என் மலர்
நீங்கள் தேடியது "குற்றவாளி"
- தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.
சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து பின்னணி இசையுடன் பரத் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
வழக்கு விசாரணைக்கு ஆஜரான அவர், தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட பரத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ எடுத்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்
கைதான பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2021ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
- இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது.
பயிற்சி பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021ஆம் ஆண்டு மாணவி ஒருவர் பயிற்சியாளரான கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- நீங்கள் என்னை எவ்வளவு மோசமாக நடத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். மரணம் அதைவிட சிறந்தது.
- போலீசார் அவனை கண்ணியமாக நடத்துவதாக பலமுறை உறுதியளித்தனர்.
குஜராத்தில் பல மணி நேரம் போலீசாரையே திக்குமுக்காட வைத்த ஒரு குற்றவாளியின் வீடியோ வைரலாகி வருகிறது.
துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபிஷேக் தோமர் என்பவன், போலீசார் தன்னை தேடி வந்ததை அறிந்ததும் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்.
அபிஷேக் தோமர் அகமதாபாத்தில் உள்ள சிவம் அவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டின் கதவைத் தட்டியபோது, அபிஷேக் திறக்கவில்லை.
இதற்கிடையே, அபிஷேக் ஐந்தாம் மாடியில் உள்ள சமையலறை கதவு வழியாக வெளியே வந்து, சுவற்றின் ஓரத்தில் நின்றபடி தற்கொலை மிரட்டல் விடுத்தான்.
"சரணடைவதை விட சாவது மேல்" என்று அவன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தான். வீடியோ ஒன்றில் , "நீங்கள் என்னை எவ்வளவு மோசமாக நடத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். மரணம் அதைவிட சிறந்தது" என்று அபிஷேக் கூறுவது பதிவாகியுள்ளது.
அபிஷேக் தோமர் சுவற்றின் ஓரத்தில் நின்று மிரட்டல் விடுத்ததை பார்த்ததும், ஏராளமானோர் கீழே கூடினர்.
இதற்கிடையில், இந்த ஆபத்தான சூழ்நிலையை கையாள போலீசார் திணறினர். போலீசார் அவனை கண்ணியமாக நடத்துவதாக பலமுறை உறுதியளித்தும், அபிஷேக் சமாதானமாகவில்லை.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து சுமார் மூன்று மணி நேரம் போராடி, அபிஷேக்கை பத்திரமாக கீழே இறக்கினர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் பின் அபிஷேக் இறுதியாக கைது செய்யப்பட்டான்.
- நாடு முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
- வழக்கில் தொடர்புடைய 4 பேரை புதுவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன். இவரை 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.92 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது.
அதை விற்று பணமாக தனது வங்கி கணக்குக்கு மாற்ற அசோகன் முயற்சித்த போது, இணையதள பக்கம் முடக்கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அசோகன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கோவையில் தலைமை இடமாகக் கொண்டு சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உட்பட பிரபலங்கள் மூலம் 2021-ம் ஆண்டு பிரமாண்ட தொடக்க விழா நடந்துள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குப் பிறகு மகாபலிபுரம் சொகுசு ஓட்டலில் ஆஷ்பேவில் முதலீடு செய்த 100 நபர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரவிலான கார்களின் முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக வழங்கினர்.
அடுத்த சில நாட்களில் மும்பை கப்பல் ஒன்றில் மிகப்பெரிய விழா ஏற்பாடு நடத்தி அதில் ஆயிரகணக்கான மக்கள் பங்கேற்க செய்து ஆஷ்பேவின் முதலீடு செய்ய நிதி திரட்டி உள்ளனர். ஆஷ்பேவில் முதலீடு செய்யும் பணத்துக்கு கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் டி.சி. எக்ஸ் காயின் கொடுத்து முதலீடு பணத்தை தங்களின் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர்.
ஆஷ்பே மூலம் பெற்ற டிசி எக்ஸ் காயின்களை விற்க முடியாமல் முதலீட்டாளர்கள் திணறிய போது ஆஷ்பே என்ற இணையதளம் பக்கம் திடீரென முடக்கப்பட்டது.
பின்பு தொடர் விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த 10-க்கு மேற்பட்டோர் இந்த ஆஷ்பேவில் முதலீடு செய்து ரூ.3 1/2 கோடி வரை இழந்தது தெரிய வந்தது. இதுபோல் நாடு முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
இந்த வழக்கில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையிலான குழு கோயம்புத்தூர் சென்று அங்கு பதுங்கி இருந்த ஜெயின் மற்றும் அரவிந்த்குமார், கர்நாடகா மாநிலம் தும்கூரில் மறைந்திருந்த தாமோதரன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் மூளையாக செயல்பட்ட பாபு, நூர் முகமது, சந்தானம், நித்தியப்பன் உட்பட 5 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிர்வாக இயக்குனர் பாபு என்ற சையது உஸ்மானை கோவையில் புதுவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய 4 பேரை புதுவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார்.
- தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து விட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அனைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்த சீனி முகம்மது மகன் அப்துல் ஹக்கீம் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் இப்ராகிம் , அப்துல் அஜிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சித்திரவேல் உள்பட 10 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1. லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கி பாராட்டினார்.
அப்போது தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.
- தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.
- 17 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் பறிமுதல்.
பட்டீஸ்வரம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் படி, கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) ராஜ்குமார் மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், பார்த்திபன்நாதன், நாடிமுத்து , செந்தில், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து விக்னேஷ் கண்ணனை கைது செய்து 17 பவுன் நகைகளையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார்.
- மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார்.
இந்த வழக்கில் முத்தராமலிங்கம் கைதாகி ஜாமீனில் வெளியே சென்றவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் முத்துராமலிங்கத்தை தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வாய்தாவிற்கு வருகிற 21-ந் தேதி முத்துராமலிங்கம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.
- திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை கீழவெளி வீதி, சுங்கம் பள்ளி வாசல், பதிமுத்து இல்லத்தை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவரது மகன் சம்சுதீன் (வயது30). இவர் 2003-ம் ஆண்டு கீழவாசல் பஸ் நிறுத்தம் முன்பு 4 ½ பவுன் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் சம்சுதீனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி சம்சுதீன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு வழக்கு
திருப்பூர் முருகப்பாளையபுரம், குமார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஸ்டீபன் (37). இவர் 2008-ம் ஆண்டு மதுரை தெற்காவணி மூல வீதி எம்.எஸ். தங்க மாளிகை நகை கடை முன்பு நின்ற இருசக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த சுமார் 520 கிராம் தங்க நகைகள் கொண்ட பையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமைறைவாகி விட்டார்.பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் ஸ்டீபனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி ஸ்டீபன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.
- வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
- 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரன் இருப்பு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
வேதாரண்யத்தில் கடந்த 2006 -ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கி தற்போது முழு நேர நீதிமன்றமாக இயங்கி வருகிறது.
நாகப்பட்டினம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 4 இடங்களில் கிளை சிறைகள் உள்ளன.
வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
வேதாரண்யத்தில் கிளைச்சிறை இல்லாததால் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் சிறைக்கோ அல்லது 60 கி.மீ தொலைவில் உள்ள தரங்கம்பாடி சிறைக்கோ அல்லது 100 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை சிறைக்கோ அல்லது 120 கி.மீ. தொலைவில் உள்ள சீர்காழி சிறைக்கோ குற்றவாளிகளை கொண்டு செல்லவேண்டி உள்ளது.
இதனால் போலீசார் பல சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலீசார் பெரும்பாலும் குற்றவாளிகளை மாலை நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவல் உத்தரவு பெறுகிறாா்கள்.
அப்படி உள்ள சூழ்நிலையில் வேதாரண்யத்தில் இருந்து 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள் சிறையில் குற்றவாளியை அடைத்து விட்டு பணிக்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிறது.
னவே, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேதாரண்யம் நீதிமன்றத்தை சார்ந்து வேதாரண்யம் பகுதியில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வக்கீல் சங்க தலைவர் பாரி பாலன் அரசுக்்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது.
- குற்றவாளிகள் சிலர் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.
கோவை,
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி, மோதல், பாலியல் தொந்தரவு போன்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு கோவை மாநகர் மற்றும் புறநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது. இதில் சில குற்ற வழக்குகளில் கைதான நபர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் சிலர் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜரா காமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.
கோவை மாநகர் மற்றும் புறநகரில் 200-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களைப் பிடிக்க 'ஆபரேஷன் வாரண்ட்' என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்து தமிழக டி.ஜி.பி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை நகரில் மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் மேற்பா ர்வையிலும் கோவை மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மேற்பார்வை யிலும் பிடிவாரண்ட் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு போலீஸ் நிலையத்துக்கு 2 போலீசார் வீதம் மாநகர் புறநகரில் சுமார் 100 தனிப்படை போலீசார் பிடிவாரண்ட் குற்றவாளிகளை தேடும் பணியை இன்று முதல் தொடங்ககி உள்ளனர்.
முதல் கட்டமாக கோவை கோனியம்மன் கோவில் விழாவிற்கு வந்திருந்த 10 பிடிவாரண்ட் குற்றவாளிகள் போலீசில் சிக்கினார். ஒரு வார காலத்திற்குள் அனைத்து தலைமறைவு குற்றவா ளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி பல்வேறு குற்றவாளிகளில் இதுவரை சிக்காத நபர்கள், பல்வேறு பகுதிகளில் குற்றம் செய்துவிட்டு கோவையில் தஞ்சம் அடைந்துள்ள நபர்கள், பண மோசடி மற்றும் பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது.
- ஆட்டோவை திருட முயன்ற வழக்கில் யுவராஜ் என்ற டேனியை போலீசார் கைது செய்தனர்.
- திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(வயது36). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்பொழுது நாய் கத்தியதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ஆட்டோவை தள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்து திருடன்! திருடன்! என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் ஆட்டோவை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து குறித்து வினோத் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆட்டோவை திருட வந்தவர் மாகரல் கிராமம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற டேனி(வயது28) என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அந்த வாலிபரை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் யுவராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. எனவே,அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
நேற்று இரவு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலை அருகே சென்றபோது யுவராஜ் தான் இரண்டு உடைந்த பிளேடுகளை விழுங்கி விட்டதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
- ஜேப்படி ஆசாமிகள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூரில் மத்திய பஸ் நிலையம், கோவில் வழி, புதிய பஸ் நிலையம் இயங்கி வருகின்றன. கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புது பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மத்திய பஸ் நிலையத்திலருந்து டவுன்பஸ்கள் மற்றும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செல்கின்றன. தினந்தோறும பல ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவும் பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் எப்.ஆர்.எஸ் என்னும் சாப்ட்வேர் மூலம் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்:-
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் லட்சக்க ணக்கான தொழிலா ளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வாரத்தில் சனி ஞாயிறுகளில் சம்பளம் அளித்து விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் சிலர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பஸ் மூலம் திருப்பூர் நகரத்துக்கு வருகிறார்கள். இது போன்ற நேரத்தில் ஜேப்படி ஆசாமிகள், செல்போன்கள் திருட்டு, நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர். மேலும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம்நகை பறிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபடுகிறோம். குற்றங்களை தடுக்கும் வகையில் சோதனையில் சிக்கக்கூடிய சந்தேக நபர்கள் ஏதாவது வேறு வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ள பழைய குற்றவாளி களை உடனே கண்டறியும் வகையில் எப்.ஆர்.எஸ். என்னும் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் துணையுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் போட்டோ எடுத்தால் அவர்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் முழுமையான விவரமும் வந்துவிடும் . இதனால் எளிதாக குற்றவாளிகளை கைது செய்ய முடிகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.






