என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு"

    • கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
    • இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிட்ட மேற்குக் கரையில் உள்ள முக்கிய வரலாற்றுத் தலத்தின் பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேலின் சிவில் நிர்வாகம், மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய தொல்லியல் தளமான செபாஸ்டியாவின் பெரும் பகுதிகளை கையகப்படுயத்தும் உத்தரவை கடந்த நவம்பர் 12 வெளியிட்டது.

    குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்புக் அமைப்பான Peace Now கூற்றுப்படி, இந்தத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தளம் சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஒலிவ மரங்கள் உள்ளன. இது பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என பீஸ் நவ் தெரிவித்துள்ளது.

     தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய அளவிலான நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    செபாஸ்டியா இடிபாடுகளுக்கு அடியில் பண்டைய இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரான சமாரியா இருந்ததாகக் கருதப்படுகிறது.

    மேலும் இது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் இந்த தளத்தை ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்த 2023-ல் அறிவித்தது. இதற்காக அரசாங்கம் சுமார் 9.24 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

    மேற்கு கரை ஆக்கிரமிப்பு:

    இஸ்ரேல் 1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஆகியவற்றை ஆக்கிரமித்தது.

    அது முதல், மேற்குக் கரையில் 500,000-க்கும் மேற்பட்ட யூதர்களை அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களில் குடியேற்றியுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் 200,000-க்கும் மேற்பட்ட யூதர்கள் குடியேறியுள்ளனர்.

    இதற்கிடையே அண்மையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பெத்லஹேமுக்கு அருகில் ஒரு புதிய, அங்கீகரிக்கப்படாத குடியேற்றப் புறக்காவல் நிலையத்தை அமைத்துள்ளனர்.

    மேலும் அங்கு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

    அண்மையில் மேற்குக் கரையில் குடியேற்றவாசிகள் வன்முறையை ஆவணப்படுத்திய பாலஸ்தீனிய ஆர்வலர் ஐமன் கிரையேப் ஓடே கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர் விசாரணையற்ற காலவரையற்ற தடுக்குக்காவலில் அடைக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் 1967-ல் ஆக்கிரமித்ததில் இருந்து அப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.

    அங்கு 850-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாகவோ அல்லது பலத்த சேதமடைந்ததாகவோ செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

    • இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
    • மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும்.

    இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று நேதன்யாகு கையெழுத்திட்டார். மேலும் மேற்கு கரையில் மாலே அடுமிம் குடியேற்றத்தை நேரில் பார்வையிட்டார்.

    இதன் பின் பேசிய நேதன்யாகு, "எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்" என்று கூறினார்.

    இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

    மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும்.

    சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது. இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும்.

    தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர். 

    • சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் வெளியேற்றினர்.
    • 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை என்று கார்கே கண்டித்தார்.

    அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள பைகான் ரிசர்வ் வனப்பகுதியில் 140 ஹெக்டேர் நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களை அசாம் பாஜக அரசு வெளியேற்றியுள்ளது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

    பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள், வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) முதல் மக்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று போலீஸ் நடவடிக்கைக்கு அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தப்பட்டது.

    வனக் காவலர்கள் மற்றும் போலீசார் மீது குச்சிகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாக மாவட்ட காவல் ஆணையர் கூறுகிறார். இதைத்தொடர்ந்து போலீசார் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் ஷகூர் ஹுசைன் மற்றும் குத்புதீன் ஷேக் என்ற இரண்டு முஸ்லிம்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த மோதலில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.

    இடம்பெயர்ந்த மக்கள் படகுகள் மூலம் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போலீசாரை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 'சட்டப்படி' நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் பணி தொடரும் என்றும்,காடுகளை மீண்டும் உயிர்ப்பிக்க விரைவில் இந்தப் பகுதியில் மரங்கள் நடப்படும் என்றும் கூறினார்.

    முன்னதாக மற்றொரு சம்பவத்தில், புதன்கிழமை (ஜூலை 16) கோல்பாரா நகருக்கு அருகிலுள்ள ஒரு சதுப்பு நிலப் பகுதியில் 690 குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சி இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை கண்டித்தது, இது பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களை குறிவைத்த தாக்குதல் என்று குற்றம் சாட்டியது.

