என் மலர்tooltip icon

    அரியலூர்

    • சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் தீயை கட்டுப்பட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
    • வளைவில் திரும்பும் போது சிலிண்டர் லாரி விபத்தில் சிக்கியுள்ளது.

    அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதால் பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் தீயை கட்டுப்பட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையை முற்றிலுமாக மூடி வாகனங்கள் வேறு சாலைக்கு மாற்றி விடப்பட்டுள்ளது.

    வளைவில் திரும்பும் போது சிலிண்டர் லாரி விபத்தில் சிக்கியுள்ளது. இன்று காலை ஏற்பட்ட விபத்தால் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததால் பல கிலோ மீட்டருக்கு கேட்ட சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    சிலிண்டர் லாரி எங்கிருந்து வந்தது, லாரியில் யாரெல்லாம் இருந்தார்கள், அவர்களின் நிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர், பிரதமர் என யார் யாரோ வந்தார்கள் தவிர, வளர்ச்சி இல்லை.
    • கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.

    அரியலூர்:

    'உரிமை மீட்க தலைமுறை காக்க' எனும் நடைபயணத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் கொள்ளிடம் ஆற்றுநீரை அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பி, அதன் மூலம் விவசாயம், தொழில்வளம் பெருக வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

    சோழர் பாசனத் திட்டத்தில், சோழகங்கம் ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்துவதற்காக ரூ.12 கோடி ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அறிவிப்போடு கிடப்பில் கிடக்கிறது.

    இந்த திட்டம் காலத்தின் கட்டாயம். சோழர்காலத்தில், கொள்ளிட ஆற்று நீரை சோழகங்கம் ஏரியில் நிரப்பி விவசாயம் செழித்திருந்தது. ஆனால் இங்குள்ள அரசாங்கம் மண்ணையும், மக்களையும் நாசாக்கியது. கடந்த 4 மாதத்தில் மேட்டூர் அணையில் 7 முறை நீர் நிரம்பி வழிந்தது. 50 டிஎம்சி நீர் வீணாக கடலுக்குச் சென்றது.

    இந்த நீரை இங்குள்ள ஏரி, குளங்களில் நிரப்பத்தான் சொல்கிறோம். அதற்காக அரசாங்கம் எதையும் செய்ய வேண்டாம். சோழர்கள் விட்டுச் சென்ற வழிப்பாதைகள் மூலம் ஏரி, குளங்களில் நிரப்பலாம். வலசைப் பறவைகளின் வருகை சென்னைக்கு அடுத்தப்படியாக அரியலூர் மாவட்டத்துக்கு தான் அதிகளவில் வருகிறது.

    அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர், பிரதமர் என யார் யாரோ வந்தார்கள் தவிர, வளர்ச்சி இல்லை. மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ.15 ஆயிரம் கோடி செலவிடுவதை, அந்த பணத்தை நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு செலவிடலாமே.

    இந்தப் பணத்தை சோழர் பாசனத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி, சேலத்தில் 40 லட்சம் பேர் பயன்பெறும் திட்டமான மேட்டூர் உபரி நீர் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி, அத்திகடவு அவிநாசி விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி, காவிரி-குண்டாறு திட்டத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி செலவிடலாமே.

    கர்நாடகாவில், கடந்த மாதம் கிருஷ்ணா நீர்பாசனம் ஒரே திட்டத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 2 முறை சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 2023-ம் ஆண்டில், 23 குவாரிகளில் ரூ.27 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது இந்த அரசு.

    இதில் ஒரு குவாரியில் 8 லாரிகள் மட்டுமே செல்கிறது என்று தமிழக அரசு கூறுகிறது.

    இதனை அமலாக்கத்துறை கண்டுப்பிடித்து, விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இன்னும் 4 மாதங்களில் இந்த ஆட்சியை மக்கள் அகற்றுவர்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. படுத்தோல்வி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சியை தொடர்ந்து அரியலூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்
    • விஜயின் பிரசார பயணத்தை தேசிய பத்திரிகைகளும் களத்தில் இருந்து செய்தி சேகரித்தன.

    த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை தொடங்கினார். விஜயின் வருகையில் நேற்று திருச்சி தொண்டர்களால் குலுங்கியது. கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் பிரசார களத்திற்கு விஜயால் நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

    திருச்சியை தொடர்ந்து அரியலூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். விஜயின் பிரசார பயணத்தை தமிழக செய்தி சேனல்கள் மட்டுமில்லாமல் தேசிய பத்திரிகைகளும் களத்தில் இருந்து செய்தி சேகரித்தன.

