search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food"

    • நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.
    • விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார்.

    பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், நாய்களுக்கான உணவு வழங்கும் எந்திரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பணம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் போல, பல்வேறு பொருட்களை வினியோகிக்கும் வென்டிங் மெஷின் எந்திரங்கள் வெளிநாடுகளில் பிரபலம். அதுபோல நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.


    இந்த எந்திரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட்டால் மறுபுறம் நாய்களுக்கான உணவு சிறிதளவு மற்றும் தண்ணீர் வினியோகிக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுகள் குறைவதுடன், பசியுடன் உள்ள தெருநாய்களும் பசியாறும்.

    விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வித்தியாசமான யோசனை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் இதுகுறித்த பதிவில், "மாற்றத்தை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புகிறேன்" என்று பதிவிட்டார். அவரது ஆதரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டு உள்ளனர்.

    • அந்தப் பெண்ணும் மணப்பெண்ணாக திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்தாள்.
    • திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஹிமாயுபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ராம்நகரைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜூலை 10 அன்று திருமண நிகழ்விற்காக விகாஸ் ஊர்வலமாக ஹிமாயூபூரில் உள்ளபெண் விட்டிற்கு அழைந்து வந்தனர்.

    அங்கு இருந்தவர்கள் மணமகனை வரவேற்றனர். 

    இந்நிலையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    திருமண விருந்தின் போது உணவு குறைந்ததாக கூறி, திருமண வீட்டினரை மக்கள் கட்டையால் தாக்கினர். திருமண விருந்தினர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசினர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திருமணம் முறியும் அளவுக்கு மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இருதரப்பினரிடையேயும் ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்கும்.
    • இந்த பூச்சிகள் கடல் உணவுகள், உப்பு கலந்த முட்டை, நண்டு போன்றவற்றில் சேர்க்கப்படும்.

    பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள், புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (எஸ்.எப்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த உணவுகள் சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளின் சர்வதேச புகழ்பெற்ற மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்கும். இந்த பூச்சிகள் கடல் உணவுகள், உப்பு கலந்த முட்டை, நண்டு போன்றவற்றில் சேர்க்கப்படும்.

    30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்து இந்த வகை உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கடைகளில் விற்கப்படும் உணவையே வாங்கி உண்ணும் கட்டாயம் ஏற்படுகிறது
    • இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இது படம்பிடிக்கப்பட்டுள்ளது

    ஐஸ்கிரீமில் மனித விரல், குளோப்ஜாமுனில் கரப்பான் பூச்சி, மெஸ் உணவில் பாம்பு என சமீப காலங்களாக இந்தியாவில் ஹோட்டல்கள், ரயில்வே உணவுகளின் தரம் கீழிறங்கிக்கொண்டே வருவதாக பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தான்  மக்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் மற்றொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரயிலில் பயணிக்கும்போது மக்கள் பெருமபாலும் ஐஆர்சிடிசி தயாரிக்கும் உணவையும், ரயில் நிலையங்களின் உள்ளே உள்ள கடைகளில் விற்கப்படும் உணவையே வாங்கி உண்ணும் கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பப்ஸ் இந்தியர்களின் நொறுக்குத் தீனி உணவுகளில் முன்னிலையில் உள்ளது. அந்த பப்சுக்கே இப்போது வந்துள்ள சோதனையை யாரிடம் சொல்வது என இணயவாசிகள் நொந்துகொள்கின்றனர்.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன்பப்ஸுகளுக்கு மத்தியில் உயிருள்ள எலி ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதை படப்பிடித்து ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது.

     

    Saw a Rat Nesting on Chicken Puffs at the Mio Amore Counter at Howrah Station ? byu/Aggressive_Basil923 inkolkata
    • ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்தார் ஒரு பெண்
    • சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார்.

    ஐஸ்கிரீமில் மனித விரல், பூரான், மெஸ் உணவில் பாம்பு, குலோம்பஜாமூனில் கரப்பான் பூச்சி, தோசைக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் செத்துக்கிடந்த எலி என சமீப காலமாக இந்தியாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. சிறியது முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பரிமாறப்படும் உணவின் தரம் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உடுப்பி ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவு ஆறியிருந்ததால் டென்ஷனான கஸ்டமர் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்த பெண்ணுக்கு ஆறிப்போன உணவு பரிமாறுபாடுள்ளது.

