search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupation"

    • இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறை பிடித்துச் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரைகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    100 கி.மீட்டருக்கு மேல் கடற்பரப்பை கொண்ட இந்த மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மீனவ சமுதாயம் வசித்து வருகிறது. இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலையே நம்பியுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து சில மைல் கடல் தொலைவில் அண்டை நாடான இலங்கை அமைந்துள்ளது. இதனால் சர்வதேச கடல் பகுதியாக விளங்கி வருகிறது.

    இந்திய கடலோர காவல் படையினரும், இலங்கை கடற்படையினரும் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறை பிடித்துச் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த மாதத்தில் மட்டும் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததோடு 10 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    2 வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதன் காரணமாக ராமேசுவரத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 50 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.

    இந்நிலையில் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு புறப்பட்டனர். ஆனால் கடலுக்கு சென்ற 2 நாட்களிலேயே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த வாரம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேலை நிறுத்தம், இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் நவம்பர் மாதத்தில் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் சில நாட்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இதனால் அவர்கள் போதிய வருமானமின்றி தவித்தனர். குடும்பத்தை நடத்த கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலையில்லாத மீன்பிடி தொழிலை நம்பி இருக்க முடியாது என எண்ணிய ராமேசுவரம் மீனவர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வழக்கமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கட்டிட வேலைக்கு செல்ல குறிப்பிட்ட இடத்தில் தொழிலாளர்கள் குவிவார்கள். அங்கு வந்து வேலைக்கு ஏஜெண்டுகள் ஆட்களை ஏற்றிச்செல்வார்கள்.

    தற்போது கட்டிட வேலைக்கு மீனவர்களும் செல்வதாக தெரிகிறது. இதனால் காலையிலேயே தொழிலாளர்கள் நிற்கும் இடத்தில் மீனவர்களையும் பார்க்க முடிகிறது. அவர்கள் ஏஜெண்டுகளிடம் ஏதேனும் ஒரு வேலை கொடுங்கள் என்று சென்று வருகின்றனர்.

    இதேபோல் பல மீனவர்கள் மாற்று தொழிலுக்கு வேறு மாவட்டங்களுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் ராமேசுவரத்தில் வரும் காலங்களில் மீன்பிடி தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை புதுக்கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபதாரணி முன்னிலையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுக்கண்மாய் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும், லெட்சுமி நகர் முதல் வடக்கு குடியிருப்பு வரை செல்லும் சாலைக்கு கலைஞர் சாலை என பெயர் வைக்கவும், மகளிர் உரிமைத் தொகை கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் முன்னாள் யூனியன் தலைவர் முத்துராமலிங்கம், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் அமுதா லெட்சுமணன், சீதா வைரவன், செல்வி முத்து, முன்னாள் தலைவர் அன்பரசன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    • திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் 50 ஆக்கிரமிப்பு கடைகள் திடீர் அகற்றப்பட்டது
    • போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    திருச்சி,

    திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில் திருச்சி மத்திய நிலைய சாலை மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகார்கள் கூறப்ப ட்டது. இதையடுத்து கலெ க்டர் ஆக்கிரப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், சுகாதார ஆய்வா ளர் பிரின்ஸ் சகாயராஜ் ஆகியோர் கொண்ட அதிகா ரிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையி லான போலீசார் உதவியுடன் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர் .திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் உள்பகுதி, வில்லியம்ஸ் ரோடு, பாரதி தாசன் ரோடு, ராக்கின்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து உள்ள 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜேசிபி எந்திரம், இரண்டு லாரிகள் உதவியுடன் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலை மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உட னடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.

    • அவனியாபுரத்தில் நிழற்குடை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
    • உட்காரக்கூட இட வசதியின்றி மாணவ, மாணவிகள் தவித்த வண்ணம் உள்ளனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் பகுதியில் சுமார் ஒரு லட் சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இப்ப–குதியில் இருந்து மதுரை பெரியார், அண்ணா, மாட் டுத்தாவணி, ஆரப்பாளை–யம் ஆகிய பேருந்து நிலை–யங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆயி–ரத்திற்கும் மேற்பட்டோர் காலையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் அவனி–யாபுரத்தில் இரண்டு நிழற் குடைகள் இருந்தன. இதில் ஒன்று மிகவும் பழு–தடைந்து உடையும் தருவா–யில் இருந்த–தால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டு விடும் என்று கருதி சமீபத்தில் இடித்து அகற்றப் பட்டு விட்டது.

