search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aircraft"

    • 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன.
    • போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு என்ற இடத்தில் போர் விமானங்களை அவசரமாக தரை இறக்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்களை தரை இறக்கும் திறன் மதிப்பீடு சோதனையை விமானப்படையினர் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

    தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு முதல் ரெணங்கிவரம் வரை அவசர காலத்தில் விமானங்கள் தரை இறக்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சாலையில் சுகோய் 232 ரக 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன. அதனை ஹாக் ரேஞ்ஜின் வகை 2 விமானங்கள் பின் தொடர்ந்து சென்றன.


    இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்த போது திடீரென தெரு நாய் ஒன்று விமான ஓடு பாதையில் குறுக்கே சென்றது.

    இதனைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நாயை விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சோதனை நடத்திய காட்சி.

    • அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது.
    • ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரணை.

    எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.

    அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.

    தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்..

    ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    • விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அந்த விமானம் வழக்கம்போல் துயாய்க்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என்று 176 பேர் பயணித்தனர்.

    விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, சரக்கு பெட்டி இருந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த பணியாளர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானத்தை தரையிறக்க கோழிக்கோடு விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார்.

    ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் சில ஓடுபாதைகளில் பணிகள் நடைபெற்று வருவதால், துபாய் விமானத்தை அங்கு உடனடியாக தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்பு அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்பு விமானத்தில் வந்த புகை கட்டுப்படுத்தப்பட்டது. புகை வந்தது உடனடியாக கவனிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரிய அளவில் விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது.

    மேலும் விமானத்தில் இருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


    இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, தலைநகர் கொழும்பு மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் தொடர்பாக 75க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் தேசிய  தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    முதல் ரபேல் போர் விமானம் இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) இந்திய விமானப்படையில் சேரும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் தெரிவித்துள்ளார். #RafaleDeal #FranchAmbassador #India
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் வேளையில் முதல் ரபேல் விமானம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து விடும் என தெரிய வந்துள்ளது.



    இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பெங்களூருவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கான சிறப்புரிமை எனக்கு கிடைத்தது. அப்போது ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்தோம். மேலும், சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், எல்லா வடிவத்திலுமான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதற்கு இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று குறிப்பிட்டேன்” என கூறி உள்ளார்.

    டி.வி. சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரபேல் போர் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது, எங்களுக்கு கவுரவம். இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) முதல் விமானம் இந்திய விமானப்படையில் சேரும்” என குறிப்பிட்டார்.

    பெங்களூருவில் விமான கண்காட்சியில் ரபேல் போர் விமானம் கலந்து கொண்டு சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
    கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது தண்ணீர் லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. #QatarAirwaysPlane #KolkataAirport
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று  103 பயணிகளை ஏற்றிக்கொண்டு தோகாவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

    அப்போது தண்ணீர் லாரி ஒன்று விமானத்தின் லேன்டிங் கியர் அருகில் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் வயிற்றுப்பகுதியில் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான விமானம் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டு, பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் லாரியின் பிரேக் சரியாக வேலை செய்யாததால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    103 பயணிகள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 3 மணிக்கு தோகா புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறப்பதற்கு சற்றுமுன் இந்த விபத்து ஏற்பட்டதால் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். #QatarAirwaysPlane #KolkataAirport
    டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Flight

    பாட்னா:

    டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு ‘கோ ஏர்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 150 பேர் பயணம் செய்தனர்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென எழுந்தார். பின்னர் கழிவறை என நினைத்து விமானத்தின் பின்புற கதவை திறக்க முயன்றார்.

    அதைபார்த்த சக பயணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கு வந்த விமான ஊழியர் அந்த பயணியை தடுத்து நிறுத்தினார். கேபின் அறையின் காற்றழுத்தம் அதிகமாக இருந்ததால் விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இல்லாவிடில் மிகப்பெரிய விபத்து நடந்திருக்கும்.

    இச்சம்பவம் கடந்த 22-ந்தேதி நடந்தது. இதற்கிடையே விமானம் இரவு 7.35 மணிக்கு பாட்னா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதையடுத்து அந்த வாலிபர் தொழிற் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    பின்னர் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அஜ்மீரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிவது தெரியவந்தது.

    முதல் விமான பயணம் என்பதால் கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை தவறுதலாக திறக்க முயன்றதாக கூறினார். வேறு பயங்கரவாத நடவடிக்கை எதுவும் இல்லை என்றார். #Flight

    சீனா இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது. இந்த கப்பல் நேற்று டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது. #China #Aircraft
    பீஜிங்:

    சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது.

    இந்த கப்பல் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது.

    கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும்.

    சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகிலேயே இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் தான் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 18 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.  #China #Aircraft
    ×