என் மலர்
நீங்கள் தேடியது "மரண தண்டனை"
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 13 பேரை கொன்ற மங்கல்.
- பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனை இதுவாகும்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகரில் கொலை குற்றவாளிக்கு அங்குள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 10 மாதங்களுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 13 பேரை கொன்ற மங்கல் என்பவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து மங்கலுக்கு பொதுவெளியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் மூலம் கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றி உள்ளனர்.
மரண தண்டனையை நிறைவேற்றும்போது யாரும் வீடியோ கேமரா வசதி செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பலர் மரண தண்டனையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.
இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனை இதுவாகும்.
- ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஹசீனா தற்போது இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாலும், விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை என்பதாலும் நீதிமன்றம் தாமாக விசாரணையை நடத்தி தீர்ப்பை அறிவித்தது.
மூன்று வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.
மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வரும் நிலையில் இந்த புதிய தீர்ப்பு வந்துள்ளது.
- அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
- 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும், அதே குடியிருப்பில் வசித்த சதீசும் காதலித்து வந்தனர். இந் நிலையில், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022 அக்டோபர் 13-ந்தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த மாணவியை, மின்சார ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தீர்ப்பளித்தது.
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல சதீஷ் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. சதீஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல். இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. மரண தண்டனை விதிக்கத்தக்க, இது அரிதிலும் அரிதான வழக்கல்ல என வாதிட்டார்.
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகம்மது ஜின்னா, காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல். இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, 3-வது நாள் ரெயில் வரும் வரை காத்திருந்து, ரெயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டு உள்ளார் என்பதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதால், தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாஷிவந்தை விடுவித்தனர்.
போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை று ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து வரை விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளார்.
- மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
- வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முன்னாள் வேளாண் மந்திரி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
- அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.
பீஜிங்:
சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார மந்திரி டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் ரூ.336 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- நிமிஷா பிரியாவிற்கு 2018ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
- 2023ஆம் ஆண்டு ஏமன் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
அவரது மரண தண்ட னையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது.
இந்தநிலையில் நர்சு நிமிஷா பிரியாவுக்கு கடந்த 16-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. நர்சு நிமிஷா பிரியாவை தூக்கு தண்டனையில்இருந்து காப்பாற்றும் நடவடிக்கை களில் அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.
இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்வை எட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில் நிமிஷா பிரியாவிற்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் நர்சுக்கான மரண தண்டனையை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முக்கியமாக கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டு குடிமகன் தலால் குடும்பத்தினரை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் நர்சு குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டி ருக்கிறது. நர்சு நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற விரும்பவில்லை என்ற முடிவை, கொலை செய்யப் பட்ட தலாலின் குடும்பத்தினர் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நர்சின் மரண தண்டனையை ரத்து செய்ய கொள்கை அளவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள தாக "சேவ் நிமிஷா பிரியா" கவுன்சிலின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வக்கீலுமான சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் எனவும், கருணை உள்ளிடட விவாதங்கள் தொடரும் என்றும் அவர் கூறி யிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
நர்சுக்கான மரண தண்டனைக்கான கோரிக்கையை வாபஸ் பெற தலாலின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தலாலின் பெற்றோர் உயிருடன் உள்ளனர். மேலும் அவரது குழந்தைகளும் இருக்கின்றனர். ஏமன் சட்டப்படி இறந்தவரின் சொத்தின் வாரிசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும்.அதன்படி இறந்தவரின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் தான் முடிவெடுக்க வேண்டும்.
அவர்கள் இல்லையென்றால் தான் உடன் பிறந்த சகோதரர் முடிவெடுக்க முடியும். நாங்கள் எங்களின் சொந்தவழியில் விவாதங்களை நடத்து கிறோம். மத்திய அரசு இந்த விவாதங்களில் எதிலும் பங்கேற்கவில்லை. இரண்டு வாரங்களாக நாங்கள் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- பார்ட்னர் ஒருவருடன் சேர்ந்து தொழில் தொடங்கியுள்ளார்.
- அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை கைப்பற்ற மயக்க ஊசி செலுத்தியபோது, கூடுதல் டோஸ் செலுத்தியதால் பார்ட்னர் உயிரிழப்பு.
ஏமன் நாட்டில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற இருந்தது. இந்திய அரசு முடிவந்த அளவிற்கு தேவையான அனைத்தையும் செய்து வந்தது. கேரள மாநில மதகுரு, ஏமன் நாட்டின் மதகுருவிடம் இது தொடர்பாக பேசினார். இந்த நிலையில் நாளை நிறைவேற்றப்பட இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டள்ளது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
ஏமன் நாட்டின் விதிமுறைப்படி தொழில் தொடங்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தலால் அப்டோ மெஹ்தி என்பருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, பார்ட்னராக சேர்த்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல மெஹ்தி, நிமிஷா பிரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மெஹ்தி கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுதலை ஆகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்தியதாக தெரிகிறது. கூடுதல் டோஸ் செலுத்தியதால் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏமனில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பின்னர 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
- ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
- 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொலைக் குற்றத்திற்காக நாளை (ஜூலை 16) ஏமனில் மலையாள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (38) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் நிமிஷாவை காப்பாற்ற மதத் தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் ஏமன் மத குருக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து அபூபக்கர், ஏமன் சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமருடன் கலந்துரையாடினார்.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று காந்தபுரம் அபூபக்கர் வலியறுத்தி உள்ளதாக தெரிகிறது. மரண தண்டனைக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இரண்டு நாடுகள் சீனாவும் ஈரானும் ஆகும்.
ஈரானில் புக்கானைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியிருந்தது.
இந்நிலையில் கொலைக் குற்றவாளிக்கு ஈரானிய அதிகாரிகள் பொதுவில் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொதுவில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வழக்கின் மிகவும் தீவிரத் தன்மை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை பொதுவாக விதிக்கப்படுகிறது.
மனித உரிமை குழுக்களின் தரவுகளின்படி, உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இரண்டு நாடுகள் சீனாவும் ஈரானும் ஆகும்.
- பெண் தோழியை வீட்டிற்கு வரவழைத்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
- உயர்நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண் தோழியை கற்பழித்து கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்த ஜாகிர் ஜாபரின் மரண தண்டனையை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் அமெரிக்கரான ஜாகீர் ஜாபர், தனது பெண் தோழியான நூர் முகதமிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இதற்கு நூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பெண் தோழியை இஸ்லாமாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து கொடூரமாக தாக்கியதுடன் கற்பழித்துள்ளார். அதோடு விடாமல் பெண் தோழியின் கழுத்தை துண்டான வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, ஜாகிர் ஜாபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாகிர் ஜாபர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
நூர் முன்னாள் தூதரின் மகள் ஆவார். ஜாகீர் ஜாபரின் பிடியில் இருந்து தொடரந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது வீட்டில் வேலை செய்யும் இருவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பின்னர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது முன்கூட்டியே திட்டமிட்டது என விசாரணையின்போது ஜாகிர் ஜாபர் ஒப்புக்கொண்டார்.
கற்பழிப்பு மற்றும் கொலை செய்த வழக்கில் ஜாபருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. வீட்டு வேலைக்காரர்கள் இருவருக்கு தலா 10 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து கடத்திச் சென்றார்.
- ஒன்றரை மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனந்த் மாவட்டத்தின் காம்பட் கிராமப்புற பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் அக்டோபர் 28, 2019 அன்று வெளிச்சத்துக்கு வந்தது.
குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து சிறுமியை தாதோ என்கிற அர்ஜுன் அம்பலால் கோஹெல் (24) கடத்திச் சென்று வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒன்றரை மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த தீர்ப்பு வந்துள்ளது.
குஜராத்தின் நீதித்துறை மற்றும் காவல் அமைப்பின் செயல்திறனையும், குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டையும் இந்த முடிவு குறிக்கிறது என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பாராட்டினார்.
இரட்டை மரண தண்டனை என்பது மேல்முறையீடு மூலம் உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றத்தில் அவர் விடுவிக்கப்பட்டாலும், அவர் மரண தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இந்த இரட்டை மரணதண்டனை தீர்ப்பு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.






