என் மலர்
நீங்கள் தேடியது "Food"
- பாதிக்கப்பட்ட சாந்து சன்யாசி, செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலம் இருந்துள்ளது
- இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது முழு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கில், திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரணை
மேற்குவங்கத்தின் மிட்னாபூர் மாவட்டம் கட்டாலில், தண்ணீர் என நினைத்து ஆசிட்டை ஊற்றி சமைத்த உணவை சாப்பிட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, கடுமையான வயிற்று வலி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் தீவிரமாக உடனே ஆறுபேரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிலம் கலந்த உணவை உட்கொண்டதே பாதிப்புக்கான காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை அளித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினரின் உடல்நிலை மோசமடையை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கும்போதே ஒரு குழந்தையின் உடல்நலம் மோசமாக இருந்துள்ளது
தற்போது அங்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் கொள்கலன்களைப் போன்ற மற்றொரு கொள்கலனில் அமிலம் வைக்கப்பட்டிருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சாந்து சன்யாசி, செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலத்தை வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, சன்யாசியின் வீட்டிற்கு வந்த உறவினர் தண்ணீர் என நினைத்து அமிலத்தை ஊற்றி சமைத்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆபத்தான பொருட்களை எச்சரிக்கையாக வைத்திருக்குமாறு அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது முழு குடும்பத்தையும் அழிக்கும் நோக்கில், திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
- சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் மிகவும் அவசியமானது.
இப்போதெல்லாம் வேலையால் சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை என பலரும் சொல்கின்றனர். ஆனால் சம்பாதிப்பதே சாப்பாடுக்காகத்தான் என்பதை மறக்கின்றனர். ஒருகட்டத்தில் உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்திற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் என்பதை சரியாக செய்தாலேபோதும். ஆனால் இதைத்தான் அனைவரும் செய்ய மறுக்கின்றனர்.
காலையில் அரக்க பரக்க எழுந்து, பாதி உடல் நனைந்தும், நனையாமலும் குளித்து, அரைவயிறு கூட நிரம்பாமல் அவசரமாக சாப்பிட்டு அலுவலகம் செல்கின்றனர். சிலர் அதைக்கூட சாப்பிடுவது இல்லை. பின்னர் இரவு வந்து சோம்பேறித்தனமாக இருக்கிறது எனக்கூறிவிட்டு கடையில் உணவு வாங்கி சாப்பிடுவது... இடையில் டீக்குடித்து வயிறை நிரப்பிக்கொள்வது. பின்னர் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டே நள்ளிரவில் தூங்குவது. சரியான உணவு, சரியான தூக்கம் இல்லை என்றால் மனித உடல் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதை பார்ப்போம்.
உணவை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்
பெரும்பாலும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் காலையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். மாணவர்கள் பசியால் சரியாக பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. பெரியவர்களும் வேலையில் கவனம் செலுத்த இயலாது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும். உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், கோபத்தை காட்டுவது என இருப்போம். குளுக்கோஸிலிருந்து அதிக ஆற்றலை எதிர்பார்ப்பது மூளைதான். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இதனால் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்
தூக்கத்தை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்
மனதுக்கும், உடலுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் நாம் சோர்வாக தெரிவோம். தூக்கமின்மை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய், டிமென்ஷியா, எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் முக்கிய ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் என்பது கண்டிப்பாக அவசியமாகிறது. இந்த எட்டு மணிநேர தூக்கம் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எனும் குறையும்போது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹார்மோன் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சரியான தூக்கம் இல்லாதது தலைவலிக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். தூக்கமின்மையின் போது வேலை செய்ய முயற்சிப்பது வேலை செயல்திறனை கணிசமாக பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடல் முழுவதும் நடைபெறவேண்டிய செயல்முறைகள் சரியாக இருக்காது. இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகமாக வேலை செய்து, சிந்தனையை பலவீனப்படுத்தி, உடல் எதிர்வினைகளை மெதுவாக்கி, மக்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அனைவரும் உணவு மற்றும் உறக்கத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
- மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
- பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம்.
உணவுப்பொருட்கள் மீந்துவிட்டால் வீட்டில் பெண்கள் கவலைப்படுவார்கள். ஆனால் சில உணவுப்பொருட்கள் மீதமாகிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. அவற்றை வேறு மாதிரி தயாரித்து பயன்படுத்தலாம்.
அதற்கான குறிப்புகள்...
* மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால், சுவையான மோர்க்குழம்பு தயார்.
* ஊறுகாய் பாட்டிலில் காய் எல்லாம் தீர்ந்த பிறகு மிளகாய் வண்டல் மீந்திருந்தால், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவற்றுக்குள் அடைத்து 'