என் மலர்
நீங்கள் தேடியது "Srinagar"
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX-2564 இன்று மதியம் டெல்லியில் இருந்து புறப்பட்டது.
- இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்காமல் மீண்டும் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX-2564 இன்று மதியம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. அட்டவணையின்படி, விமானம் ஸ்ரீநகருக்குச் செல்வதற்கு முன்பு ஜம்முவில் நிறுத்தப்பட இருந்தது.
இருப்பினும், ஜம்மு விமான நிலையத்திற்கு மேல் வந்த பின், விமானி சிறிது நேரம் தரையிறங்காமல் வானிலேயே சுற்றிய விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜிபிஎஸ் சிக்னல் பிரச்சினை காரணமாக, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.
பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக டெல்லியை அடைந்துவிட்டதாகவும், அவர்களுக்கான கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
- ஆபரேஷன் சிந்தூரை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
- பூஞ்ச், ரஜோரி பகுதிகள் பாகிஸ்தான் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அதனைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையை 7ஆம் தேதி நள்ளிரவு மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மதியம் வரை இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் வாழும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்துடன் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா முறியத்ததுடன், கடுமையான பதிலடி கொடுத்தது.
குறிப்பாக 7ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒரு ராணுவ வீரர், 4 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், பூஞ்ச், ரஜோரி பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.
இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது. குழு வருகிற 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறது.
இந்த குழுவில் தெரிக் ஓ'பிரையன், சகாரியா கோஸ், முகமது நதிமுல் ஹக் ஆகிய எம்.பி.க்கள் மற்றும் மேற்கு வங்க மாநில அமைச்சர் மனாஸ் புனியா, முன்னாள் எம்.பி. மமதாக தாகூர் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர்.
மம்தா பானர்ஜியின் வழிகாட்டுதலின்படி ஐந்து பேர் கொண்ட குழு ஸ்ரீநகர், பூஞ்ச், ரஜோரி செல்லும் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகிறது.
ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தலைப்புகளில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பின் அங்கமாக கடற்படை கமாண்டோக்கள், தேசிய பாதுகாப்பு படையினர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா மாநாடு ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இந்த பகுதியை மார்கோஸ் என்று அழைக்கப்படும் கடற்படையினர் தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளனர். நாடு முழுக்க இதுபோன்று 118 கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. சுற்றுலா தலைப்பில் மூன்றாவது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே இதை தலைப்பில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஸ்ரீநகரில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த 60 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆண்டு பாஜக கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பின் திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் நடைபெறும் முதல் சர்வதேச நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு சென்றார்.
- பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க. அரசால் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த மாதம் 20-ம் தேதி ஜம்முவுக்கு சென்று ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று காஷ்மீருக்கு சென்றார். பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஸ்ரீநகர் பாக்சி மைதானத்தில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம்-வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் உள்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புத்துணர்ச்சி, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டின் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோவில்கள், சாமுண்டீஸ்வரி திருக்கோவில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
உங்கள் நாட்டை பாருங்கள், மக்கள் தேர்வு 2024 மற்றும் இந்தியாவுக்கு செல்லுங்கள் எனும் உலக அளவிலான பிரசாரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 பேருக்கு பணி நியமண ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
- ஞாயிறு சந்தையில் பயங்கரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியுள்ளனர்.
- இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் வார சந்தையில் கையெறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் அமைத்துள்ள சுற்றுலா மையத்தின் அருகே உள்ள ஞாயிறு சந்தையில் பயங்கரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியுள்ளனர்.
இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று இந்த தாக்குதலானது நடந்துள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் முன்பைவிட தற்போது பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக நேற்றைய தினம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியது குறிப்பிடத்தக்கது.
- காசிகுண்ட் நகரில் பனிப்பொழிவைத் தொடர்ந்து 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.
- ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நேற்று [வெள்ளிக்கிழமை] தொடங்கியுள்ளது.
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, இதில் தெற்கு காஷ்மீர் மற்றும் மத்திய காஷ்மீரின் சமவெளிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது.

தலைநகர் ஸ்ரீநகரில் சுமார் 8 [இன்ச்]அங்குல பனிப்பொழிவு பதிவாகியுள்ளது, கந்தர்பால் மற்றும் சோனாமார்க்-இல் 7-8 அங்குலங்கள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் உள்ள ஜோஜிலா ஆக்சிஸில் 15 அங்குல பனியும், அனந்த்நாக் மாவட்டத்தில் 17 அங்குலங்கள் வரை பனிப்பொழிவும் பதிவாகியுள்ளன.

பஹல்காம், புல்வாமா, ஷோபியான் மற்றும் பிற பகுதிகளிலும் கணிசமான பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.
பனிப்பொழிவு தொடர்ந்து பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் நகரில் நேற்று பனிப்பொழிவைத் தொடர்ந்து சுமார் 2,000 வாகனங்ள் நெரிசலில் சிக்கின.

போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டது. ஸ்ரீநகர் வரும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, இன்று [சனிக்கிழமை] சுமார் 80% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே இமாச்சலப் பிரதேசத்தின் குலு[ Kullu] பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான சோலாங் நாலாவில் பனிபொழிவால் சிக்கித் தவித்த சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் நேற்று மீட்கப்பட்டனர்.
லாஹவுல்-ஸ்பிடி, சம்பா, காங்க்ரா, குலு, சிம்லா மற்றும் கின்னவுர் உள்ளிட்ட மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் நேற்று [வெள்ளிக்கிழமை] கடுமையான மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் போர் விமானியான சென்னை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி தனது விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுடப்பட்டதால் விமானத்தில் இருந்து வெளியேறி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் கடந்த 1-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தது.
அவர் நாடு திரும்பியதும் டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ சோதனைகள், ராணுவ விளக்க நடவடிக்கைகளுக்கு பின்னர் 12 நாட்களுக்கு முன்பு 4 வாரங்கள் விடுமுறையில் வீட்டுக்கு செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மருத்துவ குழு உடல் தகுதி பரிசோதனை நடத்தியது. பின்னர் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை தங்களிடம் சரணடைந்துவிடும் படி போலீசார் எச்சரித்தனர். மாறாக பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 3 ராணுவ வீரர்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இதே போல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அப்போது ராணுவ வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.
மற்றொரு சம்பவமாக தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.
இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. #JKEncounter #MilitantKilled
ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருள்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 2 கிலோ அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஹெராயின் பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, ஹெராயின் கடத்தியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #Heroin #JammuKashmir






