என் மலர்
நீங்கள் தேடியது "முஸ்லிம்கள்"
- முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
- பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?
முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
அதில், மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, "பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்?
காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் என்ன நன்மைகளைப் பெற்றுள்ளது?
காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்கள் என்ன சாதித்துள்ளனர்.
பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?" என்று தெரிவித்தார்.
- விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா?
- ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்?
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் விஜய்பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற செயல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா? மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்? ஆனால் தடை செய்யப்பட்ட பொதுப்பகுதியில் இது போன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று கூறி தொழுகை நடத்திய போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்தார்.
- மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
- உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.
உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வெறுப்பு பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.
டோமரியாகஞ்சில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், "ஒரு முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்" என்று பேசியுள்ளார்.
மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஒரு தலைவர் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தை வெளிப்படையாகத் தூண்டினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.
அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அனைவருக்கும் சமமான சட்டம் என்ற வாதம் வெற்றுத்தனமாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- பதிலுக்கு 'ஐ லவ் மகாதேவ்' பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி நடைபெற்றது.
இந்த மாத தொடக்கத்தில் மீலாதுன் நபியை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் கான்பூரில் 'ஐ லவ் முஹமது' (I Love Mohammad) என்ற பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையானது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்ததே சர்ச்சைக்கு காரணம். இதைத்தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பல நகரங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்து அமைப்பினர் 'ஐ லவ் மகாதேவ்' பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
''ஐ லவ் முஹமது' என்பது குற்றமா என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் உ.பி.போலீசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பல்வேறு நகரங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'ஐ லவ் முஹமது' பதாகைகள், சுவரொட்டிகள் தொடர்பாக கடந்த சில வரங்களாகவே வட மாநிலங்களில் இந்து குழுக்களுக்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் சிலர் போலீசார் மீது கற்களை வீசியதால் வன்முறை ஏற்பட்டது. போலீசார் பேரணியை கலைக்க தடியடி நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 10 போலீசார் காயமடைந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.
இதுவரை, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த தொடர் போராட்டங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் காவல்துறையினரைத் தாக்குதல் மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொத்தம் 1700 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த உள்ளூர் மதத்தலைவரும் இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தௌகிர் ராசாவை போலீசார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.
ஐ லவ் முஹம்மது' பிரச்சாரத்தை ஆதரித்து அவர் செய்த வீடியோ அழைப்பிற்குப் பிறகே நிலைமை பதற்றமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வக்பு திருத்த சட்டத்தை அசாதுதின் ஒவைசி போன்றோர் நிர்பந்தத்தின் பேரில் எதிர்க்கின்றனர்.
- காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகக் கருதுகின்றன.
புதுடெல்லி:
மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
வக்பு திருத்த சட்டத்தில் உள்ள 3 முக்கிய பிரச்சனைகள் பற்றிய இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது. அதனால் அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.ஆனால், சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை. அதன் செல்லும் தன்மையை சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் பணி. நாங்கள் செய்தது எல்லாம் சட்டப்படியானது. எனவே, பாராளுமன்றத்தின் அதிகாரம் பறிக்கப்படாது என நம்புகிறேன்.
வக்பு திருத்த சட்டத்தை அசாதுதின் ஒவைசி போன்றோர் நிர்பந்தத்தின் பேரில் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகக் கருதுகின்றன.
அவர்கள் படித்து முன்னேறினால், தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றன. எனவே, முஸ்லிம்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பதையே விரும்புகின்றன என தெரிவித்தார்.
- சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் வெளியேற்றினர்.
- 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை என்று கார்கே கண்டித்தார்.
அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள பைகான் ரிசர்வ் வனப்பகுதியில் 140 ஹெக்டேர் நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களை அசாம் பாஜக அரசு வெளியேற்றியுள்ளது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள், வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) முதல் மக்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று போலீஸ் நடவடிக்கைக்கு அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தப்பட்டது.
வனக் காவலர்கள் மற்றும் போலீசார் மீது குச்சிகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாக மாவட்ட காவல் ஆணையர் கூறுகிறார். இதைத்தொடர்ந்து போலீசார் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் ஷகூர் ஹுசைன் மற்றும் குத்புதீன் ஷேக் என்ற இரண்டு முஸ்லிம்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த மோதலில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.
இடம்பெயர்ந்த மக்கள் படகுகள் மூலம் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போலீசாரை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 'சட்டப்படி' நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் பணி தொடரும் என்றும்,காடுகளை மீண்டும் உயிர்ப்பிக்க விரைவில் இந்தப் பகுதியில் மரங்கள் நடப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக மற்றொரு சம்பவத்தில், புதன்கிழமை (ஜூலை 16) கோல்பாரா நகருக்கு அருகிலுள்ள ஒரு சதுப்பு நிலப் பகுதியில் 690 குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சி இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை கண்டித்தது, இது பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களை குறிவைத்த தாக்குதல் என்று குற்றம் சாட்டியது.
