search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kiren rijiju"

    • மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
    • உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது.

    எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தால் உங்கள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் வைப்பது கைகொடுக்காது.

    நாட்டை ஆளும் அதிகாரத்தை அரசாங்கம் இழக்கும்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தவறான நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் வருத்தம் தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
    • மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்தார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அவர் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற ஒப்புதல் அளித்தார்.

    அதன்படி புதிய சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மத்திய கலாசாரத்துறை இணை மந்திரியாக இருந்த அவருக்கு தற்போது சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கெஜ்ரிவாலுக்கு ஒருபோதும் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை.
    • சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கு விடுங்கள்.

    புதுடெல்லி :

    மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மன் பேரில் இன்று அவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறார்.

    இதையொட்டி நேற்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.

    மேலும் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டார். அந்த பதிவில் அவர், பொய் சாட்சியங்களையும், தவறான ஆதாரங்களையும் கோர்ட்டுகளில் தாக்கல் செய்வது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று கூறி உள்ளார்.

    இதற்கு பதிலடியாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, கெஜ்ரிவாலின் டுவிட்டர் பதிவை 'டேக்' செய்து, அவரைக் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    கெஜ்ரிவாலுக்கு ஒருபோதும் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை.

    அன்னா ஹசாரே அவர்களே மன்னிக்கவும். இவ்வளவு மிகப்பெரிய சுமையை (கெஜ்ரிவால்) நாட்டிடம் ஒப்படைத்திருப்பது உங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. கோர்ட்டு உங்களை (கெஜ்ரிவால்) குற்றவாளி என தீர்ப்பு அளித்தால், கோர்ட்டின் மீதும் வழக்கு போடுவேன் என்று கூற நீங்கள் மறந்து விட்டீர்கள். சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கு விடுங்கள். நாம் சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜம்மு காஷ்மீரில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு பயணம் செய்தார்.
    • அவர் சென்ற கார் மீது லாரி மோதியதில் மத்திய மந்திரி உயிர் தப்பினார்.

    ஜம்மு:

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு சாலை மார்க்கமாக இன்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.

    ராம்பான் அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது. இதையடுத்து பாதுகாப்பு போலீசார் மந்திரியை காரிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

    இந்த விபத்தில் மந்திரி கிரண் ரிஜிஜு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    மத்திய மந்திரி சென்ற கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
    • காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    புதுடெல்லி :

    மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது:-

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண் அளிப்பதற்கான கால அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படமாட்டாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-

    மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டமியற்றும் துறை, மசோதா உருவாக்கும் பணியை எளிமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மசோதாவை உருவாக்குவதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வக்கீல்களின் உதவியை பெறும் திட்டம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி கூறியதாவது:-

    கொரோனாவுக்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டில் 1 கோடியே 9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர். கொரோனாவுக்கு பிறகு, 2021-ம் ஆண்டில் 15 லட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 2022-ம் ஆண்டில் 61 லட்சத்து 90 ஆயிரம் பேரும் வந்தனர்.

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக 24 மணி நேரமும் 12 உள்நாட்டு மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் செயல்படும் உதவிமைய எண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்திக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர்.
    • கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  ஒற்றுமையை வெளிப்படுத்தின. பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே கூட்டாக போராட்டங்களை நடத்தினர். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.பி.க்கள் எதிர்முழக்கங்கள் எழுப்பினர். அதாவது, லண்டனில் இந்திய பாராளுமன்றம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக இருந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளிலும் பணிகள் முடங்கின. கடைசி நாளான இன்றும் மக்களவையில் எந்த பணியும் நடக்காமல் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்ற முடக்கம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

    ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். கடைசி நாளிலும் அவையை சீர்குலைத்தனர். கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்தனர்.

    பாராளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒரு எம்.பி. ராகுல் காந்திக்காக, காங்கிரசும், அவர்களின் ஆதரவாளர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

    காங்கிரசும் அதன் கும்பல்களும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி சென்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாட்டில் இருந்து நமக்கு ஆதரவு தேவையில்லை.
    • நமது போர், நமக்கு சொந்தமானது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான தீர்ப்பையும், எம்.பி. பதவி பறிப்பையும் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியிருந்தார்.

    அவரது கருத்தை வரவேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் நன்றி தெரிவித்தார். அவருக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா தலைவர்களும், ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, ராகுல்காந்திக்கு எதிராக புதிய தாக்குதலை தொடுத்தார். அவர் கூறியதாவது:-

    1975-ம் ஆண்டு (அவசர நிலை) இந்திய ஜனநாயகம் காங்கிரஸ் கட்சியால் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டது. அப்போது யாரும் வெளிநாட்டில் அழுது புலம்பி, இந்திய உள்விவகாரங்களில் தலையிடுமாறு கேட்டது இல்லை.

