என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிட்டோம்-னு மனசாட்சியே இல்லாம கதை விடுகிறீர்களே My Dear CM Sir..!- விஜய்
    X

    வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிட்டோம்-னு மனசாட்சியே இல்லாம கதை விடுகிறீர்களே My Dear CM Sir..!- விஜய்

    • பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.
    • உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.

    திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.

    தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநாட்டில் நான் உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வருவதாக கூறியிருந்தேன்.

    நம்மை மேலயும், கீழயும் மோசமாக ஆட்சி செய்து வருகிற பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.

    பாஜக அரசுதான் நமக்கு துரோகம் செய்கிறார்கள் என்றால், திமுக அரசும் நம்மை நம்ப வைத்து துரோகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட நான், நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவங்க நல்லது செய்வாங்கள் என்று தேர்ந்தெடுத்தோம். ஆனால், 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில், எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

    ஆனால், எல்லாத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம் கதை விடுகிறீர்களே மை டியர் சிஎம் சார்.

    உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.

    ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற-னு நீங்களே சொல்லிட்டு, இப்போ நீங்க சொல்றது எல்லாமே ரீல்ஸ் தான். அதுல எல்லாமே பாதியில அறுந்தும் போய்டுச்சு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    =======================================

    Next Story
    ×