search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India alliance"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஆர்வம் காட்டாமல் மாநிலத் தேர்தல்களில் கவனம் செலுத்தியது.
    • தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நாளை கூடும் என அறிவிக்கப்பட்டது

    பா.ஜனதா கட்சியை 2024 பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைந்து ஒரே அணியில் திரண்டால்தான் முடிவும் என பீகார் மாநில முதல் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கருதினர்.

    இதனால் நிதிஷ் குமார், லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முயற்சி மேற்கொண்டனர். இதன் முதல் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கர்நாடகாவில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இந்திய கூட்டமைப்புக்கு இந்தியா எனப் பெயரிடப்பட்டது. இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் எனத் தெரிவித்தனர். இது பா.ஜனதாவுக்கு சற்று பயத்தை கொடுத்தது. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சிகளுள் ஆலோசனை நடத்தி தங்கள் பக்கமும் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன என காண்பித்தது.

    3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றது. அப்போது தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இந்த கூட்டணியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில்தான் ஐந்து மாநில தேர்தல் தேதி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஆர்வம் காட்டாமல் மாநிலத் தேர்தல்களில் கவனம் செலுத்தியது. இதனால் அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தனர். காங்கிரஸ் கட்சி மாநிலத் தேர்தல் முக்கியமானது எனத் தெரிவித்து அதில் கவனம் செலுத்தியது. சாதி வாரியாக கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரசை அகிலேஷ் யாதவ் வெளிப்படையாக விமர்சித்தார். மேலும், உ.பி.யில் பெரும்பாலான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்றார். இதனால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.

    இந்த நிலையில்தான் ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ்க்கு பெரிய அடி விழுந்தது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்தது. தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை பிடித்தது. இப்போது, காங்கிரஸ் தனியாக நின்றதன் காரணமாக தோல்வியை சந்தித்தது. இந்தியா கூட்டணியில் கட்சியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் விமர்சனம் வைக்கப்பட்டது.

    தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நாளை கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரசின் 4 மாநில தேர்தல் தோல்வி பாராளுமன்ற தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்த கூட்டத்தில மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. தங்களது கட்சி பிரதிநிதிகளை அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

    முக்கியமான தலைவர்கள் பங்கேற்காமல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றால் அது சரியாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கூட்டம் டிசம்பர் 3-வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
    • நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    சென்னை:

    இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நாளை மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

    இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் டெல்லி வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், சுமார் 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு பதில் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பார் என கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியை பலப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்து இந்த கூட்டத்தை கூட்டுவதால் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

    நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களது கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    5 மாநில தேர்தலில் கவனம் செலுத்திய காங்கிரசை இருவரும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 28 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
    • கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    4 மாநில தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் அந்த கட்சி ஆட்சியை இழந்தது. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    சத்தீஸ்கரில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் நேரம் செல்ல செல்ல பின்தங்கியது. இதனால் அந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் இமாலய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த நிலையில் 4 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. 28 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அவரது வீட்டில் மாலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் 4 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் கட்சிகள் தனியாக போட்டியிட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எப்படி எதிர்கொள்வது? பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு உள்பட முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.
    • கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    கோவை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமையும்.


    நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு சாதமாக வந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்புகிறேன். கர்நாடக தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டியது போல 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.

    இந்தியா கூட்டணி, பா.ஜ.கவை அப்புறப்படுத்த ஒருங்கிணைத்துள்ளது. தி.மு.க அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் பல்கலைக்கழகம் தொடர்பாக 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட நிலையில் கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் இந்திரா நகரில் ஜாதி வெறியர்களால் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள்.
    • கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள். கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.


    நேற்று மாலையில் கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் பற்றிய புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தக பிரதிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மை துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோருக்கு கார்கே வழங்கியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரமும் கார்கேவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது.
    • எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை.

    கோவை:

    கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    5 மாநில தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் தெலுங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் வெற்றி பெறும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜ.க வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது வெளி வந்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பகிர்ந்து இருக்கும் படியாக இருக்கின்றது.

    கடந்தாண்டு 40,000 கார்பரேட்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையிழப்பு அதிகளவில் உள்ளது.

    வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. 58 சதவீத இந்தியர்கள் சொந்தமாக பணி செய்பவர்களாக உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த பிரச்சினை பிரதிபலிக்கும். பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது.


    ஜி 20 மாநாடு இந்தியா தலைமை வகிப்பதாகவும், முன்னிலை வகிப்பதாகவும் பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜி 20 யில் உள்ள நாடுகளில் கடைசி இடத்தில் தான் இந்தியா உள்ளது.

    யுனஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மிகவும் தீவிரமான பிரச்சனை இந்தியாவில் நிலவி வருகிறது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும்.

    5 மாநில தேர்தல் முடிந்தவுடன், தமிழகத்தில் கூட்டணி பணிகள், பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்படும். எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை.

    சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநிலங்களில் சாதகமற்ற நிலை இருக்கின்றது. இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்.

    ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப சி.பி.எம் கூட்டணிகளை முடிவு செய்துள்ளது. அது இந்தியா கூட்டணியின் வெற்றியை பாதிக்காது.

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்றவற்றை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில்லை.

