என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ"

    • உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
    • 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.

    அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.

    வாகனங்கள், வாகன பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த வரிகள் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிகம் பாதிக்கும்.

    உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஆண்டு கூடுதலாக 33,910 கோடி டாலர் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    50 சதவீத வரி இந்தியா - மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.

    அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியா மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் ஒன்பதாவது பெரிய நாடாகும்.

    • முதல் 12 இடங்களில் வராத இந்திய அழகி
    • அழகி போட்டிக்கான விளம்பர நிகழ்வில் பங்கேற்காத பாத்திமா போஷ்

    தாய்லாந்தில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த பாத்திமா போஷ் பட்டத்தை வென்றார். இறுதிப் போட்டியில் சிலி, கொலம்பியா, கியூபா, குவாடலூப், மெக்ஸிகோ, புவேர்ட்டோ ரிக்கோ, வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மால்டா மற்றும் கோட் டி'ஐவோயர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இடம்பெற்றனர்.

    தாய்லாந்தின் பிரவீனர் சிங் முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். இரண்டாவது ரன்னர் அப்பாக வெனிசுலாவின் ஸ்டெபானி அபாசாலியும், மூன்றாவது ரன்னர் அப்பாக பிலிப்பைன்ஸின் மா அஹ்திசா மனலோவும், நான்காவது ரன்னர் அப்பாக கோட் டி ஐவரியை சேர்ந்த ஒலிவியா யாஸும் தேர்வானர். இந்தியாவின் மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை. 


    முன்னதாக நவம்பர் 4 ஆம் தேதி மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்களுடனான சந்திப்பின் போது, அழகுப் போட்டிக்கான விளம்பர நிகழ்வில் போஷ் பங்கேற்கவில்லை என அவரை குற்றம் சாட்டி, நிகழ்ச்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் நவத் இட்சராகிரிசில் பாத்திமா போஷை திட்டினார். இதனால் அரங்கில் இருந்து பாத்திமா போஷ் வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக மற்ற நாட்டு அழகிகள் சிலரும் வெளிநடப்பு செய்தனர். நேரலையில் இந்த பிரச்சனை ஒளிபரப்பானதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. போட்டி நடத்திய இரண்டு நடுவர்களும் வெளிநடப்பு செய்தனர். 

    இதனையடுத்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் தலைவரான ரவுல் ரோச்சா, இப்போட்டியின் மற்ற நிகழ்வுகளில் இட்சராகிரிசில் பங்கேற்க தடைவிதித்தார். இந்த சர்ச்சைகளை மீறி பாத்திமா போஷ் மகுடம் சூடியது சுயமரியாதைக்கு கிடைத்த அங்கீகாரம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    ×