என் மலர்
மெக்சிகோ
- விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார்.
- விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் சாலை விபத்துகள் மறுபுறம், ரெயில் விபத்துக்கள் மற்றும் விமான விபத்துகளும் நடக்கின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது மெக்சிகோவில் நிகழ்ந்த தனியார் விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரண்டு ஊழியர்கள் மற்றும் எட்டு பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தானது டோலுகா விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்தில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டதாக மேயர் அனா முனிஸ் தெரிவித்தார். விபத்துக்கான காரணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
- 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.
அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
வாகனங்கள், வாகன பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த வரிகள் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிகம் பாதிக்கும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஆண்டு கூடுதலாக 33,910 கோடி டாலர் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
50 சதவீத வரி இந்தியா - மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.
அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியா மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் ஒன்பதாவது பெரிய நாடாகும்.
- இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
- இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.
இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தார்.
- கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார்.
மெக்சிகோவில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாமை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரைப் பின்னால் இருந்து அணுகி, அவரது தோளில் கையை வைத்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.
கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார். பின்னர் அவரது பாதுகாப்புக் குழு அந்த நபரை அங்கிருந்து அகற்றினர். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
- தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இரங்கல் தெரிவித்தார்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் வடமேற்கே அமைந்துள்ள சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.
தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று, பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மெக்சிகோவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் இறந்தனர்.
- தொடர் மழையில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது.
மெக்சிகோ சிட்டி:
வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது.
மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி தீர்த்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வினியோகம் தடைபட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஏற்கனவே ஹிடால்கோ மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு 66 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெராக்ரூசின் போசா ரிகா பகுதியை கருமேகம் சூழ்ந்து கொண்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 64 பேர் பலியாகினர். இதனால் மெக்சிகோவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. வெள்ளத்தில் சிக்கி மாயமான 60-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடக்கிறது.
- மக்கள் வசிக்கும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
- நிலச்சரிவில் வீடுகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதமடைந்தன.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின. நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள் சேதம் அடைந்தன.
பல்வேறு மாநிலங்களில் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், மெக்சிகோவில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
- மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. இந்த கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.
நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து இதுவரை 41 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெற்றம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன.
- மருத்துவமனைகளும் கடுமையான சேதம் அடைந்துள்ளன.
மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. இந்த கனமழைக்கு 28 பேர் உயிரிழந்தனர்.
மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.
மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாநிலத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவால் குறைந்தது ஆயிரம் வீடுகள், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன். 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சாரம் இல்லாமல் இருட்டில் மூழ்கின.
பியூப்லா மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேரை காணவில்லை. கனமழையால் சுமார் 80 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக கியாஸ் பைப்லைன் உடைந்து சேதம் ஏற்பட்டது.
மீட்புப் பணிக்கான 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெனிசுலாவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் வீடுகள் சேதடைந்துள்ளது. கடற்படை 900 மக்களை வெளியேற்றி, முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்துச் சிதறியது.
- இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதன்பின் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த தீயால் சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது.
இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி பலியாகினர். 90-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
- கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது
மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
முதலைக்கு முத்தமிட்ட மேயர், அதனை கையில் ஏந்தி நடனமாடினார். கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது
- இரபுவாடோ நகரில் மத கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
- கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
மெக்சிகோவின் குவானா ஜுவாடோ மாகாணத்தில் உள்ள இரபுவாடோ நகரில் மத கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாலைவில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் அங்கு வந்தனர். அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் ஒரு சிறுவன், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.
துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க கூட்டத்தினர் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவான்ஜுவாடோ, அந்நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாகாணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த மாதம் குவானாஜு வாடோவின் சான் பார்தோ லோடி பெர்ரியாஸ் நகரில் கத்தோலிக்க திருச்சபை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.






