search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug-trafficking"

    • போதைப்பொருள் கடத்தல் கடத்தல் புள்ளி விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார்.
    • 25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பினார்.

    80, 90 களில் ராம் லகான், வக்த் ஹமாரா ஹை, கிராந்திவீர், கரண் அர்ஜுன், சப்சே படா கிலாடி, அந்தோலன் மற்றும் பாஸி போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களில் நடித்த நடிகை மம்தா குல்கர்னி. மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

    சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 1997 ஆம் ஆண்டு துபாய் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்ட விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார்.

    மம்தா அவரை அடிக்கடி சிறைக்கு சென்று பார்ப்பதாகவும், அவர் சிறையில் இருந்தபோதே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பினார். விக்கி கோஸ்வாமியுடன் தனக்கு நடந்த திருமணத்தையும் பேட்டியில் அவர் மறுத்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிராயகராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் காவி உடுத்தி துறவறம் பூண்டுள்ளார்.

    இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலும் அவர் அவ்வப்போது பதிவுகளையும் இட்டு வந்த மம்தா, தனது துறவற முடிவை அறிவித்திருந்தார். இதன்படி நேற்று முன்தினம் மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடா மடத்துக்கு வந்தார்.

    அதன் தலைவரான ஆச்சார்யா டாக்டர் லஷ்மி நாராயண் திரிபாதியிடம் தனது முடிவு குறித்து எடுத்துரைத்தார். தனக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், முழுத்துறவறம் மேற்கொள்ளத் தயார் எனவும் அதற்கான நிபந்தனைகளை ஏற்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

    இதற்காக மம்தா, இறந்தபின் அவர்களது குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை அவர் தனக்குத் தானே செய்து கொண்டார். தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின் முறைப்படி அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவியை அளிக்கும் சடங்குகளை கின்னர் அகாடாவினர் செய்தனர். அவரது பெயர் அகாரா என மாற்றப்பட்டது.

    ருத்ராச்ச மாலைகள், காவி உடை சகிதமாக மம்தா குல்கர்னி பேசியதாவது, எனக்கு காளி மாதா இட்ட கட்டளையின்படி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன்.

    எனது ரசிகர்கள் என்னை பாலிவுட்டுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்துகின்றனர். மகா காளி உத்தரவின்றி இனி எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளார். கின்னர் அகாடாவின் மதுரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்க மம்தா பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

    • வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • போதைப்பொருள் கடத்தலுக்கு துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழைய வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பழைய துறைமுகத்திற்கு வரும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் மத்திய வருவாய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் முரளி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இதில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தோணி மூலம் மாலத்தீவு நாட்டிற்கு 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனுடைய சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி என்றும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கடத்தலில் தொடர்புடைய தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த சுதாகர் (வயது36), ஜேசுராஜ் (34), தோணியின் மாலுமியான கிங்சிலி (56), மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகிய 4 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர் துணையுடன் தோணி மூலம் போதைப்பொருள் கடத்த இருந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் பல கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் அதிகாரிகள் உடந்தையுடன் வெளி ஆட்கள் உதவிகள் மூலம் கண்டெய்னர் மற்றும் டாரஸ் லாரிகள் மூலம் வெளியே கொண்டு சென்று தூத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு குடோன்களில் கடத்தி பதுக்கி வைக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு வைத்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதவரத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்ப்டடனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்ததாகவும் தெரிய வந்தது.

    இந்நிலையில் மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 5 நாட்டு துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், 4 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

    இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு வைத்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    போதைப்பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த பெரும்பாக்கம் ராஜா, சத்யசீலன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    போதைப்பொருள் விற்பனை மட்டுமின்றி ஆயுதங்கள் விற்பனையிலும் ஈடுபட்டார்களா? எங்கிருந்து துப்பாக்கி வாங்கினர் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
    • திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவரைச் சந்திப்பது வழக்கம், அதனால் நானும் அவரைச் சந்திக்கச் செல்வேன்.

    80, 90 களில் ராம் லகான், வக்த் ஹமாரா ஹை, கிராந்திவீர், கரண் அர்ஜுன், சப்சே படா கிலாடி, அந்தோலன் மற்றும் பாஸி போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களில் நடித்த நடிகை மம்தா குல்கர்னி. மாடல் அழகியாகவும் இருந்த மம்தா 2002 ஆம் ஆண்டோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

     

     சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 1997 ஆம் ஆண்டு துபாய் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்ட விக்கி கோஸ்வாமியுடன் மம்தா உறவில் இருந்தார். மம்தா அவரை அடிக்கடி சிறைக்கு சென்று பார்ப்பதாகவும், அவர் சிறையில் இருந்தபோதே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    சிறையில் இருந்து 2012 இல் வெளியே வந்த விக்கி கோஸ்வாமியின் 2016 இல் மீண்டும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் சிக்கி கைதானார். இதில் மம்தாவுக்கும் பங்கு உள்ளதாக கூறப்பட்டது. பாலிவுட்டில் பிரபல பிரபல நடிகையாக திகழ்ந்த மம்தாவின் குல்கர்னி உடனான உறவு அதிக பரபரப்பாக இந்தி பத்திரிகைகளால் கவர் செய்யப்பட்டது.

