என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    • பசு பால் கொடுக்கவில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்
    • மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் மத்திய அரசு பல மசோதாக்களை தாக்கல் செய்து, அவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக, 'விபி-ஜி ராம் ஜி' என்னும் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.

    முன்னதாக, இந்த "விபி-ஜி ராம் ஜி மசோதா" நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது உத்தரகண்ட் நைனிடால் மக்களவை உறுப்பினர் அஜய் பட் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மசோதா தொடர்பாக பேசிய அஜய் பாட், "ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், வேலை கிடைக்கவில்லை என்றால், வீட்டில் பிரச்சனை இருந்தால், கணவன் மனைவிக்கு ஒத்துப்போகவில்லை என்றால், ஒரு மகன் வழிதவறிச் சென்றிருந்தால், அல்லது ஒரு பசு பால் கொடுக்கவில்லை என்றால், "ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்" என்று சொன்னால் போதும், அது நிறைவேறும்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன என்றும், மசோதா கொண்டுவரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார். தற்போது இவர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

     

    • மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம்
    • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தததைக் கண்டித்து இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

    இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். 

    • தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
    • புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு நடந்து முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அத்துடன் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மனுக்கள் பெற்று, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்

    அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்களை தயார்படுத்தும் வகையில் தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர் அ.தி.மு.க. ஆட்சி சாதனைகளையும் பட்டியலிட்டு வருகிறார்.

    தே.மு.தி.க. சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கோணத்தில் மாடுகள் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடலம்மா மாநாடு போன்றவற்றை நடத்தி இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் மாவட்டந்தோறும் பிரசார கூட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    இதற்கிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சட்டமன்ற தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரும் கடந்த அக்டோபர் 12-ந்தேதி தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் அவர், தனது பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவு செய்கிறார்.

    தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்தவும், அதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சாந்தமாக பதிலடி கொடுத்து வரும் அவர், தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.

    குறிப்பாக தென் தமிழகத்தை குறிவைத்து சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்தும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை அழைத்து வருவதன் மூலம் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தை பயன்படுத்த தயாராகி வரும் நயினார் நாகேந்திரன் ஏற்பாடுகளை தற்போதே தொடங்கிவிட்டார்.

    நேற்று டெல்லி சென்று திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறுகையில், எனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இருவரில் ஒருவர் வருவார் என்றும் தெரிவித்தார். ராமேசுவரத்தில் காசி தமிழ்ச்சங்கமம் விழா, ராமேசுவரம்-தாம்பரம் புதிய வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா, புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழா ஆகியவற்றில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது. தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே பள்ளத்தி வயலில் தனியாருக்கு சொந்தமான 59 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

    மேலும் தற்போது இந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அங்கு 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார், உளவுத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவும் ஆய்வு செய்தார். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் உள்ளிட்ட கருவிகளை வைத்தும், டிரோன்களை பறக்கவிட்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டது.

    அதேபோல் விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர்கள், பின்புலங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிபேடு தளம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி வருகை குறித்த தகவல் தமிழக பா.ஜ.க.வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.
    • இபிஎஸ் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!

    #VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!

    100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.

    தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

    திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, #GST வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!

    கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த #MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




     


    • பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
    • 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கீர்த்தி ஆசாத் மக்களவையில் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பயன்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் அந்த உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை.

    இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அனுராக் தாக்கூர் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.

    குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.

    இந்நிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கைக்குள் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் புகைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அவையின் சிசிடிவி பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
    • துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்...

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!

    நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, #MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி!

    அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?

    மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, தொகுதி நிர்ணயம் மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.

    ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய #MGNREGS திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் #VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும்.

    தனது 'Owner' பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக #VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்... என பதிவிட்டுள்ளார். 

    • மாநாட்டில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரித் திருக்கோவில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.
    • சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் 'கந்த சஷ்டி கவசம்' பாடி சாதனை நிகழ்த்தினார்கள்.

    உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.

    அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஜூன் 22-ந்தேதி அன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெற்றது. மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற்ற மாநாட்டில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரித் திருக்கோவில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அ.தி.மு.க.வினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டை நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றங்களையும் நாடினர். இருந்தும் மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும். ஆன்மிக மாநாட்டில் அரசியல் கலக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

    ஆனால் இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் எனவும், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து கோவில் நிர்வாகத்தை மீட்டு பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 முக்கியத் தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா குறித்து வீடியோ ஒன்று ஒளிப்பரப்பட்டன.

     

    சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் 'கந்த சஷ்டி கவசம்' பாடி சாதனை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாநாட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் முன் மகா தீபாராதனை நடத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.

    இதனை தொடர்ந்து மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி தீர்மானம் நிறைவேற்றம் மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்சியின் கொள்கை தலைவர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட நேரம் அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவிக்காததும் சர்ச்சையானது.

