என் மலர்
நீங்கள் தேடியது "Waqf Amendment Bill"
- வக்பு திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசு வழங்கினர்.
- இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
வக்பு திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் நேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
இன்று 2- வது நாளாக காஷ்மீர் சட்டசபை கூடியது. முன்னதாக மக்கள் ஜனநாயக கட்சி ( பி.டி.பி.) மற்றும் அவாமி இத்தேஹாத் கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு வக்பு திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசு வழங்கினர். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் அமளியால் சபை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் வாஹித்பாரா சட்டசபையில் இருந்து வெளியேற்றப் பட்டார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்.கள் அமளியில் ஈடுபட்டதால் சபையை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
- கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது
- சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அங்கமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, மேல்சபையில் நேற்று முன்தினம் அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்ந்த இதழான Organiser, "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது.
வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்எஸ்எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரை குறிவைக்கிறதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் எச்சரித்தார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து கூறியதாவது, வக்பு மசோதாவுக்குப் பிறகு சங் பரிவாரம் தேவாலயங்களைக் குறிவைத்துள்ளது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களின் ஆழமான விரோதத்தை வெளிப்படுத்துகிறது. தேவாலய நிலங்கள் பற்றி குறிப்பிடப்படும் தேவையற்ற கருத்துகள் ஆபத்தான அறிகுறிகளை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளன.
இந்தக் கட்டுரையின் மூலம் ஆர்எஸ்எஸ்-ன் உண்மையான நோக்கம் வெளியே வந்துள்ளது. சங் பரிவாரம் முன்வைக்கும் பெரும்பான்மை வகுப்புவாதம் மற்ற மதங்களின் மீது பகையை உண்டாக்கும் வேலையே.
சிறுபான்மை சமூகத்தினரை அழிக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அங்கமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின
புதுடெல்லி:
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288
வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.
இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதற்கிடையே, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து,
இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
- வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன.
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.
இந்நிலையில், மூத்த பாஜக தலைவரும் பீகார் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, வக்பு மசோதாவுக்கு எதிராக பேசுபவர்களை தேச துரோகிகள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அவர், "வக்பு மசோதாவை ஏற்கமாட்டோம் என்று பேசுபவர்கள் சிறைக்கு செல்வார்கள். இது பாகிஸ்தான் கிடையாது. இந்துஸ்தான். இது நரேந்திர மோடியின் அரசு. வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு மசோதாவிற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள், அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.
- வக்பு மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தன.
- பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தப்ரேஸ் ஹசன். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக், அலிகாரைச் சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் முகமது தப்ரேஸ் சித்திக் , போஜ்பூரைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் முகமது தில்ஷான் ரெய்ன் மற்றும் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில், "வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அளித்த ஆதரவு, மதச்சார்பற்ற விழுமியங்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கும் என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் வக்பு மசோதா, பிரிவு 370 ரத்து, முத்தலாக் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. இது முஸ்லிம் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும்" என்று கூறியுள்ளார்.
இது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ராஷ்ட்ரிய லோக் தளம் ஆதரவு அளித்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவரான ரிஸ்வி கட்சியில் இருந்து விலகினார்.
லக்னோ:
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் ஜெயந்த் சவுத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளரான ரிஸ்வி கட்சி மற்றும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இருந்து விலக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
- பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
- வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியா முழுவதும் சுமார் 1.20 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்பு வாரியங்களில் உள்ளன. அந்தச் சொத்துகள் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரால் தானமாக வழங்கிய சொத்துகள் ஆகும். அவற்றை நிர்வகிப்பதற்கு 'வக்பு கவுன்சில்' , 'வக்பு வாரியம்' ஆகிய அமைப்புகள் உள்ளன.
இதுவரை இருந்த சட்டத்தின்படி அந்த அமைப்புகளை இஸ்லாமியர்களே நிர்வகித்து வந்தனர். தற்போது அந்த நிர்வாக அமைப்புகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்து அதன் மூலம் வக்பு சொத்துகளை அபகரிப்ப தற்கு பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மதங்களின் சொத்துகளை அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர். இந்துக் கோவில்களின் சொத்துகளை இந்துக்கள்தான் நிர்வகிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட இந்துக்களை மட்டுமே கொண்ட குழுக்கள் தான் நிர்வகிக்கின்றன.
சீக்கியர்களின் குருத்துவாராக்களை சீக்கியர்களைக் கொண்ட குழு நிர்வாகிக்கிறது. தேவாலயங்களைக் கிறித்தவர்களே நிர்வாகம் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது முஸ்லிம்களின் சொத்துகளை மட்டும் முஸ்லிம் அல்லாத மற்றவர்களையும் கொண்டு நிர்வாகம் செய்ய இந்த அரசு முயற்சிப்பது ஏன்? அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பொருளாதார தற்சார்பு அற்றவர்களாக ஆக்கி அடிமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டும் என்பதே பாஜகவின் உள்நோக்கம் ஆகும். பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
இந்நிலையில் வெகு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 8-ந்தேதி அன்று மாவட்டந் தோறும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளோடு அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமாறு அழைக்கிறோம்.
அத்துடன், வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
- காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.
வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
சி.ஏ.ஏ. 2019, தகவல் அறியும் உரிமை திருத்த சட்டம், தேர்தல் நடத்தை விதிகளில் கொண்டுவந்த திருத்தங்கள், வழிபாட்டு தலங்கள் திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர உள்ளது. இந்திய அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசாங்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்க்கிறோம், தொடர்ந்து எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
- அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். த.வெ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர்புஸ்சி ஆனந்த் தலைமையில் இன்று அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற புஸ்சி ஆனந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை சாலையில் இருந்து போலீசார் கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையோரமாக சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் 16 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே போலீஸ் தரப்பில் அறி வுறுத்தப்பட்டு இருந்தது. இப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
'இஸ்லாமியர் பாதிக்கப்படும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை உடனே திரும்பப்பெற வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலி யுறுத்தலின் பேரில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உங்களது சொத்தில் இன்னொருவர் பெயரை சேர்த்தால் ஏற்றுக் கொள்வீர்களா? சிறுபான்மையினரின் குரலை நெறிக்கும், ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள். மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
சென்னை (தெ) வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் தி.நகர் க.அப்புனு தலைமையில் தி.நகர் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டர்களை திடீரென இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்தெறிந்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களிடம் மற்ற அரசியல் கட்சி போஸ்டர்கள் எல்லாம் அப்படியே இருக்கும்போது த.வெ.க. போஸ்டரை மட்டும் ஏன் கிழித்து எறிகிறீர்கள்? என த.வெ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- பட்டினப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏப்.4-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது.
அதன்படி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று த.வெ.க. போராட்டம் நடத்த உள்ளது.
இந்நிலையில் த.வெ.க. போராட்டத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பட்டினப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்காக மேடை போட த.வெ.க.வினர் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- பல ஆண்டுகளாக வக்பு அமைப்பு வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்தது.
- ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது.
அரசுமுறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நமது கூட்டுத் தேடலில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது.
நீண்ட காலமாக குரல்கள் அற்று ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கும், விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.
பாராளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி சட்டங்களை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கூட்டுக்குழுவுக்கு மதிப்பு மிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றி. விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக வக்பு அமைப்பு வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்தது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவித்தது. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்.
ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழியாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது.
- பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும்.
கொல்கத்தா:
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.
இதனை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும். அதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