     

     

    இந்நிலையில் 25 ஆண்டுகளாக வெளிநாடுகளையே சுற்றிய மம்தா குல்கர்னி [52 வயது] சமீபத்தில் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். கையோடு தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் மம்தா குல்கர்னி மும்பையில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

    "நான் விக்கியை திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர் என் கணவர் அல்ல. நான் இன்னும் தனியாக இருக்கிறேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    விக்கிக்கும் எனக்கும் ஒரு உறவு இருந்தது, ஆனால் நான் அதை முறித்துக்கொண்டேன். விக்கியை அந்த சமயத்தில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும் அவரைச் சந்திப்பது வழக்கம், அதனால் நானும் அவரைச் சந்திக்கச் செல்வேன். அவரை பற்றிய உண்மை தெரிந்ததும் அவரை விட்டுவிட்டேன்.

     

    2012ல் சிறையில் இருந்து விக்கி வெளியே வந்தார். 2016ல் அவரை சந்தித்தேன். ஆனால் அதன் பின் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது என் கடந்த காலம். நான் அவரை விட்டுவிட்டேன் என்று மம்தா குல்கர்னி அந்த பேட்டியில் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்
    • சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது..

    வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்கில் செல்வச்செழிப்பான நாடக விளங்கும் சவூதி அரேபியாவில் பலர் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்குச் சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த வருட மரண தண்டனை எண்ணிக்கை குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்த ஆண்டில் [2024 இல்] இதுவரை மொத்தமாக 274 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் 101 வெளிநாட்டவர்கள் ஆவர். இது கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

     

    பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமன் - 20 பேர், சிரியா - 14 பேர், நைஜீரியா - 10, எகிப்து - 9 பேர், ஜோர்டான் - 8 பேர், எத்தியோப்பியா - 7 பேர், சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேர், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் கடந்தால் தொடர்பாக வழக்குகள் இந்த ஆண்டு மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.  இந்த ஆண்டு போதைப்பொருள் வழக்குகளில் 92 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதில் 69 பேர் வெளிநாட்டவர்கள். ஒரு வருடத்தில் இந்த அளவிலான எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றுவது இதுவே முதல் முறை.

     

    சவுதி இளவரசர் - முகமது பின் சல்மான் அல் சவுத் 

    முன்னதாக 2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அரேபியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த மரண தண்டனைகள் சர்வதேச அரங்கில் கவலையளிப்பதாக உள்ளது.

    • போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரண கர்த்தாக்கள் யார்?
    • போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

    போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரண கர்த்தாக்கள் யார்? சூத்ரதாரிகள் யார்-யார்?

    என்பது நன்கு தெரிந்திருந்தும், ஆணிவேர் எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளாமல், கடத்தலில் ஈடுபடும், குருவிகள் என்றழைக்கப்படும், சிறுசிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன?

    தொடர்ந்து இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இருவரிடமும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றுஅதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு கண்டெய்னரில் 'குவார்ட்ஸ்' பவுடர் பாக்கெட்டுகளுடன் 112 கிலோ சூடோ பெட்ரின் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த போதைப் பொருட்களை சரக்கு கப்பல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்ததை கண்டுபிடித்து அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக துறைமுக ஏஜெண்டுகள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைதான ஏஜெண்டுகளின் பெயர் அபுதாகிர், அகமது பாஷா என்பது தெரிய வந்தது. இருவரிடமும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. துறைமுக ஏஜெண்டுகள் இருவர் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்துவதற்காக துறைமுகத்துக்கு போதைப் பொருட்களை அனுப்பி வைத்தவர்கள் யார்? என்பது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள அதிகாரிகள் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கண்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் துறைமுக அதிகாரிகள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சென்னை:

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இறங்கினார்கள். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே ஜாபர் சாதிக் உள்பட இந்த வழக்கில் கைதான நபர்கள் மீது டெல்லி சிறப்பு கோர்ட்டில் மத்திய போதைப்பொருள் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைக்கோர்த்து இந்த வழக்கில் தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ரூ.55.30 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜாபர் சாதிக், சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் ஈட்டிய பணத்தை திரைப்பட தயாரிப்பு, ஓட்டல்கள், சரக்கு நிறுவனம் போன்ற தொழில்களில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவருடைய பெயரில் இருந்த அசையும், அசையா சொத்துகள், மனைவி அமீனா பானு மற்றும் பினாமிகள் மைதீன் கானி, முகமது முஸ்தபா, ஜாமல் முகமது ஆகியோரின் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    ஜே.எஸ்.எம். சொகுசு ஓட்டல் (புரசைவாக்கம்), ஆடம்பர பங்களா வீடு உள்பட 14 அசையா சொத்துகள், 7 சொகுசு கார்கள் உள்பட மொத்தம் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளவில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது.
    • காரில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது. அதிலும் விலை உயர்ந்த போதை பொருளான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் போலீசாரின் சோதனையில் அடிக்கடி சிக்கி வருகிறது.