     

    திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் எனவும், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் அண்மையில் நடைபெற்று வரும் திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்றே கூறலாம்.

    இதற்கு முன்னதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் பழனியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பேசவேமாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?
    • கட்சியில் சேர்ந்ததிற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிறவன் கிடையாது

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் வாய் திறக்காதது குறித்து பேசியிருந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,

    "கம்முனு இருக்கவேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும். கும்முனு இருக்கவேண்டிய இடத்தில் கும்முனு இருக்கணும். இது விஜய் கூறியது. அரசியலில் அப்படி இருக்க முடியுமா? எப்படி இருந்தாலும் பேசவேண்டிய இடத்தில் பேசினால் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும்போது நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை(விஜய்யை) நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள்? தவறு என்றால் தவறு எனக்கூறவேண்டும். சரி என்றால் சரி எனக்கூறவேண்டும். பேசவேமாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த தவெக நிர்வாகி அருண்ராஜ், "அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார்" என்று கூறினார். 

    இந்நிலையில் அருண்ராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, "இந்த அண்ணாமலை என்கின்ற நாயின் வாலை நிமிர்த்தமுடியாது. இந்த வால் அப்படித்தான் இருக்கும். ஏனெனில் இது உண்மையை பேசுகின்ற நாய். இது ஜால்ரா அடிக்கும் நாய் கிடையாது. கட்சியில் சேர்ந்ததிற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிற நாய் இல்லை. இந்த நாயின் வால் வளைந்துதான் இருக்கும். இந்த நாய் அப்படித்தான் பேசும். அதற்காக எது வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும். மோடியின் நன்றியுள்ள நாய் இது.

    சினிமா நடிகர்களுக்கு ஜால்ரா அடிப்பதற்காக நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவில்லை. நான் ஒரு உன்னதமாக கோட்பாட்டிற்காக வந்துள்ளேன். இந்த வால் இப்படித்தான், நெலிந்து வளைந்துதான் இருக்கும். வருகின்ற காலத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்கத்தான் போகிறேன். ஆனால் மக்களுக்காகத்தான் அதனை சந்திக்கிறேன். அதனை பெருமையாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்கவேண்டும் என்றால் அந்தப் பதவி எனக்கு தேவையில்லை. அது என் மயிறிழைக்கு சமம்" என தெரிவித்துள்ளார்.

    • வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது
    • பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல.

    சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் 'விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று கூறி, பாரதியார் போன்றவர்களின் சிந்தனைகளை முன்னிறுத்தினார். சீமானின் இந்தப் பேச்சை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எல்லாம் பாராட்டி இருந்தார். 

    இந்நிலையில் சீமானின் இந்தப் பேச்சு தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை எனக்குறிப்பிட்டு, சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக த.மு.எ.க.ச வெளியிட்டுள்ள பதிவில், 

    "பாரதியார், காந்தியடிகள், நேரு உள்ளிட்ட இந்நாட்டின் பல ஆளுமைகளை அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் வரும் போது போற்றுகின்ற செயல்கள் எவ்வளவு நடைபெறுகிறதோ, அதே அளவு அவர்களை தூற்றுவதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பொது வாழ்வில் இருந்தவர்கள் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த காலம் போல் வலதுசாரிகள் இந்த ஆளுமைகளை விமர்சித்தால் நமக்கு சிக்கலேதும் இல்லை. அது நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதன் பொருள் ஆகும். ஆனால் முற்போக்காளர்களாக அறியப்பட்ட சில பெரியாரியவாதிகளின் இப்படிப்பட்ட விமர்சனங்கள் சரியான செயல் ஆகாது.

    எந்த ஆளுமைகளையும் அவர்கள் வாழ்ந்த காலத்தோடு பொருத்திப்பார்ப்பதும், காலவரிசையோடு அவர்கள் செயலை மதிப்பிடுவதுமே சரியான செயலாகும். தியாகராஜர் இன்றைக்கு உயர்சாதி சார்ந்த இசையின் குறியீடாக இருக்கிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் மன்னரின் அதிகாரத்திற்கு எதிராகவே தனது பக்தி சார்ந்த இசையை பயன்படுத்தினார். கம்பர் இராமாயணத்தை எழுதினார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சோழப் பேரசும், அதன் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் எதிரான மனோநிலையோடே தான் விரும்பும் தேசத்தை கற்பனையில் 'அயோத்தி' என்று எழுதிப்பார்த்தார். அப்படி நம் சமூகத்தில் பாரதி அவர் காலத்தில் எழுதிய எழுத்துக்களில் சில பொருத்தமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதையும் அவர் தன் வாழ்நாளிலேயே சரிசெய்து ஒரு உன்னத இடத்திற்கு வந்து மகாகவியாக பரிணாமம் பெற்றிருக்கிறார்.

