என் மலர்
நீங்கள் தேடியது "நிலநடுக்கம்"
- தைவானில் ரிக்டர் 6.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் தைபே தலைநகரில் கட்டிடங்கள் குலுங்கின.
தைபே:
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 30.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தைபே தலைநகரில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தைவானில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- நிலநடுக்கத்தின் எதிரொலி மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொலம்பியாவில் உள்ள பொகோட்டா என்ற பகுதி அருகே சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது சரியாக உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் எதிரொலி மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
- குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இன்று (மே 31) பிற்பகல் ஜப்பானின் வடக்கே அமைத்துள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் பல பகுதிகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
- நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
காத்மாண்டு:
இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று அதிகாலை 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.
நேபாளத்தில் சில தினங்களுக்கு முன் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
பிரபல சுற்றுலாத் தலமான யோலண்டாவிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும் 77 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
- ஒரு வாரத்தில் நேபாளத்தைத் தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
- காஸ்கியின் சில பகுதிகளிலும், அருகிலுள்ள தனஹு, பர்வத் மற்றும் பாக்லங் மாவட்டங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் நேபாளத்தைத் தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்கி மாவட்டத்தின் சினுவா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, காஸ்கியின் சில பகுதிகளிலும், அருகிலுள்ள தனஹு, பர்வத் மற்றும் பாக்லங் மாவட்டங்களிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை.
நேபாளத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு, மே 14 அன்று, கிழக்கு நேபாளத்தில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சீனாவில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
பீஜிங்:
சீனாவில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
- இந்தோனேசியாவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:58 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.
- கிரீஸ் தீவின் தலைநகரான பிரையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உண்டானது.
- நிலநடுக்கம் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கிரீஸ் நாட்டு தீவான காசோசில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவின் தலைநகரான பிரையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள்.
முதற்கட்டமாக உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. கிரீஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்ரேல், துருக்கி, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.
- பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை.
- இன்று பிற்பகல் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று பிற்பகஙல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.
இன்று பிற்பகலில் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட அதிர்வால், ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.
உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். இது பல பெரிய பிளவுகளால் கடக்கப்படுவதன் விளைவாக, பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை.
- அதிகாலை 2:41 மணியளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
- இதன்போது நில அதிர்வானது உணரப்பட்டது.
இந்தியாவுக்கு அண்மையில் உள்ள திபெத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 2:41 மணியளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதன்போது நில அதிர்வானது உணரப்பட்டது.
இதனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது சேதமோ பதிவாகவில்லை. முன்னதாக மே 8 ஆம் தேதி, இந்தப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
- வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.