என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிராக் பஸ்வான்"

    • எம்.பி.யாக இருந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
    • லோக் ஜனசக்தி எம்.பிகள் எல்லோரும் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சி இரண்டாகப் உடைந்தது.

    பீகாரில் சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்ற சிராக் பஸ்வானின் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 இடங்களில் போட்டியிட்ட நிலையில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 2000ஆம் ஆண்டு உருவாக்கிய கட்சியே லோக் ஜனசக்தி.

    கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே அவர் காலமான நிலையில் அக்கட்சி உட்பூசலில் சிக்கி தவித்தது.

    அப்போது எம்.பி.யாக இருந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

    கடந்த 2020 பீகார் சட்டசபை தேர்தலில் 137 இடங்களில் லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் நிதிஷ் குமாரை தீவிரமாக எதிர்த்து பிரசாரம் செய்த லோக் ஜனசக்தி ஒரே 137 இடங்களில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றது.

    இதைத்தொடர்ந்து லோக் ஜனசக்தி எம்.பிகள் எல்லோரும் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சி இரண்டாகப் உடைந்தது.

    எனவே, சிராக் பஸ்வான் தனி ஆளாக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) என்றப் புதியக் கட்சியை 2021-ம் ஆண்டு தொடங்கினார்.

    2024 மக்களவை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இணைந்து லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) 5 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதன் மூலம் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

    என்டிஏவின் மத்திய அமைச்சரவையில் சிராக் பஸ்வான் இடம்பெற்றார். இதைதொடர்ந்து இந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாருடன் தோளோடு தோள் சேர்ந்து போட்டியிட்ட லோக் ஜனசக்தி 19 இடங்களில் வெற்றி பெற்று பாஜக, ஜேடியுவுக்கு அடுத்தபடியாக பீகாரின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    முன்னதாக அக்கட்சிக்கு 29 இடங்கள் ஒதுக்கியது குறித்து பாஜக, ஜேடியு தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் சந்தேகங்களை உடைத்து சிராக் பஸ்வானின் பீகார் அரசியலில் தவிர்க்க முடியாத இடத்திற்கு உயர்ந்துள்ளது. தேஜஸ்விக்கு மாற்றாக என்டிஏவின் இளம் தலைவர் முகமாக சிராக் பஸ்வான் திகழ்கிறார்.

    இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பேசிய சிராக் பஸ்வான், துணை முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியில் தன்னைப் பார்க்க தனது கட்சித் தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே அவர் துணை முதல்வர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.  

    • ஜனநாயக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது.
    • ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது.

    பீகாரில் சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி மற்றும் 11ம் தேதி என இரு கட்டங்களாக நடைபெற்றது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

    பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாஜக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றிருந்தன.

    அதேபோல் மகாபந்தன் இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் , காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை இடம் பெற்றிருந்தன.

    இதனால் இந்த தேர்தல் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

    மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது.

    காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதில், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், கட்சி 23 இடங்களில் முன்னிலை வகித்து, என்டிஏ கூட்டணிக்கு பக்கபலமாக இருந்துள்ளது.

    லோக் ஜனசக்தி கட்சி கடந்த 2020 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற தற்போதைய தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி முக்கிய வளர்ச்சியை பெற்றுள்ளது.

    மொத்தத்தில், என்டிஏ கூட்டணி ஒரு வலுவான வெற்றியை நோக்கிய நிலையில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பெரிய அளவில் கை கொடுத்ததால் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

    இதேபோல், இந்த கூட்டணி பலத்தால் சிராக் பஸ்வான் மாபெறும் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரி.
    • தவறுதலாக 2 கைகளிலும் மை வைத்துவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.

    இந்நிலையில் இந்த பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் 2 கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது. இது ஷாம்பவி இரண்டு முறை வாக்களித்தாரா என்ற கேள்வியை எழுப்பியது.

    சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஷாம்பவி சவுத்ரி வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தபோது முதலில் தனது வலது கையை உயர்த்தி, மை பூசப்பட்ட விரலை வெளிப்படுத்தி, பின்னர் சிறிது நேரதில் இடது கையைக் காட்டினார். அந்த விரலிலும் மை அடையாளம் இருந்தது.

    இதன் வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்தபோது, வாக்குச்சாவடி அதிகாரி தவறுதலாக என் வலது கையில் மை பூசிவிட்டார், தலைமை அதிகாரி ஊழியர்களிடம் இடது கையில் பூசச் சொன்னார்.