    பாரதியின் எழுத்துக்களில் ரஷ்ய புரட்சி ஏற்பட்ட சூழலில் முதலில் லெனின்-ஐ விமர்சித்தார். காரணம் 100ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரம் மையில் தாண்டியுள்ள ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்ற செய்தி அறிந்து ஒரு எழுத்தாளர் தனக்குத் தோன்றியதை எழுதினார். ஆனால் அதன் பின் ரஷ்ய சூழலை தீர விசாரித்து அதே லெனின்-ஐ தன் இறுதிக் காலம் வரை போற்றிப் புகழ்ந்தார் பாரதி. சோவியத், போல்ஷெவிக் போன்ற சொற்களுக்கு தமிழ்ச் சொற்களை தன் வாழ்நாளிலேயே உருவாக்கிப் பார்த்தார்.

    பாவேந்தரை பாரதி முதன் முதலில் பார்த்தது ஒரு ஆன்மீக கதாகாலஷேப நிகழ்ச்சியில் தான். தொடக்கத்தில் பாவேந்தர் முழு ஆன்மீக வாதியாகத்தான் தன் படைப்புகளை முன் வைத்தார். ஆனால் அதை வைத்து பாவேந்தரை இன்றைக்கு மதிப்பிட முடியுமா? தன்னை பாரதிதாசன் என்று அறிவித்துக் கொண்ட பாவேந்தரை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் இவர்கள், பாரதியை மட்டும் விமர்சிப்பது என்பது பாரதியை காலவரிசையோடு பொருத்திப் பார்க்காததன் வெளிப்பாடு ஆகும். பாரதி வாழ்ந்த காலத்தில் சொந்த சாதியால் ஒதுக்கப்பட்டவர். ஆனால் இன்று அவர் பிறந்த சாதியை மட்டும் வைத்துக்கொண்டு அவர் மீது வன்மம் காட்டுவதும் பிறப்பின் அடிப்படையிலான பேதமே ஆகும்.

    பொய்யயை விட மிகவும் ஆபத்தானது பாதி உண்மை. பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல. வலதுசாரிகள் எல்லா ஆளுமைகளையும் தங்களுக்குள் ஆலிங்கனம் செய்து தனதாக்கிக் கொள்ளும் காலம் இது. இந்தச் சூழலில் இது போன்ற உரையாடல்கள் நம்முடைய கருத்தியலுக்கு வலு சேர்க்கும் பாரதியைப் போன்ற ஆளுமைகளை வலிந்து வலதுசாரிகள் கையில் கொடுக்கும் செயலாகும்.

    சமகாலச் சிக்கல்கள் குறித்துப் பேசாமல், அதை மைய அரசியலாக கொண்டுவராமல் வலதுசாரிகள் எப்படி திசைதிருப்பும் வேலையை செய்கிறார்களோ, அதே விளையாட்டை பெரியாரியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் செய்வது விபரீதமானது என்று சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எந்த வித செயல்தந்திரமும் இல்லாமல் தமிழ்ச்சமூகத்தின் ஆளுமைகளின் ஒட்டுமொத்த பங்களிப்பை மதிப்பீடு செய்யாமல் அவர்களிடம் உள்ள சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்துவது பாசிச எதிர்ப்பை பலவீனப்படுத்தவே செய்யும். சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது.

    வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இவைகளை உடனே தடுப்பது, தவிர்ப்பது காலத்தின் தேவை ஆகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.
    • பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ சிந்தாமணியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம் என தமிழக முதலமைச்சர் கூறியது தரவுகள் அடிப்படையிலேயே தான். தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் கூறுவது மாய பிம்பம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

    தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது, அது உண்மையில்லை. தமிழகத்தில் ஆரம்ப கல்வியில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அளவில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 7.7 சதவீதமாகவே உள்ளது.

    இதில் மாணவர்கள் பலர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேருகின்றனர். எனவே இடைநிற்றல் சதவீத கணக்கில் வருகிறது. மேலும் இந்த சதவீதமும் குறையும். தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.

    திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது வேதனைக்குரிய செய்தி. இந்த துயர செய்தி குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும் போன உயிர் திரும்ப வராது. மாணவர் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

    • பாஜக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது.
    • கிராமங்கள், தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தாங்களே தீர்மானிப்பதற்கான சுயாட்சி.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர்மாற்றம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 

    "மோடிக்கு இரண்டு விஷயங்கள் மீது அதீத வெறுப்பு உள்ளது. ஒன்று மகாத்மா காந்தியின் கொள்கைகள், மற்றொன்று ஏழைகளின் உரிமைகள்.

    மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையின் வாழும் வடிவமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) திகழ்கிறது. இது கோடிக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது, மேலும் கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்பு வலையாகவும் இருந்தது. 

