என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kiren Rijiju"

    • பிரதமர் மோடி சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்.
    • பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்தனர்

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

    பிபர்வரி 4 ஆம் தேதி குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது காங்கிரஸ் எம்.பிக்கள் அவரை தாக்க முயன்றனர் என்றும் பாதுகாப்பு கருதி அடுத்த நாள் அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமரை கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இது முற்றிலும் பொய் என மறுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி பெண் எம்பிக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

    இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக கிரண் ரிஜிஜு இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் இருக்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரிஜிஜு, "காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், 20-25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசியதும், பிரதமரை மிரட்டியதும் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தச் சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்ததாக கூறிய ரிஜிஜு, அவர்கள் நேரடியாகச் சபாநாயகரைத் திட்டவில்லை என்றாலும், மற்ற எம்.பி.க்கள் மிரட்டுவதையும் தாக்குவதையும் அவர்கள் ஊக்குவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

    கடந்த வாரம் மக்களவையில், 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதையின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிகிறது.

    இதற்கிடையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   

    • அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
    • இன்று முழு தொழிலாளர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் குற்றச்சாட்டை பிரியங்கா காந்தி மறுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது,"சபாநாயகர் அறைக்குள் சென்ற நாங்கள் யாரையும் திட்டவில்லை. 2 எம்.பி.க்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தனர்.

    அவர்கள் அதை வெளிப்படுத்தினர். நான் அவர்களை ஊக்குவித்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இது ஒரு பொய். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். இறுதியில், நான் சில விஷயங்களை அமைதியாகச் சொன்னேன்.

    அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இன்று முழு தொழிலாளர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். ராகுல்காந்திக்கு எதிராக வழக்குகள் உள்ளிட்ட வேறு எதையும் அவர்கள் செய்வார்கள். ஆனால் எதுவும் ராகுல்காந்தியை பாதிக்க போவதில்லை" என்றார்.

    • இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம், முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான்.
    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள், எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள்.

    நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகத் தரக்குறைவான நடத்தையைக் கண்டு பெருமை கொள்கிறது!! நாங்கள் அனைத்து பாஜக எம்.பி.க்களையும் தடுத்து நிறுத்தி, பெண் எம்.பி.க்களை காங்கிரஸ் எம்.பி.க்களை எதிர்கொள்ள அனுமதிக்காமல் இருந்திருந்தால், நிலவரம் அங்கு மோசமான காட்சியாக மாறியிருக்கும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பதில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது." என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டிருந்தார். 

    இந்நிலையில் இந்த வீடியோவை மறுபகிர்வு செய்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

    "அன்பார்ந்த கிரண் ரிஜ்ஜுஜு அவர்களே வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அது நாடாளுமன்ற மரபுக்கு உட்பட்டதல்ல என்றாலும், அது எங்கள் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், பெண்கள் எம்.பி.க்களாகிய நாங்கள் பதாகைகளை பிடித்துக்கொண்டு, ஆளுங்கட்சியினருடன் அமைதியாக உரையாடியதை தெளிவாக காண முடிகிறது. இதற்குப் பயந்தே பிரதமர் நாடாளுமன்றம் வரவில்லை என்று நீங்கள் சொல்வது பிரதமரின் பயத்தையும், பலவீனத்தையுமே காட்டுகிறது.

    நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. வன்முறையிலும் ஈடுபடவில்லை. "எதிர்பாராத சம்பவம் திட்டமிடப்பட்டது" என்ற பொய்யான குற்றச்சாட்டையும், பிரதமரை தாக்க முயன்றதாக பெண்கள் எம்.பி.க்கள் மீது பரப்பப்பட்ட அரசுக்கு ஆதரவான ஊடக கதைகளையும் இந்த வீடியோ முற்றிலும் பொய்யென நிரூபிக்கிறது. அந்த பொய் கதை இப்போது முழுமையாக உடைந்துவிட்டது.

    இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவானதற்கு காரணம், முக்கிய தேசிய விவகாரங்களில் பேச எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டதுதான். தேசிய பாதுகாப்பு குறைபாடுகள், எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமரின் மௌனம், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பேச அனுமதி வழங்கப்படவில்லை.

    நாங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள். உறுதியானவர்கள், அச்சமற்றவர்கள், அமைதியானவர்கள். எந்த மிரட்டலும், எந்த பொய்யான கதையும் எங்களை மௌனமாக்க முடியாது. மேலும், பாராளுமன்றத்தின் மரியாதை மற்றும் புனிதம் குறித்த தங்கள் தீடீர் அக்கறைக்கு நன்றி. உங்கள் அபாரமான நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன்!

    எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதற்கு மீண்டும் மனப்பூர்வமான நன்றிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • அரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
    • பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்.

    வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் ஹைட்ரஜன் குண்டு உள்ளது. அதை பயன்படுத்தினால், மோடி ஆட்டம் கண்டுவிடுவார் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பா.ஜனதாவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.

    அரியானாவில் ஒரே நபர் 10 வாக்குச்சாவடியில் 22 முறை வாக்களித்து உள்ளார். 22 முறை வாக்களித்த நபரின் புகைப்படம் பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவருடையது.

    அரியானாவில் மொத்த வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு உள்ளன. மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகள் திருடப்பட்டுள்ளது. 8-ல் ஒரு வாக்கு அரியானா தேர்தலில் திருடப்பட்டது. முகவரியே இல்லாமல் 93 ஆயிரம் வாக்குகள் இருந்தது.

    ஒரே நபர் வெவ்வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு அளித்துள்ளனர். பாதாஸ்பூர் என்ற இடத்தில் 14 முறை ஒருவர் வாக்கு அளித்துள்ளார். வாக்கு திருட்டால்தான் அரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

    ஜனநாயகத்தை அழிப்பதில் பா.ஜனதாவின் புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) ஆகும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இதே மோசடி நடந்தது. அனைத்து கருத்து கணிப்பும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்தால் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.

    வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. முக்கிய கண்காணிப்பு கேமரா ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்து உள்ளது. முறைகேடுகளால்தான் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. போலி புகைப்படங்களை நீக்கும் மென்பொருள் வசதி தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? வாக்கு திருட்டின் மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

    வாக்கு திருட்டில் ஈடுபடும் மோடியும், அமித் ஷாவும் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள். பிரதமர் மோடி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார். வாக்கு திருட்டு ஒரு தொகுதியிலோ ஒரு மாவட்டத்திலோ மட்டும் அல்ல நாடு முழுவதும் நடக்கிறது.

    இவ்வாறு ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இதற்கு பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். கிரண் ரிஜிஜு "தேர்தல் பீகாரில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி அரியானா பற்றி கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    • எதிர்க்கட்சிகளின் அமளியால் கடந்த 2 வாரமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியது.

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

    இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியது.

    இந்நிலையில், 'எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்' என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வக்பு திருத்த சட்டத்தை அசாதுதின் ஒவைசி போன்றோர் நிர்பந்தத்தின் பேரில் எதிர்க்கின்றனர்.
    • காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகக் கருதுகின்றன.

    புதுடெல்லி:

    மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    வக்பு திருத்த சட்டத்தில் உள்ள 3 முக்கிய பிரச்சனைகள் பற்றிய இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது. அதனால் அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.ஆனால், சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை. அதன் செல்லும் தன்மையை சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் பணி. நாங்கள் செய்தது எல்லாம் சட்டப்படியானது. எனவே, பாராளுமன்றத்தின் அதிகாரம் பறிக்கப்படாது என நம்புகிறேன்.

    வக்பு திருத்த சட்டத்தை அசாதுதின் ஒவைசி போன்றோர் நிர்பந்தத்தின் பேரில் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகக் கருதுகின்றன.

    அவர்கள் படித்து முன்னேறினால், தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றன. எனவே, முஸ்லிம்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பதையே விரும்புகின்றன என தெரிவித்தார்.

    • நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு பாக்கியமா?
    • இந்தியப் பிரதமரிடமிருந்து வெறுப்புப் பேச்சுகளுக்கு இலக்காக இருப்பது ஒரு கௌரவமா?

    பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் அதிக சலுகைகளையும் பாதுகாப்பையும் பெறும் ஒரே நாடு இந்தியா என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், " நீங்கள் இந்தியக் குடியரசின் அமைச்சர், மன்னர் அல்ல. நீங்கள் இருப்பது அரசியலமைப்புச் சட்டப் பதவி , அரியணை அல்ல. சிறுபான்மை உரிமைகள் அடிப்படை உரிமைகள், தொண்டு அல்ல.

    இந்திய முஸ்லிமகள் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானியர், வங்கதேசியர், ஜிஹாதி அல்லது ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுவது ஒரு நன்மையா? கும்பல் கொலை செய்யப்படுவது பாதுகாப்பா? இந்தியக் குடிமக்கள் கடத்தப்பட்டு வங்கதேசத்திற்குள் தள்ளப்படுவது ஒரு பாதுகாப்பா?

    நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு பாக்கியமா? சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்றப்படுவதா?

    இந்தியப் பிரதமரிடமிருந்து வெறுப்புப் பேச்சுகளுக்கு இலக்காக இருப்பது ஒரு கௌரவமா? இந்தியாவின் சிறுபான்மையினர் இனி இரண்டாம் தர குடிமக்கள் கூட அல்ல. நாங்கள் பணயக்கைதிகள்.

    உதவிகள் பற்றிப் பேச விரும்பினால், இதற்கு பதிலளிக்கவும்: முஸ்லிம்கள் இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக இருக்க முடியுமா? இல்லை. ஆனால் உங்கள் வக்ஃப் திருத்தச் சட்டம் முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் சேர்க்க கட்டாயப்படுத்துகிறது. மேலும் அவர்கள் பெரும்பான்மையை உருவாக்க அனுமதிக்கிறது.

    முஸ்லிம் மாணவர்களுக்கு பயனளிக்க கூடாது என்பதால் நீங்கள் மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்பை நிறுத்தியுள்ளீர்கள். நீங்கள் மெட்ரிக்-க்கு முந்தைய மற்றும் தகுதி மற்றும் சராசரி உதவித்தொகைகளை குறைத்துள்ளீர்கள்.

    உயர்கல்வியில் எண்ணிக்கை குறைந்து வரும் ஒரே சமூகம் முஸ்லிம்கள் மட்டுமே. முறைசாரா பொருளாதாரத்தில் அவர்களின் இருப்பு அதிகரித்துள்ளது. உங்கள் பொருளாதாரக் கொள்கைகளால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உங்கள் சொந்த அரசாங்கத்தின் தரவு.

    இந்திய முஸ்லிம்களின் குழந்தைகள் மட்டுமே தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை விட மோசமாக வாழ்க்கை சூழலில் உள்ளனர். தலைமுறைகளுக்கு இடையேயான இயக்கம் தலைகீழாக மாறிவிட்டது.

    மற்ற நாடுகளின் பிற சிறுபான்மையினருடன் ஒப்பிட நாங்கள் கேட்கவில்லை. பெரும்பான்மை சமூகம் பெறுவதை விட அதிகமாக நாங்கள் கேட்கவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி என்று அரசியலமைப்பு வாக்குறுதியளிப்பதை நாங்கள் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • 15 வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க 'காடன் போட்ராங் டிரஸ்ட்' மட்டுமே அதிகாரம் கொண்டது
    • இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.

    திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஜூலை 6 ஆம் தேதி தனது 90 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சீடர்களால் இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார்.  

    இதன்பின் சீடர்கள் மத்தியில் பேசிய அவர், "எனக்கு அவலோகிதேஸ்வரரின் ஆசிர்வாதம் இருக்கிறது. இதுவரை என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இன்னும் 30-40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்.

    உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன. நாம் நம் நாட்டை இழந்துவிட்டோம், இந்தியாவில் ஒரு அகதியாக, தர்மசாலாவில் வசிக்கும் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது.

    நான் இன்னும் என்னால் முடிந்தவரை அவர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்" என்று தலாய் லாமா கூறினார். இன்னும் சில ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பதற்கான தெய்வீக அறிகுறிகளைப் பெறுவதாக அவர் கூறினார். முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவதற்கு அளித்த பேட்டியில் 110 வயது வரை வாழ்வேன் என்று தலாய் லாமா கூறியிருந்தார். 

    மறுபுறம், தலாய் லாமா தனது வாரிசைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 15 வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க 'காடன் போட்ராங் டிரஸ்ட்' மட்டுமே அதிகாரம் கொண்டது என்று அதில் தெரிவித்தார்.

    2011 ஆம் ஆண்டில் தனது வாரிசைத் தேர்ந்தெடுப்பது குறித்து புத்த மதத் தலைவர்களுடன் விவாதித்ததாகவும், அவர்களின் நேர்மறையான கருத்தை பெற்றதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த விஷயத்தில் மற்ற சக்திகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று அவர் சீனாவை மறைமுகமாக எச்சரித்தார்.

    திபெத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக சீனா நீண்ட காலமாக தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் தனது கட்டுப்பாட்டை நிறுவ முயற்சித்து வருகிறது.

