என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் கடத்தல்"

    • எல் மென்சோவுடன் சேர்த்து கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடின்னான்

    லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

    அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.

    கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

    எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.

    இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் எல் மென்சோ எப்படி சிக்கினான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    எல் மென்சோவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க அரசு 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது.

    இதற்கிடையே அமெரிக்க உளவு அமைப்பான CIA வழங்கிய ரகசியத் தகவல்களின் அடிப்படையில், மெக்சிகோ ராணுவம் ஜலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் மாபெரும் தேடுதல் வேட்டையை நடத்தியது.

    எல் மென்சோவின் காதலியின் நடமாட்டத்தை ராணுவம் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. பிப்ரவரி 20 அன்று, அவரது தோழி ஒருவரைப் பின்தொடர்ந்ததன் மூலம் எல் மென்சோ கிராமப்புறம் ஒன்றில் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டறியப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது எல் மென்சோவின் பாதுகாவலர்கள் ராணுவத்தின் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சேதமடைந்து அவசரமாகத் தரைஇறக்கப்பட்டது.

    துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடிய எல் மென்சோவை ராணுவம் துரத்திப் பிடித்தது. சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்குக் கொண்டு செல்லும் வழியில் எல் மென்சோவின் உயிர் பிரிந்தது.

    மென்சோவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ள நிலையில் இதில் 25 பாதுகாப்புப் படையினர் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    மெக்சிகோவில் நிலவும் இந்த உள்நாட்டுக் கலவரம் மற்றும் வன்முறை, அங்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.   

    • ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் எல் மென்சோ.
    • +52 55 4847 7539 என்ற இந்திய தூதரகத்தின் உதவி எண்ணைய்யும் தொடர்பு கொள்ளலாம்.

    லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

    அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.

    கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

    எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.

    இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாகனங்களை எரிப்பது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மெக்சிகோ விமான நிலையங்களிலும் வன்முறை பரவியது. இதனால் முக்கிய நகரங்களில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் அங்குள்ள இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியர்கள் தங்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் போன் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பின்வரும் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது:

    ஜாலிஸ்கோ, தமௌலிபாஸ், மைக்கோகன், குயிரெரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவசர உதவிக்கு 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  +52 55 4847 7539 என்ற இந்திய தூதரகத்தின் உதவி எண்ணைய்யும் தொடர்பு கொள்ளலாம். 

    • எல்லையோர கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
    • பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தனர்.

    ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சுமார் ரூ. 40 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    நேற்று, இரவு எல்லையோர கிராம மக்கள் சிலர், டிரோன் ஒன்று பறப்பதையும், அது ஒரு பொட்டலத்தைக் கீழே போடுவதையும் கவனித்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.

    எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய தீவிர சோதனையில், விவசாய நிலங்களில் இருந்து அந்த ஹெராயின் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

    அதேநேரம், மற்றொரு சம்பவத்தில், கதுவா மாவட்ட எல்லைப் பகுதியில் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்திய புகாரில் ஜதின் மற்றும் டேனிஷ் டோக்ரா ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இவர்கள் பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  

    • அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

    குவைத் நீதிமன்றம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

    நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க குவைத் உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

    இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைஃபான் மற்றும் ஷுவாய்க் பகுதிகளில் கண்காணிப்பு நடத்தி இரண்டு இந்தியர்களை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.

    விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

    • சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்தது.
    • இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

    பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

    சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் நேற்று இந்தத் தாக்குதலை நடத்தியது.

    இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்தது.

    சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது.

    ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளது. 

    • அமெரிக்காவிற்குள் 400 டன் கோகைன் கடத்த உதவியதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
    • அமெரிக்க சிறைச்சாலைத் துறையும் ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது

    அமெரிக்காவிற்குள் 400 டன் கோகைன் கடத்த உதவியதற்காக கடந்த வருடன் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ்க்கு டொனால்டு டிரம்ப் தனது அதிபர் பதவியை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கி உள்ளார்.