மல்லிகார்ஜுன் கார்கே, "துப்ரி மற்றும் கோல்பாராவில் 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை" என்று கண்டித்தார்.
சாய்கானில் நடந்த ஒரு பேரணியில், அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வெளியேற்றப்பட்டவர்களின் வீடுகளை மீண்டும் கட்டி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாக கார்கே உறுதியளித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான அரசு அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்காக நிலங்களை காலி செய்கிறது, பொது நலனுக்காக அல்ல என்று இந்த வெளியேற்றங்களை குற்றம் சாட்டினார்.
- PUCL மற்றும் APCR நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளன.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள போட் மற்றும் பிராங்குட் கிராமங்களில், வகுப்புவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சமூக-பொருளாதார புறக்கணிப்புகள் காரணமாக முஸ்லிம் குடும்பங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்கள். கிராமங்களைச் சேர்ந்த இந்துத்துவா அடிப்படைவாதிகள், இவர்களை பூர்வீகமற்ற முஸ்லிம்கள் என்று கூறி புறக்கணிப்பை நியாயப்படுத்துகின்றனர்.
மனித உரிமை அமைப்புகளான PUCL மற்றும் APCR நடத்திய உண்மை கண்டறியும் விசாரணையில், அச்சமான சூழல், வணிகங்கள் மூடல், சீர்குலைந்த வாழ்க்கை மற்றும் குடும்ப இடம்பெயர்வுகள் கண்டறியப்பட்டன.
மே 2 அன்று, பாட் கிராமத்தில் பாஜக மற்றும் பிற வலதுசாரி அமைப்புகள், அம்மன் சிலையை அவமதித்ததாக முஸ்லிம்களைக் குற்றம் சாட்டி பேரணிகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பூர்வீகமற்ற முஸ்லிம்களைப் புறக்கணிக்கக் கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
PUCL இது தொடர்பாக புனே கிராமப்புற காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது. சுவரொட்டிகள் அகற்றப்பட்டாலும், பேக்கரிகள், சலூன்கள் போன்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகள் மூடப்பட்டே கிடக்கின்றன. காவல்துறையிடம் புகார் அளித்தும் வணிகங்களைத் திறக்க எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்தனர்.
ஒரு பேக்கரி உரிமையாளர், தனது குடும்பம் 40 ஆண்டுகளாக வசித்தாலும், உத்தரப்பிரதேசத்தில் தங்கள் பூர்வீகம் என்பதால் வெளியாட்கள் என்று முத்திரை குத்தப்படுவதாகக் கூறினார். மூடப்பட்ட பல முஸ்லிம் பேக்கரிகள் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளன.
இந்து ராஷ்டிர சேனா உறுப்பினர் தனஞ்சய் தேசாய், முஸ்லிம் வணிகர்களை கடைகளை விட்டு வெளியேறும்படி மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு பழைய இரும்பு கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ. 20 லட்சம் இழப்பு ஏற்பட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மத இடங்களும் இலக்காகின. முஸ்லிம்களின் நடமாட்டம் வாட்ஸ்அப் குழுக்களால் கண்காணிக்கப்பட்டது.
பலர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் பூர்வீக கிராமங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தாலுகா தலைவர் அசோக் மாத்ரே, ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளதாகக் கூறினார்.
பொருளாதார புறக்கணிப்புகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று PUCL கண்டித்துள்ளது. சிவில் உரிமைக் குழுக்கள் இந்த மீறல்களை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன.
- நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு பாக்கியமா?
- இந்தியப் பிரதமரிடமிருந்து வெறுப்புப் பேச்சுகளுக்கு இலக்காக இருப்பது ஒரு கௌரவமா?
பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் அதிக சலுகைகளையும் பாதுகாப்பையும் பெறும் ஒரே நாடு இந்தியா என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், " நீங்கள் இந்தியக் குடியரசின் அமைச்சர், மன்னர் அல்ல. நீங்கள் இருப்பது அரசியலமைப்புச் சட்டப் பதவி , அரியணை அல்ல. சிறுபான்மை உரிமைகள் அடிப்படை உரிமைகள், தொண்டு அல்ல.
இந்திய முஸ்லிமகள் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானியர், வங்கதேசியர், ஜிஹாதி அல்லது ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுவது ஒரு நன்மையா? கும்பல் கொலை செய்யப்படுவது பாதுகாப்பா? இந்தியக் குடிமக்கள் கடத்தப்பட்டு வங்கதேசத்திற்குள் தள்ளப்படுவது ஒரு பாதுகாப்பா?
நமது வீடுகள், மசூதிகள் மற்றும் மஜார்கள் சட்டவிரோதமாக புல்டோசர்களால் இடிக்கப்படுவதைப் பார்ப்பது ஒரு பாக்கியமா? சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கண்ணுக்குத் தெரியாதவர்களாக மாற்றப்படுவதா?
இந்தியப் பிரதமரிடமிருந்து வெறுப்புப் பேச்சுகளுக்கு இலக்காக இருப்பது ஒரு கௌரவமா? இந்தியாவின் சிறுபான்மையினர் இனி இரண்டாம் தர குடிமக்கள் கூட அல்ல. நாங்கள் பணயக்கைதிகள்.
