search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grandson"

    • இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • ஈவுத்தொகை வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு.

    இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரக் குழந்தை எக்கிராஹா ரோஹன் தனது ஐந்தாவது மாதத்திலேயே ரூ. 4.2 கோடியை ஈட்டியுள்ளது.

    கடந்த மாதம் நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை தனது பேரக் குழந்தைக்கு பரிசாக கொடுத்தார். இந்த பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ. 240 கோடி ஆகும். சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    அப்போது முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், 2024 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக ரூ. 8 வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

    இந்த முடிவின் காரணமாக இன்போசிஸ் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், எக்கிரஹா ரோஹனின் பங்குகளின் அடிப்படையில் அவருக்கு ரூ. 4.2 கோடி வரை ஈவுத்தொகை கிடைக்கும். 

    • ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள அம்மாக்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி பெரம்பாயி (வயது 78). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது பேரன் சூர்யா (25) என்பவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பெரம்பாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரம்பாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாகூராள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளதை கண்டு பழனிச்சாமி அதிர்ச்சியடைந்தார்.
    • ராஜா, நகைக்காக நாகூராளை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளூவர் மேலத்தெருவை சேர்ந்தவர் காசி என்ற பெருமாள். இவரது மனைவி நாகூராள் (வயது85). இவர்களது ஒரே மகள் இசக்கியம்மாளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவருக்கு ராஜா (35), பழனிச்சாமி (31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    காசி கடந்த 15 வருடங்களுக்கு முன் இறந்ததால் நாகூராள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு அவரது பேரன்கள் தினமும் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி காலை பழனிச்சாமி, பாட்டி நாகூராளுக்கு சாப்பாடு கொண்டு வந்துள்ளார்.

    அப்போது அவரது வீட்டின் கதவு உள்ளே பூட்டாமல் இருந்தது. பாட்டி நாகூராளை அழைத்தும் அவர் வெளியே வராததால் பழனிச்சாமி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது பாட்டி நாகூராள் பற்கள் உடைந்த நிலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது மகள் இசக்கியம்மாள் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். ஒரு வருடமாகியும் இந்த கொலை வழக்கில் குற்றவாளி சிக்காமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று எஸ்.பி. பாலாஜி சரவணன் தனிப்படையினருக்கு உத்தர விட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட தனிப்படையினர் மூத்த பேரன் ராஜாவை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் நகைக்காக பாட்டி நாகூராளை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜாவை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

    அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் தனது பாட்டியை விறகு கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள சிங்காரக்கோட்டை எஸ்.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் காளையன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 75). இவர்களது மகன் சந்திரசேகரன். விவசாய தோட்டம் வைத்து பராமரித்து வந்தனர். சந்திரசேகரனின் மகன் சுதாகரன் (22) 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    அடிக்கடி வீட்டில் செலவுக்கு பணம் வாங்கி சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பாட்டி சரஸ்வதி கண்டித்துள்ளார். இதனால் சரஸ்வதிக்கும் அவரது பேரன் சுதாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்குமாறு தனது பேரனுக்கு சரஸ்வதி அறிவுரை கூறி வந்தார். இது சுதாகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

    நேற்று வழக்கம் போல் வீட்டுக்கு வந்த சுதாகரனை சரஸ்வதி சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகரன் விறகு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களின் மகன் இறந்துபோனதையடுத்து அவனது விந்தணுவை பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் பேரக்குழந்தை பெற்றுள்ளனர். #UKParents #SpermHarvest
    லண்டன்:

    பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒரே மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தான். இதனால் நிலைகுலைந்துபோன அந்த தம்பதி, தங்கள் மகன் மூலமாக ஒரு வாரிசை பெற்றெடுக்க விரும்பினர். கரு முட்டைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் நவீன முறை குறித்து அந்த தம்பதியர் அறிந்திருந்தனர்.

    இதனால், மகன் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக, அவனது விந்தணுவை எடுத்து பதப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி சிறுநீரகவியல் நிபுணர் ஒருவர் மூலம், விந்தணு எடுக்கப்பட்டு, உறைநிலையில் பதப்படுத்தப்பட்டது. ஆனால் பிரிட்டனில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சட்டவிரோதம் ஆகும். எனவே, அந்த விந்தணுவை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.



    அங்க விந்து செல்களுடன் தானமாக பெறப்பட்ட கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு வளர்க்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் கடந்த 2015ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். பின்னர் அந்த குழந்தையின் சட்டப்பூர்வ பெற்றோராக அறிவித்து, பிரிட்டன் திரும்பினர். தற்போது 3 வயதான அந்த குழந்தையை பிரிட்டனில் வளர்த்து வருவதாக நம்பப்படுகிறது.

    அதேசமயம், சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கிய பேரக்குழந்தையை பிரிட்டனில் வளர்ப்பதில் நெறிமுறை மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலம் குழந்தை பிறந்தது பிரிட்டனில் இதுவே முதல் முறையாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. #UKParents #SpermHarvest

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் பேரன் ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் ‘புளூ பிளட்ஸ்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.#jackschlossberg #bluebloods
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் பேரன் ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் ‘புளூ பிளட்ஸ்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    இதுகுறித்து, ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தனது நீண்ட நாள் கனவு நனவாகியிருக்கிறது என்றும், புளூ பிளட்ஸ் மிகச்சிறந்த படமாக இருக்கும்’ எனவும் பதிவிட்டுள்ளார்.

    மேலும், அவரது தாயார் கரோலின் கென்னடியுடன் போலீஸ் உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். #johnkennedy #jackschlossberg #bluebloods

    ×