search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கர் சிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த போர்டுகள் அகற்றம்
    X

    அம்பேத்கர் சிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த போர்டுகள் அகற்றம்

    • அரியலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கு என்று குற்றச்சாட்டு

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை மறைத்து விளம்பர போர்டுகள் மற்றும் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் சில காலங்கள் விளம்பர போர்டுகள் வைக்கப்படாத நிலையில், அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கினால் மீண்டும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.பேனர்கள் வைக்கப்பட்டு சிலை முழுவதுமாக மறைக்கப்பட்டு உள்ளது குறித்து பாமக நகர செயலாளர் இ.பரசுராமன் அரசு அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு புதிதாக தண்ணீர் பந்தல் திறக்க கொட்டகை அமைக்கப்பட்டது.இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஜெகநாத் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் புண்ணியகோடி உள்ளிட்ட போலீசார், கொட்டகையை அகற்றியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த, விளம்பர பேனர்களையும் அகற்றினர்.

    Next Story
    ×