிக்கும் சில பெண்கள் காட்டமாக நடத்தப்பட்டு கல்லூரியில் இருந்தே நீக்கப்படுவார்கள். அந்த பெண்களின் பெற்றோர்களுக்கும் அழுத்தம் தரப்படும்.
பெண்களை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்று கேட்டால், சைத்னயானந்த சரஸ்வதியே தனிப்பட்ட முறையில் இந்த செயல்முறையில் ஈடுபடுவார்.
ஒவ்வொரு மாணவியிடமும் தனித் தனியே சுவாமி பேசுவார். இதன் பின் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவரே சில சமயம் பாடம் பெண்களுக்கு தனியே பாடம் எடுக்க வருவார்.
இந்த சமயத்திலும் அவர் தனக்கேற்ற மாணவிகளை தேர்ந்தெடுப்பார். இதன் பின் சுவாமியால் தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர். அவர்கள் சாமியார் அளித்த வெளிநாடு பயணம் உள்ளிட்ட சலுகைகளை ஏற்றுக்கொண்டவர்கள்.
2016 லேயே சாமியார் மீது ஒரு ஜூனியர் மாணவி போலீசில் புகார் அளித்தார். ஆனால் பின்னர் சாமியாரின் தரப்பு வெளிநாட்டில் வேலை, unlimited ஷாப்பிங் ஆகிய ஆசை காட்டி அவரை சமரசம் செய்ய முயன்றனர்.
அந்த பெண்ணை ஹாஸ்டலில் அடைத்து வைத்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் செய்தனர்.
அப்பெண்ணை சாமியாருடன் 2 நாள் மதுரா பயணம் மேற்கொள்ள நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர். அந்த பெண் பயந்து தனது வீட்டுக்கு ஓடிச் சென்றார். ஆனால் சாமியாரின் ஆட்கள் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். பெண்ணின் தந்தை தலையிட்டதை அவர்கள் அங்கிருந்து அகன்றனர்.
மாணவிகளின் ஒரிஜினல் டாகுமெண்ட்களை அட்மிஷனின் போதே வாங்கி வைத்துக்கொள்வார்கள். இதை வைத்து சாமியார் மாணவிகளை மிரட்டுவார். கல்லூரியில் உள்ள 170 சிசிடிவி கேமராக்களும் சாமியாரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அவர் மீது தற்போது எழுந்துள்ள அனைத்து புகார்களும் முற்றிலும் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சாமியார் பல அரசியல்வாதிகளுடன் இருப்பதுபோல் போலி புகைப்படங்களை வைத்துக்கொண்டும், சொகுசு கார்கள் வைத்துக்கொண்டும், தன்னை அமெரிக்க தூதர் என கூறிக்கொண்டும் ஏமாற்றி வந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் கட்டாயப்படுத்தினர்.
- மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலம் அளித்தனர்.
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்துக்கு சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இயக்குநராக உள்ளார்.
இந்த ஆசிரமத்தின் கீழ் ஸ்ரீ சாரதா இந்திய பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை (EWS) சேர்ந்த மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில், முதுநிலை டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர்.
அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ஆபாசமான வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புதல், மற்றும் தேவையற்ற உடல் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை சாமியார் மீது மாணவிகள் சுமத்தியுள்ளனர்.
சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரை பதவிநீக்கம் செய்து ஆசிரம நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
- பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறினார்.
- ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (ரூ.100 கோடி) அவர் பெற்றுள்ளார்.
தாய்லாந்தில், புத்த மத துறவிகளுடன் பாலியல் உறவு வைத்து, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறியபோது காவல்துறை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியது.
`மிஸ் கோல்ஃப்' (Ms Golf) என்று அடையாளம் காணப்பட்ட அந்த பெண், கடந்த ஆண்டு அந்த துறவியுடன் உறவு வைத்து, பின்னர் அவரது குழந்தையை சுமப்பத்தாக கூறி 70 லட்சம் பாட்டுக்கு மேல் குழந்தை ஆதரவு தொகை கோரியது தெரியவந்தது. இதேபோல் ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (ரூ.100 கோடி) அவர் பெற்றுள்ளார்.
Ms Golf வீட்டை சோதனை செய்தபோது, 80,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்து துறவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என காவல்துறை தெரிவித்துள்ளது.
- இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது
- லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .
இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக் கல்வி ஊழல் ஒன்றை சிபிஐ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த மோசடியில், புகழ்பெற்ற சாமியார் ரவி சங்கர் மகராஜ், முன்னாள் கல்வித் தலைவர் டி.பி. சிங் மற்றும் அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட 34 சக்திவாய்ந்த நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்க இவர்கள் பெரும் தொகை லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
சாமியார் ரவி சங்கர் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்குவதற்காக ரூ.55 லட்சம் வாங்கிய மூன்று மருத்துவர்களை சிபிஐ கைது செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
தகவல்களின்படி, இந்த மோசடியின் மையம் மத்திய சுகாதார அமைச்சகத்திலேயே இருந்திருக்கிறது. அங்கிருந்த எட்டு அதிகாரிகள் ரகசிய கோப்புகளைப் புகைப்படம் எடுத்து, ஆய்வு தேதிகள் மற்றும் அதிகாரிகள் பெயர்களை கல்லூரி நிர்வாகங்களுக்கு பெரும் லஞ்சம் பெற்று கசியவிட்டுள்ளனர்.
உதாரணத்திற்கு, ஒரு பல்கலைக்கழக பதிவாளர் மயூரி ராவல், ரகசிய ஆய்வு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள ரூ.25-30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று இந்த மோசடி சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் நடந்துள்ளது.
கல்லூரிகள், ஆய்வாளர்களை ஏமாற்ற போலி ஆசிரியர்களை நியமித்தல், போலி பயோமெட்ரிக் வருகைப் பதிவேடுகளை உருவாக்குதல், போலி நோயாளிகளைக் காட்டுதல் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளன.
இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் போலி கைரேகை வருகைக்கு ரப்பர் விரல்கள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.
லஞ்சப் பணம் ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி பெற்ற லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ராஜஸ்தானில் ரூ.75 லட்சம் மதிப்பில் அனுமான் கோயில் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது .
இது இந்தியாவின் மிக மோசமான மருத்துவக் கல்வி ஊழல்களில் ஒன்று என்று சிபிஐ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
இதுவரை 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு கல்லூரி இயக்குனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- துஷ்ட சக்திகளின் தாக்கத்தை நீக்க சடங்குகள் செய்வதாக ஏமாற்றினார்.
- அங்கு, இரவு வரை சிறுமிக்கு சடங்குகளைச் செய்வது போல் நடித்தார்.
ராஜஸ்தானில் தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வளம் போலி சாமியார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில், தாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு வளம் வந்த பிரஹலாத் மேஹர் (41) என்பவர், சிறுமியை கடத்தி மூன்று நாட்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, மேஹர், சிறுமியின் குடும்பத்திடம், அவளுக்கு ஏற்பட்ட துஷ்ட சக்திகளின் தாக்கத்தை நீக்க சடங்குகள் செய்வதாகவும், குடும்பக் கடன்களைத் தீர்க்க உதவுவதாகவும் உறுதியளித்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஜூன் 22 அன்று ராய்ப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து
அங்கு, இரவு வரை சிறுமிக்கு சடங்குகளைச் செய்வது போல் நடித்தார். அடுத்த நாள் ஜூன் 23 காலை சாமியாரும் சிறுமியும் அந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். கடந்த வாரம் ஜூன் 26 ஆம் தேதி அஜ்மீர் மாவட்டத்தில் சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமி கடத்தப்பட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக சாமியாரால் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதன்பின் சாமியார் திங்களன்று கைது செய்யப்பட்டார். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
- 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார்.
- பாலியல் தொழிலாளர்கள் உட்பட பல பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில், 29 வயது சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தம்தார் (29) 'தெய்வீக சக்திகள்' இருப்பதாக கூறி பலரை, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்களை ஏமாற்றினார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, போலி பாபா பீம்ராவ் ஆன்மீகம் என்ற போர்வையில் பாவ்தான் பகுதியில் செயல்பட்டார். தெய்வீக சக்திகளைப் பெற்றதாகக் கூறி, பக்தர்களிடம் "நீங்கள் நான்கு முதல் ஐந்து மாதங்களில் இறந்துவிடுவீர்கள்" என்று அவர்களை ஏமாற்றி, மனதளவில் பலவீனப்படுத்தினார்.
புனித மாந்திரீகம் செய்வதாகக் கூறி, பக்தர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் தொலைபேசிகளைக் கேட்பார். பின்னர் அவர் 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் GPS ஆகியவற்றை தொலைவிலிருந்து போலி பாபா அணுக முடிந்தது.
இந்த செயலியைப் பயன்படுத்தி, போலி பாபா பக்தர்களை அழைத்து, அவர்களின் உடைகள், இருப்பிடம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரிப்பார். இதன் அவர் மீதான அவர்களின் நம்பிக்கையை மேலும் வளர்ப்பார்.
அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, மரணத்திலிருந்து தப்பிக்க ஒரு தீர்வாக காதலி அல்லது பாலியல் தொழிலாளியுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு சில இளம் ஆண் பக்தர்களுக்கு பாபா அறிவுறுத்தினார்.