    மல்லிகார்ஜுன் கார்கே, "துப்ரி மற்றும் கோல்பாராவில் 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை" என்று கண்டித்தார்.

    சாய்கானில் நடந்த ஒரு பேரணியில், அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வெளியேற்றப்பட்டவர்களின் வீடுகளை மீண்டும் கட்டி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாக கார்கே உறுதியளித்தார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான அரசு அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்காக நிலங்களை காலி செய்கிறது, பொது நலனுக்காக அல்ல என்று இந்த வெளியேற்றங்களை குற்றம் சாட்டினார். 

    • நதிகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற உத்தரவு
    • அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் உத்தரவு

    பக்கிங்ஹாம் கால்வாய் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.
    • ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.

    இதையடுத்து இன்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர். ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

    • நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.30 கோடி நிதி வந்துள்ளது.
    • கிராமசபை கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குருசடி பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மேயரிடம் வழங்கினர். இதில் அதிக பட்சமாக ஓய்வூதியம், விதவை பென்சன், நிவாரணம், சாலை பணிகள், ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் இடம் பெற்றிருந்தன.

    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    மக்களின் குறைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று அறியும் வகையில் இந்த கிராம சபை கூட்டம் தமிழக அரசு நடத்தி வரு கிறது. நாகர்கோவில் மாந கராட்சிக்குட்பட்ட 33-வது வார்டில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிராம சபை கூட்டம் என்பது காசு கொடுத்து கூடும் கூட்டமல்ல. மக்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கைகளை கொடுக்கும் கூட்டமாகும்.

    நாகர்கோவில் மாந கராட்சிக்குட்பட்ட சாலை களை சீரமைக்க ரூ.30 கோடி நிதி வந்துள்ளது. அதில் ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். வார்டுகள் வாரியாக அதிகாரிகளுடன் நான் நேரில் சென்று குறை களை கேட்டு வருகிறேன்.

    ஆக்கிரமிப்பு தான் இந்த மாவட்டத்தின் பெரிய தலைவலியாக உள்ளது. மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் எந்தவித பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் இருந்து வழங்கப்படும் குப்பைகளை மக்கள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். ஒரு நாளுக்கு 111 டன் குப்பைகள் மாநகாில் சேகரிக்கப்படுகிறது. அதில் வெறும் 30 டன் குப்பைகள் மட்டுமே தரம்பிரிக்கப்படுகிறது என்பது வேதனை அளிக்கிறது.

    கழிவு மற்றும் குப்பை களை சாலையோரம் வீசக் கூடாது. ஆண் குழந்தைகள் இருந்தால் ஓய்வூதயம் பெற மனு அளிக்க வேண்டாம். கோவில் நிலத்தில் வரி கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் ஒப்புதல் வழங்க வேண்டும். சுயஉதவி குழுக்களுக்கு கடன் மற்றும் நிவாரணம் அளிப்பதில் தமிழக அரசு முதன்மையாக உள்ளது. மக்களாகிய நீங்கள் அளித்துள்ள ஒவ்வொரு மனுக்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரை முன்மாதிரியான மாந கராட்சியாக மாற்ற வேண்டும். இதற்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சி ஆணை யாளர் ஆனந்த மோகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், சுதாகர், லீனஸ்ராஜ், கென்னடி, சேக் மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
    • கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறக்கிங்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அங்கு குடியிருந்தவர்களுக்கு அஞ்சுகிராமம் அருகே உள்ள பால் குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது.

    இதுபோல் கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது. இந்த வீடுகளில் குடியிருந்து வந்தவர்களை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை கடந்த சில மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கியது. அதன்படி வீடுகளில் குடியிருந்து வந்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி தலைமையில், வருவாய் அதிகாரி ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி லோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் உதவியுடன் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருந்த 35 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

    ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தைக்கால் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள வீடுகள் பெரும்பாலும் குடிசை வீடுகளாக உள்ளது.இந்த நிலையில் திட்டச்சேரி கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் மழை நீர் வடிகால் சரியில்லாத காரணத்தால் மழை நீர் வடிந்து முதலியார் தெருவழியாக தைக்கால் தெரு குடிசை பகுதியில் வந்து சேர்கிறது.