    அதனால்தான் என் இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் உள்ளன. பெரிய தேர்தல்களின்போது இதுபோன்ற சிறிய நடைமுறை பிழைகள் சாதாரணம், இந்தப் பிரச்னையை அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார்

    பாட்னா மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், "ஷாம்பவி வாக்களித்தபிறகு அவரது இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் இருப்பது தொடர்பான வீடியோ குறித்து வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மை அடையாளம் இடும் பணியில் இருந்த வாக்கு சாவடிப் பணியாளர் தவறுதலாக முதலில் வலது கையிலுள்ள விரலில் மை அடையாளம் இட்டார். பின்னர் தலைமை அதிகாரியின் தலையீட்டின் பேரில் இடது கையிலுள்ள விரலிலும் மை அடையாளம் இடப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ்- ஆர்ஜேடி வாக்கு மோசடி குறித்து குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    முன்னதாக பாஜக தலைவர்கள் சிலர் கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலிலும், தற்போது நடந்த பீகார் தேர்தலிலும் வாக்கு செலுத்திய புகைப்படங்களை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பகிர்ந்து வாக்கு மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

    • பிரதமர் மோடி மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.
    • பா.ஜனதாவிடம் இருந்து பிரிந்து செல்ல முடியாது.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பெற்றோருக்குப் பிறகு, மரியாதை மற்றும் அன்பு நிறைந்த இடத்தில் நான் மதிக்கும் ஒரே நபர் பிரதமர் மோடி தான்.

    அவர் இருக்கும் வரை, பா.ஜ.கவில் இருந்து பிரிந்து செல்வது பற்றி நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

    நான் என் எதிரிகள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை, என் சொந்த பலத்திலும் கடின உழைப்பிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    மீண்டும் ஒருமுறை நாங்கள் 100 சதவீத வெற்றி விகிதத்தை அடைவோம். என்று நான் நம்புகிறேன். 5 கட்சிகளின் இந்த கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி.

    ஜனதா தளம் (ஐக்கிய) வாக்காளர் தளத்திற்குள் வளர்ந்து வருகிறது. அவர்களின் ஆதரவை பெற்று உள்ளது. எதுவாக இருந்தாலும், ஒரு வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

    ராம் விலாஸ் பாஸ்வான் அரசியலில் இருக்கும்போது தனது மக்களுக்கும் அவரது பிராந்தியத்திற்கும் பாடுபட நேர்மையான முயற்சியை மேற்கொண்டார். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும்.
    • தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும்.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (NDA)- இந்தியா கூட்டணிக்கும் (India Bloc) இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. அந்தக் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.

    இன்றுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் முடிவடைந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் 60 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் ஒரே தொகுதியில் இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை நட்பான சண்டை என இந்தியா கூட்டணி அழைக்கிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக்சன சக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான், நட்பான சண்டை என்பது கிடையாது என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள ஒற்றுமையின்மையை குறித்து அவர் கூறியதாவது:-

    ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும். தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது அவர்களுடைய தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும். அது எப்படி இன்னொரு தொகுதிகளில் பாதி்ப்பை ஏற்படுத்தாமல் இருக்கும். இந்தியா கூட்டணியில் உள்ள பிளவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும்.

    நான் அரசியலை நன்றாக புரிந்தவன். தொகுதி பங்கீடுகளில் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் இந்தியா கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு கூட செய்ய முடியவில்லை. ஒரு தேர்தலில் பெரிய கூட்டணி பிளவு படும் விளிம்பில் இருப்பது போன்றதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்தியா கூட்டணியில் லாலு கட்சி (RJD) 143 இடங்களிலும், காங்கிரஸ் 55 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 20 தொகுதிகளிலும், சிபிஐ 6 தொகுதிகளில், சிபிஐ-எம் 4 தொகுதிகளிலும், விஐபி 15 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் 60 தொதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    • கடத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.
    • சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பீகாரில் உள்ள NDA அரசாங்கத்தில் உள்ளது.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நிதிஷ் குமாரை ஆதரிப்பதில் தான் வருத்தப்படுவதாக அவர் கூறினார்.

    பீகாரில் சமீபத்தில் நடந்த வீட்டுக் காவல் பணிக்கான ஆட்சேர்ப்புத் தேர்வு எழுத வந்த மாணவி மயக்கமடைந்து ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய சிராக் பாஸ்வான், பீகார் நிர்வாகம் குற்றவாளிகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவும், கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.

    குற்றங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு முற்றிலும் தவறிவிட்டதாகவும், பீகாரில் மக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் அவர் கூறினார். மக்களைப் பாதுகாக்க முடியாத ஒரு அரசாங்கத்தை ஆதரிப்பதில் தான் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    அரசாங்கம் விழித்தெழுந்து குற்றங்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

    தற்போது, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பீகாரில் உள்ள NDA அரசாங்கத்தில் உள்ளது.

    இருப்பினும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி அனைத்து இடங்களிலும் தனியாகப் போட்டியிடும் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

    • பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
    • இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக சிராக் பஸ்வான் அறிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

    கடந்த வாரம் சரண் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரியும், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்) கட்சி தலைவருமான சிராக் பஸ்வான், 'வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேர்தலில் போட்டியிடுவேன்' என தெரிவித்தார்.

    லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதால், சிராக் பஸ்வானின் இந்த அறிவிப்பு பீகாரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பட் பாட்னா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

    • வக்ஃபு மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டப்பிரிவு 14, 25 மற்றும் 26-ஐ முற்றிலுமாக மீறிவது ஆகும். இது அரசியலமைப்பு எதிரானது.
    • மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சந்திராபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சந்திராபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

    இந்த நிலையில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் (AIMIM) தேசிய செய்தி தொடர்பாளர் வரிஸ் பதான் கூறியதாவது:-

    இந்த மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டப்பிரிவு 14, 25 மற்றும் 26-ஐ முற்றிலுமாக மீறிவது ஆகும். இது அரசியலமைப்பு எதிரானது.

    மக்களவையில் பாஜக-வுக்கு மெஜாரிட்டி இல்லை. அவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற விரும்பினால், அவர்களுக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் மற்றும் ஜெயந்த் சவுத்ரியிடம் இருந்து ஆதரவு தேவை. இவர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தால் இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அவர்களை மன்னிக்கமாட்டார்கள்.

    இவ்வாறு வரிஸ் பதான் தெரிவித்தார்.

    • பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
    • சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    எனவே இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 உயர் அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர். இவர்கள் தமிழக அதிகாரிகளிடம் நடந்த விசயங்களை கேட்டறிந்தனர்.

    இந்த குழுவினர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் அங்குள்ள வட மாநில தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார்கள். இந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ள பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அதன்பிறகு கிண்டி ராஜ்பவன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான மனுவையும் கவர்னரிடம் அளித்தார்.

    • சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.
    • தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் நிலைமையை நேரில் கண்டறிய பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர்கள் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று கூறினார்கள்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த இடத்திலும் சென்று பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது.

    தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    எனவே சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பாதீர் என்று கேட்டுக் கொண்டேன் என்று கூறினார்.

    • ராம் விலாஸ் பஸ்வான் கட்சியை பிரித்து பசுபதி பராஸ் தனியாக செயல்பட்டார்.
    • ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தற்போது பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் ராம் விலாஸ் பஸ்வான் மகன் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா 17 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இதனால் மத்திய மந்திரியாக இருக்கும் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    2019 மக்களவை தேர்தலின்போது பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டிரிய லோக் தளம் பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. அவர் மத்திய மந்திரியாக இருந்தார். அவர் மறைவுக்குப்பின், அவரது சகோதரர் பசுபதி பராஸ் கட்சியை பிரித்து தனியாக செயல்பட்டார். அவருக்கு பா.ஜனதா மத்திய மந்திரி பதவியும் வழங்கியது.

    ஆனால், தற்போதைய தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பராக் பஸ்வானை (லோக் ஜனசக்தி) சேர்த்துக் கொண்டது. இதனால் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்து தனது மந்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது குறித்து பசுபதி பராஸ் கூறுகையில் "நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து அறிவித்தது. எங்களுடைய கட்சி ஐந்து எம்.பி.க்களை கொண்டுள்ளது. நான் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றினேன். எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

    இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த அரசு பணியாற்ற முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது மந்திரி சபையில் இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கியமான இலாகாக்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாங்கள் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிராஜ் பஸ்வான் கூறுகையில் "நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், அவரது தலைமைக்கும் எங்களுடைய ஆதரவை நாங்கள் தெரிவித்தோம். எந்தவொரு நிபந்தனையின்றி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டோம். எந்த நிபந்தனையும் இருக்க முடியாது. இந்த வெற்றி பிரதமர் தலைமைக்கான வெற்றி.

    தேசிய ஜனநாயக கூட்டணியை அவருடன் இணைத்து கொண்டு சென்றதன் காரணமாக எங்கள் கூட்டணி இந்த வெற்றியை பெற்றுள்ளது" என்றார்.

    பீகார் மாநிலத்தில் சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 12 இடங்களில் வெற்றி பெற்றது. ஜித்தன் ராம் மஞ்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

    ×