அவர்களின் மொபைல் போன்களை குறிப்பிட்ட கோணங்களில் வைக்க சொல்லி, அந்தரங்க தருணங்களை தொலைபேசி கேமரா மூலம் பார்த்து பதிவு செய்து அதை ரசியுள்ளார் பாபா.
இளம் பக்தர்களில் ஒருவர் தனது தொலைபேசி தொடர்ந்து சூடாகி வருவதைக் கவனித்தார். அவர் அதை ஒரு நண்பரிடம் கொடுத்தார், அவர் அதை மடிக்கணினியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து சந்தேகத்திற்கிடமான மறைக்கப்பட்ட செயலியைக் கண்டுபிடித்தார்.
யாரோ ஒருவர் தொலைபேசியை ரிமோட் மூலம் இயக்குவது உறுதி செய்யப்பட்டது. பாபா மட்டுமே சமீபத்தில் தனது தொலைபேசியைக் கையாண்டதாக பாதிக்கப்பட்டவர் நினைவு கூர்ந்தார். இதன்மூலம் ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பாபா மீது 3 புகார்கள் வந்தன.
போலி பாபா தாம்தார் கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் மகாராஷ்டிரா நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, அகோரி நடைமுறைகள் மற்றும் சூனியம் தடுப்புச் சட்டம், 2013 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர்.
இந்த வருடம், நாட்டின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஸ்வாமி பிரதிபாந்தா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
பாரத் சேவாஸ்ரம சங்கத்தின் முர்ஷிதாபாத் பிரிவில் பிரதிபாந்தா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆசிரமத்தின் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியும் பின்னர் மிரட்டியும் கடந்த 2013 முதல் தன்னை பலமுறை பிரதிபாந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2012 டிசம்பரில் பிரதிபாந்தாவை சந்தித்தார். பள்ளியில் வேலை தருவதாக உறுதியளித்து அவரை ஆசிரம விடுதியில் தங்க வைத்துள்ளார். பின்னர் தினந்தோறும் அப்பெண்ணை 5வது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அப்பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவதாக கூறி விடுதியிலிருந்து அனுப்பி வைத்தார். இடையில் 2013 இல் அப்பெண்ணை ஆசிரம பள்ளி ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.
அதை அப்பெண் எதிர்த்தபோதும் மருத்துவர் மற்றும் ஆசிரம ஊழியரகள் முன்னிலையில் அவரை மிரட்டடி அதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதுபோல முர்ஷிதாபாத்தில் உள்ள ஆசிரமத்தின் வெவ்வேறு கிளைகளுக்கும் அவரை அழைத்துச்சென்று வன்கொடுமைக்கு செய்து வந்துள்ளார். தான் மனரீதியாக உடைந்த நிலையில் இருந்து வந்தேன் என்று அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி அப்பெண் சாமியாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரை ஜூன் 13 இரவு பெராபூர் என்ற இடத்துக்கு வரச்சொல்லியுள்ளார்.
அங்கு சென்ற தன்னை 2 நபர்கள் அணுகி, மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர் என்று அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இது எல்லாம் தன்மீதான அவதூறு என பிரதிபானந்தா மறுத்துள்ளார்.
- போதையில் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சாமியார் பொதுமக்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
கிரிவலம் செல்லும் பக்தர்களின் முன்னிலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படும் நிலையில் இன்று சாமியார் ஒருவர் கஞ்சா போதை தலைக்கேறி அங்கிருந்து நடைபாதை கடைகளை அடித்து நொறுக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து கை, கால்களை கட்டிபோட்டனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் பொதுமக்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனைகளை கட்டி வருவதாகவும் மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதை தலைக்கேறிய லாரி டிரைவர்ஒருவர் ஆடைகளை கலைந்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் முன் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தற்போது சாமியார் ஒருவர் போதையில் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
- ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர் தாஸ், போலீசார் தனக்கு தொல்லை கொடுத்ததாலேயே, இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் 80 வயது முதியவர் ராம் சரன் தாஸ் காணாமல் போன வழக்கில் போலீசார் ராம் சங்கர் தாஸ் மீது சில தினங்களுக்கு முன்பு தான் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ராம் சங்கர் தாஸ் இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார்.
இதனால் ராம் சங்கர் தாஸ்-ஐ தேடிய போலீசார், அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது ராம் சங்கர் தாஸ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மேலும் தற்கொலையை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ராம் சங்கர் தாஸ், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் கான்ஸ்டபில் மீது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கோட்வாலி காவல் நிலைய அதிகாரி மனோஜ் சர்மா கூறும் போது, "பூசாரி ராம் சங்கர் தாஸ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். போதை பழக்கம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் போலீசார் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்," என்று தெரிவித்தார்.
மேலும், இரண்டு நாட்களாக விசாரணைக்கு ராம் சங்கர் தாஸ் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரது அறைக்குள் சென்றோம். அங்கு அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது, என்று அவர் தெரிவித்தார்.
- சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார்.
- சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார்
சாமியார்கள் பலர் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு விதமான வேடங்களில் வாக்கு சொல்லும் சம்பவங்கள் ஏராளம்.
ஆனால் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... எனக் கூறிக்கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே பொதுமக்களை ஏமாற்றி தெலுங்கானாவை ஒரு கலக்கு கலக்கி உள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த போலி சாமியார் சந்தோஷ் குமார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கு 2 மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர்.
போலி சாமியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலிருந்து 2 மனைவிகளுடன் தெலுங்கானாவிற்கு வந்தார்.
அப்போது சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறினார். மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறினார்.
மேலும் 5 தலைகள் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் விஷ்ணுவை போல் படுத்துக் கொண்டு தனது 2 மனைவிகள் கால் அமுத்தி விடுவது போன்றும், திருப்பதி ஏழுமலையான் போன்று வேடம் அணிந்தும் நான் கடவுள் என கூறி வந்தார்.
சுவாமிஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டார கிராம மக்களிடையே சிலர் தகவல் பரப்பினார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கொடிதொட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆவேசமான சாமியார் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... என கத்தினார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
சித்தர்களின் பூமியான திருவண்ணாமலையில் ஏராளமான சாமியார்கள் உள்ளனர். அதில் ஒரு சிலர் பொதுமக்களை எளிதில் கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு கோமாளி வேலைகளில் ஈடுபட்டு காமெடி சாமியார்களாக மாறி உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது போலி சாமியார் சந்தோஷ் குமார் இடம் பிடித்துள்ளார்.
மகாவிஷ்ணு வேடத்தில் 2 மனைவிகளை காலடியில் அமர வைத்துக் கொண்டு இருக்கும் படங்கள் வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் சினிமா பாடல்கள் பின்னணியில் காமெடியாக பரவ விட்டுள்ளனர்.
இந்த வீடியோ படங்கள் திருவண்ணாமலை பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவங்க வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு... மொத்தமும் திருவண்ணாமலை பக்கம் இருந்தே வருவீங்களா... எங்கள பாத்தா என்ன வேற மாதிரி தெரியுதா என சமூக வலைதளங்களில் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
தெலுங்கானாவை கலக்கிய போலி சாமியார் தற்போது காமெடி போர்வையில் திருவண்ணாமலையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
- ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.
- காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.
சென்னை:
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது மனைவி வாணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காதல் திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த ரமேஷ் மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் தலையில் கல்லை தூக்கி போட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இதனால் ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.
போலீசார் தீவிரமாக தேடியும் ரமேஷ் சிக்காமல் ஊர் ஊராக சென்று பதுங்கினார். இதன் பின்னர் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு தாடி வளர்க்க தொடங்கினார். பின்னர் காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.
இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ரமேஷை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சாமியாராக மாறிய ரமேஷை பிடிக்க களத்தில் இறங்கினர்.
திருவண்ணாமலை, வடலூர், சதுரகிரி உள்பட சாமியார்கள் அதிகமாக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று ரமேஷ் காவி உடையில் அடையாளம் மாறிப்போய் யாசகம் கேட்டு அந்த பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் ரமேஷ், தனது நண்பரான இன்னொரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து நண்பரின் செல்போனுக்கு 'கூகுள் பே' மூலமாக பணம் அனுப்பியது தெரிய வந்தது. இந்த பணத்தை தனது மகன்களிடம் கொடுத்து விடுமாறு நண்பரிடம் போன் செய்து ரமேஷ் கூறியதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சாமியாரின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்.
இந்நிலையில் ரமேஷ் சாமியார் வேடத்தில் சென்னைக்கு வந்திருப்பதும், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆசிரமத்துக்கு செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீசார் கண்காணித்தனர். அப்போது இன்று அதி காலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதிக்கு வந்த ரமேஷை இன்ஸ்பெக் டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
- அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி பரிசு
- உதயநிதி ஸ்டாலினின் படத்தை வாளால் கிழிப்பது போன்றும் சமூக வலைதளங்களில் படம் வெளியானது
நாகர்கோவில் :
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹான்ஸ் ஆச்சார்யா சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை எடுத்தால் ரூ.10 கோடி தருவதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை வாளால் கிழிப்பது போன்றும் சமூக வலைதளங்களில் படம் வெளியானது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் நிர்வாகிகள் இன்று வடசேரி போலீசில் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இரும்பு வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் அவருடைய தலையை வெட்டி கொண்டு வருவதற்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த பரமஹான்ஸ் ஆச்சார்யா பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரின் மீது பொதுவெளியில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த பரமஹான்ஸ் ஆச்சார்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.