    அதேபோல் புறாக்கிராமம் பகுதியில் இருந்து வடியும் மழை நீர் கிளி வாய்க்கால் வழியாக தைக்கால் தெருவை வந்தடைகிறது.

    இதனால் மொத்த மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.இதனால் குடிசை வீடுகளின் சுவர்கள் சாய்ந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்துதைக்கால் தெரு சுமதி தெரிவித்த தாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிவ வழியில்லாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.இதனால் கொசு மற்றும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.

    இதுகுறித்து தைக்கால் தெருவை சேர்ந்த ஜீவா கூறியதாவது:-

    கடந்தாண்டு பெய்த கனமழையில் இதேபோல் குடிசை பகுதிகள் சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.அதனை அகற்றி தர கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அமராவதி கூறும்போது:-

    தற்போது வடிகால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் வடியாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வடியவும், வடிகால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
    • கடை முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகள் எந்தவித பார பட்சமுமின்றி அகற்றப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாக்கமங்கலம் ரோடு, வடசேரி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டது. இன்று வடசேரி அaண்ணா சிலை முதல் புத்தேரி மேம்பாலம் வரை உள்ள அசம்பு ரோட்டில் அனைத்து ஆக்கிர மிப்புகளும் பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது.

    கடை முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. மேலும் மழைநீர் வடிகால் மேல் மீது உள்ள ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்த பணியை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர்.

    • உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.
    • வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டப்பொறியாளா் ரமேஷ்கண்ணா தலைமை வகித்தாா்.

    இதில், தி கன்ஸ்யூமா்ஸ் கோ் அசோசியேஷன் தலைவா் காதா்பாட்ஷா பேசியதாவது:-

    திருப்பூா் மாநகரில் சாலை பராமரிப்புக்காகத் தோண்டப்படும் குழிகள் இருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்டிக்கா்கள் ஒட்டவேண்டும். அவிநாசி தோ் வரும் நெடுஞ்சாலைப் பகுதி மிகவும் சிதிலமடைந்துள்ளது. ஆகவே, உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.

    நல்லூா் நுகா்வோா் நலமன்றத் தலைவா் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

    காங்கயம் சாலையில் டிஎஸ்கே மருத்துவமனை பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலை மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போல, திருப்பூா் ெரயில் நிலையம் முதல் வஞ்சிப்பாளையம் வரை அனைத்து சாலைகளும் மிகவும் பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு காவல் நிலையம் வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் (சட்ட விழிப்புணா்வு அணி) மாநிலச் செயலாளா் ஆா்.சதீஷ்குமாா் பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் அது தொடா்புடைய ஒப்பந்ததாரா்களால் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுகிறது. ஆனால் முறையாக மறுசீரமைப்பு செய்வதில்லை. ஆகவே உரிய கவனம் செலுத்தி அனைத்து சாலைகளும் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் உதவி கோட்ட பொறியாளா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

    • தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை.
    • கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வேம்படி கிராமத்தில் உள்ள முத்தரையர் தெருவுக்கு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர்கள் சொந்த மனை பட்டா இல்லாமல் 60 குடும்பங்கள் இருந்து வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அம்மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் வருவாய் துறை அதிகாரிகளிடம் 15 நாட்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    வேட்டங்குடி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள–வர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்றும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் இருவகொல்லை கிராமத்தில் தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தங்கி உள்ளார்கள்.வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், வழிகாட்டுதல் முறையை பின்பற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் வசதி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் சரவணன், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருண்மொழி, பொறியாளர்கள் தாரா, பலராமன், ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஒன்றியகுழு உறுப்பினர் அங்குதன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், விவசாய சங்க தலைவர் வில்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
    • சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் வழங்கல்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு–மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசு–தாரர்கள் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.

    தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற மன்னார்குடி வட்டம், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் ராச கணேசனை பாராட்டினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×