    இதனை பயன்படுத்துவம், பதுக்குவதும் சட்டப்படி குற்றம் என்றபோதிலும் பலர் விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.

    எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று மானந்தவாடி அருகே உள்ள பாவாலி சோதனைச் சாவடியில் கலால் புலனாய்வு பிரிவினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவரகள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த கல்ல புலனாய்வு பிரிவினர் காரில் சோதனை செய்தார்கள். அப்போது காரின் ஸ்டியரிங் 'செலோடேப்' ஒட்டப்பட்டு வித்தியாசமாக இருந்தது.

    அதனை பிரித்து பார்த்தபோது அதற்குள் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை காரில் கடத்தி வந்த பெங்களூரு நர்சிங் மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் போதைப்பொ ருளை பெங்களூருவில் இருந்து கார் ஸ்டியரிங்கில் மறைத்துவைத்து நூதனமுறையில் கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் அதனை கலால் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்து கைப்பற்றி விட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளின் மதிப்பு பல லட்சம் ஆகும்.

    அவர்கள் பெங்களூ ருவில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொ ருளை கூடுதல் விலைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொண்டுவந்தது விசார ணையில் தெரியவந்திருக்கி றது. கைது செய்யப்பட்ட நர்சிங் மாணவர்கள் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர்.
    • கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் ஏ.புதுப்பட்டி பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கொடைக்கானலில் இருந்து கம்பம் நோக்கி சென்ற கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில் 250 கிராம் கஞ்சா, ஒரு பாக்கெட் கஞ்சா சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காரில் 50 கிராம் எடை கொண்ட 30 மெத்தபட்டமைன் போதை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவரவே அதனை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.1.75 லட்சமாகும். இதனை தொடர்ந்து காரில் வந்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த விகாஸ் ஷியாம் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த ஆரிப் ராஜா (22), கம்பம் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களுடன் வந்த சல்மான் என்பவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் பெங்களூரில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்து போதை பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. போதை கும்பல் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்க ளில் தேடுதல்வேட்டை மேற்கொண்டனர். கோவையை சேர்ந்த அன்பழகன் (25), வருசநாடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (23), பெங்களூரை சேர்ந்த யாசர் முத்தர் (23) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 25 கிராம் மெத்தபட்டமைன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 6 பேர்களையும் தேனி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம் மெத்தபட்டமைன், 10 கிராம கோகைன், போதை ஸ்டாம்பு, கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    முக்கிய குற்றவாளி களான நோகன் மற்றும் சல்மான் ஆகியோர் கேரளா மற்றும் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    இந்த கும்பல் கொடைக்கானலில் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எவ்வளவு விலை கொடுத்தும் போதை பொருட்களை வாங்கிவிடுவார்கள் என்பதால் அதுபோன்ற நபர்களை குறிவைத்து இவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி போல பணத்தை செலுத்தியதும், அவர்கள் இருக்கும் இடத்திற்கு போதை பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். இதனால் யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர். இதன் நெட்ஒர்க் பல மாநிலங்களை கடந்து செல்வதால் மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திகார் சிறைக்குள் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    • வாக்குமூலத்தை பதிவு செய்ய மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களும் எடுத்துச்செல்லப்பட்டன.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட மறுநாள் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

    அதன் பின்னர் ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. குடோன்களிலும் சோதனை நடந்தது. ஜாபர் சாதிக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது வழக்கு சம்பந்தப்பட்ட பல ஆவணங்களும், வாக்குமூலங்களும் பெறப்பட்டன.

    இதற்கிடையே கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திகார் சிறைக்குள் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பட்டியாலா சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுதிர்குமார் சிரோஹி அனுமதியை பெற்று இந்த விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது விசாரணை முழுமையாக முடிக்கப்படவில்லை.

    இதனால் விசாரணையை மீண்டும் நடத்த அதே கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அனுமதி பெற்றனர். ஜூன் 25 மற்றும் 26-ம் தேதிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. பணமோசடி தடுப்புச்சட்டம் பிரிவு-50-ன் கீழ் வழங்கப்பட்ட அந்த அனுமதியின்பேரில் அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று ஜாபர் சாதிக்கிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

    வாக்குமூலத்தை பதிவு செய்ய மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களும் எடுத்துச்செல்லப்பட்டன. இந்த விசாரணையைத் தொடர்ந்து வாக்குமூலம் பதிவு ஆவணங்களில் அவரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்க அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

    • போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் விசாரித்து வருகிறார்கள்.

    ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம் இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×