என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள்"

    • கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்.
    • காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    விழுப்புரத்தில் நூலக கட்டிடத்தை வி.சி.க. பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ரவிக்குமார் திறந்து வைத்தார். அப்போது 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ரவிக்குமார் பதில் அளித்ததாவது:-

    * கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்

    * காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    * 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்பதற்கான வாய்ப்பு இல்லை.

    * தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்

    * கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம்.

    * 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் விசிக-வுக்கு திமுக இடங்கள் வழங்கும்.

    இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.

    • மாவட்டச் செயலாளருக்கு தெரியாமல் கட்சி நிர்வாகி அழைத்து சென்றதாக தெரிகிறது.
    • இதனால் மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது அவரை கட்சி நிர்வாகி ஒருவர் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

    அப்பேது மாவட்ட செயலாளர் தனக்கு தெரியாமல் அழைத்துச் சென்றதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மாவட்ட செயலாளருடன் அந்த நிர்வாகியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணியமாட்டான். விலைபோக மாட்டான்.
    • அம்பேத்கர் லட்சம் மடங்கு ஹீரோ. லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர்.

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் பிரமாண்ட மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் நீல நீரமாக காட்சி அளித்தது.

    பேரணி விழா மேடையில் திருமாவளவன் பேசியதாவது:-

    * இப்போது நாங்கள் ஆடுகளுமும் அல்ல.. இழிச்சவாய கூட்டமும் அல்ல... சீறிப்பாயும் விடுதலை சிறுத்தைகள்.

    * அடங்க மறுப்போம், அத்து மீறுவோம். திமிறி எழுவோம். திருப்பி அடிப்போம். வீர வணக்கம் வீர வணக்கம்.

    * வேரறுப்போம் வேரறுப்போம் சனாதனத்தை வேரறுப்புாம். வென்றெடுப்போம் வென்றெடுப்போம். சமத்துவத்தை வென்றொடுப்போம்.

    * மோடி அரசே, மோடி அரசே திரும்பப்பெறு திரும்பப்பெறு. வக்பு சட்டத்தை திரும்பப்பெறு. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறு.

    * பரப்பாதே, பரப்பாதே முஸ்லிம்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதிர்ப்பு அரசியலை பரப்பாதே. சிதைக்காதே சிதைக்காதே அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்காதே.

    * சனாதன சக்திகளா, விடுதலை சிறுத்தைகளா. விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம் மதவாத சக்திகளை, சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம்.

    * இந்த பேரணி தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலில் பேரதிர்வை உருவாக்குகின்ற பேரணி.

    * யார் எந்த கூட்டணி என தேர்தல் கணக்குகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. எத்தனை இடங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. யார் முதலமைச்சர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை.

    * விடுதலை சிறுத்தைகள் திமுக-விடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது... அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகளே.. தமிழ்நாட்டின் அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள். இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலை சிறுத்தைகள்.

    * முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை. துணை முதலமைச்சர் பதவி?... எங்களது தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் பிரதமரை கைப்பற்றுங்கள் என வழிகாட்டியிருக்கிறார். அதுதான் அதிகாரமிக்க பதவி, அதுதான் அரசு.

    * தலித்கள், பழங்குடியின மக்கள், நாட்டின் பூர்வீக குடிமக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். இதுதான் அம்பேத்கர் கண்ட கனவு.

    * எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். திருமாவளவனுக்கு தெரியும். 25 வருடம் இந்த தில்லுமுல்லு அரசியலில் தாக்குபிடித்தவர்கள் விடுதலை சிறுத்தைகள். எங்களுக்கு யாருடைய அட்வைஸும் தேவையில்லை.

    * தலித்துகள் இந்துக்களாக இருந்தாலும் கூட தலித்களின் உரிமைகளுக்காக போராடாதவர்கள்தான் பிஜேபிகாரர்கள்.

    * அந்த பிஜேபி-யின் செயல்திட்டத்தை நிறைவேற்ற பலபேர் பல வேசம் போடுகிறார்கள். சில பேர் சினிமா புகழோடு வந்திருக்கிறார்கள். ஹீரோ என்ற வேசத்துடன வந்திருக்கிறார்கள். எஸ்.சி. இளைஞர்கள் எல்லாம் சினிமோவோடு, சினிமா ஹீரோக்களுடன் சென்று விடுவார்கள் எனச் சொல்கிறார்கள். நடக்குமா?

    * அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணியமாட்டான். விலைபோக மாட்டான். அம்பேத்கரின் அரசியலே வேற.. அதை அவர்கள் புரிந்து கொள்ள முடியாது.

    * இன்றைக்கும் அம்பேத்கர் என்று சொன்னால் கோடி மக்கள் குரல் எழுப்புவார்கள். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் குரல் எழுப்புவார்கள். கோஷம் எழுப்புவார்கள். சினிமா காரர்களுக்கு அந்தந்த ஏரியாவில் மட்டும் கோஷம் வரும். அம்பேத்கர் லட்சம் மடங்கு ஹீரோ. லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர் அம்பேத்கர்.

    * அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்ட என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகள்.... ஒரு வாக்கு சிதறாது.

    * சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் வெற்றி. சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் ஆட்சி. அதை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்கள் விடுதலை சிறுத்தைகள்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    • திருச்சியில் வருகிற 31அம் தேதி பேரணி நடைபெற இருந்தது.
    • மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என திருமாவளவன் அறிவிப்பு.