உதவிகள் பற்றிப் பேச விரும்பினால், இதற்கு பதிலளிக்கவும்: முஸ்லிம்கள் இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக இருக்க முடியுமா? இல்லை. ஆனால் உங்கள் வக்ஃப் திருத்தச் சட்டம் முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் சேர்க்க கட்டாயப்படுத்துகிறது. மேலும் அவர்கள் பெரும்பான்மையை உருவாக்க அனுமதிக்கிறது.
முஸ்லிம் மாணவர்களுக்கு பயனளிக்க கூடாது என்பதால் நீங்கள் மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப்பை நிறுத்தியுள்ளீர்கள். நீங்கள் மெட்ரிக்-க்கு முந்தைய மற்றும் தகுதி மற்றும் சராசரி உதவித்தொகைகளை குறைத்துள்ளீர்கள்.
உயர்கல்வியில் எண்ணிக்கை குறைந்து வரும் ஒரே சமூகம் முஸ்லிம்கள் மட்டுமே. முறைசாரா பொருளாதாரத்தில் அவர்களின் இருப்பு அதிகரித்துள்ளது. உங்கள் பொருளாதாரக் கொள்கைகளால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உங்கள் சொந்த அரசாங்கத்தின் தரவு.
இந்திய முஸ்லிம்களின் குழந்தைகள் மட்டுமே தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை விட மோசமாக வாழ்க்கை சூழலில் உள்ளனர். தலைமுறைகளுக்கு இடையேயான இயக்கம் தலைகீழாக மாறிவிட்டது.
மற்ற நாடுகளின் பிற சிறுபான்மையினருடன் ஒப்பிட நாங்கள் கேட்கவில்லை. பெரும்பான்மை சமூகம் பெறுவதை விட அதிகமாக நாங்கள் கேட்கவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி என்று அரசியலமைப்பு வாக்குறுதியளிப்பதை நாங்கள் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ்வதற்கு தேவை இருந்திருக்காது
- பாஜகவில் ஏன் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றினர்.
பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் நேற்று பேசும் போது வக்பு திருத்த சட்டம் தொடங்க காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம்கள் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் அவர்களுக்கு 50 சதவீத தேர்தலில் போடடியிட டிக்கெட் வழங்குங்கள் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் "வக்பு சொத்துகளை நேர்மையாக பயன்படுத்தி இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ்வதற்கு தேவை இருந்திருக்காது" என்ற பிரதமர் மோடியின் பேசியிருந்தார்.
பாஜகவில் ஏன் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றினர்.
அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் குறித்த மோடியின் கருத்துக்கு அகில இந்தய மஜ்லீஸ் தலைவர் (AIMIM) ஓவைசி கூறும் போது, "ஆர்.எஸ்.எஸ். தனது சித்தாந்தத்தையும், வளங்களையும் நாட்டின் நலனுக்காக பயன்படுத்தி இருந்தால் பிரதமர் தனது குழந்தைப் பருவத்தில் தேநீர் விற்க வேண்டிய அவசியமில்லை. மோடியின் வக்பு திருத்த சட்டம் அவற்றை மேலும் பலவீனப்படுத்தும்" என்றார்.
- மக்களவையில் அதைமுன்வைக்க உங்களிடம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை
- பாஜகவில் ஏன் தலித் முதல்வர் இல்லை என்று கேள்வி எழுப்பினார்
பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் நேற்று பேசும் போது வக்பு திருத்த சட்டம் தொடங்க காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம்கள் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் அவர்களுக்கு 50 சதவீத தேர்தலில் போடடியிட டிக்கெட் வழங்குங்கள் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மேல்சபை எம்.பி. இம்ரான் பிராப் கர்ஹி கூறியதாவது:-
பிரதமருக்கு இது போன்ற கருத்து பொருத்தமானதல்ல. நீங்கள் காங்கிரசை பார்த்து முஸ்லிம்கள் அனுதாபிகள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்களா? இல்லையென்றால் முக்தர் அப்பாஸ் நக்வி, ஷாவாஸ் உசேன், எம்.ஜே.அக்பர், ஜாபர் இஸ்லாம் ஆகியோரை குப்பை தொட்டியில் போட்டது ஏன்?
வக்பு திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் பாராளுமன்ற மக்களவையில் அதைமுன்வைக்க உங்களிடம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை. முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மக்களவை அல்லது மேல்சபை, மாநில சட்டசபைகளில் உங்களிடம் ஒரு முஸ்லிம் பெண் உறுப்பினர் கூட இல்லை என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஹிரினேட் கூறும்போது, "பாஜகவில் ஏன் தலித் முதல்வர் இல்லை" என்று கேள்வி எழுப்பினார். சமாஜ்வாதிகட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபுஆஸ்மி கூறும்போது, "பாஜக தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
- அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்
- நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், 'பாரத மாதா கி ஜே' கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பினார்.
முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர்தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
- பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
- பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.
முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.
பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.
பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.
ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.
வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.
இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.
இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.






