search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srinagar"

    • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு சென்றார்.
    • பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க. அரசால் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த மாதம் 20-ம் தேதி ஜம்முவுக்கு சென்று ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று காஷ்மீருக்கு சென்றார். பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஸ்ரீநகர் பாக்சி மைதானத்தில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம்-வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் உள்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புத்துணர்ச்சி, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டின் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோவில்கள், சாமுண்டீஸ்வரி திருக்கோவில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    உங்கள் நாட்டை பாருங்கள், மக்கள் தேர்வு 2024 மற்றும் இந்தியாவுக்கு செல்லுங்கள் எனும் உலக அளவிலான பிரசாரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

    ஜம்மு காஷ்மீரில் அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 பேருக்கு பணி நியமண ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

    • சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகிறது.

    ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தலைப்புகளில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பின் அங்கமாக கடற்படை கமாண்டோக்கள், தேசிய பாதுகாப்பு படையினர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுற்றுலா மாநாடு ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இந்த பகுதியை மார்கோஸ் என்று அழைக்கப்படும் கடற்படையினர் தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளனர். நாடு முழுக்க இதுபோன்று 118 கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. சுற்றுலா தலைப்பில் மூன்றாவது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற இருக்கிறது.

    ஏற்கனவே இதை தலைப்பில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஸ்ரீநகரில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த 60 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆண்டு பாஜக கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பின் திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் நடைபெறும் முதல் சர்வதேச நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

    இதில் பாரமுல்லா, ஜம்மு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    2-வது கட்டமாக ஸ்ரீநகர், உத்தம்பூர் ஆகிய 2 தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காஷ்மீர் மக்கள் ஓட்டு போடுவதை விரும்பவில்லை. ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீதமே ஓட்டு பதிவாகி இருந்தது.

    95 தொகுதிகளுக்கு நேற்று 2-வது கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஸ்ரீநகரில் தான் மிகவும் குறைவான வாக்கு பதிவாகி இருந்தது. தலைநகர் ஸ்ரீநகரில் இவ்வளவு மோசமாக ஓட்டுப்பதிவாகி இருந்தது.

    ஆனால் உத்தம்பூர் தொகுதியில் 70.2 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.

    காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 45.7 (இரண்டு தொகுதி யிலும் சேர்த்து) ஓட்டுப்பதி வானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    மேற்கு வங்காள மாநிலம் ஐல்பைகுரி தொகுதி யில்தான் அதிகபட்சமாக 82.26 சதவீத ஓட்டுப்பதிவானது.  #LokSabhaElections2019
    இந்திய விமானப்படையின் போர் விமான வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Abhinandan #IAFPilot
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் போர் விமானியான சென்னை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி தனது விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுடப்பட்டதால் விமானத்தில் இருந்து வெளியேறி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் கடந்த 1-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தது.

    அவர் நாடு திரும்பியதும் டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ சோதனைகள், ராணுவ விளக்க நடவடிக்கைகளுக்கு பின்னர் 12 நாட்களுக்கு முன்பு 4 வாரங்கள் விடுமுறையில் வீட்டுக்கு செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மருத்துவ குழு உடல் தகுதி பரிசோதனை நடத்தியது. பின்னர் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் காயமடைந்தனர். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் இன்று வாகனத்தில் ரோந்து சென்றனர். பந்தா சவுக் பகுதியில் வரும்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தபபிச் சென்றனர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வாகனத்தில் இருந்த 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #MilitantsAttack
    காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் ராணுவவீரர்கள் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை தங்களிடம் சரணடைந்துவிடும் படி போலீசார் எச்சரித்தனர். மாறாக பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.



    இதில் 3 ராணுவ வீரர்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

    இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அப்போது ராணுவ வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.

    மற்றொரு சம்பவமாக தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.

    இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. #JKEncounter #MilitantKilled
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் எனப்படும் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். #Heroin #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருள்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 2 கிலோ அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இந்த ஹெராயின் பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, ஹெராயின் கடத்தியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #Heroin #JammuKashmir
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் அருகே இன்று பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kashmir #Batamaloo
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள பாடாமாலோ என்ற பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு ஆபரேஷனை பாதுகாப்பு படையினர் இன்று தொடங்கியுள்ளனர். சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக அம்மாநில போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.

    மேலும், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாராமுல்லா மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை வாகனம் மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #SecurityForce #MilitantAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பட்மலூ பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பாதுகாப்பு படை வாகனங்களை வழிமறைத்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.



    பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரது உயிர் வரும்வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #SecurityForce #MilitantAttack
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காணாமல் போன ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாதியாக மாறி, ஆயுதங்களுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ஷம்சுல் ஹக் என்பவர் கடந்த மே மாதம் காணாமல் போனாதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷம்சுல் ஹக்கை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தபடி, ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் ஷம்சுல் ஹக் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஷம்சுல் ஹக், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் மே மாதம் 22-ம் தேதி இணைந்ததாக அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்துடன் இணைவது இயல்பான ஒன்றாக கருதப்பட்டாலும், ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்க இருந்த பேரணியை தடுப்பதற்காக பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். #JammuKashmir #YaseenMalik
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் அப்பாவி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. இதனை கண்டித்து அம்மாநிலத்தில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் உட்பட பல தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக், ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பேரணி நடக்க இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த பேரணியை தடுக்கும் வகையில், காவல்துறையினர், யாசின் மாலிக்கின் இல்லத்தில் வைத்து இன்று காலை அவரை கைது செய்தனர்.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்காக யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர்கள் சையது அலி ஷா ஜிலானி, மிர்வாயிஸ் மவுலவி உமர் பாரூக் மற்றும் மாலிக் ஆகியோர் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதை கண்டித்தும், காரணம் இன்றி இளைஞர்களை கைது செய்ததை எதிர்த்தும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #YaseenMalik
    ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சுட்டில் படுகாயமடைந்த ஆசிரியரின் 2-வது பாதுகாவலரும் உயிரிழந்தார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.

    நேற்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.



    இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பத்திரிகை ஆசிரியரின் இரண்டாவது பாதுகாவலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
    ×