என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food"

    • வீட்டில் சமைப்பவர், 'உடம்புக்கு நல்லது' என்று நினைப்பார்.
    • வீட்டில் சமைக்கப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.

    'அம்மா சாப்பாடு நல்லாதான் இருக்கு... ஆனா ஓட்டல் மாதிரி இல்ல!' - இந்தக் குரல் இன்று பல வீடுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. வீட்டை விட, ஓட்டலில் சாப்பிட அனேகம் பேருக்கு பிடிக்கிறது, ருசியாக இருப்பதாக தோன்றுகிறது. இது ஏன்?

    இதற்கு காரணம், 'சுவை' என்பது நாக்கில் மட்டும் இல்லை.

    அது மணம், தோற்றம், சூழல், மனநிலை, எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தின் கூட்டுத்தொகை. வீட்டில் தினமும் அதே சமையலறை, அதே பாத்திரம், அதே நபர் சமைக்கும் உணவு நமக்கு 'பழக்கம்' ஆகிவிடுகிறது. பழக்கம் வந்த இடத்தில் புதுமை குறையும்; புதுமை குறைந்த இடத்தில் சுவை மங்குவது போல தோன்றும்.

    ஆனால் உணவகங்களில்?

    புதுமை. புதிய இடம். வேறு கைகள். வேறு வாசனை. வேறு பரிமாறும் முறை. இதுவே உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது.

    பொதுவாக, உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளில், வீட்டைவிட அதிக அளவில் உப்பு, எண்ணெய், வெண்ணெய், நெய், சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. காரணம் ஒன்றுதான், வாடிக்கையாளரின் நாக்கை வசப்படுத்த வேண்டும்.

    வீட்டில் சமைப்பவர், 'உடம்புக்கு நல்லது' என்று நினைப்பார். ஓட்டலில் சமைப்பவர், 'மீண்டும் வர வைக்க வேண்டும்' என்று நினைப்பார்.

    இந்த இரண்டு எண்ணங்களின் இடைவெளிதான், சுவையின் இடைவெளியாக நமக்கு தெரிகிறது.

    வீட்டில் சாப்பிடும்போது, வேலைப்பளு, குடும்பப் பிரச்சனை, பணச்சுமை, நாளைய பொறுப்புகள் எல்லாமே நம்முடன் மேசைக்கு வந்து உட்காரும்.

    உணவகத்திலோ, 'இன்று சாப்பிட வந்திருக்கோம்' என்ற மனநிலை.

    சமைக்கவில்லை. பாத்திரம் கழுவ வேண்டாம். யாருக்கும் பரிமாற வேண்டாம். இந்த மனஅழுத்தமற்ற நிலை, உணவின் சுவையை கூடுதலாக்குகிறது.

    வீட்டில் சமைக்கப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. தினமும் சமைக்கும் கைகளின் மதிப்பு, அன்றாடமாகி விட்டதால் சாதாரணமாகிவிடுகிறது. ஆனால் ஓட்டலில் பணம்

    கொடுத்து வாங்கும் உணவு, 'விலை' காரணமாகவே நமக்கு உயர்ந்ததாக தோன்றுகிறது.

    பணம் கொடுத்தால் சுவை கூடும் என்ற மனநிலை, அறியாமலே நம்முள் உருவாகிவிட்டது.

    அழகான தட்டு, கவரும் உள்அலங்காரம், சூடான பரிமாற்றம், உணவுகளுக்கு கவர்ச்சியான பெயர்கள் இவை அனைத்தும் உணவின் சுவைக்கு முன் நம் மனதை தயார் செய்கின்றன.

    வீட்டில்?

    'சாப்பாடு ரெடி... வாங்க!'

    அவ்வளவுதான்.

    அன்பு இருந்தாலும், அங்கு ஒரு 'நிகழ்வு' இல்லை. நிகழ்வு இல்லாத இடத்தில் சுவை நினைவாக மாறுவதில்லை.

    இன்றைய தலைமுறை, வெளியே சாப்பிடுவதை ஒரு அனுபவமாக பார்க்கிறது. செல்பி, சமூக ஊடகப் பதிவு, நண்பர்கள், சிரிப்பு இவை அனைத்தும் உணவுடன் சேர்ந்து ஒரு நினைவாக உருவாகின்றன. வீட்டுச் சாப்பாடு அந்தப் போட்டியில் பின்னடைகிறது.

    உணவக சுவை நாக்குக்கு இனிமை.