    இந்நிலையில், அரியலூரில் பிரபல ஆங்கில செய்தித்தாளின் நிருபர் விஜயின் பிரசார பயணத்தில் செய்தி சேகரித்து கொண்டிருக்கும்போது த.வெ.க. தொண்டர் ஒருவர் நடனமாடிய படியே அவரை செய்தி சேகரிக்க விடாமல் தொந்தரவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. செய்தியாளரின் கழுத்தில் த.வெ.க. கோடியை போட்டு தொண்டர் ரகளையில் ஈடுபட்டார். தொண்டரின் தொந்தரவை மீறியும் செய்தியாளர் செய்தி சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.
    • உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.

    திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.

    தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநாட்டில் நான் உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வருவதாக கூறியிருந்தேன்.

    நம்மை மேலயும், கீழயும் மோசமாக ஆட்சி செய்து வருகிற பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.

    பாஜக அரசுதான் நமக்கு துரோகம் செய்கிறார்கள் என்றால், திமுக அரசும் நம்மை நம்ப வைத்து துரோகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட நான், நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவங்க நல்லது செய்வாங்கள் என்று தேர்ந்தெடுத்தோம். ஆனால், 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில், எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

    ஆனால், எல்லாத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம் கதை விடுகிறீர்களே மை டியர் சிஎம் சார்.

    உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.

    ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற-னு நீங்களே சொல்லிட்டு, இப்போ நீங்க சொல்றது எல்லாமே ரீல்ஸ் தான். அதுல எல்லாமே பாதியில அறுந்தும் போய்டுச்சு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    =======================================

    • பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
    • தேர்தலில் தில்லு முல்லு செய்ய மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று இரவு அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசு மக்களை கொடுமை படுத்துவதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.

    பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜீரோ போட்ட முகவரியில் வசிப்பதாக வாக்காளர் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    2029-ல் பாஜக-வின் ஆட்சிய முடியப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியும். மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. மாநில அரசுகளை கலைத்துவிட்டு ஒரு நேரத்தில் தேர்தலை நடத்த திட்ம். அப்போதுதானே ஒரே நேரத்தில் தில்லு முல்லு வேலைகளை எளிதாக செய்ய முடியும். இதற்கு பெயர் ஜனநாயக படுகொலை.

    பாரளுமன்ற தொகுதி வரையறை மூலம் தென்மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கு அதிக எம்.பி. தொகுதி கிடைக்கும் வகையில் மோசடி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் தவெக முதலில் எதிர்த்தது. எதிர்க்கிறோம். எதிர்ப்போம். தென்இந்திய மாநிலங்களில் அதிகாரத்தை குறைப்பதற்கான மோசடி வேலைகள்தான் ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு, Sir. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக செய்யும் துரோகம்.

    இவ்வாறு பாஜக அரசு மக்களை கொடுமைப்படுத்துவதாக விஜய் குற்றம்சாட்டினார்.

    • மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.
    • மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.

    திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.

    தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்கும் வணக்கம், மன்னிக்கணும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

    போருக்கு செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வணங்குவது வழக்கம், ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு உங்களை சந்திக்கிறேன்.

    சாதாரணமாக இருந்த விஜயை இந்த உயரத்திற்கு தூக்கிக் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

    மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.

    மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர். வாழ்க வசவாளர்கள்.

    அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? மக்களின் அன்புக்காக எதையும் செய்வேன்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஆங்காங்கே ரசிகர்கள் மன்றங்களே  நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.

    இதற்கிடையே கடந்த 2022 ஐபிஎல் சீசனின் போது அரியலூரை சேர்ந்த தர்மராஜ் தனது நண்பர் விக்னேஷ்வுடன் ஊருக்கு வெளியே மது அருந்த சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

    இந்த வாக்குவாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தவறாக பேச, இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விக்னேஷ் இறந்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.

    இந்நிலையில் விக்னேஷை கொலை செய்த தர்மராஜுக்கு அரியலூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர்.
    • தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23). இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்தனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அனுசுயாவை கண்டித்து அவரது செல்போனையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்தனர். சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்த தகவலை தனது காதலனுக்கு செல்போன் மூலம் ரகசியமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காதலன் குமரேசன் வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்தார்.

    தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார். அங்கு 3 பேரும் அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்தபடியே நடந்து சென்றனர்.

