search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம்"

    • விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி விமானி விமானத்தை மீண்டும் சென்னையில் தரையிறக்கினார்.
    • மாலை 3.54 மணிக்கு புறப்பட்ட விமானம், மாலை 4.28 மணிக்கு மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.

    சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி புறப்பட்ட விமானத்ம் நடுவானில் பறந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

    இதனை சரியான நேரத்தில் கண்டறிந்த விமானி, விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது என உணர்ந்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர், விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி விமானி விமானத்தை மீண்டும் சென்னையில் தரையிறக்கினார்.

    மாலை 3.54 மணிக்கு புறப்பட்ட விமானம், மாலை 4.28 மணிக்கு மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.

    நடுவானில் விமானம் பறந்தபோது, விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், 162 பேர் உயிர் தப்பினர்.

    சம்பந்தப்பட்ட விமானத்தில் 154 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 162 பேர் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.
    • போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    ஸ்பேஸ்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் முன்மாதிரி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. ராக்கெட் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் மெக்சிகோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க வலியுறுத்தப்பட்டன.

    ஸ்டார்ஷிப் விண்ணில் ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் கட்டுபாட்டு மையத்துடனான தொடரை இழந்தது. சோதனை முயற்சியில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் முதல் பேலோடு போலி செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    "ஸ்டார்ஷிப் உடனான அனைத்து தகவல்தொடர்புகளையும் நாங்கள் இழந்துவிட்டோம் - இது அடிப்படையில் மேல் நிலையில் எங்களுக்கு ஒரு ஒழுங்கின்மை இருப்பதைக் குறிக்கிறது" என்று ஸ்பேஸ்எக்ஸ் தகவல் தொடர்பு மேலாளர் டான் ஹூட் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் ஸ்டார்ஷிப் தொலைந்து போனதை உறுதிப்படுத்தினார்.

    ஃபிளைட் ரேடார் 24 தளத்தின் படி பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 20 வணிக விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. விமானங்களின் மீது சாத்தியமான குப்பைகள் விழுவதை தவிர்க்க பாதை மாற்றியமைக்கப்பட்டன.

    இது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வீடியோ ஒன்றை இணைத்து, "வெற்றி நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • விமானத்தின் பராமரிப்பு ஆய்வின் போது இந்த சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் ஜெட் ப்ளூ விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் இரண்டு அடையாளம் தெரியாத சடலங்களை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்குப் பிறகு இந்த விமானம் தெற்கு புளோரிடா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

    இந்த விமானத்தின் பராமரிப்பு ஆய்வின் போது இந்த சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சடலங்களின் அடையாளங்கள் தெரியாத நிலையில், அவர்கள் இருவரும் எப்படித் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர் என்பது தெரியவரவில்லை.

    • கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
    • பயணி ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த 7 பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தி வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 3½ கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3½ கோடி ஆகும்.

    இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த பயணியை கைது செய்து உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வட மாநில இளம்பெண் கைது செய்யப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில், தற்போது மீண்டும் தாய்லாந்து நாட்டில் இருந்து, கடத்தி வரப்பட்ட ரூ.3½ கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் ரூ.9.5 கோடி மதிப்புடைய 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    • 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து விமானம் புறப்பட்டுள்ளது.
    • உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும்.

    உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்றன.

    இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).

    பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி 2024 டிசம்பர் 31 மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 8.30-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீனா தலைநகர் ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் நேரம் 16 மணி நேரம் பின்தங்கியிருப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும். 

    • மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
    • புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

    ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் காக்பிட்-இல் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஹானோலுலு நோக்கி புறப்பட்ட விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.

    திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து 273 பயணிகள் மற்றும் பத்து பணியாளர்களுடன் ஹவாய் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330 புறப்பட்டது. சியாட்டிலில் இருந்து ஹானோலுலு புறப்பட்ட விமானத்தில் திடீரென புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

    இதையடுத்து விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். இதையடுத்து, விமானம் சியாட்டில் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பே விமான நிலையத்தில் தீயனைப்பு துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், தீயனைப்புத் துறையினர் விமானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புகை வந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்தனர். இதனை விமான நிலைய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். 

    • விமானத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
    • பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

    இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

    நடுவானில் பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் எந்த விமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • விமான கதவை திறந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.
    • ஏணிப்படி இல்லாததை கவனிக்காமல் கால் எடுத்து வைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    TUI-க்கு சொந்தமான விமானம் இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் ஏறுவதற்காக ஏணிப்படி வைக்கப்பட்டிருக்கும். விமானம் புறப்படும் முன் கதவு அடைக்கப்பட்டு, அந்த ஏணிப்படிகள் அகற்றப்படும். அதன்பின் விமானம் புறப்படும்.