    வீட்டுச் சாப்பாடு உடலுக்கு நன்மை.

    வீட்டுச் சாப்பாடு சுவையில்லை என்று நாம் சொல்வது, உணவின் குறை அல்ல; நமது பார்வையின் குறை.

    அதை தினசரி என்று எடுத்துக்கொள்ளாமல், அன்பின் வெளிப்பாடாக பார்த்தால், அதில் இருக்கும் சுவையும் நமக்குத் தெரியும்.

    • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    • கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

    உடல் ஆரோக்கியத்துக்கு 3 வேளையும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதில் குறிப்பாக இரவு உணவை மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

    முன்னதாகவே சாப்பிடும் பழக்கம் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. எனவே இந்த நேரத்திற்குள் உங்களது இரவு உணவை முடித்துவிட வேண்டியது அவசியம்.

    இரவில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கோதுமை ரவை கிச்சடி அல்லது இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கோதுமை ரவை கிச்சடி, சப்பாத்தி, சிறுதானியங்களால் செய்யப்பட்ட அடை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

    40 வயதைக் கடந்தவர்கள் சிறுதானியங்களை முழுமையாகப் பயன்படுத்தி பொங்கல், உப்புமா அல்லது பிரியாணி வடிவில் சமைத்து உண்பது சிறந்தது. ஆரம்பத்தில் இதுபோன்ற உணவு பழக்கத்தை கொண்டு வரும்போது பசி எடுக்கலாம்.

    அவ்வாறு இரவு 10 மணிக்கு மேல் பசி எடுத்தால், கனமான உணவுகளைத் தவிர்த்துவிட்டுப் பழங்களைச் சாப்பிடலாம். குறிப்பாக கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

    இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் டாக்டர்கள். 

    • வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல.
    • இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம்.

    இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காக்கும்.

    பகல் நேரத்தில் நாம் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைக்கு அவை ஜீரணித்துவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும்.

    இரவில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன. கீரை, நெல்லிக்காய், கட்டித்தயிர், கஞ்சி, பாகற்காய், இஞ்சி ஆகியவற்றை இரவில் தவிர்த்து விடுவது நல்லது. அதையும் மீறி சாப்பிட்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய மாட்டார், செல்வம் தங்காது என்பது ஐதீகம். இரவில் பால் சோறு சாப்பிடலாம். இதனால் செல்வம் பெருகும்.

    தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது. நடு ராத்திரியில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால், இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

    கிரீன் டீயில் காபி மற்றும் டீயை விட அதிக அமிலம் உள்ளது. இதை, இரவில் குடிக்கும் போது அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படலாம். எனவே, கிரீன் டீயை பகல் நேரத்தில் குடிப்பது நல்லது. ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.

    வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும்.

    இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். அதுமட்டும் அல்ல, இது உங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்தும். எனவே, இவற்றை காலையில் பருகுவது நல்லது. காரமான பொருட்களை சாப்பிடுவது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால், தூக்கம் பாதிக்கப்படும். அதேபோல, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பீட்சா, பர்க்கர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இந்த உணவுகள் அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும். 

    • உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன.
    • உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

    சாப்பிடுதல் என்பது வெறும் வழக்கமான சம்பிரதாயம் அல்ல. இன்று உடம்புக்கு இந்த அளவு உணவு தேவை, அதனால் நீங்கள் அவ்வளவு சாப்பிடுகிறீர்கள். நாளை அவ்வளவு தேவைப்படாமல் இருக்கலாம். ஒருவர் சாப்பிட வேண்டும்தான், ஆனால் அந்த உணவு நமக்கு அளிக்கும் ஊட்டத்தில் மகிழ்ந்து நம் உயிருக்கும் உணவுக்குமான தொடர்பை நன்றியுடன் உணர்ந்து சாப்பிட வேண்டும்.

    இது சாப்பிடுவதில் இருக்கும் இன்பத்தை குறைப்பதற்காக அல்ல. உணவை உண்பதில் உள்ள உண்மையான ஆனந்தமே, இன்னொரு உயிர் உங்கள் உயிருடன் ஒன்றி கலந்து நீங்களாகவே ஆகிறது என்பதை உணர்ந்து உண்பதுதான் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். யோக கலாச்சாரத்தில் எப்பொழுதும் உங்கள் கால்களை மடக்கி அமரவும், ஒரு சக்தி வடிவம் இருக்கும் திசைநோக்கி கால்களை நீட்டாதிருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

    உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. எந்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், எந்த உணவை முதலில் பரிமாற வேண்டும், இலையை எவ்வாறு மூட வேண்டும் போன்ற பல விஷயங்களை இதில் கவனிக்க வேண்டும். அவ்வாறு உணவு சாஸ்திர முறைப்படி சாப்பிடும்போது குடும்பத்தில் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி போன்றவை தானாகவே ஏற்படும்.

