search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempted murder"

    • 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு.
    • எனது உயிருக்கு பாதுகாப்பில்லை.

    திருச்சி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    அப்போது தமிழக அரசு குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சிறுகமணி பேரூராட்சி கவுன்சிலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பின்னர் தென்காசி மாவட்டம் வீராணம் பகுதியில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவரை திருச்சி தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மாஜிஸ்திரேட் எண் 3 ஆஜர் படுத்தினர.

    நீதிபதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் ஜாமீனில் விடுவித்தார். பின்னர் சாட்டை துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    தி.மு.க. அரசு என் மீது போட்ட 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு. எங்கள் தரப்பு வக்கீல்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி என்னை விடுவித்துள்ளார்

    14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்து வருகிறது. ஆனால் என்னை எஸ்.சி., எஸ்.டி. பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் முடக்க பார்க்கிறார்கள்.

    நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவன். அந்த மக்களுக்காகவே அதிகமாக குரல் கொடுத்துள்ளேன்.

    நான் மேற்கோள் காட்டி பாடிய பாடல் 31 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பாடலாக உள்ளது.

    சண்டாளன் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வார்த்தை என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. யாரும் இந்த அரசுக்கு எதிராக பேசக்கூடாது என தி.மு.க. அரசு அடக்கு முறையை கையாள்கிறது.

    பா.ஜ.க.வை பாசிசம் என்று சொல்லும் தி.மு.க.வுக்கு இது பாசிசம் என்பது தெரியாதா?

    இந்த வழக்குக்கு எந்த தொடர்பும் இல்லாத எனது கைபேசியை முதலில் போலீசார் பறித்துக் கொண்டார்கள்.

    என்னை கைது செய்தால் போலீசாரின் டெம்போ வேனில் அழைத்து வர வேண்டும். அதற்கு மாறாக என் காரிலேயே அழைத்து வந்தனர். அப்போது டிரைவர் முழு போதையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் என்னை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய பார்த்தது.

    மதுரையில் விபத்து நடந்து கார் சேதமடைந்த பின்னரே போலீஸ் வேனில் ஏற்றினர். எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்றம் தான் என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.

    மாகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பேரனை அடித்ததற்காக மகனை தாத்தா ரைஃபிள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாராளுமன்றத்தில் சிஆர்பிஎப் வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற முதியவர், வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக தற்போது வேலை பார்த்து வருகிறார்.

    நாகபூரில் சிந்தாமணி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், நேற்று இரவு 4 வயதான தனது பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, முதியவர் லைசன்ஸ் பெற்று தான் வைத்திருந்த ரைஃபிள் துப்பாக்கியால் மகனை நோக்கி சுட்டுள்ளார்.

    இதனால் மகனின் காலில் குண்டு பாய்ந்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.காலில் குண்டு பாய்ந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்றார். மகனை தந்தையே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.
    • வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் உள்ள லெபனாவை சேர்ந்த 47 வயதான மிச்செல் என்பவரின் கணவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது போலீசில் புகாரளித்ததுள்ளார்.

    மிச்செல் தனது கணவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருத்தை கலந்து குடிக்க வைத்துள்ளார். மிச்செல் கணவர் அந்த சோடாவை குடிக்க ஆரம்பித்தார். வித்தியாசமான சுவையை அலட்சியப்படுத்திவிட்டு சோடாவைக் குடித்துக்கொண்டே இருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் தொண்டை புண், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை சோதனை செய்த போது மிச்செல் அவர் குடிக்க வைத்திருந்த சோடாவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலப்பது போல் காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிச்செல் கைது செய்யப்பட்டார்.

    சிசிடிவி கேமிரா பதிவை சோதனை செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.

    விசாரணையின் போது மிச்செல் கூறிய காரணம் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியது.

