search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம்"

    • விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று (ஜூலை 24) காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் போக்கராவுக்கு செல்ல டேக் ஆஃப் ஆகும் போது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் ஊழியர் குழு உள்பட 19 பேர் இருந்தனர்.


    இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்துக் களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அனைத்து பயணிகளுக்கும் போதுமான உணவு, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
    • 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது.

    டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் (ஏ.ஐ.183) திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்கள் இருந்தனர். இதற்கிடையே ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறொரு விமானத்தில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மும்பை விமான நிலையத்தில் மாற்று விமானம் (ஏ.ஐ.1179) ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தது. அதில் அனைத்து பயணிகளுக்கும் போதுமான உணவு, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

    அந்த விமானம், 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. இது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, ஏ.ஐ.183 விமான பயணிகளுடன் ஏர் இந்தியா மீட்பு விமானம் ஏ.ஐ.1179 கிராஸ்நோ யார்ஸ்கில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது. ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கிராஸ்நோயார்ஸ் விமான நிலைய அதிகாரிகள், விமான போக்குவரத்துக்கான ரஷிய கூட்டாட்சி நிறுவனம் பயணிகளுக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.

    • கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.
    • மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார்.

    டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது.

    ஜூலை 2 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த விமானத்தில் 56 வயதான பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், மயக்கமடைந்துள்ளார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த, கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.

    அப்போது அவரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லாததால், மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியோடு, அவருடைய இதயத்துடிப்பைச் சோதனை செய்தார். மேலும் எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையையும் செய்தார்.

    அப்போது அப்பெண்ணின் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததையும், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததையும் அவர் கண்டுபிடித்தார். பின்னர் விமானத்தில் இருந்த மருந்துகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார்.

    விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "மருத்துவர்கள் மருத்துவருக்கான அடையாள அட்டையுடன் விமானத்தில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவருக்கு நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். அடையாள அட்டை இல்லாவிட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என்று மருத்துவ அடையாளத்தின் முக்கியத்துவத்தை மருத்துவர் குருட்டுகுலம் விவரித்தார்.

    • விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர்.
    • விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தது.

    மாட்ரிட்:

    சமீப காலமாக நடுவானில் விமானம் குலுங்கும் சம்பவங்கள் தொடர்கதை போல நடந்து வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டிலும் இது போன்ற ஒரு விபத்து விமான பயணிகளை அதிர்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் இருந்து உருகுவே தலைநகர் மாண்டி வீடியோவுக்கு ஏர் யுரோபா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்த போது திடீரென பயங்கரமாக குலுங்கியது. விமானம் அங்கும், இங்கும் ஆடியதால் பயணிகள் அலறினர். சிலர் இருக்கையை கெட்டியாக பிடித்து கொண்டனர். சீட் பெல்ட் அணியாத பயணிகள் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை கதறி அழுதது.

    ஒரு பயணி விமானத்தின் மேற்பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் மேல் பகுதியை பிடித்து கொண்டு தொங்கினார். அவரை சக பயணிகள் கீழே இழுத்து மீட்டனர். இந்த சம்பவத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.


    இந்த சம்பவத்தையடுத்து விமானம் வடகிழக்கு பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தது. பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக ஏர் யுரோபா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாகவும், காயம் அடைந்த பயணிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    • மன்ப்ரீத் கவுர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார்.
    • காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    24 வயதான இந்திய வம்சாவளி பெண்ணான மன்ப்ரீத் கவுர் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார். படிக்கும் போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எறியுள்ளார். ஆனால் விமானத்தில் ஏறி அவள் சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

    காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. காசநோய் நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரெஷரைசேஷன் சிஸ்டம் என்ற இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
    • நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கீழே சரிந்தது.

    கொரியன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சியோலின் இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தைவானில் உள்ள டைசுங் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி, மாலை 4.45 மணிக்கு விமானம் புறப்பட்டது.

    விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் விமானத்தின் காற்றோட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும் பிரெஷரைசேஷன் சிஸ்டம் (pressurization system) என்ற இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் 15 நிமிடங்களில் 26,900 அடி கீழே சரிந்தது. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கீழே சரிந்ததால், அதில் பயணம் செய்தவர்கள் அலறினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பயணிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதை தவிர்க்க விமானத்தில் இருந்த ஆக்சிஜன் முகக்கவசங்கள் விடுவிக்கப்பட்டன. பயணிகள் முகக்கவசங்களை அணிந்து கொண்டதால், அவர்களுக்கு ஏற்பட இருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து விமானம் டைசுங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து விமானத்தில் பயணம் செய்த 17 பயணிகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாத காரணத்தால் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொரியன் ஏர் சார்பில் பயணிகளிடம் மன்னிப்பு கோரப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் அனைத்து வகை விசாரணைக்கும் தயார் என்றும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    • 'இந்து மீல்ஸ்', ‘இஸ்லாமியர் மீல்ஸ்' அப்படி என்றால் என்ன?
    • ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா?

    ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவு பட்டியலில் 'இந்து மீல்ஸ்', 'இஸ்லாமியர் மீல்ஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்து மீல்ஸ்', 'இஸ்லாமியர் மீல்ஸ்' அப்படி என்றால் என்ன? ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா? இதுகுறித்து இந்திய விமான போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு ப்ளேடு இருந்ததாக வந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "இந்திய விமான போக்குவரத்துத்துறை ஏன் அமைதியாக உள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

    • விமானங்களில் நடந்த திருட்டு குறித்து ஐதராபாத் விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • பயணிகளிடம் நகை, விலை உயர்ந்த பொருட்கள் திருடியது தெரியவந்தது.

    திருப்பதி:

    டெல்லியைச் சேர்ந்தவர் ராகேஷ் கபூர், ஐதராபாத்-டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் பிற நகரங்களுக்கு இடையே உள்ளூர் உள்நாட்டு விமானங்களில் அடிக்கடி பயணம் செய்தார்.

    ராகேஷ், விமானத்தில் பயணித்த பெண்களை அடையாளம் கண்டு, தன்னுடன் எடுத்துச் சென்ற தோள் பையை பெண் பயணிகளின் கைப்பைகளுக்கு அருகில் வைத்திருந்தார்.

    "பயணத்தின் போது, பெண்கள் கழிவறைக்குச் செல்லும்போதெல்லாம், ராகேஷ் அவர்களின் பைகளைத் திறந்து, நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடினார்.

    விமானங்களில் நடந்த திருட்டு குறித்து ஐதராபாத் விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை போலீசார் சரிபார்த்து, ராகேஷ் கபூரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து விசாரித்ததில் விமானங்களில் அவர் பயணிகளிடம் நகை, விலை உயர்ந்த பொருட்கள் திருடியது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவருடைய கூட்டாளி தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    "இதுவரை ராகேஷ் 100 நாட்களில் 200 விமானங்களில் பயணம் செய்துள்ளார், கிட்டத்தட்ட எல்லா விமானங்களிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது ஐதராபாத் மற்றும் ரச்சகொண்டாவில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன "என்று போலீசார் கூறினர்.

    • விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஹவாய் தீவில் உள்ள ஹோன்லுலுவில் இருந்து லிஹூவிற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அதிபயங்கர விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2786 விமானமான போயிங் 737 மேக்ஸ் 8 போதிய வெளிச்சமின்மை காரணமாக தரையிறங்குவதை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவு காரணமாக கடல் பகுதியின் மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் நொடிகளில் பலநூறு அடிகள் கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அலறினர். எனினும், விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தி அதனை சட்டென மேலே உயர்த்தினர்.

    இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    • நாய்களுக்கு பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.
    • நாய்களுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

    நாய்கள் விமானம் பயணம் செய்வதற்கான புதிய ஆடம்பர விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. பார்க் ஏர் என அழைக்கப்படும் புதிய விமான சேவை மே 23 ஆம் தேதி துவங்கியது. நியூ யார்க்-இன் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் நாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.

    "முந்தைய விமான பயணத்தை போன்று, இந்த நாய்களை யாரும் குறைத்து மதிப்படவோ அல்லது கார்கோ போன்றோ நடத்தவில்லை. மேலும், இவைகள் மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொல்லையாகவும் இருக்கவில்லை. இங்கு, நாய்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு வசதியும், நாய்களுக்கு சவுகரியமாக இருக்குமா? என்ற அடிப்படையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன," என்று பார்க் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாய்கள் பயணிக்கும் இந்த விமானத்தில், அவைகளுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம். தற்போது முதற்கட்டமாக இந்த சேவை நியூ யார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே, ஒருவழி மற்றும் இருவழி பயணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயணத்திலும் 15 நாய்களும், அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

    சவுகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு பயணத்தில் அதிகபட்சம் 10-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விமானத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 6 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 என்றும் சர்வதேச பயணத்திற்கு 8 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    135 பயணிகளுடன் டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்க புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் டெல்லியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று காலை 10.30 மணிக்கு விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் 30 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமான எஞ்சினில் பறவைகள் மோதியுள்ளன. எஞ்சினில் பறவைகள் மோதியதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இந்த சம்பவம் காரணமாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பறவைகள் எஞ்சினில் மோதும் போது, இவ்வாறு அவசரமாக தரையிறக்கும் நடைமுறை சாதாரணமானது தான் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டதை அடுத்து இன்று மதியம் 12.20 மணிக்கு லே நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் லே விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார்.
    • பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், தோனி தனது பெட்டியை மேல் உள்ள ரேக்கில் வைத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது. சக பயணிகள் டோனியை தங்கள் போன் கேமராக்களில் படம்பிடித்து அவரின் எளிமையை கைதட்டி வரவேற்றனர்.

    தொடர்ந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் டோனியின் எளிமையை மெச்சி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆர்சிபி உடனான ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் ஆர்சிபி அணியினருக்கு டோனி கை கொடுக்காமல் மைத்தனத்தில் இருந்து சென்றது சர்ச்சையான நிலையில் அந்த களங்கத்தைப் போக்கும் வகையில் இந்த வீடியோவைப் பகிர்ந்து டோனியின் நற்பண்புகளை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் 6 ஆம் கட்ட தேர்தலான இன்று ( மே 250 பீகார் மாநிலம் ராஞ்சியில் டோனி வாக்களித்து குறிப்பிடத்தக்கது.

     

    ×