    மீதமுள்ள ஒரு நிழல் குடையும் இலை கடை ஆக்கிரமிப்பில் இருக்கிறது. இதனால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் உட்கா–ரவோ, நிற்கவோ கூட இட மின்றி தவித்து வருகிறார் கள். அதிலும் தற்போது கொளுத்தி வரும் வெயிலின் தாக்கத்தால் அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

    இந்த நிழற்குடையில் இருந்த பயணிகள் அமரும் இருக்கைகளையும், 92-வது வார்டு பகுதியில் தண்ணீர் திறந்து விடும் ஒப்பந்த ஊழியர்கள் உடைத்து சென்று தங்கள் அமர்வதற் காக நீர் தேக்கும் மேல் நிலைத் தொட்டிக்கு கீழே வைத்துள்ளனர்.

    எனவே வயது முதிர்ந்த பயணிகள் பேருந்து நிலை–யத்தில் நிழற்குடை இல்லாம–லும், அமருவதற்கு வசதி இல்லாமலும் மிகவும் தவித்து வருகின்றனர். இந்த நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்ற அரசு அதிகாரிகள், உதவி பொறியாளர் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் தனியார் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
    • ஆக்கிரமிப்பை அகற்றிட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

    பொன்னமராவதி, 

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான இடம் தனி நபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை அகற்றி, சுற்று சுவர் எழுப்பிட வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் வருவாய் துறையினருக்கு மனு அளித்தனர். இதனையடுத்து வருவாய் துறையினர் பள்ளி இடத்தை அளந்து அத்து கல் ஊன்ற வந்த போது தனிநபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது. இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி சுற்று சுவர் கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
    • கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான 90 சென்ட் நிலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.

    இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் தலைமையில் கோவில் ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. மூலம் அதிரடியாக அகற்றிமீட்டனர். மேலும் அங்கிருந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். முன்னதாக ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.
    • மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம், வடக்கு நல்லியாம் பாளையம், வெட்டுக் காட்டுப்புதூர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங் களில் மழை நீர் சுல்தான்பேட்டையில் உள்ள ஓடை புறம்போக்கு வழியாகச் சென்று ராஜா வாய்க்காலில் கலந்து விடும். மழை அதிகமாக பெய்யும் போது அப்பகுதி முழுக்க மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கும். பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.

    மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர். மழைநீர் செல்ல ஏதுவாக இருந்த அந்த பள்ளத்தை மண் கொட்டி மேடாக்கி உள்ளனர். இதனால் மழை பெய்யும் போது, தண்ணீர் சாலையில் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் சென்று பார்வை யிட்டார். பின்னர், உடனடி யாக ஆக்கிரப்பு செய்த நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்.

    அந்த நோட்டீஸில், வேலூர் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு சுல்தான் பேட்டை பகுதியில் ஓடை புறம்போக்கு இடத்தில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மண் கொட்டி உள்ள இடத்தில் கட்டிட பணி துவங்க ஏதுவாக ஏற்பாடு செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேரில் ஆய்வு செய்ததில், சாலை மட்டத்திற்கு மேல் மண் கொட்டப்பட்டு உள்ளது என தெரிய வருகிறது.

    இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 3 தினங்களுக்குள் மண் மேட்டினை அப்புறப்படுத்தி சாலையின் உயரத்துக்கு கீழ் உள்ளவாறு சீர் செய்ய வேண்டும். குறித்த காலத்துக்குள் அவ்விடத்தை சரி செய்ய தவறும் பட்சத்தில் உரிய சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
    • இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு காரணம் சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை துறை சில தினங்களுக்கு முன்பு வருகிற 28-ந் தேதி அன்று சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவித்தனர்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்தவர்கள் மற்றும் நில அளவியர் ஆகியோர் நேற்று அம்சாகுளத்தில் தொடங்கி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கூகையூர் ரோடு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்து மஞ்சள் நிறத்தில் அம்பு குறியீடு போடப்பட்டது.

