என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
- காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும்.
ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.
சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.
1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர்," ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை" என்றார்.
- வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
- 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியை கண்டது கிடையாது.
- முதன்முறையாக இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலின்போது, பல்வேறு மாவட்டங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்றது. அதன்வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதி உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாகும். இங்கு 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியே கண்டதில்லை. இதனால் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிர் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
- குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோனது. எனவே அவர்தான் காரை ஓட்டி வந்தாரா? என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளில் அவரது உருவம் கண்டறியப்பட்டு, அந்த காரில் அவர் சென்று வந்த இடங்கள் எல்லாம் ஆராயப்பட்டன. இவர்தான் வெடிப்பைச் செய்திருப்பார் என போலீசார் உறுதியாக நம்பினர். இருந்தாலும் டி.என்.ஏ. பரிசோதனையில் அதனை உறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உமர் முகமது ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்தவர். அங்கு அவருடைய தாயார் மற்றும் சகோதரரிடம் டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டன. அவை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
கார் வெடித்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட உமரின் உடல் பாகங்கள் என்று சந்தேகம் கொள்ளப்பட்ட பாகங்களுடன் மேற்கண்ட மாதிரிகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இந்த பரிசோதனையில் இரண்டும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்திப்போனது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டது உமருடைய உடல் பாகங்கள்தான் என கண்டறியப்பட்டது.
இதனால் கார் வெடிப்பை நிகழ்த்தியது அவர்தான் என்பது உறுதியானது. பயங்கரவாதியாக அவர் மாறி இருக்கிறார். இதுபற்றி மேலும் விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர். இதற்காக உமர் முகமது, முசமில் ஷகீல், ஷாகீத் ஷாகீன் மற்றும் அதீல் அகமது ராதர் ஆகியோர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி உள்ளனர். இது உமர் முகமதுவிடம் கொடுத்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்த பணத்தில் ரூ.3 லட்சம் மதிப்புக்கு 2 டன் அமோனியம் நைட்ரேட்டை உரக்கடைகளில் வாங்கி உள்ளனர். குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது. பணத்தை வைத்திருப்பது தொடர்பாக உமர் அகமதுவுக்கும், முசமிலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் அமைந்துள்ள உமர் முகமதுவின் வீடு இடிக்கப்பட்டுள்ளது.
- குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த 7-ந் தேதி முதல் ஆபரேஷன் பிம்பிள் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதன் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
- வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை.
- அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. 4 இடங்களுக்கான தேர்தலில் உமர் அப்துல்லாவின் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு வெற்றி பெற 4 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அந்த 4 பேரும் எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்திருந்தனர். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதால், 4 பேரும் பாஜக-வுக்கு வாக்களித்துவிட்டனர் என தோல்வியடைந்த தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் நபி தார் கூறுகையில் "வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை. அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர். அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் 32 வாக்குளை பெற்றனர்?. இதன்மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது தெளிவாகிறது" என்றனர்.
வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர் "காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட முடிவு நிராகரிக்கப்பட்டுள்ளது" என்பதை காட்டுகிறது" என்றார்.
- பாஜக அல்லாத அரசு இருந்தால் மாநில அந்தஸ்து கிடையாது என்றால் பாஜக அதை சொல்ல வேண்டும்.
- பாஜக உடன் மற்றவர்கள் கூட்டணி அமைத்ததால் மாநிலம் சீரழிந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை விரைவுப்படுத்தும் நோக்கத்தில் பாஜக-வுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரித்து இரண்டையும் யூனியன் பிரதேசமாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு உறுதி அளித்தபோதிலும், வழங்காமல் இழுத்தடிக்கிறது.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மாநில அந்தஸ்துக்காக பாஜக உடன் கூட்டணி வைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அளித்த வாக்குறுதிகளிலும் ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வருவதைப் பொறுத்து மாநில அந்தஸ்து சார்ந்துள்ளது என்று ஒருபோதும் கூறவில்லை.
ஒருவேளை ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசு இருந்தால், மீண்டும் மாநில அந்தஸ்து இல்லை என்றால், பாஜக நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசாங்கம் இருக்கும் வரை, உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று அவர்கள் எங்களிடம் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை முடிவு செய்வோம்.
தேசிய மாநாடு கட்சி, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது. 2015ஆம் ஆண்டு பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சியமைத்ததில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் இன்னும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த கூட்டணியில் ஜம்மு-காஷ்மீர் எப்படி சீரழிந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்கள் செய்த தவறை மீண்டும் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
- சந்தையில் அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
- போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வணிகக் கட்டிடங்கள் சேதமடைந்தன
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தன.
நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
- பயங்கரவாதிகளை தேடும்போது திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயம்.
- இந்த இடத்தில் இரண்டு முறை எனகவுண்டர் நடைபெற்றுள்ளது.
பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வந்த இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் மாயமான நிலையில், அவர்கள் தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோகேர்நாக்கில் உளள் அஹ்லான் கடோல் என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இரண்டு வீரர்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானார்கள். இருவரையும் தேடும் பணியில் ஹெலிகாப்டர் உட்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அஹ்லான் கடோல், பயங்கரவாதத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் 2024 ஆகிய இரண்டு முறை பெரிய அளவில் என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.
கடந்த வரும் நடைபெற்ற சண்டையில் இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் கொல்லப்பட்டனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்ரவாதிகளை தேடும்போது இரண்டு அதிகாரிகள் உள்பட நான்கு வீரர்கள், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.
- லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த ஆயுதங்களை பகுப்பாய்வு செய்ததில், பயங்கரவாதிகளுக்கு குல்காமில் வசித்து வரும் 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா தடவாள உதவிகள் செய்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் கட்டாரியாவை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். ஒப்பந்த வேலையில் பணிபுரிந்து வந்த நிலையில், உள்ளூர் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வந்த கட்டாரியா, சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் இயக்கங்களுக்கு உதவத் தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.






