என் மலர்
நீங்கள் தேடியது "தொல்லியல் களம்"
- கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
- இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிட்ட மேற்குக் கரையில் உள்ள முக்கிய வரலாற்றுத் தலத்தின் பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் சிவில் நிர்வாகம், மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய தொல்லியல் தளமான செபாஸ்டியாவின் பெரும் பகுதிகளை கையகப்படுயத்தும் உத்தரவை கடந்த நவம்பர் 12 வெளியிட்டது.
குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்புக் அமைப்பான Peace Now கூற்றுப்படி, இந்தத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தளம் சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஒலிவ மரங்கள் உள்ளன. இது பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என பீஸ் நவ் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய அளவிலான நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
செபாஸ்டியா இடிபாடுகளுக்கு அடியில் பண்டைய இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரான சமாரியா இருந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் இது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேல் இந்த தளத்தை ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்த 2023-ல் அறிவித்தது. இதற்காக அரசாங்கம் சுமார் 9.24 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

மேற்கு கரை ஆக்கிரமிப்பு:
இஸ்ரேல் 1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஆகியவற்றை ஆக்கிரமித்தது.
அது முதல், மேற்குக் கரையில் 500,000-க்கும் மேற்பட்ட யூதர்களை அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களில் குடியேற்றியுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் 200,000-க்கும் மேற்பட்ட யூதர்கள் குடியேறியுள்ளனர்.
இதற்கிடையே அண்மையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பெத்லஹேமுக்கு அருகில் ஒரு புதிய, அங்கீகரிக்கப்படாத குடியேற்றப் புறக்காவல் நிலையத்தை அமைத்துள்ளனர்.
மேலும் அங்கு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
அண்மையில் மேற்குக் கரையில் குடியேற்றவாசிகள் வன்முறையை ஆவணப்படுத்திய பாலஸ்தீனிய ஆர்வலர் ஐமன் கிரையேப் ஓடே கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர் விசாரணையற்ற காலவரையற்ற தடுக்குக்காவலில் அடைக்கபடலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் 1967-ல் ஆக்கிரமித்ததில் இருந்து அப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.
அங்கு 850-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாகவோ அல்லது பலத்த சேதமடைந்ததாகவோ செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
- கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.
- ஆதிச்சநல்லூர் உள்பட 5 இடங்களில் இந்த மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ளது கொங்கராயக்குறிச்சி கிராமம். வரலாற்று தொன்மை வாய்ந்த இந்த ஊர் ஆதிச்சநல்லூரில் 1899-ம் ஆண்டு அகழாய்வு நடத்திய அலெக்சாண்டர் ரியாவால் கண்டறியப்பட்ட 37 தொல்லியல் களங்களில் ஒன்றாகும். மேலும், இந்த ஊரே ஆதிச்சநல்லூர் இடுகாட்டில் புதைந்த மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் ரியா குறிப்பிட்டுள்ளார்.
கள ஆய்வு
இத்தகைய சிறப்பு வாய்ந்த கொங்கராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற இடங்களில் அதிக அளவில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது. எனவே, இவ்வூரில் தொல்லியல்துறை களஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகின்றது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணிக்காக கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக இவ்வூரின் வயல்வெளியில் உள்ள வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பிவிட தோண்டிய பள்ளத்தில் இருந்து எலும்புகளுடன் தொல் பொருட்களும் வெளிவந்தன. இதனை வியப்புடன் கண்ட பொதுமக்கள், குவிந்து கிடக்கும் எலும்புகளை பார்த்து அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதனை அடுத்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் மத்திய தொல்லியல் துறையினர் சார்பில் இவ்விடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களின் வாழ்விடத்தை கண்டறிய மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர் உள்பட 5 இடங்களில் இந்த மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கொங்கராயகுறிச்சியில் ஏற்கனவே சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரும் மீண்டும் அந்த இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தோண்டியுள்ளனர். இதில் அந்த பகுதியில் உள்ள மணலில் புதைந்திருந்த பானைகள், வாழ்விடப்பொருட்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






