search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engine failure"

    • மின்சாரத்தால் இயங்கி வந்த ரெயிலில் திடீரென்று மின்சார இணைப்பு கிடைக்காததால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
    • நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்திற்கு சுமார் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.

    கடலூர்:

    மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர், நெல்லிக்குப்பம் வழியாக பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று நடுவழியில் நின்றது. இதனால் அதிர்ச்சிடைந்த பயணிகள் மற்றும் ரெயில் டிரைவர் கீழே இறங்கி பார்த்தனர். பின்னர் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயில் நின்றதற்கான காரணத்தை உடனடியாக பார்வையிட்டனர். அப்போது மின்சாரத்தால் இயங்கி வந்த ரெயிலில் திடீரென்று மின்சார இணைப்பு கிடைக்காததால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளகேட், கருப்பு கேட், காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் ரெயில் வருவதற்காக கேட் மூடப்பட்டிருந்தது.

    ஆனால் நடுவழியில் திடீரென்று ரெயில் நின்றதால் சிக்னல் கிடைக்காமல் ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நான்கு பகுதிகளிலும் நீண்ட நேரமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பரிதவித்து காத்துக் கொண்டிருந்தனர். மேலும் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்று நடுவழியில் திடீரென்று நின்ற ரெயிலுக்கு வேறு ஏதேனும் பிரச்சனையா? என பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 20 நிமிடம் ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு ரெயிலை இயங்க வைத்தனர். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்திற்கு சுமார் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.

    • விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.
    • உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6:55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.

    விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்த போது அதில் கோளாறு இருப்பதை அறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் எந்திரம் பழுது பார்க்கப்பட்டு இன்று காலை 8:10 மணிக்கு தாமத மாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரியான நேரத்தில், விமானி கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது.
    • விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    புது டெல்லி:

    டெல்லியிலிருந்து வதோதரா நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி விடப்பட்டது. நேற்று டெல்லியிலிருந்து வதோதராவிற்கு சென்ற இண்டிகோ 6E-859 விமானத்தை இயக்கிய விமானிகள் விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பப்பட்டது. இரவு 8.30 மணியளவில் விமானம் ஜெய்ப்பூர் சென்றடைந்தது. விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரி கூறியதாவது:-

    விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.

    மேலும், இண்டிகோவின் போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தற்போது ரெகுலெட்டரி ஸ்கேனிங் கீழ் உள்ளதாக டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஜுன் 19ம் தேதி முதல் விமானத்தில் இதுவரை 8 முறை கோளாறுகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினர். டிஜிசிஏ இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தொடர்ந்து, "பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான சேவையை தர பட்ஜெட் கேரியர் தோல்வியடைந்துவிட்டது" என்று விமான ஒழுங்குமுறை அதிகாரி கூறினார்.

    கரூர் அருகே இன்று காலை என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டவுடன் 2 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது.
    திருச்சி:

    சென்னையில் இருந்து திருச்சி, கரூர் வழியாக மங்களூருக்கு செல்லும் மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை திருச்சி ஜங்‌ஷனுக்கு 4 மணிக்கு வந்தது.

    மீண்டும் 4.10 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. காலை 7 மணிக்கு கரூரை தாண்டி சென்றபோது திடீ ரென ரெயில் என்ஜின் பழுதானது. இதனால் மூர்த்தி பாளையம் என்ற இடம் அருகில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் எதிரே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது. காரைக்குடி நோக்கி வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மூர்த்தி பாளையம் அருகில் நிறுத்தி வைத்தனர்.

    இதற்கிடையே என்ஜின் பழுதான மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று என்ஜின் மூலம் புறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு செல்லப்பட்டது.

    இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் ரெயிலிலேயே தவித்தனர். அதன் பிறகு பழுதான என்ஜினுக்கு பதிலாக மாற்று என்ஜின் பொருத்தப்பட்டதும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 9 மணிக்கு மேல் புறப்பட்டு சென்றது.

    தொடர்ந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றது.

    ×