கடும் பனிப்பொழிவு எதிரொலி - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 50 விமானங்கள் ரத்து

விமான நிறுவனங்கள் இன்று பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு மேலும் 4 விமானங்கள் வர திட்டமிடப்பட்டிருந்தன.
கடும் பனிப்பொழிவு எதிரொலி - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 50 விமானங்கள் ரத்து
Published on

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரி கூறுகையில்,

பாதகமான வானிலை மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுவதால், விமான நிறுவனங்கள் இன்று பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.

பனிப்பொழிவு காரணமாக இதுவரை சுமார் 50 விமானங்கள் - 25 உள்வரும் மற்றும் 25 வெளிச்செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு மேலும் 4 விமானங்கள் வர திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவை இயக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறினார்.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், வார இறுதி மற்றும் குடியரசு தின விடுமுறைக்கு காஷ்மீர் வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com