என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய அரசு அமையும்போது வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்- மம்தா பானர்ஜி
    X

    புதிய அரசு அமையும்போது வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்- மம்தா பானர்ஜி

    • நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது.
    • பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும்.

    கொல்கத்தா:

    மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.

    இதனை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும். அதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×