search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • ஆனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார்.
    • குலாம் நபி ஆசாத் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின், தனிக்கட்சி தொடங்கினார். அவர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் அனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் போட்டியிடவில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக சலீம் பர்ரே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிபி கட்சி தலைவர் மெஹபூபா முப்தி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார்.

    "சில விசயங்களை குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார். அதன்பின் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என அக்கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் ஆசாத் கட்சி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் தைரியம் இருந்தால் தன்னை எதிர்த்து பாரமுல்லா தொகுதியில் போட்டியிடட்டும் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

    அதற்கு உமர் அப்துல்லாவை ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா பயணி என அழைத்தார். அவர் கோடைகாலத்தை லண்டனிலும், குளிர்காலத்தை வெப்பமான இடங்களிலும் கழிக்கிறார் என விமர்சித்திருந்தார்.

    • மோடி இவ்வாறு செய்திருந்தால் அவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
    • முகலாயர்கள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மன்னர்களை தோற்கடித்ததுடன் திருப்தி அடையவில்லை.

    ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதுவும் நவராத்திரி காலத்தின்போது இவ்வாறு செய்ததாக பா.ஜனதாவினர் கடுமையாக விமர்சித்தனர்.

    இந்துக்களால் மங்களகரமானதாகக் கருதப்படும் காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் "பா.ஜனதா மற்றும் கோடி மீடியாவை பின்தொடர்பவர்களுக்கான செயல்திறன் பரிசோதனை. இந்த வீடியோ நவராத்திரி தொடங்குவதற்கு முந்தையநாள் எடுக்கப்பட்டது" என விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இந்துக்களால் மங்களகரமானதாகக் கருதப்படும் காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியிட்டு மக்களை கேலி செய்ய விரும்புகின்றனர் என ராகுல் காந்தி, லாலு யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி, லாலு யாதவ் ஆட்டிறைச்சி சமைத்தது தொடர்பான வீடியோவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு நாட்டில் அதிகப்படியாக உள்ள மக்களின் உணர்வுகள் குறித்து கவலை இல்லை. சவான் மாத்தின்போது (இந்திய காலண்டரில் மக்களகரமான மாதம்), அவர்கள் குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று ஆட்டிறைச்சி சமைக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் வீடியோவை அப்லோடு செய்து நாட்டு மக்களை கேலி செய்கிறார்கள்.

    எதைச் சாப்பிடக் கூடாது என சட்டம் தடைபோடுவதில்லை. மாறாக மோடி இவ்வாறு செய்திருந்தால் அவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். முகலாயர்கள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மன்னர்களை தோற்கடித்ததுடன் திருப்தி அடையவில்லை. கோவில்களை அழித்ததோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. அவர்கள் அதை அனுபவித்தார்கள். அதேவழியில் சவான் மாதத்தில் வீடியோக்ளை அப்லோடு செய்து அவர்கள் முகலாயர்கள் காலத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்தி மக்களை கேலி செய்து அவர்களின் வாக்கு வங்கிகளை உயர்த்த முயற்சிக்கிறார்கள்.

    அதேவழியில் நவராத்தியின்போது (தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடும் வீடியோவை குறித்து) மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி யாரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? இப்படிச் சொன்னதற்காக இவர்கள் இப்போது என் மீது துஷ்பிரயோகங்களைப் பொழிவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் எல்லையை தாண்டும்போது எது சரி என்று மக்களுக்குச் சொல்வது ஜனநாயகத்தில் எனது கடமை. நான் எனது கடமையைச் செய்கிறேன்.

    அவர்கள் வேண்டுமென்றே நாட்டின் நம்பிக்கைகளைத் தாக்குவதற்காக இதைச் செய்கிறார்கள், இதனால் நாட்டின் பெரும்பகுதியினர் அவர்களின் வீடியோக்களைப் பார்த்து அசௌகரியம் அடைகின்றனர். அவர்கள் சமரச அரசியலை தாண்டி முகலாய சிந்தனைக்கு ஆதாரமாக உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது. ஆனால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
    • ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சி கண்டுவருவதுடன், அரசின் மீது மக்களின் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.

    பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்ததை தங்களது வாக்குறுதியை (370 சட்டப்பிரிவு நீக்கம்) நிறைவேற்றியதன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நான் கடந்த 50 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வந்துள்ளேன்.

