த.வெ.க. போராட்டம்- பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிப்பு

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.பட்டினப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
த.வெ.க. போராட்டம்- பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிப்பு
Published on

வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏப்.4-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது.

அதன்படி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று த.வெ.க. போராட்டம் நடத்த உள்ளது.

இந்நிலையில் த.வெ.க. போராட்டத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்காக மேடை போட த.வெ.க.வினர் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com