    இதற்கிடையே தலாய் லாமாவின் வாரிசு அவரது சொந்த விருப்பப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இருதரப்பு உறவுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க திபெத் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.   

    • 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம்.
    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும்.

    நேற்று முன்தினம் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. மதியம் தொடங்கிய விவாதம், நள்ளிரவு வரை நடைபெற்று அதன்பின் வாக்கெடுப்பு நடைபெற்றது.

    அதேபோன்று மாநிலங்களவையிலும் நேற்று மதியம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. நேற்று 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடைபெற்றதாக சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிண் ரிஜிஜு கூறியதாவது:-

    நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நாம் ஒரு முக்கியமாக சாதனைப் படைத்துள்ளோம். 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம். இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.

    இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த மசோதாவிற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவளித்தன.

    புதுடெல்லி:

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    இந்நிலையில், மாநிலங்களவையில் சிறுபான்மை நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:

    வக்பு மசோதாவால் நாங்கள் முஸ்லிம்களை பயமுறுத்தவில்லை, அது எதிர்க்கட்சிகள்.

    வக்பு திருத்த மசோதாவில் மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த மசோதா கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பயனளிக்கும்.

    வக்பு திருத்த மசோதா முதலில் வரைவு செய்யப்பட்டபோதும், இப்போது நாம் நிறைவேற்றும் மசோதாவிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. யாருடைய பரிந்துரைகளையும் நாங்கள் ஏற்கவில்லை என்றால் மசோதா முற்றிலும் வேறுபட்டிருக்கும்.

    வக்பு வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. ஏன் முஸ்லிம்கள் மட்டுமே சட்டப்பூர்வ அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு தகராறு இருந்தால், அந்த தகராறு எவ்வாறு தீர்க்கப்படும்?

    வக்பு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் தகராறுகள் இருக்கலாம். சட்டப்பூர்வ அமைப்பு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.
    • திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கோரினார்.

    தாக்கல் செய்து கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    * வக்பு வாரியத்தின் கீழ் 2004-ல் 4.9 லட்சம் சொத்துகள் இருந்தனர். இன்று 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன.

    * முந்தைய அரசுகளின் நிறைவேற்றப்படாத பணிகளை நிறைவேற்றுவதே வக்பு மசோதாவின் நோக்கமாகும்.

    * நாங்கள் யாருடைய மத உணர்வையும் புண்படுத்த விரும்பவில்லை.

    * வக்பு வாரியம் வக்பு சொத்துக்களை நிர்வகிக்காது, மேற்பார்வையிட மட்டுமே செய்யும்.

    * திருத்தப்பட்ட வக்பு மசோதா பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

    * வக்பு மசோதா கோடிக்கணக்கான ஏழை முஸ்லிம்களுக்கு பயனளிக்கும், வக்ஃப் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்.

    இவ்வாறு கிரிண் ரிஜிஜு தெரிவித்தார்.

    • இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சிலர் கூறினர்.
    • ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு விவாதத்துக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் உலகில் இல்லை. பெரும்பான்மையினர் முற்றிலும் மதச்சார்பற்றவர்கள் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

    பார்சிகள் போன்ற சிறிய சிறுபான்மை சமூகங்கள் கூட இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளன. இங்குள்ள அனைத்து சிறுபான்மையினரும் பெருமையுடன் வாழ்கிறார்கள்.

    இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என சில உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது.

    சிறுபான்மையினருக்கு இந்தியாவை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. நானும் ஒரு சிறுபான்மையினர், நாம் அனைவரும் இங்கு எந்த பயமும் இல்லாமல் பெருமையுடன் வாழ்கிறோம்.

    வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினர் அந்தந்த நாடுகளில் மத துன்புறுத்தலை எதிர்கொண்ட பிறகு இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். இதைச் சொல்வது மிக, மிக தவறு.

    வரும் தலைமுறை உங்களை ஒருபோதும் மன்னிக்காது. நாட்டின் பெரும்பான்மையினர் முழுமையாக மதச்சார்பற்றவர்கள் என்பதால் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இது இல்லை. ஆனாலும், நீங்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரையும் ஒன்றிணைக்கப் போகிறது. வக்பு தீர்ப்பாயங்களில் ஏராளமான தகராறுகள் நிலுவையில் உள்ளன. சட்டத்தின் மூலம் இந்த வழக்குகளை விரைவுபடுத்த அரசாங்கம் விரும்புகிறது என தெரிவித்தார்.

    தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    ×