என் மலர்
நீங்கள் தேடியது "Ryanair flight"
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தது.
பாரீஸ்:
பிரான்சில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
- விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும்.
- பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
லண்டன்:
விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
இதற்கு விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு சுமார் ரூ.60,000 அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான ரியானேர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
- ஜெர்மனியில் நடுவானில் சென்றபோது விமானம் குலுங்கியது.
- இதனால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெர்லின்:
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து ரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்தனர்.
நடுவானில் சென்றபோது பலத்த புயல் காற்று வீசியது. அப்போது விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் இருக்கை மீது மோதினர்
இதனால் பீதியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து, விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி பவேரியாவின் மெம்மிங்கன் விமான நிலையம் அருகே விமானம் வட்டமிட்டது. பின்னர் விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் 185 பேரும் உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்தில் பணியாளர் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து பவேரியா விமான நிலையத்தில் இருந்து விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. எனவே பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பூயர்டென்தூரா நகரத்துக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவர் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.
அந்த இளம்பெண்ணுடன் வந்திருந்த நண்பரும், விமான ஊழியர்களும் அவரை கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் இளம்பெண் தொடர்ந்து ரகளை செய்தார்.
இதையடுத்து விமானம் ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த கேனரி தீவு போலீசார் விமானத்தில் ஏறி, மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அப்போது பயணிகள் அனைவரும், கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இளம்பெண் இறக்கிவிடப்பட்ட பின்னர், விமானம் பூயர்டென்தூரா நகரத்துக்கு புறப்பட்டு சென்றது.