    திருச்சியில் வருகிற 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    "மதச்சார்பின்மை காப்போம்" என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
    • கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவடத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன், ஒரு தேர்தலிலும் போட்டியிடாத நடிகர் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் என்று பேசினார்.

    கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி வந்தனர். விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போதும் அப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.

    கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தை சேர்ந்த யாரையும் திசை திருப்ப முடியாது. 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம்.

    தற்போது ஒரு நடிகர், எந்த தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த முதல்வர் அவர் தான் என்று பேசுகின்றனர். நான் தொடக்கத்தில் அதிக வாக்குகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர் நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிகளுக்குள் ஒதுக்குகின்றனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு தான் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கை தான் பெரியது என்பதால் குறைந்த தொகுதிகளை வாங்குகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நம் இலக்கு,"

    என்று கூறினார்.

    • தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர்.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    பாளை பஸ் நிலையம் பகுதியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப் போவதாகவும் அறிவித்தனர். இவற்றிற்கு போலீசார் தடை விதித்தனர்.

    மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாளை பஸ் நிலைய பகுதியில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடனே அங்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் புத்தகங்களை வினியோகிக்க கூடாது என்றனர். எனினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரிசல் சுரேஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே பாளை வ.உ.சி மைதானம் இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் ராஜபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகிகள் விமல், பிரம்ம நாயகம் தலைமையில் அமைப்பினரும் திருமாவளவன் குறித்து துண்டு பிரசுரங்களுடன் திரண்டனர்.

    அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    • வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருக்கட்டான்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு பொதுமக்கள் இந்த பகுதிக்கு கழிவறை வேண்டி பலமுறை நகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப், நகர செயலாளர் விடுதலை மாரி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தொகுதி அமைப்பாளர் கோ.சின்னான், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, நிர்வாகிகள் பெரியசாமி, ராமன், பண்ணை பாண்டியன், மகளிரணி பாண்டீஸ்வரி மற்றும் பலர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் டி.எஸ்.பி. நல்லு, நகராட்சி மேலாளர் சாந்தி, வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகரம் சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வக்கீல் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மாநில துணை பொது செயலாளர் திருமார்பன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மூங்கில்துறைப்பட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலு, பொன்னிவளவன், அறிவுக்கரசு, திராவிட சந்திரன், தொல்காப்பியன், கிள்ளிவளவன், குமார், வெங்கடேசன், கண்ணன், சக்திவேல், ராதிகா, பழனியம்மாள், காந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை
    • அந்த வழியாக காலை, மாலை செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு கேபி ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. கல்வி நிறுவனங்கள் பஸ்நிறுத்தம் பகுதியில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக காலை, மாலை செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவிகள், பெண்கள் இதனால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே செட்டிகுளம் சந்திப்பில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் 2 மனுக்கள் தனித்தனியாக அளிக்கப்பட்டன. அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து ராணுவத்திலும், துணை ராணுவத்திலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டுக்காக சேவையாற்றி வருகிறோம். குமரி மாவட்டத்தை சேர்ந்த பல ராணுவ வீரர்கள் நாட்டுக்காக வீர மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், வருங்காலத்தில் உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க ஜவான்ஸ் அமைப்பிற்கு நிலம் கொடுக்க வேண்டும். மேலும் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று மாலை நடக்கிறது.
    • தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு நடந்தது.
    • 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் 132-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

    கள்ளந்திரி, குறிஞ்சி நகர், ஏ.என்.புரம் முகாம் அமைப்பாளர்கள் மணிபாரதி, நொண்டிசாமி, அஜித் ஆகியோரது தலைமையில் 30 பேர், பொய்கைக்கரைப்பட்டி நந்தகோபால் தலைமையில் 10பேர், வெள்ளியங்குன்றம் நொண்டிசாமி தலைமையில் 10பேர், பில்லுச்சேரி தினேஷ் தலைமையில் 10பேர், மாத்தூர், மாத்தூர் காலனி காசி, சின்னையா ஆகியோரது தலைமையில் 20பேர், குருத்தூர் மாரி காளி தலைமையில் 25பேர், மாங்குளம் மீனாட்சி புரம் சபரிநாதன், கண்ணன், செல்வம் ஆகியோரது தலைமையில் 25பேர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    ராவணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுத்து வந்தனர். மேற்கு ஒன்றியம் சார்பில் 22 வாகனங்களில் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றியம் சார்பில் 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

    • பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டனர்.
    • 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வாசுதேவனூர் பஸ் நிலையம் அருகே சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக உள்ள பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தாசில்தார் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர்கள், 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் க ட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபாலுக்கும் தாசில்தார் இந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தனபால் மீது தாசில்தார் இந்திரா புகார் அளித்தார். அதன் பிறகு நேற்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் பகுதியில் பவுத்த மாநாட்டிற்காக அவ்வழியே வந்த திருமாவளவன் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிவிட்டு சென்றார்.

    அப்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நேற்று இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட போலீசா ருடன் தாசில்தார் இந்திரா விடுதலை சிறுத்தை கள் தலைவர் திருமா வளவன் ஏற்றிசென்ற கொடிக் கம்பத்தை அகற்றினார். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.

    ×