    இந்தியர்களே போராடி ஜனநாயகத்தை நிலைநிறுத்தினர். ஏனென்றால் இந்தியர்களின் மனதிலும், ஆன்மாவிலும் ஜனநாயகம் உயிர் வாழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஜெர்மனி செய்தித்தொடர்பாளரின் கருத்துக்கு நன்றி தெரிவித்த திக்விஜய்சிங்குக்கு மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கபில்சிபல், கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகினார். சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி. ஆனார்.

    கபில்சி பல் கூறியதாவது:-

    ஜெர்மனியின் கருத்துக்கு நன்றி தெரிவித்து இருந்தீர்கள். எனது கருத்து என்னவென்றால், நாம் முன்னேறி செல்ல ஊன்றுகோல் தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து நமக்கு ஆதரவு தேவையில்லை.

    ஏனென்றால் நமது போர், நமக்கு சொந்தமானது. அந்தவகையில் ஒன்றாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாட்டை இழிவுபடுத்த ராகுல்காந்திக்கு உரிமை இல்லை.
    • காங்கிரசை நாட்டு மக்கள் நிராகரித்தது எங்கள் தவறு அல்ல.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி விட்டதாகவும் கூறியிருந்தார்.

    அவர் இந்தியாவை அவமானப்படுத்தி விட்டதாக பாராளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜனதா அமளியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராகுல்காந்தி என்ன பேசினாலும், அது அவரது சொந்த கட்சிக்கே தீங்கு விளைவிக்கும். அவர் தனது கட்சியை அழித்துக் கொள்ளட்டும். அது அவர்களது உட்கட்சி பிரச்சினை. எங்களுக்கு அக்கறை இல்லை.

    ஆனால், இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க முயன்றால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அவரை மன்னிக்க மாட்டோம்.

    நாட்டை இழிவுபடுத்த ராகுல்காந்திக்கு உரிமை இல்லை. நாட்டை இழிவுபடுத்துவது அவ்வளவு கடுமையானது இல்லை என்று காங்கிரஸ் கருதினால், பாராளுமன்றத்தில் ஒருதரப்பு மக்களின் பிரதிநிதியாக இருப்பதற்கு அக்கட்சிக்கு தகுதி இல்லை.

    காங்கிரசை நாடு நிராகரித்ததற்காக, நாட்டை பற்றி மோசமாக பேச காங்கிரசுக்கு உரிமை இருப்பதாக அர்த்தம் இல்லை. காங்கிரசை நாட்டு மக்கள் நிராகரித்தது எங்கள் தவறு அல்ல.

    அதற்காக நாட்டையோ, ஜனநாயக ஆலயமான பாராளுமன்றத்தையோ, ஜனநாயகத்தையோ இழிவுபடுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை. எனவே, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ராகுல்காந்தியிடம் மன்னிப்பு கோருவது எங்கள் கடமை. ஏனென்றால், சக எம்.பி.யின் செயலை கண்டிக்காமலோ, மன்னிப்பு கோராமலோ இருந்தால், மற்ற எம்.பி.க்களை மக்கள் கேள்வி கேட்பார்கள்.

    இந்தியாவுக்கு எதிரான சக்திகளும், ஒரு கும்பலும் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தி வருகிறார்கள். அவர்கள் ராகுல்காந்தி பயன்படுத்திய அதே வார்த்தைகளை பேசுகிறார்கள்.

    ராகுல்காந்தி, லண்டனில் இந்தியாவை பற்றி பொய் பேசினார். முதலில், பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றார். அது முற்றிலும் சரியல்ல. அவர் ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பேசினார். சுதந்திரமாக பேசினார். ஆனால் அவரது பேச்சில் சாரம் இல்லை.

    இரண்டாவதாக, தன்னை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச அனுமதிக்கவில்லை என்று கூறினார். அதுவும் முற்றிலும் பொய். தனது யாத்திரையின்போது, தினந்தோறும் பலதடவை மத்திய அரசை விமர்சித்து பேசினார். நாட்டில் அதிகம் பேசியவரே அவர்தான்.

    பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், அதன் கண்ணியத்தை ராகுல்காந்தி காயப்படுத்துகிறார். அரசியல் சட்டத்தையும், நீதித்துறையும் இழிவுபடுத்துகிறார்.

    அவர் எத்தகையவர் என்பது இங்குள்ள இந்தியர்களுக்கு தெரியும். ஆனால், வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர் உண்மை பேசுவதாக நினைப்பார்கள். காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க லண்டனுக்கு சென்று தரையை சுத்தம் செய்யுமா?

    பிரதமர் மோடி, வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்தியதாக கூறுகிறார்கள். அவர் முந்தைய அரசின் செயல்களை பற்றி மட்டுமே பேசினார். மோடி, தானாக பிரதமர் ஆகிவிடவில்லை. 140 கோடி மக்களின் ஆசியுடன் பிரதமர் ஆனார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மோடியின் பங்கை உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும்.
    • ஆனால் வெளிநாட்டினருக்கு தெரியாது என மத்திய மந்திரி ரிஜிஜூ தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து, லண்டன் நகரில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தது.

    இந்நிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியில் தன்னை இளவரசராக அறிவித்துக் கொண்ட ராகுல் காந்தி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார்.

    இந்தியாவின் ஒற்றுமைக்கு தீவிர ஆபத்து நிறைந்த மனிதராக அவர் மாறி இருக்கிறார். அவர் தற்போது இந்தியாவை பிரிக்க மக்களைத் தூண்டிவிடும் வேலையை செய்துவருகிறார்.

    இந்தியாவின் மிக பிரபலம் வாய்ந்த மற்றும் அன்பு செலுத்தப்படுகிற மதிப்புமிக்க பிரதமர் மோடியின் ஒரே மந்திரம் என்னவென்றால் ஒரே இந்தியா, வளர்ச்சிக்கான இந்தியா என்பதே ஆகும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், மற்றொரு டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும். ஆனால் வெளிநாட்டினருக்கு உண்மையில் ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது தெரியாது. அவரது முட்டாள்தன பேச்சுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால், அவரது இந்திய எதிர்ப்பு பேச்சுகள், இந்தியாவின் மீதுள்ள பொதுவான எண்ணத்திற்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    • ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார்.
    • சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பனாஜி :

    கோவா மாநில தலைநகர் பனாஜியில் 23-வது காமன்வெல்த் சட்ட மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில், கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலன் அடைகிறார். நலத்திட்ட நாடு என்பதால், ஒவ்வொரு தனிமனிதரின் குரலையும் கேட்பது முக்கியம்.

    சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளன. சட்டங்களே தடைக்கற்களாக மாறும்போது, அவற்றை பின்பற்றுவது சுமையாக இருக்கும். அப்போது, அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.

    அந்தவகையில் கடந்த எட்டரை ஆண்டுகளில், 1,486 பழமையான, நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம். 13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில் மேலும் 65 சட்டங்களை நீக்க மசோதாவை முன்வைப்போம். நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடியே 98 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை குறைப்பது எளிதல்ல. ஏனென்றால், முடிவுக்கு வரும் வழக்குகளை விட 2 மடங்கு புதிய வழக்குகள் வந்து விடுகின்றன.

    ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார். சில நீதிபதிகள், நாள் ஒன்றுக்கு 200 வழக்குகளை கூட முடித்து வைக்கிறார்கள். இருப்பினும், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இ-கோர்ட்டுகளை தொடங்கி இருக்கிறோம். எங்கள் இறுதி இலக்கு, காகிதமற்ற கோர்ட்டுகள்தான்.

    மத்தியஸ்தம் செய்வதை ஊக்குவிக்க மத்தியஸ்த மசோதாவையும் கொண்டுவர உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
    • உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், சொந்த தொகுதிக்கு செல்லாமல், தாங்கள் பணியாற்றும் ஊரில் இருந்தபடியே வாக்களிக்க தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் இதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-

    தேர்தல் கமிஷன் அளித்த தகவல்படி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலில் பயன்படுத்தும் திட்டம் இல்லை. மேலும், இது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-

    20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரம் கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் 208 வழக்குகள் 20 ஆண்டுகளாக உள்ளன. ஐகோர்ட்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 547 வழக்குகளும், மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்கோர்ட்டுகளில் 6 லட்சத்து 72 ஆயிரம் வழக்குகளும் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் 8 ஆயிரத்து 343 இந்திய கைதிகள் உள்ளனர். அவர்களில் விசாரணை கைதிகளும் அடங்குவர். அதிகபட்சமாக, ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் 1,926 இந்திய கைதிகள் உள்ளனர்.

    அவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவை கேள்வி நேரத்தில், ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அளிக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    பாராளுமன்ற நிலைக்குழு அதற்கு சிபாரிசு செய்துள்ளது. இருப்பினும், 2019-2020 நிதிஆண்டில் பயணிகள் கட்டணத்தில் மத்திய அரசு ரூ.59 ஆயிரத்து 837 கோடி மானியம் அளித்துள்ளது. இது, ரெயிலில் செல்லும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 53 சதவித சலுகை அளிக்கப்பட்டதற்கு சமம்.

    அதுபோக, 4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள், மாணவர்கள் ஆகியோருக்கு சலுகை கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன்.
    • ஒரு மொழியை மட்டும் திணிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்.

    நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்12வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    (பொதுமக்கள்) நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது காலத்தின் கட்டாயம். நமது பிரதமர் நமது கலாச்சாரம் மற்றும் நமது மொழியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.

    நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையில் எதிர்காலத்தில் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் ஏற்கனவே நான் பேசியுள்ளேன்.

    உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் (எதிர்காலத்தில்) தமிழ் மொழி முக்கிய இடம் பெறுவதைக் கண்டு நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி, ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×