     

    தனக்கு சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார். இதனால் மனம் நொந்த பெண் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆறிப்போன உணவைப் பரிமாறியதற்காக உடுப்பி ஹோட்டலுக்கு ரூ.7000 விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

    • வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
    • பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.

    அலுவலகம் சென்று வரும் பெண்களும், ஆண்களுக்கும் மிகவும் சவாலாக இருப்பது சாப்பாடுதான். சில நேரங்களில் வேலை பளு காரணமாக ஹோட்டல்களில் சாப்பிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் ஹோட்டல்களில் உபயோகிக்கும் மசாலா, சிக்கன், எண்ணெய் போன்றவற்றால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று கவலையும் அடைகிறார்கள். உங்களுக்காக ஈஸியா வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு டேபிள் ஸ்பூன்

    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    சோயா சாஸ் - 3 டீஸ்பூன்

    வினிகர் - ஒரு டீஸ்பூன்

    கேரட் - 1

    குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் - 1 ஒன்று

    வடித்த சாதம் - 2 கப்

    வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்


    செய்முறை:

    • முதலில் scramble egg செய்ய ஒரு கடாயில் எண்ணெய் முட்டை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும். பின்னர் அதை தனியாக ஒரு பக்கம் எடுத்து வைத்து கொள்ளவும்.

    • சிக்கனை 65 மசாலா சேர்ந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்த சிக்கன்களை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக் கொள்ளவும்.

    • கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.

    • அதனுடன் சோயா சாஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    • குடைமிளகாய் கேரட் வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்

    • பின் scramble egg வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    • இதோ சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டிலே ரெடி.

    இதுபோல் வீட்டிலேயே நாம் கண்ணெதிரே செய்து சாப்பிடும் உணவுகளால் நமது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

    • விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுபோனவை.
    • மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    பீகாரில் உள்ள அரசுக் கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட மெஸ் உணவில் இறந்த பாம்பின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த உணவை சாப்பிட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசுப் பொறியியல் கால்லூரி தங்கும் விடுதியில் கடந்த வாரம் வியாழனன்று சமைக்கப்பட்ட இரவு உணவில் இறந்த பாம்பின் பாகங்கள் கிடந்துள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுப்போனவை. அவற்றை சாப்பிடாவிட்டாலோ, மெஸ் கட்டணம் செலுத்தாவிட்டாலோ தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

    இதன் உச்சமாகவே தற்போது பாம்பு கிடந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பூதாகரமான நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

     

    • பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
    • இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ்.

    மனிதர்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்ததே. வினோதமான விஷயங்களை செய்பவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் பெண் ஒருவர் கடந்த 20 வருடங்களாக சிமெண்ட், செங்கல், கல், மண் ஆகியவற்றை தின்பண்டமாக தினமும் சாப்பிட்டு வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.

    இவைகளை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பாட்ரிஸ், வீட்டில் உள்ள சுவர்களை உடைத்து அதில் உள்ள செங்கல் சிமெண்ட் உதிரிகளையும் சாப்பிட்டு வருகிறாராம். அவரது கணவர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்ரிஸால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

     

    இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ். சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிடத்தூண்டும் இந்த குறைபாட்டுக்கு பிக்கா என்பது மருத்துவப்பெயர். தனது 18 வது வயதில் பிக்கா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாட்ரிஸ் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகிறார். 

     

    தமிழில் சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் வரும் ஒரு காமெடி சீனில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிடும் ஒருவரிடம் வடிவேலு மாட்டிக்கொளவார். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் அவர் லைட் பல்புகளை சாப்பிடுவதாக சொல்வது காமெடியாக நாம் எடுத்துக்கொண்ட நிலையில் உண்மையிலேயே அதுபோன்ற நபர்கள் உலகத்தில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. 

    • சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    மே மாதம் முடிவடைந்தாலும், வெயில் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது. அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் ஜூன், ஜூலை வரை நீடிப்பது வழக்கம்தான். இந்நிலையில், வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    முலாம் பழம்

    வெயிலுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர்ச்சத்து மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக விளங்குகிறது. ஆரோக்கியமான சுவையான உணவுப்பொருளாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் ஏற்படும் நீரிழப்பை குறைக்கிறது.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி இவை இரண்டும் அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ப்ளாக் பெர்ரி, ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்றவைகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது வெப்பத்தால் உடல் இழக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை ஈடு செய்யக்கூடியது. வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் தசைப்பிடிப்பும், நீர்ச்சத்து இழப்பும் ஏற்படலாம். அதை தடுத்து உடலை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சை பழ சாற்றை சேர்க்கலாம். மீன் மற்றும் இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    இனிப்பு சோளம்

    கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். அதை வேகவைத்தாலும், சுட்டு சாப்பிட்டாலும் இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    அவகேடோ

    ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய உணவுப்பொருளாக அவகேடோ உள்ளது. ஏனெனில் மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பப்பெற்றது. இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது.

    • உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப் படுகிறார்.
    • உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

    தஞ்சாவூர்:

    உலக உணவு பாதுகாப்பு நாளையொட்டி, தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசகருமான அசித்கோபால் பங்கேற்று பேசியதாவது:-

    உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப் படுகிறார். பாக்டீரியா, வைரஸ்கள், பாதிக்கப்படக் கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசாயனப் பொருட்கள் கொண்ட அசுத்தமான உணவை சாப்பிடுவதால் 200-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன.

    நம் நாட்டு மக்கள் தொகையில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.

    உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், உணவால் பரவும் நோய்களைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். உணவு பதப்படுத்துதல், சுகாதாரத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பான உணவு உண்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உணவு வகைகளை குரைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்
    • காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் தரும்.

    சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாதபோது அதிலிருக்கும் பேக்டீரியாக்காளால் வயிற்றில் கேஸ் சேரும். அதே போல அதிக அளவிலான ஃபைபர் உணவுகள், ஜீரணிக்க தாமதமாகும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதுவும் வயிற்றில் கேஸ் சேரும்.

    உணவு வகைகளை குரைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், சூப், கஞ்சி, ஜூஸ் போன்று எளிதில் ஜீரணம் ஆக கூடியவற்றை குடியுங்கள்.

    பெருஞ்சீரகம் இதற்கு உடனடி தீர்வு வழங்கும். தண்ணீரை சூடாக்கும் போது அதில் ஒரு ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் இதை அப்படியே குடிக்கலாம் அல்லது இதனோடு சிறிது புதினா இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

    வயிற்றில் கேஸ் சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால் முதலில் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையை உயர்த்தி உங்களின் உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுங்கள். கட்டில், சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்திடுங்கள். காலை உணவுடன் சில வகை பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.

    பூண்டு:

    உணவு ஜூரணத்திற்கும், கேஸ் பிரச்சனைக்கும் பூண்டு பெரும் பங்காற்றும். இரண்டு மூன்று பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடியுங்கள்.

    பெருங்காயம்:

    நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்றுமுறை இப்படி குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம். அதிகமாக குடித்தால் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.


    சூடான பானங்களை குடியுங்கள். டீ, காபி, க்ரீன் டீ போன்றவை குடிக்கலாம். இஞ்சி சாறு, இஞ்சி தேநீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.


    இலவங்கப் பட்டை:

    இலவங்கப் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து கொள்ளுங்கள் அதனை பாலில் கலந்து கூட குடிக்கலாம். இது உடனடி நிவாரணத்திற்கு கை கொடுக்கும்.

    • விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

    வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி

    உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, வணிக ரீதியாக தாய்ப்பால் விற்கப்படுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், , FSS சட்டம்- 2006 விதிமுறைகளின் படி வணிக ரீதியாக மனித பாலை பதப்படுத்துதல், விற்பனை செயதல் சட்டவிரோதமானதாகும் . எனவே, தாய்ப்பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வணிகமயமாக்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

     

    மேலும் விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப் பாலை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

     

    பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப் பாலை சேகரித்து லாப நோக்கத்துடன் பால் வங்கிகள் அமைத்து சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் FSSAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள பால் வங்கியில் தூய்மையான தாய்ப்பால் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    ×