    பின்னர் கடை உரிமை யாளர்களிடம் வருகின்ற 28-ந் தேதிக்கு முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை தங்களு டைய செலவிலே எடுக்கு மாறு தெரிவித்தனர். மீறும் பட்சத்தில் 28-ந் தேதி அன்று ஆக்கிரமிப்புகளை எடுக்கும்போது அதற்கான ஏற்படும் பொருள்கள் சேதாரத்தை, தேசிய நெடுஞ்சாலை துறையோ, பேரூராட்சி நிர்வாகமோ ஏற்றுக் கொள்ளாது என கடை உரிமையாளர்களுக்கு தெரிவித்தனர்.

    • மணிகண்டம் அருகே 14 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு
    • திருச்சி கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு

    திருச்சி,

    திருச்சி மணிகண்டம் ஒன்றியம் திருமலை சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் பட்டியத்தார் பிச்சை மூக்கன், கணேசன், சிவக்குமார், கதிர்வேல், சுப்பிரமணி, கௌதமன் முன்னிலையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தனர்.அதில்,திருமலை சமுத்திரம் கிராமத்தில் புல எண் 95 ல்14 ஏக்கர் நீர் நிலை புறம்போக்கு உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு இன்றைய சந்தை மதிப்பில் ரூ. 15 கோடி அளவுக்கு இருக்கும். இதனை வெளியூரை சேர்ந்த சில நபர்கள் மனைகளாக பிரித்து முள்வேலி அமைத்து ஏக்கர் கணக்கிலும் வீட்டுமனை அளவிலும் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த இடம் வாரி புறம்போக்கு ஆகும். எனவே நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ராக்காச்சி அம்மன் கோவில்.இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.

    குறிப்பாக பாலாறு, பல்லாறு என்று அழைக்கப்படும் பகுதியில் சுமார் 32 விவசாயிகளின் 82 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் ஓடை மற்றும் ஓடை கரை அமைந்துள்ளது. இந்த இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்த தாக விவசாயிகள் 32 பேரும் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் புகார் செய்தனர்.

    குறிப்பாக 15 விவசாயிகள் மனுவாக கொடுத்து கோர்ட்டையும் நாடினர். இதன் அடிப்படையில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன். மண்டல துணை வட்டாட்சியர் ஆண்டாள். ஆர்.ஐ.தங்க புஷ்பம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசா யிகளின் பயன்பாட்டுக்குரிய ஓடை மற்றும் பாதையை ஜே.சி.பி. எந்திரம் உதவி யுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். 

    • ஒற்றைசாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?என கலெக்டர் விளக்கம் அளித்தார்.
    • ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் டி.ஏ.எம்.இ.-டி.என். இணைந்து ஒற்றை சாளர முறையில் விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணைய தளம் குறித்தும், வழிமுறைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை யில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கான முன்னெடுப்புகள் ஆகியன தொடர்பாகவும், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகள் ரீதியாக பெறப் படும் தடையின்மைச்சான்று, உரிய அனுமதி ஆகியவைகள் குறித்தும், அதற்கான உரிய வழிமுறைகளை எளிதாக பெறுவதற்கெனவும், தமிழக அரசின் சார்பில் ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை களுக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு கீழ் தொழில் தொடங்குவதற்கும், பெரு நிறுவனங்களுக்கென ரூ.50 கோடிக்கு மேல் தொழில் தொடங்குவதற்கும் ஒற்றை சாளர முறையின் மூலம் எந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விதமான விபரங்களை அதன்மூலம் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி மைய நிர்வாகி சார்லஸ் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கு என்று குற்றச்சாட்டு

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை மறைத்து விளம்பர போர்டுகள் மற்றும் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் சில காலங்கள் விளம்பர போர்டுகள் வைக்கப்படாத நிலையில், அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கினால் மீண்டும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.பேனர்கள் வைக்கப்பட்டு சிலை முழுவதுமாக மறைக்கப்பட்டு உள்ளது குறித்து பாமக நகர செயலாளர் இ.பரசுராமன் அரசு அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு புதிதாக தண்ணீர் பந்தல் திறக்க கொட்டகை அமைக்கப்பட்டது.இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஜெகநாத் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் புண்ணியகோடி உள்ளிட்ட போலீசார், கொட்டகையை அகற்றியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த, விளம்பர பேனர்களையும் அகற்றினர். 

    ×