search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delay"

    • காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
    • தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.

    எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

    காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
    • பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத், துணை ஆணையாளர்கள் செல்வநாயகம், கண்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள். 4-வது குடிநீர் திட்டப்பணிகள் குழாய் பதிப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறையின் பிரதான சாலையில் நடைபெற வேண்டியுள்ளது. அதுபோல் குழாய் பதிப்பு பணிகள் முடிந்த சாலையை செப்பனிடும் பணி நடைபெறாமல் உள்ளது. இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைந்து செய்து காலதாமதம் இல்லாமல் விரைந்து செய்து முடிப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைப்பு, குடிநீர் குழாய் பதிக்க சாலையில் குழிதோண்டும் பணி ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    • தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
    • முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்

    திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே இன்று காலை 7. 40 மணியளவில் வந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கொத்தனார் புஷ்பராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    உடனே சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரெயிலின் சங்கிலியை இழுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினர். ரெயில் டிரைவர் மற்றும் டி.டி.ஆர்.,ரெயில்வே ஊழியர்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஒரத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் அவர் கையில் வைத்திருந்த நெஞ்சுவலி சம்பந்தமான மாத்திரையை கொடுத்து முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ெரயில் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றது.  

    • தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.

    இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    • பாபநாசம் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.
    • கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்பொழுது திடீரென பசு மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது.

    இதில் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.

    இதில் பசு மாடு ரயில் என்ஜினில் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது.

    இதனால் ரெயில் என்ஜின் கோளாறு ஆனது.

    பின்னர் கும்பகோணத்திலிருந்து மாற்று ரயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது .

    இது சம்பவத்தால் தஞ்சாவூர் கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்ர மணியம், ஏட்டு ஆறுமுகம் ஆழ்கியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.
    • உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6:55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.

    விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்த போது அதில் கோளாறு இருப்பதை அறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் எந்திரம் பழுது பார்க்கப்பட்டு இன்று காலை 8:10 மணிக்கு தாமத மாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரியான நேரத்தில், விமானி கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
    • பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

    இதற்கிடையே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டு பிடித்தனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்று விமான நிறுவனம் அறிவித்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

    இன்று மதியம் 12 மணி வரை விமானத்தில் தொழில் நுட்பகோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் பயணிகளுக்கு முறையான அறிவிப்பு மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படாததால் கடும் அவதி அடைந்தனர்.

    12 மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும்.
    • இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் , காரைக்கால் மதகடியில் அமைந்துள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட அமைச்சர், ஒரு சிலர் காலதாமத்துடன் வருகை தருவதாக கூறப்படுகிறது. இனி, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும். காலதாமதத்துடன் வந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

    மேலும், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பொதுமக்கள் சிலர் நிற்பதை பார்த்த அமைச்சர், அவர்கள் ஏன் காத்துகிடக்கிறார்கள்? அவர்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து உடனுக்குடன் அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது. முக்கியமாக, பொதுமக்களிடமிருந்து எனக்கு எந்தவித குறைகளும் வராத வண்ணம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.

    • மதுரை விமான நிலையம் சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏன்? என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
    • இந்திய விமான நிலைய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    மதுரை

    தென் மாவட்டங்களில் முக்கிய விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையம் தென் மாவட்ட மக்களின் உள்நாட்டு சேவை மூலம் வான்வழி போக்குவரத்திற்கு பேருதவியாக விளங்கி வருகிறது. அதுமட்டுமின்றி சர்வதேச அங்கீகாரம் பெறாவிட்டாலும் துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து செல்லலாம்.

    மதுரை விமான நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட கோயம்புத்தூர், திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றநிலையில் மதுரை விமான நிலையம் தற்போது வரை சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெறவில்லை. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும், இந்தியாவில் 5 விமான நிலையங்கள் 24 மணி நேரம் செயல்பட உள்ளதாகவும், மத்திய அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் மதுரை விமான நிலையம் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது வரை மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படவில்லை.

    இது தொடர்பாக பாஸ்கரன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு இந்திய விமான நிலையம் ஆணையம் பதில் அளித்துள்ளது.

    அதில், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 2 நீர்நிலை நிலப்பரப்பு தமிழக அரசாங்கத்திடம் நிலுவை யில் உள்ளது. நிலத்தை ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.

    மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணிகள் இன்னும் வகுக்கப்படும் நிலையிலேயே உள்ளது. மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்போது வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 24 மணி நேரம் மதுரை விமான நிலையம் செயல்படுவதற்காக புதிய விமானங்கள் இயக்கப் பட வேண்டி உள்ளது. இதற்காக விமான சேவை நிறுவனங்க ளுடன் அறிக்கை பெறப் பட்டுள்ளது. மதுரை விமான நிலை யத்தை தரம் உயர்த்தி சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த 2022 முதல் 2023 வரை மதுரை விமான 11லட்சத்து 38ஆயிரத்து 928 பயணிகள் பயணித்துள்ள னர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்க முடியாமல் காத்து கிடக்கின்றனர்.
    • விவ–சாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    ராராமுத்திரகோட்டை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடைசெய்த நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.

    கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    • ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
    • விசாரணையில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரியவந்தது.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை- தரங்கம்பாடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் லாரி மோதியதால் ஓ.எச்.டி லைன் அறுந்து விழுந்து கேட் சிக்னல் பழுதானது.

    இதனை சீரமைக்கும் பணியை ரெயில்வே பணியாளர்கள் இரவில் உடனடியாக மேற்கொண்டனர். சிக்னல் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 

    இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சுமார் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்து செல்லும் லாரி என்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆடுதுறை கேட்பகுதியை கடக்க ஏதுவாக மாற்று ஏற்பாடாக ரெயில்களில் டீசல் என்ஜின் பயன்படுத்தி இயக்கப்பட்டது.

    சேலத்தில் கடத்தப்பட்ட வடமாநில வாலிபரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
    சேலம்:

    சேலம் பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாதாரம் (வயது 52) ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டவுன் சின்னக்கடை வீதியில் கடந்த 3  ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). நேற்று முன்தினம் காலை நேரம் கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

     அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6:45 அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

     இது குறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உதவி கமிஷனர் அசோகன் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஜெயராமை கடத்தி சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள் சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா வியாபாரம் செய்து வருகின்றனர். குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாபேட்டை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது அதன்படி பணத்தைச் செலுத்திய பிறகு ஜாமீனில் வெளிவந்த வந்தனர்.

    இதன் பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்த பிரான்ஸ் போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு போலீசார் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

    ஜாமினில் வெளி வந்த இவர் கடந்த 20 நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் கையெழுத்துப் போட்டு வந்தார். ஆனால் நேற்று இவர் கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

    இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கடத்தல் நடத்தி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    மேலும்  போலீசாரிடம் பிடிபட்ட  லாரி உரிமையாளரான சுரேஷ் அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து இருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கிடையில் மர்மநபர்கள் ஜெயராம் பெங்களூருக்கு கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. போலீசார் நெருக்கடி காரணமாக ஜெயராமனை ஒப்படைத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது. 

    ஆனாலும் ஜெயராம் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. போலீசார்  தொடர்ந்து பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
    ×