என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாழ்க வசவாளர்கள்..!- அரியலூரில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை
- மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.
- மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.
தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் வணக்கம், மன்னிக்கணும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
போருக்கு செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வணங்குவது வழக்கம், ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு உங்களை சந்திக்கிறேன்.
சாதாரணமாக இருந்த விஜயை இந்த உயரத்திற்கு தூக்கிக் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.
மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர். வாழ்க வசவாளர்கள்.
அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? மக்களின் அன்புக்காக எதையும் செய்வேன்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