    1992-ம் ஆண்டு ஏக்தா யாத்திரையின்போது லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்ததை திரும்பிப் பார்க்கிறேன். அப்போது நாங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றோம். 2014-ல் வைஷ்ணோ தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, பயங்கரவாதம் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து நிவாரணம் பெற்றுக் கொடுப்போம் என வாக்குறுதி வழங்கினோம். மக்களின் ஆசீர்வாதத்தால், வாக்குறுதியை நிறைவெற்றியுள்ளோம்.

    பல தசாப்தங்களுக்கு பிறகு பயங்கரவாதம், பிரிவினைவாதம், கல் எறிதல், போராட்டம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற அச்சம் இல்லாமல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது, ஆனால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கண்டுவருவதுடன், அரசின் மீது மக்களின் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.

    தயவுசெய்து என்னை நம்புங்கள், கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளை விடுவிப்பேன். எனது வாக்குறுதியை நிறைவேற்றிதன் மூலமாக கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் முழுவதுமாக மாறியுள்ளது.

    இந்தியா எதிர்கொண்டுள்ள சவால்களை சந்திக்க வலுவாக மத்திய அரசு அமைய பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போட்டியிடுகிறார். ஜம்முவில் ஜுகல் கிஷோர் போட்டியிடுகிறார். 

    • சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.
    • பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள்.

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஜம்மு பகுதியின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நாலா பகுதியில் நேற்று இரவு 10:30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்து தடையை ஏற்படுத்தி உள்ளது.

    இதைதொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHA) 144-ல் உள்ள சாலைகளில் பாறைகளை அகற்றும் பணி 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, இந்த பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    முன்னதாக மார்ச் 31-ம் தேதி, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 44, மேஹத் தல்வாஸ் மற்றும் கிஷ்த்வார் பதேர், ராம்பன் ஆகிய இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுத்தையை பிடிக்க முயன்றபோது கையில் இருந்து தடி நழுவி கீழே விழுந்தது.
    • தடியை எடுக்க முயற்சித்தபோது சிறுத்தை ஆக்ரோசத்துடன் தாக்கியது.

    மத்திய காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று திடீரென காட்டுப் பகுதியில் இருந்து ஊருக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரை கிராம மக்கள் அழைத்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததும், அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடிவு செய்தனர்.

    கம்பு தடியுடன் சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை ஒவ்வொரு வீடாக தாண்டி தப்பிக்க முயற்சித்தது. இறுதியாக ஒரு தெருவில் சிக்கிக்கொண்டது. அப்போது வன அதிகாரி ஒருவர் கிராம மக்கள் சிலருடன் தடியுடன் சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தார்.

    சிறுத்தை தப்பிக்கும் முயற்சியில் சீறிக் கொண்டே இருந்தது. அப்போது அதிகாரி கையில் இருந்து தடி கீழே விழுந்தது. சிறுத்தையிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு தடியை எடுக்க முயன்றார்.

    அப்போது சிறுத்தை அவர் மீது ஆக்ரோசத்துடன் பாய்ந்தது. அதிகாரி சிறுத்தையின் கழுத்தை ஒரு கையில் பிடித்த நிலையில், எதிர்பாராத விதமாக மற்றொரு கை சிறுத்தையின் வாயில் மாட்டிக் கொண்டது. இதனால் சிறுத்தை வாயில் இருந்து கையை எடுக்க முடியாமல் திணறினார்.

    அப்போது அருகில் நின்றிருந்த மற்றொரு அதிகாரி தடியால் சிறுத்தையை தாக்கினார். அந்த நேரத்தில் சிறுத்தையின் வாயில் இருந்து கையை எடுத்துக் கொண்ட அதிகாரி சிறுத்தையை கீழே சாய்த்தார். உடனடியாக ஊர் பொதுமக்கள் சிறுத்தையை பயங்கரமாக தாக்கினர்.

    பின்னர், சிறுத்தையை வனத்துறையினர் அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். சிறுத்தையுடன் தனி நபராக நின்று சண்டையிட்ட வனத்துறை அதிகாரியை கிராம மக்கள் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.
    • தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும்.

    தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஸ்ரீநகரின் தற்போதைய எம்.பி.யுமான பரூக் அப்துல்லா (86) தனது உடல் நலப் பிரச்சனை காரணமாக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பை அவரது மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.

    இதுகுறித்து உமர் அப்துல்லா கூறுகையில், " ஃபரூக் அப்துல்லா தனது உடல்நிலை காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அலி முகமது சாகர் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களிடம் அனுமதி பெற்றுள்ளார்.

