

கொரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாளுமாறு அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளன. இதில் முக்கியமாக முகக்கவசம் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த முகக்கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இவை கிடைக்கும் பகுதிகளிலும் அதிக விலைக்கு விற்பதாலும், வியாபாரிகள் பதுக்குவதாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இந்த சிறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 9 கிளை சிறைகளுக்கும் இந்த முகக்கவசங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக சிறை துணை சூப்பிரண்டு சுனில் குமார் மவுரியா தெரிவித்தார். சிறை கைதிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.