    மிச்செல் தனது கணவருக்கும் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். தான் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்ததை குறித்து தனது கணவர் பாராட்டவில்லை ஆகவே கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

    அதையடுத்து வழக்கு பதிவு செய்து மிச்செல்லை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
    • சல்மான் கானை கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்த்த பன்வாரிலால் பன்டி என்ற யூடியூபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது கொலை முயற்சிகள் அடுத்தடுத்து நடந்து வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் மும்பையின் பாந்திரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

     

    இந்த விவகாரத்தில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுள் அனுஜ் தபான் என்பவர் கடந்த மே 1 ஆம் தேதி காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தவிர்த்து அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அரியானவைச் சேர்த்த பிஷ்னாய் மற்றும் கோல்டி ஆகிய ரவுடிக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் நவி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சல்மான் கானின் பாந்திரா இல்லத்தையும், பன்வேலில் உள்ள பண்ணை வீட்டையும், சல்மான் கானின் படப்பிடிப்பு தளத்தையும் பல நாட்களாக வேவு பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சல்மான் கானை கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்த்த பன்வாரிலால் பன்டி என்ற யூடியூபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் வைத்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பன்டி பேசியதாவது, "லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி கேங்கைச் சேர்நதவர்கள் என்னுடன் தான் உள்ளனர், நான் சல்மான் கானை கொலை செய்யப் போகிறேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் விரைந்த மும்பை சைபர் கிரைம் போலீசார் பன்டியை கைது செய்து மும்பை அழைத்து வந்தனர். பன்வரலால் பன்டிக்கு குற்றப்பின்னணி இருக்கிறதா? அல்லது விளம்பரத்துக்காக வீடியோ வெளியிட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது
    • பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது.

    இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோடி 3 வது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

    இந்த 72 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம், கலவரத்தைத் தூண்டும் வெறுப்பு பேச்சு ஆகிய கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் [ ADR ] அறிக்கை வெளியிட்டுள்ளது.

    துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்கூர் மற்றும் தென் கிழக்கு பகுதிகளின் கல்வி - மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க எம்.பி சுகந்தா மஜூம்தார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி குற்றம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    28 அமைச்சர்களில் பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. 8 அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆக புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

    • கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பர்கத்பாஷா(25). நேற்று மதியம் அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு இருந்தார். அப்போது கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

    அந்த நேரத்தில் 4 பேர் கும்பல் திடீரென பர்கத்பாஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பர்கத்பாஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதனை கண்டு கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த பர்கத்பாஷா ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து நடந்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
    • நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 28). இவரும் வீரலப்பட்டியைச் சேர்ந்த நந்தினி (26) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    நந்தினி ஒட்டன்சத்திரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே திருமணமான 2 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் நந்தினி கணவரை விட்டு பிரிந்து வீரலப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் பிரதீப்குமார் தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு பல முறை அழைத்தும் வரவில்லை. இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நந்தினி தனது அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளரான அசோக்குமார் (29) என்பவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் ஒன்றாகவே பைக்கில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    இதன் காரணமாகத்தான் தனது மனைவி பிரிந்து சென்று விட்டார் என பிரதீப் குமார் சந்தேகமடைந்தார். இந்நிலையில் கள்ளிமந்தயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்தினி தனது காதலன் அசோக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இதை பார்த்ததும் பிரதீப்குமார் கோபமடைந்தார். தான் ஓட்டி வந்த காரை அவர்கள் மீது மோத விட்டு கீழே தள்ளினார். இதில் நந்தினி மற்றும் அசோக்குமார் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர். 

    • காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நீலியாம்பட்டி செல்லும் சாலையில் சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

    போலீசார் நெருங்கி வருவதை கண்ட அந்த நபர் யாரும் பக்கத்தில் வராதீர்கள். வந்தால் சுட்டு விடுவேன் என்று மிரட்டினார். மேலும் கையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார். இருப்பினும் அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

    உடனே அந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து போலீஸ் மீது வீசினார். அது தொட்டியம் காவல் நிலைய போலீஸ்காரர் ராஜேஷ் குமார் மீது விழுந்து அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர் பார்த்தபோது அது வெடிகுண்டு அல்ல பெரிய பாறாங்கல் என்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியை காட்டி சுட முயற்சி செய்தார். உடனே சுதாகரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் முத்தையன் தற்காப்பிற்காக தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்கு கீழாக குறி பார்த்து சுட்டார்.

    இதில் அவரது கால் மூட்டில் 2 குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் என்பது தெரியவந்தது. பின்னர் காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்பு டன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிடிபட்ட ரவுடி அலெக்ஸ் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கடைசியாக மணிகண்டத்தில் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்தார்.