    தற்போது அந்த தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும். டெல்லியில் மக்களின் குரலாக திகழும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் வெற்றிபெற வாக்காளர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
    • ஜம்மு காஷ்மீரின் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் அனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீரில் 3வது கட்டமாக மே 7-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அங்கு முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் , 2022-ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை தொடங்கினார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் குலாம் நபி ஆசாத் ரஜோரி மாவட்டம் அனந்தநாக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

    • கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள் என்றார் மெகபூபா முப்தி.

    ஸ்ரீநகர்:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

    கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேருகிறார்கள், அதன்பின் அவர்களுக்கு எதிராக எல்லாமே அழிக்கப்படுகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்பாவிகள்.

    பா.ஜ.க.வில் சேராதவர்கள், சிறைக்குச் செல்வோர் முற்றிலும் நிரபராதிகள்.

    தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. என தெரிவித்தார்.

    • நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில்,
    • செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்- அமித் ஷா

    ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (தீவிரவாத குற்றச்செயல் நடவடிக்கை குற்றச்சாட்டில் ஜெயிலில் இருக்கும் யாசின் மாலிக் தலைமையில் இயங்கி வந்த அமைப்பு), காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் மற்றும் இந்த அமைப்பில் இருந்து பிரிந்து செயல்படும் நான்கு அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, "நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில் செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (முக்தார் அகமகது வாஜா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (பாஷீர் அகமது டோட்டா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (குலாம் முகமது கான்), யாகூப் ஷேக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (அஜிஸ் ஷேக்) ஆகிய அமைப்புகளுக்கு தனித்தனியாக தடை செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மேலும், முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி சட்டவிரோதமான அமைப்பு என மேலும் ஐந்து வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமித் தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதம் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்த காரணத்திற்கான ஜம்மு-காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் அமைப்புக்கு ஐந்து வருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களையும், அமைப்புகளையும் மோடி அரசு காப்பாற்றாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார்.
    • பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றார்.

    அப்போது பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர். தற்போது இன்று அனைவருக்கும் சமமான உரிமை மற்றும் வாய்ப்புகளை பெற்றுள்ளோம். மக்களுக்கு உண்மை தெரியும்... அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். நாம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஜம்மு-காஷ்மீர் இது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த பரூக் அப்துல்லா "சட்டப்பிரிவு 370 மோசமானது என்றால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் எப்படி முன்னேற்றம் அடைந்தது.

    சட்டப்பிரிவு 370 இவ்வளவு மோசமாக இருந்தால், மாநிலங்களவையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இரண்டு மாநிலங்களை ஒப்பிட்டு பேசியதை பிரதமர் மீண்டும் கேட்க விரும்புகிறேன். சட்டப்பிரிவு 370 அமலில் இருந்தபோதுதான் குலாம் நபி ஆசாத் குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இடையிலான வளர்ச்சி குறித்து ஒப்பிட்டு பேசியுள்ளார்.

    தற்போாது சட்டப்பிரிவு மற்றும் வாரிசு அரசியல் பொறுப்பு என்றால், எப்படி வளர்ச்சி அடைந்தோம்? இது மக்களுடைய ஆட்சி. முதலமைச்சருக்கான தேர்தலில் தோல்வி அடைந்தேன். ஆகவே, வாரிசு ஆட்சி எங்கே இருக்கிறது?. வாரிசு ஆட்சி என்பதை நான் பொதுவாகவே பாராளுமன்றத்தில் கேட்டுள்ளேன். ஒவ்வொரு முறை பேசும்போதும், பிரதமர் மோடி இதன்மீது குறிப்பிட்ட தாக்குதலை வைக்கிறார்" என்றார்.

    • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு சென்றார்.
    • பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க. அரசால் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த மாதம் 20-ம் தேதி ஜம்முவுக்கு சென்று ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று காஷ்மீருக்கு சென்றார். பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஸ்ரீநகர் பாக்சி மைதானத்தில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம்-வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் உள்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புத்துணர்ச்சி, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டின் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோவில்கள், சாமுண்டீஸ்வரி திருக்கோவில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    உங்கள் நாட்டை பாருங்கள், மக்கள் தேர்வு 2024 மற்றும் இந்தியாவுக்கு செல்லுங்கள் எனும் உலக அளவிலான பிரசாரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

    ஜம்மு காஷ்மீரில் அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 பேருக்கு பணி நியமண ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

    • டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உள்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

    இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை சஸ்பெண்ட் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    ×