என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்பு போர்டு"

    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    வழக்கு விசாரணையின்போது, வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    இந்நிலையில், புதிய வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது என தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது. பல்வேறு பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர் அறிவித்துள்ளார்.

    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு.
    • தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்பு சட்டத்திருத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    வக்பு வழக்கில் தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதி, அரசியலமைப்பு மதிப்புகள், அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு கிடைத்த மகத்தான வெற்றி.

    நீதி சமத்துவம், மத சுதந்திரத்தை கடுமையாக குறைக்கும் விதிகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
    • சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.

    வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில்,

    தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை

    2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை

    3) 'வக்பு பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)

    4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

    இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது
    • வக்ஃபு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    வக்பு திருத்தச் சட்டம் 2025 இல், ஒருவர் வக்பு வாரியம் அமைக்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய வக்பு சட்டத்தின் ஒரு பிரிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    மேலும், வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    • வக்பு திருத்த சட்டத்தை அசாதுதின் ஒவைசி போன்றோர் நிர்பந்தத்தின் பேரில் எதிர்க்கின்றனர்.
    • காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகக் கருதுகின்றன.

    புதுடெல்லி:

    மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    வக்பு திருத்த சட்டத்தில் உள்ள 3 முக்கிய பிரச்சனைகள் பற்றிய இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது. அதனால் அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.ஆனால், சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை. அதன் செல்லும் தன்மையை சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் பணி. நாங்கள் செய்தது எல்லாம் சட்டப்படியானது. எனவே, பாராளுமன்றத்தின் அதிகாரம் பறிக்கப்படாது என நம்புகிறேன்.

    வக்பு திருத்த சட்டத்தை அசாதுதின் ஒவைசி போன்றோர் நிர்பந்தத்தின் பேரில் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகக் கருதுகின்றன.

    அவர்கள் படித்து முன்னேறினால், தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றன. எனவே, முஸ்லிம்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பதையே விரும்புகின்றன என தெரிவித்தார்.

    • சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்பு திருத்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.
    • கடந்த 6-ந் தேதி தொடங்கி வக்பு சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் .எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்தச் சட்டம் 2025 தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

    முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்பு திருத்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.

    இந்த நிலையில் மத்திய அரசு "வக்பு உமித் இணையதளத்தை கடந்த 6-ந் தேதி தொடங்கி வக்பு சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கை முழுமையாகச் சட்டவிரோதமானது ஆகும். மேலும், இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பாகும்.

    அரசியல் சாசனத்திற்கு முரணானதாக உள்ள வக்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வக்பு நிர்வாகிகளும், மாநில வக்பு வாரியங்களும் இந்த இணையதளம் வழியாக வக்பு சொத்துக்களைப் பதிவு செய்வதை நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தவிர்க்குமாறு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டலை பின்பற்றுமாறு வக்பு நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஷரியா சட்டம் கூறுகிறது
    • வக்பு 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு தனது நிலம் என்று கூறி எடுத்துக்கொள்ளும்.

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் 70-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் மத்திய அரசு வக்பு சட்டதிருத்தத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. 

    இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வில் மூன்றாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் புதிய வக்பு சட்டத்துக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் ஆஜராகினர்.

    பல பழங்குடி மக்களின் நிலங்கள் வக்பு பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளன என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.மேலும் ஒருவர் தனிநபர் சட்டத்தின் பயன்களை பெற வேண்டும் என்றால், அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஷரியா சட்டம் கூறுகிறது, அதையேதான் வக்பு சட்ட திருத்தமும் கூறுகிறது. என்று தெரிவித்தனர்.

    இதன்பின் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் வாதிட்டனர்.

    "வக்பு என்பது இஸ்லாமின் ஒரு அத்தியாவசிய மத நடைமுறையா? இல்லையா? என்பதை தீர்மானித்த பின்பே இடைக்கால உத்தரவை நீக்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.

    வக்பு சொத்து தொடர்பாக ஒரு பிரச்னை எழும்போது முதலில் அந்த சொத்தின் பிரச்னைக்கு தீர்வு காணும் வரையில், அது வக்பு சொத்தாக கருதப்படாது என்று அறிவிக்கப்படும். அந்த காலகட்டத்தில் அந்த சொத்து என்பது அரசு சொத்தாக கருதப்படும் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் எவ்வளவு கால அவகாசத்துக்குள் அந்த சொத்துமீது முடிவெடுக்க வேண்டும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு கால நிர்ணயமும் கிடையாது. எந்த ஒரு நிலத்தையும் அரசு தன்னுடையது எனக்கூறி எடுத்துக்கொள்ளும். வக்பு 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு தனது நிலம் என்று கூறி எடுத்துக்கொள்ள முடியும்.  இது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை மீறல்" என அவர்கள் வாதிட்டனர்.