    இருப்பினும், இந்தத் திட்டம் பிரதமர் மோடிக்கு எப்போதும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, அவரது அரசு இதைத் திட்டமிட்டு பலவீனப்படுத்த முயன்று வருகிறது. இப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது. 


    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூன்று அடிப்படைக் கொள்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டது:

    1. வேலைவாய்ப்பு உரிமை - வேலை கோரும் எவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும்.

    2. கிராமங்கள், தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தாங்களே தீர்மானிப்பதற்கான சுயாட்சி.

    3. முழு ஊதிய ஆதரவு மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% மத்திய அரசால் வழங்கப்படும்.

    இப்போது இதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டு கருவியாக மாற்ற முயற்சிக்கிறார். 

    1. பட்ஜெட், திட்டங்கள் மற்றும் விதிகள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும்.

    2. செலவுகளில் 40 சதவீதத்தை மாநிலங்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படும்.

    3. நிதி இல்லாவிட்டால் அல்லது அறுவடை காலங்களில், தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் வேலை மறுக்கப்படும்.

    இந்த புதிய மசோதா மகாத்மா காந்தியின் கொள்கைகளை நேரடியாக அவமதிப்பதாகும். வேலையின்மையால் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்ததோடு மட்டுமில்லாமல், தற்போது ஏழை கிராமப்புறக் குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை குறிவைக்கிறது.

    தெரு முதல் நாடாளுமன்றம் வரை பாஜக அரசின் மக்கள்விரோத மசோதாவை எதிர்ப்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • பீகார் மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டமாக நடைபெற்றது.
    • கருத்துக்கணிப்புகளில் பெற்ற இடங்களைவிட அதிக இடங்களில் என்.டி.ஏ. கூட்டணி வென்றது.

    பாட்னா:

    காலை நேரத்தில் கூட்டம் அதிகம் காணப்படும் மார்க்கெட். காய்கறிகள் அப்போதுதான் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அங்கு காய்கறி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தான் மணி.

    அப்போது அங்கு வந்த முருகன், என்னடா மணி, SIR படிவம் எல்லாம் நிரப்பிக் கொடுத்துட்டியா என கேட்டான்.

    ஆமாம்னே கொடுத்துட்டேன். எலக்ஷன் கமிஷனுக்கு ஏண்ணே இந்த தேவையில்லாத வேலை. ஒழுங்கா பழையபடி இருந்தா என்ன கெட்டுப் போச்சி என அங்கலாய்த்தான்.

    அப்படி இல்லைடா மணி. இந்த மாதிரி சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டால் தான் போலி வாக்காளர்களை நீக்க முடியும். அப்படி செய்தால் தேர்தலில் கூடுதலாக வாக்கு சதவீதம் பதிவாகவும் வாய்ப்பு இருக்கு. அதனாலதான் எலக்ஷன் கமிஷன் இதுபோன்ற பணிகளை செய்து வருது. சமீபத்தில் பீகார் மாநிலத்திலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டதால் வாக்கு சதவீதம் இதுவரை இல்லாத அளவு அதிகரிச்சிருக்கு என்றான் முருகன்.

    அப்படியா, பீகாரில் அப்படி என்ன நடந்தது சொல்லு கேட்போம் என கேட்டான் மணி.


    கடந்த மாதம் நடந்த பீகார் சட்டசபை தேர்தல் குறித்து முருகன் கூறியதன் சுருக்கம் வருமாறு:

    பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இரு கட்டங்களாக நடைபெற்றது.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி 29 இடங்களிலும், சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்த ராஷ்டிரீய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஏனைய 39 தொகுதிகளில் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன.

    பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தன.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது.

    ஆரம்பத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே முன்னிலை வித்தியாசம் குறைவாகவே இருந்தது. நேரம் செல்லச் செல்ல முன்னிலை இடைவெளி அதிகரித்தது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னிலை நிலவரம் ஏறுமுகமாகவும், இந்தியா கூட்டணியின் முன்னிலை நிலவரம் இறங்குமுகமாகவே இருந்தது.


    இறுதியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளையும்விட தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் கிடைத்தன.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்களில் வெற்றி கிடைத்தன. அந்தக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

    மொத்தத்தில் 2025-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஏற்றத்தையும், காங்கிரஸ் கட்சி கடும் சறுக்கலையும் சந்தித்தது.

    ஆனால் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையால் தோற்றோம் என காரணம் கூறியது.

    பீகார் தேர்தலில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை மற்ற மாநிலங்களுக்கும் பயன்படுமா என்பதை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் என முடித்தான் முருகன்.

    என்னவோ நீ சொல்ற, SIR நடவடிக்கை இங்க எல்லாம் எந்த விளைவை ஏற்படுத்துமோ தெரியலை என்றபடியே லாரியில் இருந்து இறக்கிய மூட்டைகளுக்கான பணம் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டான் மணி.

    ×