என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ariyalur"

    • இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார்.
    • அவருடன் இருந்த அம்மாவின் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது.

    புதிதாக பைக் வாங்கி அதனை ரீல்ஸ் விடியோவாக பதிவிட்ட அரியலூர் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார். அவருடன் அவரின் அம்மா, அப்பா தோற்றத்தில் 2 பேர் நிற்கின்றனர். குறிப்பாக அவருடன் இருந்த அம்மாவின் காதிலும் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

    அம்மாவின் கழுத்தில் ஒரு நகை கூட இல்லாமல் இருக்கும் நிலையில், பையனுக்கு பைக் கேட்கிறதா? என்று பலரும் இணையத்தில் விமர்சனம் முன்வைத்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் என்னுடன் இருந்தவர் என் அத்தை என்றும் நான் சேமித்த பணம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த பணத்தில் தான் பைக் வாங்கினேன். எங்கள் பணத்தில் நாங்கள் பைக் வாங்கியதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய இளைஞரின் தாயார், "பையன் ஆசைப்பட்டான் வண்டி வாங்கி கொடுத்தேன். அதுல என்ன பிரச்சினை.நான் சம்பாரிக்கிறேன். அவன் சம்பாரிக்கிறான்.`பொறுமையா போ' அப்படினு அட்வைஸ் பண்ணுங்க. வேண்டாம்னு சொல்லல... அத விட்டுட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீங்க. ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதுனு ரூல்ஸ் இருக்கா?'' ஏன்னு தெரிவித்தார்.

    • பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.
    • உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.

    திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.

    தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநாட்டில் நான் உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வருவதாக கூறியிருந்தேன்.

    நம்மை மேலயும், கீழயும் மோசமாக ஆட்சி செய்து வருகிற பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.

    பாஜக அரசுதான் நமக்கு துரோகம் செய்கிறார்கள் என்றால், திமுக அரசும் நம்மை நம்ப வைத்து துரோகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட நான், நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவங்க நல்லது செய்வாங்கள் என்று தேர்ந்தெடுத்தோம். ஆனால், 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில், எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

    ஆனால், எல்லாத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம் கதை விடுகிறீர்களே மை டியர் சிஎம் சார்.

    உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.

    ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற-னு நீங்களே சொல்லிட்டு, இப்போ நீங்க சொல்றது எல்லாமே ரீல்ஸ் தான். அதுல எல்லாமே பாதியில அறுந்தும் போய்டுச்சு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    =======================================

    • மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.
    • மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.

    திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.

    தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்கும் வணக்கம், மன்னிக்கணும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

    போருக்கு செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வணங்குவது வழக்கம், ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு உங்களை சந்திக்கிறேன்.

    சாதாரணமாக இருந்த விஜயை இந்த உயரத்திற்கு தூக்கிக் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

    மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.

    மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர். வாழ்க வசவாளர்கள்.

    அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? மக்களின் அன்புக்காக எதையும் செய்வேன்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
    • அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

    இங்கு ஆண்டுதோறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி மாத திருவாதிரை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ஆடி திருவாதிரை விழா வருகிற 23ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.

    இதில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அங்கே சுமார் 3 மணி நேரம் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். இந்த விழாவானது ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை அவர் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்து சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

    விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும் தொல்லியல் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட உள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். அதன் பின்னர் இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டுக்களிக்கிறார்.

    இளையராஜா, சமீபத்தில் லண்டனுக்கு சென்று திருவாசகம் சிம்பொனி இசை அமைத்து சாதனை நிகழ்த்தினார். அந்த திருவாசகம் சிம்பொனி இசையை கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜா நடத்துகிறார். இந்த இசையை பிரதமர் மோடி 20 நிமிடங்கள் அமர்ந்திருந்து கேட்டு ரசிக்கிறார். மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யட்டுள்ளது கோவிலுக்குள் அவர் நுழையும்போது 50 ஓதுவார்கள் மூலம் திருவாசகம் படிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 38 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

    விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பத்தாயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது.

    முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். இதற்காக கோவில் அருகாமையில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    விழாவின் தொடக்க நாளான 23-ந் தேதி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. ஆனால் அவரது வருகை உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் விழா கோலம் பூண்டு வருகிறது.

    • அரியலூர் வந்த சாதனை மாணவிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
    • ஆசிய சதுரங்க போட்டி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்புரோஜா. குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளையமகள் சர்வாணிகா (வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சர்வாணிகா, செஸ் போட்டியில் ஆர்வம் அதிகம் கொண்டதால் பெற்றோர் அவருக்கு உரிய பயிற்சியினை அளித்தனர். ஒன்றிய அளவிலான மண்டல அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட சர்வாணிகா வெற்றி பெற்ற சாதித்து உள்ளார்.

    இந்நிலையில் இலங்கையில் கடந்த 3-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 16-வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சர்வாணிகா 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்று சா தனை படைத்துள்ளார். 7 வயதுக்குட்பட்டோருக்கான முதல் பரிவில் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாம் பிரிவல் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து நடைபெற்ற மூன்றாம் பிரிவில் 9 சுற்றுகளில் வெற்றி பெற்றார்.இதன் மூலம் 3 பிரிவுகளில் நடைபெற்ற 23 ஆட்டங்களிலும் வெற்றியை பெற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 3 பிரிவுகளிலும் த ங்க பதக்கங்கள் மற்றும் அணிக்கான பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 தங்கப்பதக்கங்களையும், 3 கோப்பைகள் மற்றும் அணிக்கான கோப்பைகள் உட்பட மொத்தம் 5 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே உள்ளிட்ட பல வெளிநாட்டு அதிபர்களும் பாராட்டியுள்ளனர். அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து,நேற்று மாலை உடையார்பாளையத்திற்கு சர்வாணிகா வருகை தந்தார். அவரை ஊர் பொதுமக்கள் மின் விளக்குகள் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி வைத்து மேளதாளங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்து சென்றனர். 

    • மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இங்கு வந்தனர்.
    • இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.

    மனைவியை விரட்டினால் தண்டனை தரும் லால்குடி சப்தரிஷிஸ்வரர்

    திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பாதையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது லால்குடி.

    இங்கு பழம்பெரும் சிறப்புமிக்க ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

    மனைவி மீது கோபப்பட்டு, மாமனார் வீட்டுக்கு விரட்டி விட்ட ஆண்களுக்கு தண்டனை தரும் கோவில் இது என்கிறார்கள்.

    மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்த ஊர்பக்கம் வந்தார்கள்.

    அப்போது திருவத்துறை ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

    அதனைக் கவனித்த மகாலிக்காபூர் அருகில் இருந்த தளபதியிடம் உருது மொழியில்," அது என்ன லால் (சிகப்பு) குடி (கோபுரம்)?.." என்றான். அச்சொற்றொடரே லால்குடி என்று மாறி விட்டது.

    இந்த கோவிலில் மிகப்பழமையான கோவில். மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி.

    சப்தரிஷிகளான அத்தரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது.

    இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.

    மாரிசி மகரிஷியின் பேரன் தான் சூரியன் அத்திரியின் மகன் தான் சந்திரன், சந்திரனின் மகன் புதன், அங்கீசரின் மகன் குரு, வசிட்டரின் வழி வந்தவர்தான் செவ்வாய்.

    எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும் என்று சொல்லப்படுகிறது.

    இங்குள்ள லிங்கத்தின் மேல் வரி வரியாய் பள்ளங்கள் காணப்படுகின்றன.

    தாரகா சூரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள்.

    சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார்.

    அதன் பொருட்டுத்தான் சூரனை அழிக்க முருகன் பிறந்தார்.

    அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர்.

    அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம் பாலகனாக உள்ள முருகனை கொண்டு வந்து அந்த 7 குடில் பகுதியில் போட்டார்.

