search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea turbulence"

    • 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி மீன்பிடிக்க சென்றபோது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதே போன்று கடந்த மாதம் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப் படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

    64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

    இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற மீனவர்கள் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதனையடுத்து 5 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை முதல் ராமேசுவரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம் துறைமுகம் மீண்டும் பரபரப்பானது. ஆனாலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று குறைந்த அளவே மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை பரமக்குடி, திருவாடானை, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    தனுஷ்கோடியில் எப்போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இன்று பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்புகிறது. இதன் காரணமாக நாட்டுப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
    ராமேசுவரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் மலையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் உள்மாவட்டங்களிலும் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.

    தெற்கு அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக தனுஷ்கோடியில் எப்போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். நேற்றும், இன்றும் பலத்த சூறாவளி வீசுகிறது.

    இதனால் வழக்கத்தை விட தனுஷ்கோடியில் கடல் சீற்றம் இன்னும் அதிகமாக உள்ளது. பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்புகிறது. இதன் காரணமாக நாட்டுப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

    முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் சாலைகள் மணலால் முழுவதும் மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கடல் சீற்ற ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குகின்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் லட்சுமணன் தீர்த்தம் தெரு தெப்பக்குளம் அருகில் பனைமரம் முறிந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடிய, விடிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    ×