    காதலனின் நண்பர்களை கண்டதும், அக்கா குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த அனுசியா குழந்தையை அப்படியே விட்டு விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தார். காரில் காத்திருந்த காதலன் குமரேசனுடன் கைகோர்த்த அவர், சட்டென்று ஏறி வண்டியில் அமர்ந்து கொண்டார். உடனே அவரது நண்பர்களுடன் காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச் சென்றனர். தனது சகோதரி காரில் ஏறி தப்பி செல்வதைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வருவதற்குள் அனுசியாவை காருக்குள் அழைத்து சென்றதோடு தடுக்க முயன்றவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச்செல்வதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

    மேலும் இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளிவந்தது. இதனால் குழந்தை மித்ரா கதறி அழும் காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார் கிராமத்தினுள் பறந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார், விசாரணை செய்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

    இதனிடையே அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்
    • பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

    மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

    இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம். நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    * நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்

    * ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரை எடுத்து பொன்னேரியை நிரப்பினார். காசியிலிருந்து கங்கை நீரை, மீண்டும் கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

    * தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு
    • உலகம் முழுவதும் பேசும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

    மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

    இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * உலகம் முழுவதும் பேசும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்

    * சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்களும் பாரதத்தின் இரு பிரகடனங்கள்

    * இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு

    * சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது; சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமித்தேன். சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று

    * பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள்.

    * உலகின் வன்முறை, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு, தீர்வளிக்கும் பாதையை சைவ சித்தாந்தம் நமக்கு காட்டுகிறது.

    * அன்பே சிவம் என்ற திருமூலரின் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பிரச்னைகள் தானாகத் தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறதோ உங்களிடத்தில் உற்சாகம் பொங்குவதை காண்கிறேன்.
    • பெருவுடையாரை வழிபடும் பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

    மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

    பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டுவந்த கங்கை நீரால் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சைவ சித்தாந்தம் மற்றும் சோழர் கால கோவில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடினர்.

    பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.

    பின்னர் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.

    ஓம் சிவோகம் பாடல் முடிந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்துநின்று கைதட்டி இளையராஜா உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தினார்.

    சிவபுராணத்தின் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சிவபெருமான போற்றி பாடலை இசைஞானி இளையராஜா பாடினார்.

    இதையடுத்து முப்பெரும் விழா தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.

    இதன் பின்னர் ராஜேந்திர சோழன் திருவுருவம் பொறித்த நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். சாகித்ய அகாடமியின் திருமுறை இசை புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி உள்ள பகவத் கீதையின் தமிழ் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

    இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்ற வாசகத்தை கூறி வணங்கி உரையை தொடங்குகிறேன்.

    * எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறதோ உங்களிடத்தில் உற்சாகம் பொங்குவதை காண்கிறேன்.

    * சிவபக்தி பாடல்களை கேட்டபோது எனக்கு உள்ளுக்குள்ளே பரவசமாக இருந்தது.

    * இந்த ஆன்மிக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது.

    * பெருவுடையாரை வழிபடும் பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது.

    * 140 கோடி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன். நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தேன்.

    * இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை கண்டபோது எனக்கு பெருமிதமாக இருந்தது.

    * தமிழ் மொழியில் பகவத் கீதை இசை தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    * சிவனை வழிபாடு செய்பவன் சிவபெருமானில் கலந்து விடுகிறான் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    * சிவனை வழிபடுபவன் அவரை போலவே அழிவற்றவனாகி விடுகிறான் என கூறப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    • பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.
    • இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

    மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

    கோவில் மகா மண்டபத்தில் உள்ள தாமரை வடிவிலான நவக்கிரகம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த சிற்பங்களையும், கோவிலில் வெளிப்புறத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களையும், ராஜேந்திர சோழனின் செப்பேடு பிரதிகளையும் அவர் பார்வையிட்டார்.

    பின்னர் மூலவர் சன்னதிக்கு சென்ற அவர் பெருவுடையாரை தரிசனம் செய்தார்.

    அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டுவந்த கங்கை நீரால் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சைவ சித்தாந்தம் மற்றும் சோழர் கால கோவில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடினர்.

    பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.

    பின்னர் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.

    ஓம் சிவோகம் பாடல் முடிந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்துநின்று கைதட்டி இளையராஜா உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தினார்.

    சிவபுராணத்தின் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சிவபெருமான போற்றி பாடலை இசைஞானி இளையராஜா பாடினார்.

    இதையடுத்து முப்பெரும் விழா தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.

    இதன் பின்னர் ராஜேந்திர சோழன் திருவுருவம் பொறித்த நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். சாகித்ய அகாடமியின் திருமுறை இசை புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

    இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி உள்ள பகவத் கீதையின் தமிழ் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

    ×