    ரிஷி பத்தினிகள் அதிசயமாய் அந்தக் குழந்தையைப் பார்த்தனர்.

    பால குமாரன் லேசாய் அழத் துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர்.

    குழந்தைக்கு பசி ஏற்பட அழுகை அதிகரித்தது.

    ரிஷிபத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கிப் பரிவோடு தாலாட்டிப் பாலூட்டினார்கள்.

    வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர்.

    சிவனின் வாரிசுக்குப் பால் கொடுத்ததால் எவ்வளவு பெரும் பாக்கியம், காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே.

    அந்த நல்ல வாய்ப்பைப் கெடுத்து, அந்தப் புகழைக் கார்த்திகைப் பெண்களுக்குக் கொடுத்து விட்டீர்களே என்று மனைவியரை அடித்து விரட்டினர்.

    முருகப் பெருமான் தனது அவதார காரணத்தை உணர்ந்தார்.

    தாராகா சூரனைக் கொன்று போட்டு, வெற்றி வீரராய்த் திரும்பிக் கொண்டிருந்தபோது, சப்தரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார்.

    அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார்.

    நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர்., பலன் கிடைக்கவில்லை.

    பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்துக் கடும் தவும் புரிந்தனர்.

    கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்குப் பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு கடும் தவம் இருந்தனர்.

    இதையடுத்து சிவன் ஆண்களுக்கு சாப விமோசனம் தரும் தலமாக இது கருதப்படுகிறது.

    • செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.

    இன்றுடன் 10 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.

    நேற்று முன்தினம் காலை காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் சிறுத்தை மயிலாடுதுறை நகரை விட்டு வெளியேறி விட்டதோ? என்ற சந்தேகமும் எழுந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து, அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செந்துறை போலீசார் ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
    • முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.

    சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து செந்துறை போலீசார் வாகனத்தில் சென்றபடி ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் பார்த்து இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு பிரிவு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தெர்மல் டிரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் செந்துறை, பொன்பரப்பி ஆகிய ஊர்களில் முந்திரி காடுகள், நீர்நிலைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். 3 பிரிவுகளாக பிரிந்து வனத்துறை அதிகாரிகள் கேமராக்களை பொருத்தினர்.

    இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை.

    அரியலூர்:

    மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பின்னர் அந்த சிறுத்தை குற்றாலம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

    இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 89 சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன. மேலும் மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.

    ஆனால் அதன் பின்னர் சிறுத்தை நடமாட்டம் எங்கும் தென்படவில்லை.

    இதுகுறித்து மூத்த வன அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை. இருப்பினும் மேற்கண்ட மாவட்டங்களில் வனத்துறையினர் தொடர்ந்து 2 பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர் அதிகாரிகள், உள்ளூர் மக்களுடன் தொடர்பில் உள்ளனர்.

    சந்தேகப்படும்படியாக மர்ம விலங்கு ஏதும் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
    • அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    அரியலூர் மவராட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது வேகமாக வந்த கார் அந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    முதல்கட்ட தகவல்களின்படி இந்த விபத்தில் ஈஸ்வரன்(24), புவனேஷ் கிருஷ்ணசாமி(18), செல்வா (17), சண்முகம் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சிமெண்ட் ஆலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பற்றியது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் ஆலையை சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டனர். தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து.
    • தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது

    சங்கீதா - பாலமுருகன் தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் தாய் சங்கீதா குழந்தையை தூக்கி கொண்டு அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை. பின்னர் குழந்தையை தேடியதில் வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூடநம்பிக்கையால் தாத்தா வீரமுத்துவே பேரனை கொன்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

    சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து எனவும் குடும்பத்திற்க்கு கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையால் தண்ணீர் பேரலில் போட்டு குழந்தையை அவரது தாத்தாவான வீரமுத்து கொலை செய்தது நாடகம் ஆடியதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

    இதனை அடுத்து வீர முத்துவை கைது செய்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×