    இந்த வழக்கில் அலெக்ஸை மணிகண்டம் போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் தொட்டியத்தில் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த அலெக்சை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.அவர் மீதான வழக்குகள் தற்போது தூசு தட்டப்பட்டு வருகிறது. ரவுடி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சமீப காலமாக காவல்துறையினர் ரவுடிகளை அவர்களின் முட்டிக்கு கீழ் சுட்டு பிடிப்பது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பீகாரை சேர்ந்த சோட்டாவை பிடிக்க தனிப்படை விரைந்தது
    • தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். கடந்த 8-ந்தேதி இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கி யால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து விருத்தா சலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தர வின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமையிலான தனிப்ப டை போலீசார் மண வாளநல்லூர் ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கி கள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து போலீ சார் பிடிபட்டவர்களை கோர்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசாரின் விசாரணை யில் இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மண வாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் பழிதீர்க்கும் விதமாக ஆடலரசு சென்னையில் தனியார் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளை யங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் முகமது யூனிஸ் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கி கள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. இதன்மூலம் திட்ட மிட்டபடி ஆடலரசு தரப்பி னர் இளையராஜாவை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

    இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபுபக்கர் மகன் முகமது யூனிசை தனிப்படை போலீசார் சென்னையில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட முகமது யூனிசை போலீசார் விருத்தாசலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி னர். இதில் முகமது யூனிஸ் பீகார் மாநிலம் சோட்டா என்பவரிடமிருந்து இந்த துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சோட்டா என்பவரை பிடிக்க பீகார் மாநிலத்திற்கு விரைந் துள்ளனர். பிடிபட்ட முகமது யூனிசிடம் போலீ சார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
    • கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் நண்பர்களுடன் ஸ்ரீதேவிகுப்பம் பெட்ரோல் பங்க் அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.

    பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப்குமாருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தோஷம் நீக்க பரிகாரங்கள் செய்வது வழக்கம்.
    • தனக்கு திருமணம் ஆவதற்கு பரிகார பூஜை செய்ய கேட்டுக் கொண்டார்.

    விழுப்புரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் அடராப்பட்டில் குறி சொல்லும் மையம் நடத்தி வந்தவர் சரவணன் (வயது 42 )சாமியார். தாடியும் நீண்ட தலைமுடியும் வைத்திருப்பவர். இவர் தோஷம் நீக்க பரிகாரங்கள் செய்வது வழக்கம். இந்நிலையில் செஞ்சியை அடுத்த ஒதியத்தூரை சேர்ந்த பச்சையப்பன் மகன் திருமலை (வயது 35) சாமியார் சரவணனை அணுகி தனக்கு திருமணம் ஆவதற்கு பரிகார பூஜை செய்ய கேட்டுக் கொண்டார்.அதற்கு ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொண்டு செஞ்சியை அடுத்த பெருங்கப்பூர் ஏரி பகுதியில் உள்ள காளி கோவிலில் சாமியார் பரிகார பூஜைகள் செய்துள்ளார். ஆனால் பரிகார பூஜைகள் செய்து நீண்ட நாட்களாகியும் திருமண த்தடை நீங்காததால் விரக்தி அடைந்த திருமலை கடந்த 27-ந்தேதி மீண்டும் சாமி யாரை பூஜை செய்வதற்கு வரச் சொல்லி உள்ளார்.

    பணம் வாங்கிக் கொண்டு திருமண தடை நீங்காததால் விரக்தி அடைந்த திருமலை சாமியாரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது .அப்போது ஆத்திரமடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமியார் சரவணன் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் குடல் சரிந்த நிலையில் தனியாக விழுந்து கிடந்த சாமியாரை மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இது குறித்து சாமியார் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். திரும லையை தனிப்படையினர் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பதுங்கி இருந்த திருமலையை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார்.

    ஓசூர்:

    ஓசூர் தாலுகா ஆவலப்பள்ளி அருகே உள்ள காளஸ்திபுரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். முனிராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். இது குறித்து லட்சுமியின் தம்பி ராஜப்பா (26) பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வருகிறார்கள்.

    ×