    சாப்பட்டினை நமக்கு யாராவது பரிமாற வேண்டும். இலையில் முதலில் காய்கறி, அப்பளம் போன்றவற்றை வைத்துவிட்டே சாதத்தை பரிமாற வேண்டும். எடுத்த உடனேயே சாதத்தை பரிமாறக்கூடாது. அதைப்போல வத்தல், கீரையை முதலில் பரிமாறக் கூடாது.

    உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டு உணவு உண்ணும் போது நமக்கு நன்மை பயக்கும். கிழக்கு நோக்கி அமர்ந்து சாபிட்டால், ஆயுள் வளரும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், பொருள் சேரும். தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், புகழ் வளரும். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. நோய்தான் வரும்.

     

    பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்பொழுது நோய் சேரும். சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் ஆகியவற்றை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். வேறு வேலைகள் எதுவும் செய்துக்கொண்டே உணவை உண்ணக்கூடாது. குறிப்பாக செல்போன், டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடக்கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.

    சாப்பிடும்பொழுது வீட்டின் கதவு மூடியிருக்க வேண்டும். வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமனத்தின்போதும் சாப்பிடக்கூடாது. இதுபோன்ற உணவு சாஸ்திரத்தை பின்பற்றி நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு பெற்று வாழலாம்.

    • பாதிக்கப்பட்ட சாந்து சன்யாசி, செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலம் இருந்துள்ளது
    • இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது முழு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கில், திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரணை

    மேற்குவங்கத்தின் மிட்னாபூர் மாவட்டம் கட்டாலில், தண்ணீர் என நினைத்து ஆசிட்டை ஊற்றி சமைத்த உணவை சாப்பிட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, கடுமையான வயிற்று வலி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் தீவிரமாக உடனே ஆறுபேரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிலம் கலந்த உணவை உட்கொண்டதே பாதிப்புக்கான காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை அளித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினரின் உடல்நிலை மோசமடையை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.


    மருத்துவமனையில் சேர்க்கும்போதே ஒரு குழந்தையின் உடல்நலம் மோசமாக இருந்துள்ளது

    தற்போது அங்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் கொள்கலன்களைப் போன்ற மற்றொரு கொள்கலனில் அமிலம் வைக்கப்பட்டிருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சாந்து சன்யாசி, செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலத்தை வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, சன்யாசியின் வீட்டிற்கு வந்த உறவினர் தண்ணீர் என நினைத்து அமிலத்தை ஊற்றி சமைத்துள்ளார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆபத்தான பொருட்களை எச்சரிக்கையாக வைத்திருக்குமாறு அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  மேலும் இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது முழு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கில், திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
    • சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!

    தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க... 


    மைசூர் பாக் செய்முறை

    * மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.

    * நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்) 

    * அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.

    * சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும். 

    * ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது. 

    * சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும். 

    * கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம். 

    * ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.  

    * மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது. 

    * 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம். 

    * அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும். 

    • உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
    • சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் மிகவும் அவசியமானது.

    இப்போதெல்லாம் வேலையால் சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை என பலரும் சொல்கின்றனர். ஆனால் சம்பாதிப்பதே சாப்பாடுக்காகத்தான் என்பதை மறக்கின்றனர். ஒருகட்டத்தில் உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்திற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் என்பதை சரியாக செய்தாலேபோதும். ஆனால் இதைத்தான் அனைவரும் செய்ய மறுக்கின்றனர்.

    காலையில் அரக்க பரக்க எழுந்து, பாதி உடல் நனைந்தும், நனையாமலும் குளித்து, அரைவயிறு கூட நிரம்பாமல் அவசரமாக சாப்பிட்டு அலுவலகம் செல்கின்றனர். சிலர் அதைக்கூட சாப்பிடுவது இல்லை. பின்னர் இரவு வந்து சோம்பேறித்தனமாக இருக்கிறது எனக்கூறிவிட்டு கடையில் உணவு வாங்கி சாப்பிடுவது... இடையில் டீக்குடித்து வயிறை நிரப்பிக்கொள்வது. பின்னர் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டே நள்ளிரவில் தூங்குவது. சரியான உணவு, சரியான தூக்கம் இல்லை என்றால் மனித உடல் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதை பார்ப்போம்.

    உணவை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்

    பெரும்பாலும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் காலையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். மாணவர்கள் பசியால் சரியாக பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. பெரியவர்களும் வேலையில் கவனம் செலுத்த இயலாது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும். உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், கோபத்தை காட்டுவது என இருப்போம். குளுக்கோஸிலிருந்து அதிக ஆற்றலை எதிர்பார்ப்பது மூளைதான். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இதனால் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 


    தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்

    தூக்கத்தை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்

    மனதுக்கும், உடலுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் நாம் சோர்வாக தெரிவோம். தூக்கமின்மை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய், டிமென்ஷியா, எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் முக்கிய ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் என்பது கண்டிப்பாக அவசியமாகிறது. இந்த எட்டு மணிநேர தூக்கம் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எனும் குறையும்போது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹார்மோன் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சரியான தூக்கம் இல்லாதது தலைவலிக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். தூக்கமின்மையின் போது வேலை செய்ய முயற்சிப்பது வேலை செயல்திறனை கணிசமாக பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடல் முழுவதும் நடைபெறவேண்டிய செயல்முறைகள் சரியாக இருக்காது. இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகமாக வேலை செய்து, சிந்தனையை பலவீனப்படுத்தி, உடல் எதிர்வினைகளை மெதுவாக்கி, மக்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அனைவரும் உணவு மற்றும் உறக்கத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். 

    • மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
    • பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம்.

    உணவுப்பொருட்கள் மீந்துவிட்டால் வீட்டில் பெண்கள் கவலைப்படுவார்கள். ஆனால் சில உணவுப்பொருட்கள் மீதமாகிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. அவற்றை வேறு மாதிரி தயாரித்து பயன்படுத்தலாம்.

    அதற்கான குறிப்புகள்...

    * மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால், சுவையான மோர்க்குழம்பு தயார்.

    * ஊறுகாய் பாட்டிலில் காய் எல்லாம் தீர்ந்த பிறகு மிளகாய் வண்டல் மீந்திருந்தால், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவற்றுக்குள் அடைத்து 'ஸ்டப்டு' வெஜிடபிள் கறி செய்யலாம்.

    * மீதமான குழம்பு, சாம்பாரை பயன்படுத்தி சுவையான டிபன் சுலபமாக செய்யலாம். அவற்றில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் உடனடி கிச்சடி ரெடி.

    * பிரட் மீந்து விட்டதா? அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி, உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து 'கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.

    * மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.

    * கொத்தமல்லிச் சட்னி மீந்துவிட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் போல் சுவையாக இருக்கும்.

    * இடியாப்பம் மீந்துவிட்டதா? அதை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு. நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் தேவைப் படும்போது சுவையான வற்றலாக பயன்படுத்தலாம்.

    * சமையலுக்கு வாங்கிய முட்டைக்கோஸ் மிச்சமாகிவிட்டதா? கோஸை பொடிப்பொடியாக நறுக்கி, அத்துடன் நிறைய வெங்காயத்தையும் நறுக்கிப்போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி இக்கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்புத் தூள், மிளகாய்ப்பொடி கலந்துகொண்டு லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து சுவையான பக்கோடா தயார் செய்யலாம்.

    * தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதைக் கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால், மிருதுவாக தோசை ருசியுடன் இருக்கும்.

    * சாதம் மீந்துவிட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடாம் போல பிழிந்து வெயிலில் காய வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன், சுவையிலும் அசத்தும்.

    * பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க, உசிலி சுவையாக இருக்கும்.

    • சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் யாராவது உணவை வீணாக்கினால், அவர்கள் ரூ.20 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

    உணவு வீணாவதைத் தடுக்க இந்த புதுமையான முடிவை எடுத்துள்ளது. உணவை வீணாக்குவதற்கு அபராதம் விதித்து கையால் எழுதப்பட்ட உணவக அறிவிப்பு கார்டு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் இதே போன்ற விதி இருந்தால் உணவு வீணாவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

    உணவை வீணாக்கக்கூடாது என்பது சரிதான் ஆனால் ஒருவர் எப்படி தங்களுக்குப் பிடிக்காத உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் நோக்கில் உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    • எடையை ஏற்படுத்தாமல் இரவு முழுவதும் உங்களை நிறைவாக வைத்திருக்கும் புரதத்தையும் வழங்குகிறது.
    • பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

    இன்றைய காலக்கட்டத்தில் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது என்பது பலருக்கும் சவாலாகவே இருந்து வருகிறது. காலையில் சீக்கிரம் எழுந்திருக்க எத்தனை அலாரம் வைத்தாலும் அதனை அணைத்துவிட்டு மறுபடியும் தூங்குவதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக இரவு உணவிற்கு நீங்கள் சாப்பிடுவது அடுத்த நாள் காலையில் நீங்கள் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் உணர்கிறீர்கள் என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

    நீங்கள் உண்ணும் இரவு நேர உணவு செரிமானம், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கத்தின் தரம் மற்றும் நீரேற்றம் ஆகியவற்றை பாதிக்கிறது. இவை அனைத்தும் நிதானமான தூக்கம் மற்றும் உற்சாகமான தொடக்கத்திற்கான முக்கிய காரணிகளாகும்.

    மெலடோனின் உற்பத்தியை ஆதரிக்கும், ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தும் மற்றும் கனமான தன்மையைத் தவிர்க்கும் சீரான இரவு உணவு ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். மறுபுறம், கனமான, கொழுப்பு நிறைந்த அல்லது அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் தூக்க சுழற்சிகளை சீர்குலைத்து, அடுத்த நாள் உங்களை சோர்வாகவோ அல்லது சோம்பலாகவோ உணர வைக்கும்.

    இரவில் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உடல் ஓய்வெடுக்கவும், மிகவும் திறமையாக சரிசெய்யவும் உதவும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க விரும்பினால், உங்கள் இரவு உணவில் சேர்க்க 5 சிறந்த உணவுகள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    1. சால்மன் மீன்

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்த சால்மன், மெலடோனின் உற்பத்தியை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இது மனநிலை மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் செரோடோனின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது புத்துணர்ச்சியுடன் எழுவதற்கு முக்கியமாகும்.

    2. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

    இவை கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. அவை தசைகளை தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்தை ஆதரிக்க உதவுகின்றன. இனிப்பு சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக வெளியிடும் ஆற்றலையும் வழங்குகிறது. இது இரவில் உங்களை எழுப்பக்கூடிய ரத்த சர்க்கரை குறைவதைத் தடுக்கிறது.

    3. கீரைகள்

    மெக்னீசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இலைக் கீரைகள், ஓய்வை ஊக்குவிக்கின்றன. மற்றும் இரவில் செரிமானத்தை உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடல் அமைதியாக இருக்க உதவுகின்றன மற்றும் இரவு நேர விழிப்பு அல்லது அமைதியற்ற தூக்கத்தின் வாய்ப்புகளைக் குறைக்கின்றன.



    4. கொண்டைக்கடலை அல்லது பருப்பு

    சிறந்த தாவர அடிப்படையிலான புரத மூலங்களான கொண்டைக்கடலை மற்றும் பயறு வகைகளில் வைட்டமின் B6 உள்ளது, இது மெலடோனின் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது. அவற்றின் நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. மற்றும் இரவு முழுவதும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது.

    5. கிரேக்க தயிர்

    டிரிப்டோபன் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும் கிரேக்க தயிர், மூளை டிரிப்டோபனைப் பயன்படுத்தி மெலடோனின் மற்றும் செரோடோனின் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது எடையை ஏற்படுத்தாமல் இரவு முழுவதும் உங்களை நிறைவாக வைத்திருக்கும் புரதத்தையும் வழங்குகிறது.

    6. பாதாம்

    பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன, அவை தரமான தூக்கத்தை ஆதரிக்கின்றன. இரவு உணவில் ஒரு சிறிய பகுதியை சாப்பிடுவது உடல் ஓய்வெடுக்கவும் ஓய்வுக்குத் தயாராகவும் உதவும், அதே நேரத்தில் மூளைக்கு ஊட்டமளிக்கும்.

