search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த மூவருக்கு தூக்கு தண்டனை
    X

    தேனி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த மூவருக்கு தூக்கு தண்டனை

    தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டு அவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    Next Story
    ×