என் மலர்
நீங்கள் தேடியது "விசிக"
- வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள்.
- சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஒற்றை உத்தரவால் நேற்று திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு, கலரவம் உண்டாகும் சூழல் நிலவியதாக பல்வேறு தரப்பினரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.
இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார்.
இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
- சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை பாஜக அரசு வழங்கியுள்ளது.
- தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை பாஜக அரசு நிராகரித்திருக்கிறது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை , கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். அதாவது, " 2011 -ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகராட்சியின் மக்கள் தொகை (257 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சி.எம்.சி) 15.85 இலட்சம் கொண்டுள்ளது மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ கொண்ட எல்.பி.ஏ)
7.7 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. அதனைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க வேண்டும்" என்பதாக அவர் கூறியிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இதை ஒன்றிய அரசு தெரிந்திருந்தோம் கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு, தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும்; இல்லையேல் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவ முடிந்தது?
உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்?
பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்லோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வி.சி.க. சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை வி.சி.க. மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
- ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர்.
- பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான்.
- சாதிதான் என்னுடைய முதல் எதிரி என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:
திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு சாதாரணமானது அல்ல. அதில் பல தழும்புகள் இருக்கிறது. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல.
அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். அரசியலில் அங்கீகாரம் பெறுவதே சிரமம்.
என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, சாதி தான் என்னுடைய முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை.
ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்துத்தான் அளவிட முடியும் என அம்பேத்கர் கூறியுள்ளார். பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான் என தெரிவித்தார்.
- சாதி பெருமை அரசியல்தான் இதுபோன்ற கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது.
- தமிழ்நாடு உட்பட மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை.
நெல்லையில் ஆணவப் படுகொலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை செய்யும் என பெரிதும் நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக சாதிய மற்றும் மதவாத சக்திகள் சாதிப்பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடித்து, இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்துகின்றார்கள்.
அவர்கள் பரப்பும் சாதி பெருமை அரசியல்தான் இதுபோன்ற கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது.
தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்காக பலரும் குரல் எழுப்பினாலும், ஒன்றிய அரசு இந்த கோரிக்கையை பொருட்படுத்தவில்லை.
தமிழ்நாடு உட்பட மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பிரச்சினை ஆக்குகின்றனர்.
- சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி
ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்து மதத்தை மட்டும் நீங்கள் விமர்சிப்பதாக கேட்கிறார்கள். அது சகோதரத்துவமாக இல்லை என்பதுதான் பிரச்சனை. பாஜக, ஆர்எஸ்எஸ் இதை ஏன் சுய விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் நம் கேள்வி. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக என அனைவரும் மதச்சார்பின்மை கொள்கையில் உள்ளோம்.
காங்கிரசோடு நமக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மதசார்பின்மை கொள்கையில் உறுதியோடு இருக்கிறோம். சனாதானத்தை பற்றி திருமாவளவன் பேசியபோது பிரச்சனை ஆகவில்லை. உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பிரச்சினை ஆக்குகின்றனர். எங்கள் கருத்து இந்து சமூகத்திற்கு எதிரான கருத்து இல்லை. கருத்தியலுக்கு எதிரானதுதான்.
எடப்பாடி.பழனிசாமி, பாஜக வை உடன் வைத்துக்கொண்டு தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்கிறார். நாம் மதச்சார்பின்மை காப்போம் என்கிறோம்.
தற்போது நடைபயணம் கிளம்பியுள்ளவர்கள் எல்லாம் பா.ஜ.க.வை ஆதரிப்பவர்கள். தி.மு.க. தனியாகவே எதிரிகளை சந்திக்கும் அவர்களுக்கு திருமாவளவன் போன்றவர்கள் தேவை இல்லை.
ஆர்எஸ்எஸ் உள்பட இயக்கங்களை எதிர்க்க கொள்கை உள்ள நாங்கள் உடன் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக நான் கூறினேனா? துணை முதல்வர் பதவி தருவதாக அழைக்கின்றனர்.
நான் முதல் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? நானும் ரவுடிதான் என யார் யாரோ கிளம்புகின்றனர். முதல்-அமைச்சர் ஆக்குங்கள் என்கின்றனர்.
நானும் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன். கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் என அனைவரோடும் அரசியலில் பயணித்துள்ளேன். துணை முதல் அமைச்சர் என ஆசை காட்டினால் நான் சென்று விடுவேன் என நினைக்கின்றனர்.
கொள்கை அரசியலில் செயல்படும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால் தி.மு.க.வுடன் உறுதியாக நிற்கிறோம் பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது.
- இபிஎஸ்-க்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டசி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவை பாஜகவை விழுங்கி சரித்துவிடும் என்று திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டியது. கவலையோடு சுட்டிக்காட்டியது.
அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது.
ஆனால், அதை அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
அவருக்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அவராகவே இந்த கருத்தை சொல்கிறார் என்று என்னால் ஏற்க முடியவில்லை.
அதிமுகவிற்கு எதிராக பேசுவதாக அவர் கருதுகிறார் என்று நினைக்கிறேன். அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்று அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் உணருவார்.
ஆனால், சேராத இடத்தில் சேர்ந்திருக்கின்ற சூழலில் அவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று நான் கருதுகிறேன். அப்படி பேசினால் வருத்தப்படுவதற்கும் எதுவுமில்லை.
2021ம் ஆண்டில் இருந்து ஓரிரு பொதுத்தேர்தலைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது. அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
விசிக வளர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர.. வீழ்ச்சி அடையவில்லை. ஆகவே அவர், திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார் என்கிறது விசிக.
- நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் எழுச்சி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் எனக் கூறினார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி அமைத்ததும் ஸ்டாலின் அப்படியே அப்செட் ஆகிவிட்டார். சட்டசபையில் திடீரென ஸ்டாலின் எழுந்து, என்னைப் பார்த்து பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அதிமுக-வில் இருக்கிறாரா? திமுகவில் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. அதிமுக கட்சி நம்ம கட்சி. நாம் யார் கூட வேண்டுமென்றாலும் கூட்டணி வைப்போம். இவர் ஏன் சட்டமன்றத்தில் பதறுகிறார். பயம். தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.
பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்து திமுக-வின் கூட்டணி கட்சிகளும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார். அதிக சீட் தருவதாக கூறினார் என விடுதலை சிறுத்தைகள் கூறுகிறது. நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள். திமுக கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்சியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்தால் விழுங்கிவிடும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு
- எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, திமுக கூட்டணியில் சீட்டுகளை குறைத்து விடுவார்கள் என்று, அதிமுகவுடன் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்றார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்.
அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது" என்றார்.
- சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
- அப்போது, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.
கடலூர்:
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
மாநாடு, கொடிக் கம்பம் நடுவதற்கு கூட்டணி கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சீட்களைக் குறைத்து விடுவார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. எதற்காக அசிங்கப்படுகிறீர்கள்?
தி.மு.க. கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளுடனும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்தார்.
- ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
- அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் தம்பியாக நான் அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.
ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
திராவிட இயக்கமாக நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற அதிமுக பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்டு விட கூடாது. பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கிறோம்.
அதிமுக தனது செல்வாக்கை இழந்து விட கூடாது என்பதை தோழமையுடன் சுட்டி காட்டுகிறேன்.
பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருக்கிறார் இபிஎஸ்.
அதிமுக தோழமை கட்சி என கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம்.
அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.
திமுகவுக்கு எதிராக அணி திரள்பவர்கள் கூட்டணி ஆட்சி முழுக்கத்தை வைத்துள்ளனர்.
சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம், தற்போதைக்கு அது முழுமையாக சாத்தியமில்லை.
இந்து சமய அறவிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