    அந்த வகையில் ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் கதவை திறந்து கீழே இறங்க முயன்றார். ஆனால் படிக்கட்டு விமானத்துடன் இணையாமல் தனியாக இருந்துள்ளது. விமானம்தான் புறப்படவில்லையே என அந்த பணிப்பெண் கதவை திறந்தது படிக்கட்டில் கால் வைப்பது போல் வைக்க, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். விமான ஓடுதளத்தில் விழுந்த பணிப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் அழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான பணிப்பெண் கீழே விழுந்தது எப்படி என விசாரணை நடத்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விமான பணிப்பெண் கதவை திறந்து, ஏணிப்படி இருக்கும் என காலை எடுத்து வைத்தார். ஆனால் அங்கே இருக்க வேண்டிய ஏணிப்படி இருக்கவில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. அதனால் கீழே விழுந்தார். அவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டது என விமான நிலையத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • நடுவானில் நின்றுக் கொண்டு வந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
    • அவர்கள் அதனை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

    தாய்லாந்துக்கு செல்லும் தாய் ஏர்ஏசியா விமானத்தில் நடைபெற்ற சம்பவத்தை இன்ஸ்டா பிரபலம் ஒருவர் விமர்சித்துள்ளார். இந்தியாவில் இருந்து தாய்லாந்து பயணம் மேற்கொண்ட அங்கித் குமார் என்பவர், தன்னுடன் விமானத்தில் பயணித்தவர்கள் நின்றுக் கொண்டு வந்ததாகவும், நடுவானில் சாப்பிட்டதாகவும் கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    இத்துடன் அவர் இணைத்துள்ள வீடியோவில் விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருக்கும் போது, பயணிகளில் சிலர் இருக்கைகளின் இடையில் நடந்து செல்வதும், உணவு உட்கொள்வதும், இருக்கையின் பின் அமர்ந்து இருப்பவரிடம் திரும்பி உட்கார்ந்து கொண்டு பேசுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    பயணத்தின் போது இப்படி செய்ய வேண்டாம் என்றும் பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்ப கேபின் குழுவினர் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், அவர்கள் அதனை ஏற்கவில்லை என்று வீடியோவை வெளியிட்டவர் கூறியுள்ளார்.

    இது குறித்த வீடியோவில் கூறிய அவர், "இந்தியர்கள் எல்லா இடங்களிலும் அவமதிக்கப்படுவதை ரசிக்கிறார்கள். அவர்கள் விமானத்தை ரெயிலாகவோ அல்லது பேருந்தாகவோ மாற்றிவிட்டார்கள். அவர்கள் நின்று பயணம் செய்கிறார்கள். விமானம் தரையிறங்கவில்லை, அது இன்னும் காற்றில் இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோ குறுகிய நேரத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. வீடியோவுக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

    • வெடிகுண்டு மிரட்டலால் பல விமானங்களின் சேவைகளில் மாற்றமும் தாமதமும் ஏற்பட்டது.
    • 600-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இதனையடுத்து பலமணி நேரம் நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வருகிறது. இதனால் பல விமானங்களின் சேவைகளில் மாற்றமும் தாமதமும் ஏற்பட்டது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் விமான பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த அக்டோபர் மாதத்தில் 600-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
    • விமான நிறுவனங்கள் பொருளாதாரம் காரணமாகவும் வெள்ளை நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

    உலகில் உள்ள விமானங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் உள்ளன. அவ்வாறு விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    வெள்ளை நிறமானது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. இந்த நிறம் வெப்பத்தை உறிஞ்சாது. வெப்பம் அதிகமான நாட்களில் விமானத்தின் உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

    இது ஏ.சி. பயன்பாட்டை குறைத்து எரிபொருள் சேமிப்புக்கும் வழிவகுக்கிறது. மேலும் விமானத்தில் ஏற்படும் விரிசல், அரிப்பு போன்றவற்றை எளிதாக கண்டறிந்து சரிசெய்ய உதவுகிறது.


    வெள்ளை நிறம் சீக்கிரத்தில் மங்காது என்பதால் பெயிண்டிங் செலவை குறைக்கிறது. மற்ற வண்ணங்களை விட வெள்ளை நிறமானது அடர்த்தி குறைவானது. இதனால் எரிபொருள் செலவு குறையும். மேலும் வெள்ளை நிறமானது விமானத்தில் பறவைகள் மோதுவதையும் தவிர்க்கிறது.

    மற்ற நிறங்கள் என்றால் சூரியனுக்கு அருகில் வானத்தில் விமானங்கள் பறப்பதால் விரைவாக நிறம் மங்கிவிடும் வாய்ப்பு உள்ளது, அதனால் விமானத்திற்கு மீண்டும் மீண்டும் வர்ணம் பூசப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

    அதேபோல வெள்ளை நிறத்தை விட வேறு நிறம் பயன்படுத்துவதால் விமானத்தின் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


    அதாவது பெயிண்ட் காரணமாக ஒரு விமானத்தின் எடையானது 273 முதல் 544 கிலோ கிராம் வரை அதிகரிக்குமாம். அந்த 544 கி.கி என்பது 8 பயணிகளுக்கு சமமானது.

    விமானம் அதிக எடையுள்ள இருந்தால் அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் விமான நிறுவனங்கள் பொருளாதாரம் காரணமாகவும் வெள்ளை நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

    • 14 வகை வெளிநாட்டு பறவைகளை சூட்கேசில் மறைத்து வைத்து கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர்.
    • வெளிநாட்டு பறவைகளை விமானத்தில் கடத்தி வந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் விமானத்தில் அரியவவை பறவைகளை கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் மற்றும் பிந்து ஆகிய இருவரும் தாய்லாந்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக 14 வகை வெளிநாட்டு பறவைகளை சூட்கேசில் மறைத்து வைத்து கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த வெளிநாட்டு பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பறவைகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் மதிப்பிலானவை ஆகும். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    வெளிநாட்டு பறவைகளை விமானத்தில் கடத்தி வந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்படடு வருகிறது.

    ×