    இதன்மூலம், அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள சிறையில் இருந்து ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சுதந்திர மனிதராகிவிட்டதாக அவரது மனைவி சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

    இதற்கிடையில், அமெரிக்க சிறைச்சாலைத் துறையும் நேற்று, ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

    ஹோண்டுராஸில் நடக்க உள்ள தேர்தலில் டிரம்ப், ஜுவான் ஆர்லாண்டோவின் கட்சியை ஆதரிக்கிறார். எனவே இந்த மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக டிரம்ப் கடுமையாக எதிர்வினை ஆற்றி வரும் நிலையில் ஆர்லாண்டோவுக்கு மன்னிப்பு வழங்கி உள்ளது பேசுபொருளாகி உள்ளது. 

    • இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
    • இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.

    பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் "ரெட் கமாண்ட்" என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக காவல்துறை நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது.

    ரியோ டி ஜெனிரோ நகரில் கோம்ப்லெக்ஸோ டி அலேமாவோ மற்றும் பென்ஹா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

    அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் கும்பல் மீது ஹெலிக்கப்பட்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த சிறப்பு ஆபரேஷனில் நான்கு காவல்துறையினர் உட்பட 119 பேர் உயிரிழநதனர் என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளன.

     இந்தத் ஆபரேஷன், அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் சி40 சர்வதேச மேயர்கள் மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
    • மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நூதன முறையில் கடத்தி வரப்பட்ட கொகைனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சுமார் ரூ.60 முதல் 70 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ கிராம் கொகைன் எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    சந்தேகம் வராமல் இருக்க, Ferrero Rocher என்ற பிரபல வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்டு பெட்டிகளில் கடத்தி கடத்தி வரப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முதற்கட்ட விசாரணையில் கடத்துவரப்பட்ட கொகைன், மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள கொகைன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது. 

     அண்மையில் இதேபோல் வெளிநாட்டு சாக்லேட் போர்வையில் டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 5.4 கிலோகிராம் கோகைன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்படுகிறது.
    • இதை கண்காணிக்க டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 553 கி.மீ. தூரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இந்த எல்லை வழியாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிரோன் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது.

    பாகிஸ்தானில் இருந்து பறக்கவிடப்படும் டிரோன், இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்களை போட்டுவிடும். அதை ஏஜென்ட்கள் எடுத்து மற்ற இடத்திற்கு கடத்துவது வழக்கமாகி வருகிறது.

    இதை தடுக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை (Baaz Akh) பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.

    எல்லை பாதுகாப்பு படையு ஒத்துழைப்புடன் இந்த சிஸ்டம் செயல்படும். பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன்கள் பறந்து வந்தாலு, இந்த சிஸ்டம் அவற்றை தாக்கி அழிக்கும்.

    இந்த சிஸ்டத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • போதைப்பொருள் கடத்த முயற்சிப்பதாக பெங்களூர் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மாநிலங்களுக்கு இடையேயான இந்த கடத்தல் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூர்:

    மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த லால்ஜம்லுவாய் மற்றும் மிசோரமை சேர்ந்த லால்தாங்லியானி ஆகிய 2 பெண்கள் பெங்களூர் காட்டன்பேட்டை அருகே சோப்பு பெட்டிகளில் கோகைன் போதைப்பொருள் கடத்த முயற்சிப்பதாக பெங்களூர் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அலுவலகத்துக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு சோப்பு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.14.69 கோடி மதிப்புள்ள 7 கிலோ கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் லால்ஜம்லுவாய் மற்றும் லால்தாங்லியானி ஆகியோரையும் கைது செய்தனர்.

    இப்பெண்கள் பல நாட்களாக கோகைன் மணிப்பூர் பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு கொண்டு வந்தது விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மாநிலங்களுக்கு இடையேயான இந்த கடத்தல் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப் பொருட்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியா நகரங்களில் தயாரிக்கப்படும் ஓஜி குஷ் என்ற விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்தி வந்து ஐதராபாத்தில் விற்பனை செய்வதாக நம் பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தெலுங்கானாவின் சிறப்பு படை போலீசார் மற்றும் கலால் துறை போலீசார் நேற்று விமான நிலையம் அருகே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர்.

    காரில் கஞ்சா போதை மாத்திரைகள், வெளிநாட்டு போதைப் பொருட்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    ×