    அவ்வழக்குகளில் வெறும் ஒரு சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வந்துள்ளது. 8 மசோதக்களை 3 ஆண்டுகளாக கேரளா கவர்னர் நிறுத்தி வைத்திருகின்றார். கவர்னர்களை வைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை இந்திய அரசு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் என்கிற ரீதியில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது.
    • ஊழலுக்கு துணை போவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

    ஆம் ஆத்மி அரசு மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படும் சூழல் ஆகியவற்றால், ஆம் ஆத்மி கட்சி, 'இந்தியா' கூட்டணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழல் வழக்குகள், 'இந்தியா' கூட்டணிக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் என்கிற ரீதியில், 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது. பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

    ஆனால், காங்கிரஸ் உட்பட, 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுக்கவில்லை. ஆம் ஆத்மிக்கு ஆதரவாக கடுமையாகக் குரல் எழுப்பவில்லை.

    அதாவது, ஊழலுக்கு துணை போவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அதேசமயம், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியை கூட்டணி யில் இருந்து விலக்கவும் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. துப்புரவும் முக்கியம். அதற்கு துடைப்பமும் முக்கியமாச்சே! என்ற கதையில் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
    • வரும் அனைத்து தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா வியூகம் வகுத்து வருகிறது.

    இதை தடுக்கவும், பாரதிய ஜனதா அரசை வீழ்த்தவும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்தன.

    காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சி கள் இணைந்த இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.

    இதில் பாராளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து சந்திப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் கூடி விவாதித்தன.

    இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    இதே போல ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது. இதிலும் சரியான உடன்பாடு ஏற்படவில்லை.

    தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையிலும், குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு போதிய இடங்களை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதனால் கூட்டணியில் மோதல் வெடித்தது. எனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள இடது சாரிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜஸ்தானில் 17 இடங்களிலும், சத்தீஸ்கரில் 3 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் 4 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

    இதே போல இந்திய கம்யூனிஸ்டு கட்சி சத்தீஸ்கரில் 16 இடங்களிலும், ராஜஸ்தானில் 12 இடங்களி லும், மத்திய பிரதேசத்தில் சுமார் 9 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக இடது சாரி மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

    இதற்கிடையே தெலுங்கானாவிலும் 2 கட்சிகளும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதில் 2 கட்சிகளுக்கும் அங்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

    இதில் வரும் அனைத்து தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது
    • மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது.

    கிருஷ்ணகிரி:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி இருக்க வேண்டும். கர்நாடகா அரசு அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கும் போது, தமிழக மக்களுக்கு முதலஅமைச்சர் உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் தமிழக மக்கள் நலனைவிட இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என முடிவெடுத்துவிட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சீமான் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாதி வாரிய கணக்கெடுப்பு வேண்டும் என முதலில் தமிழ்பெருங்குடி ஆனந்தம் தான் பேசி, 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார். அதன் பின் சாதிவாரியாக கணக்கெடுப்பு வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் நான் ஆகியோர் போராடி வருகிறோம். அன்று முதல் இன்று வரை சாதிவாரிய கணக்கெடுப்பு பேசப்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரை இது குறித்து பேசுவார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோத நிறைவேற்றப்பட்டது. முதலில் ஆட்சியில் வேண்டாம், பாஜக தனது கட்சியில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தருமா. தேர்தல் வரும் போது மட்டும் நம் மீது பாசம், அக்கறை, பற்று, விலைவாசி உயர்வு போன்றவை ஞாபகம் வருகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் 1947ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1967ல் தான் ஆட்சியை பிடித்தது. அப்படித்தான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனது அடித்தளத்தை வளர்த்தி வருகிறது.

    நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வரும் போது, பிற கட்சியை சார்ந்தவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். காவிரி பிரச்சனையில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் முறையாக இல்லை. இரு மாநில அதிகாரிகள் சமமாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது. அதற்காக ஏன் பல ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்த வேண்டும்.

    பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறிய பிறகு, அ.தி.மு.கவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததாக என்ற கேள்விக்கு, அழைப்பார்கள், நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம். கூட்டணிக்கு அழைப்பார்கள் இன்னும் நாள் உள்ளது. பிறகு தான் பேச வேண்டும். ககல்யான் விண்கலம் கடைசி நிமிடம் நிறுத்தம் தொடர்பான கேள்விக்கு, இந்தியா மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சியால் நமக்கு என்ன பயன். 28 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் இருப்பதாக பாஜகவினர் தான் சொன்னார்கள்.

    கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு வழங்கியதாக நிதி அமைச்சர் பேசுகிறார். சாலையை முறையாக போடுங்கள். நாட்டில் பிச்சை எடுப்பது வளர்ச்சி இல்லை. பிச்சைக்காரன் இல்லாமல் இருப்பது தான் வளர்ச்சி. ஜி20 மாநாடு, காமன்வெல்த் போட்டிகள் நடந்த போது, பதாகைகள் வைத்து குடிசைகளை மறைத்தனர். ஒரே நாளில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்களை லாரியில் ஏற்றி வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். இவர்கள் பேச்சு எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. சந்திர மண்டலத்தில் குடியேறலாம் என்றால், முதலில் இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என யாரை முதலில் குடியேற்றுவீர்கள். உங்களை குடி அமர்த்த விட்டுவிட்டு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அமைதியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி எல்லாம் வீண் செலவு. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் வாக்கை இயந்திரத்தில் போட்டுவிட்டு, மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin