search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "culprits"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேர் கைது.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்படைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களை மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

    குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    முன்னதாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார்.

    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ இதுவரை 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார்.
    • தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டார்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து விட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அனைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்த சீனி முகம்மது மகன் அப்துல் ஹக்கீம் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் இப்ராகிம் , அப்துல் அஜிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சித்திரவேல் உள்பட 10 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1. லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கி பாராட்டினார்.

    அப்போது தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.

    சுருளி அருவி கோவில் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் இங்கு தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அதிக அளவில் வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

    சுருளி அருவி பகுதியில் உள்ள பூதநாராயணன் கோவிலில் கடந்த 3-ந் தேதி புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கொள்ளையடிக்க முயன்றனர். இதை தடுத்த பூசாரி மலையன் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சுற்றுவட்டார கிராமங்களான சுருளிப்பட்டி, கருநாக்கன்முத்தன்பட்டி, எரசை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக விசாரித்த போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    கோவிலில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்த பக்கமும் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சேகரித்த பதிவுகள் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒத்துப்போகவில்லை.

    இதனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. சுருளி அருவி முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிப்டு முறையில் போலீசார் சுற்றி வருகின்றனர். சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா மற்றும் கோவிலுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அருவி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பொன்னமராவதி சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் துடைப்பத்துடன் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
    பரமக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அந்த சமுதாய மக்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வழிமறிச்சான் கிராம மக்கள் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

    பார்த்திபனூர்–கமுதி செல்லும் சாலையில் 150 பெண்கள் உள்பட 250–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு துடைப்பம், மிதியடிகளுடன் சுமார் 1 மணி நேரமாக பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் பகிர்வு செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பஸ்கள், லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன.

    தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பரமக்குடி சங்கர், கமுதி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டு அவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    ×