என் மலர்
நீங்கள் தேடியது "விமானங்கள் ரத்து"
- தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
- விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் இன்று காலையில் இருந்து இரவு வரையில் இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல், தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
- ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றது. மோன்தா புயல் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து தமிழகத்தைவிட்டு சற்றே விலகி சென்றது.
ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கி.மீ., காக்கிநாடாவில் இருந்து 310 கி.மீ. தூரத்தில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் காரணமாக காலை 5.30 மணி வரை 8 இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.
மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரா உள்ளிட்ட 12 இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தது.
பாரீஸ்:
பிரான்சில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
- விமானங்கள் திடீர் ரத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
- விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல இருந்த 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விமானங்கள் திடீர் ரத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
ஆனால், நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
- நேற்று 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூா்' நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகா் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் நேற்று 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட், பிகானீா், குவாலியா் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் இருந்து புறப்படும், வந்தடையும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஏா்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை 10-ந் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இன்று 400 விமான சேவை முடங்கியது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 5.29 மணி வரை 27 விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 850 விமான சேவைகள் முடங்கும் நிலை உள்ளது.
- பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
- மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.
அதன்படி பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.
அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த விமானங்கள் ஐதராபாத்திற்கு திரும்பி சென்றன. சிங்கப்பூர், இந்தூர், மும்பை, துபாய், தோகா உட்பட 14 விமானங்கள் அவ்வாறு திரும்பி சென்றன.
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூரு, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் என மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் ஆகும்.
நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை பெங்களூரு மற்றும் ஐதராபாத் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலையில் இருந்து, ஒன்றின்பின் ஒன்றாக சென்னை வர தொடங்கி உள்ளன. மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
- அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது.
- குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் பனி கொட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பனிப்புயலால் நியூயார்க், பென்சில்வேனியா, ஒரேகான், நெவாடா, இடாஹோ, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வயோமிங், கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்புயல் காரணமாக சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.
இதனிடையே பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், இன்னும் சில விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
- சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் ஐதராபாத்தில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்து வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 2 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, அதிகாலை 3.15 மணிக்கு, இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். அந்த இரு விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு காரணம் இரவு நேரம் கடுமையான குளிர் நிலவுகிறது. எனவே இரவு விமானங்களிலும், அதிகாலை விமானங்களிலும், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல் நேற்று இரவு ஐதராபாத் மற்றும் கொல்கத்தா செல்ல வேண்டிய 2 விமானங்களும், இன்று அதிகாலை ஐதராபாத், கொல்கத்தா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து புறப்பாடு, வருகை ஆகிய 6 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெரிய ரக விமானங்கள் அதற்குத்தகுந்த, பயணிகள் எண்ணிக்கை இல்லாமல், மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், விமானங்களை காலியாக இயக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். ஜெர்மனி வழியாக செல்லும் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர். விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளது.
- சென்னையில் இருந்து தினமும் மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.
சென்னை:
கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கோ பர்ஸ்டின் அனைத்து விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கோ ஏர் விமானங்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து இந்த விமான நிறுவன விமானங்கள் மும்பை, கேரளா, அந்தமான் ஆகிய மாநிலத்திற்கு விமானங்களை இயக்குகிறது.
சென்னையில் இருந்து தினமும் மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.
கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளதால் சென்னையில் இருந்து மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் மற்ற விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேபோல் 'கோ பர்ஸ்ட்' விமானங்கள் செல்லும் மற்ற மாநிலங்களில் இருந்து அதன் வழித்தடத்தில் உள்ள நகரங்களுக்கு விமான கட்டணத்தை மற்ற விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
- விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தன.
லடாக்கில் உள்ள லே விமான நிலையத்தில். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையின் நடுவில் நின்றுவிட்டது. அந்த விமான நிலையத்தில் ஒரே ஒரு ரன்வே மட்டுமே இருப்பதால் வேறு எந்த விமானத்தையும் இயக்க முடியாத நிலை உருவானது. எனவே, அங்கிருந்து புறப்படும் மற்றும் வரக்கூடிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
நிலைமையை சரி செய்யவும், திட்டமிட்டபடி நாளை விமானங்களை இயக்கவும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இதுபற்றி அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும் என்றும் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும், முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு விமான சேவைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளன.
- துபாயில் இருந்து சென்னை வரும் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்தது.
- விமானங்கள் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.
சென்னையில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கன மழை கொட்டியது. நேற்று இரவும் பலத்த மழைபெய்தது. இதனால் வானிலை மோசமாக இருந்ததால் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து இன்று அதிகாலை 2.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இன்று அதிகாலை 3.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கைக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானமும், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் சென்னையில் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு கொழும்பு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:05 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஆகியவை மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன.
லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், அபுதாபியில் இருந்து சென்னை வரும் பயணிகள் விமானம், துபாயில் இருந்து சென்னை வரும் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த விமானங்கள் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.