    இதன்பின் பேசிய நீதிபதிகள், " வக்பு சொத்து மீது விசாரணை தொடங்கியதிலிருந்து, அதுசார்ந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரையில் அந்த சொத்து வக்பு என்ற அந்தஸ்தை இழந்து விடும்தானே என்பதுதான் எங்களின் முக்கிய கேள்வி" என்று கூறினார்.

    தொடர்ந்து வக்பு புதிய சட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கும் விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டது என்று அறிவித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 

    • எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
    • அரசு அதிகாரி நீதிபதியாகச் செயல்படுவார். யாரும் எதுவும் கேட்க முடியாது

    இஸ்லாமியர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் பல்வேறு திருத்தங்களைச் செய்து கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு. ஜனாதிபதி ஒப்புதலுடன் உடனே மசோதா சட்டமானது. ஆனால் இந்த சட்டத்திருத்தம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் மத உரிமைகளைப் பறிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "இந்த சட்டம் வக்பு நிலங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது. எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றாமல் வக்பு சொத்துக்கள் பறிக்கப்படும் வகையில் சட்டம் உள்ளது. குறைந்தது ஐந்து ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே வக்புக்கு நிலத்தை வழங்க முடியும் என்ற நிபந்தனை இதில் இருக்கிறது. அதாவது நான் மரணப் படுக்கையில் இருக்கும்போது வக்புக்கு சொத்து வழங்க விரும்பினால், நான் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபிக்க வேண்டும். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்றார்.

    அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், "பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் சட்டப்பூர்வமாகவே கருதப்படும். அவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதுவதற்கு வலுவான காரணம் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இந்த சூழலில் வேறு எதுவும் எங்களால் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கபில் சிபல், "புதிய வக்பு சட்டத்தின் கீழ், எந்தவொரு கிராம பஞ்சாயத்தும் அல்லது யாராக இருந்தாலும் வக்பு குறித்து குறைகளை எழுப்பலாம். இந்த விவகாரத்தில் அரசு அதிகாரி இறுதி முடிவை எடுக்கலாம். அதாவது அரசு அதிகாரி நீதிபதியாகச் செயல்படுவார். யாரும் எதுவும் கேட்க முடியாது" என்றார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

    • நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
    • வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்பு கள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மே 5-ந் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தான் 13-ந் தேதி ஓய்வு பெறுவதால் அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கும். மே 15-ந் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது வக்பு சட்டதிருத்தம் தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும், வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இரு தரப்பும் வருகிற 19-ந்தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 20-ந்தேதி இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றும் 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தின் முந்தைய விதிகளை நிறுத்தி வைக்கக் கோரும் எந்தவொரு மனுவையும் பரிசீலிக்கப் போவதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக த.வெ.க. தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
    • தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து எதிர்க்கடசிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேற்று உச்ச நீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.

    மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை சேர்ப்பது மற்றும் வக்ஃப் சொத்துக்களை மறுவரையரை செய்வதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 15 அன்று நடைபெறவுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பையும், தகுதியானவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    மேலும், உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பையும், சிறுபான்மையினரின் உரிமைகளையும் உறுதியாக பாதுகாக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.
    • மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான்.

    வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் மாலை நேர கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    3-வது நாளாக நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார்.

    இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    வக்பு திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.

    மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான். அவர்களுக்கான சட்டங்கள், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான சட்டங்கள் என அந்த 2 பேருக்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் துயரமான நிலையை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

    பெரும்பான்மையான மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. மும்பையில் பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் வீடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    12 ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து விட்டால் அந்த வீடு அவருக்கே சொந்தம் என புதிய வக்பு சட்டம் சொல்கிறது. அந்த வீட்டை பாதுகாக்க வேண்டு ம் என்று புதிய வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
    • சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?.

    வக்பு திருத்த சடடத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ரிட் மனு தாக்கல் செய்துள்ளன. இது தெடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. வக்பு விசயத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் நீதித்துறையில் முறையிடுவதற்கு எதிராக அரசியல சாயம் பூசக்கூடாது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    எல்லா அமைப்புகளுக்கும் (institution) பங்கு உள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?. வக்பு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வது இது முதல் முறை கிடையாது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைமைய பிரகடனம் செய்தபோது, நீதிமன்றத்தில் முறையிடவில்லையா?.

    இன்று யாராவது உச்ச நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்றால், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. நீதிமன்றத்திற்கு அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது. சட்டமன்றத்திற்கும் அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    ×