    7. பிரவுன் ரைஸ் அல்லது குயினோவா

    பழுப்பு அரிசி அல்லது குயினோவா போன்ற முழு தானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, இன்சுலின் வெளியீட்டை ஊக்குவிக்கின்றன. இது மூளையில் டிரிப்டோபனை அதிகரிக்கிறது. இந்த சிக்கலான கார்போ-ஹைட்ரேட்டுகள் நிலையான ஆற்றல் மட்டங்களையும் பராமரிக்கின்றன.

    8. வாழைப்பழத் துண்டுகள்

    இரவு உணவிலோ அல்லது இனிப்புப் பண்டத்திலோ சிறிது வாழைப்பழத்தைச் சேர்ப்பது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தை வழங்குகிறது. இவை இரண்டும் இயற்கையான தசை தளர்த்திகளாகும். அவற்றின் இயற்கையான சர்க்கரைகள், மிதமாகச் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரையை அதிகரிக்காது. ஆனால் தூக்கத்திற்கு மென்மையான மாற்றத்தை ஆதரிக்கின்றன.

    9. மூலிகை தேநீர்

    இது ஒரு உணவாக இல்லாவிட்டாலும், இரவு உணவை முடிக்கும்போது கெமோமில் போன்ற அமைதியான தேநீர் குடிப்பது சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். இந்த தேநீர்கள் லேசான மயக்க பண்புகளைக் கொண்டுள்ளன. பதட்டத்தைக் குறைக்கின்றன. மேலும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க நிம்மதியான தூக்கத்தைத் தூண்ட உதவுகின்றன.

    10. பூசணி விதைகள்

    மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் டிரிப்டோபான் நிறைந்த பூசணி விதைகள் ஒரு சிறந்த இரவு நேர சிற்றுண்டியாகும். அவை நரம்பியக்கடத்தி செயல்பாடு மற்றும் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கின்றன, அவை நிம்மதியான தூக்கத்திற்கும் உற்சாகமான காலைக்கும் அவசியமானவை.

    இரவு உணவிற்கு லேசான, ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் குறைவான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது தரமான தூக்கத்தையும், புத்துணர்ச்சியூட்டும், துடிப்பான காலையையும் உங்களுக்கு அமைக்கும்.

    • டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும்.
    • சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்க்கும் பழக்கத்தால் தங்கள் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்காது

    சாப்பிடும்போது டி.வி., ஸ்மார்ட்போன் பார்க்கும் பழக்கம் பல இளைஞர்களுக்கும் உண்டு. அப்படி டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது சிலரது அன்றாட பழக்கமாகமாறிவிட்டது. ஆனால், டி.வி., ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், டி.வி., ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகளுக்கு இந்த பழக்கம் காரணமாகிறது. அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்...

    * பல சிக்கல்கள்

    ஸ்மார்ட்போன், டி.வி. பார்க்கும் பழக்கத்தை குறைக்காவிட்டால், நாளடைவில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் கண் பலவீனம், உடல் பருமன், வயிற்று பிரச்சனைகள், வாயு பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் டென்ஷன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    * கவனம்

    இப்படி டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்ப்பதால் அவர்களால் சாப்பிடுவதில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இதனால் உணவை மென்று சாப்பிடாமல், விழுங்கி சாப்பிடுவார்கள். இதனால், செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இரவில் இப்படி சாப்பிட்டால் தூக்கம் சீர்குலையும்.

    * அதிகம்

    டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும். இதனால் உண்ட உணவு எளிதாக ஜீரணமாகாது. சில சமயங்களில், அதிகப்படியான உணவினால் மூச்சுவிடக்கூட முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும்.

    * உறவு பாதிப்பு

    சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்க்கும் பழக்கத்தால் தங்கள் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்காது. சாப்பிட்ட பிறகும் அந்த பழக்கத்தை தொடரும்போது அவர்கள் தனி உலகத்தில் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டுவிடும். இதனால் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த விளைவு டீன் ஏஜ் பருவத்தினரை அதிகமாக பாதிக்கிறது. சாப்பிடும்போது, சில நேரங்களில் ஸ்மார்ட்போனில் அதிகமாக கவனத்தை வைப்பதால், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. இது உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முடிந்தவரை சாப்பிடும் போது டி.வி., போன் பார்க்காமல் இருப்பதை தவிர்க்கவும். அதுதான் நல்லதும் கூட.

    • ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
    • புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    குறைந்த நேரத்தில் பயணிகளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்வதால் இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

    நேற்று திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்தன.

    இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழுத்து மூலமாக புகார் அளித்தனர்.

    இதையடுத்து புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. உணவுக்காக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×