என் மலர்
மெக்சிகோ
- எல் மென்சோவுடன் சேர்த்து கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
- துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடின்னான்
லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.
கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எல் மென்சோ எப்படி சிக்கினான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எல் மென்சோவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க அரசு 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே அமெரிக்க உளவு அமைப்பான CIA வழங்கிய ரகசியத் தகவல்களின் அடிப்படையில், மெக்சிகோ ராணுவம் ஜலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் மாபெரும் தேடுதல் வேட்டையை நடத்தியது.
எல் மென்சோவின் காதலியின் நடமாட்டத்தை ராணுவம் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. பிப்ரவரி 20 அன்று, அவரது தோழி ஒருவரைப் பின்தொடர்ந்ததன் மூலம் எல் மென்சோ கிராமப்புறம் ஒன்றில் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டறியப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது எல் மென்சோவின் பாதுகாவலர்கள் ராணுவத்தின் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சேதமடைந்து அவசரமாகத் தரைஇறக்கப்பட்டது.
துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடிய எல் மென்சோவை ராணுவம் துரத்திப் பிடித்தது. சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்குக் கொண்டு செல்லும் வழியில் எல் மென்சோவின் உயிர் பிரிந்தது.
மென்சோவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ள நிலையில் இதில் 25 பாதுகாப்புப் படையினர் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவில் நிலவும் இந்த உள்நாட்டுக் கலவரம் மற்றும் வன்முறை, அங்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
- ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் எல் மென்சோ.
- +52 55 4847 7539 என்ற இந்திய தூதரகத்தின் உதவி எண்ணைய்யும் தொடர்பு கொள்ளலாம்.
லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.
கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களை எரிப்பது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மெக்சிகோ விமான நிலையங்களிலும் வன்முறை பரவியது. இதனால் முக்கிய நகரங்களில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அங்குள்ள இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தங்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் போன் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
பின்வரும் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது:
ஜாலிஸ்கோ, தமௌலிபாஸ், மைக்கோகன், குயிரெரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். +52 55 4847 7539 என்ற இந்திய தூதரகத்தின் உதவி எண்ணைய்யும் தொடர்பு கொள்ளலாம்.
- போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்ச்சோ' சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்காவால் 15 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மிக முக்கியமான குற்றவாளி.
மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மென்ச்சோ' சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயர்மட்டத் தலைவன் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஆயுதமேந்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களில் மோதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றான CJNG அமைப்பின் தலைவன் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது.
அமெரிக்காவால் 15 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மிக முக்கியமான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மெக்சிகோவில் வெடித்த கலவரத்தையடுத்து அங்குவாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மெக்சிகோவில் உள்ள இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும்வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாமென வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மெக்சிகோவில் உள்ள இந்தியர்கள் மறுஅறிவிப்பு வரும்வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாமென வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.
- மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டது.
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய மெக்சிகோவின் மோரெலோஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.
அப்போது மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டது.
இந்தத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெக்சிகோவில் செயல்படும் இரண்டு போதைப்பொருள் கடந்த கும்பல்களுக்கு இடையே இருந்த மோதலே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின.
மெக்சிகோ சிட்டி:
தெற்கு மெக்சிகன் மாநிலமான குரேரோவில் 6.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதனால் உயரமான கட்டடங்கள் குலுங்கின. அச்சத்தால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு மெக்சிகோ அதிபர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பூகம்ப எச்சரிக்கை மணி ஒலித்ததால் செய்தியாளர் சந்திப்பு தடைபட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
- சுமார் 241 பயணிகள் ரெயிலில் சென்றுகொண்டிருந்தனர்.
- பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மெக்சிகோவில் நேற்று ரெயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் ரெயில் சுமார் 241 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஓக்ஸாகா மற்றும் வெராக்ரூஸ் எல்லையில் உள்ள நிஜண்டா நகருக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றனர்.
- அப்போது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ சிட்டியில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து ஒன்றில் சிகோன்டெபெக் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்த பேருந்து வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள ஜோன்டெகோமட்லான் என்ற மலைப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
- விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார்.
- விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் சாலை விபத்துகள் மறுபுறம், ரெயில் விபத்துக்கள் மற்றும் விமான விபத்துகளும் நடக்கின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது மெக்சிகோவில் நிகழ்ந்த தனியார் விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரண்டு ஊழியர்கள் மற்றும் எட்டு பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தானது டோலுகா விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்தில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டதாக மேயர் அனா முனிஸ் தெரிவித்தார். விபத்துக்கான காரணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
- 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.
அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
வாகனங்கள், வாகன பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த வரிகள் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிகம் பாதிக்கும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஆண்டு கூடுதலாக 33,910 கோடி டாலர் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
50 சதவீத வரி இந்தியா - மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.
அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியா மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் ஒன்பதாவது பெரிய நாடாகும்.
- இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
- இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.
இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தார்.
- கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார்.
மெக்சிகோவில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாமை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரைப் பின்னால் இருந்து அணுகி, அவரது தோளில் கையை வைத்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.
கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார். பின்னர் அவரது பாதுகாப்புக் குழு அந்த நபரை அங்கிருந்து அகற்றினர். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
- தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இரங்கல் தெரிவித்தார்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் வடமேற்கே அமைந்துள்ள சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.
தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று, பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






