search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "face masks"

    • பொதுமக்களுக்கு இலவச முககவசம் மற்றும் இனிப்புகளும் வழங்கி கொரோனா விழிப்புணர்வு.
    • பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்.

    தஞ்சாவூர்:

    சீனா , அமெரிக்காவில் மீண்டும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிவேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    பிரதமரின் வேண்டு கோள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் சாண்டா கிளாஸ் என்ற ழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பொதுமக்களிடம் இலவச முககவசம் மற்றும் இனிப்புகளும் வழங்கி கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அந்த வழியாக சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . ஜோதி அறக்கட்டளையை சேர்ந்த மாணவ தன்னார் வலர்கள் நாசிகா மற்றும் சிவனாசிக்வரன் ஆகியோர் சாண்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்திலும் நேரு வேடத்திலும் பொது மக்களுக்கு முககவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதுடன் மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை பின்பற்ற கேட்டுக்கொண்டு இனிப்பு களை வழங்கினார்கள் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    ×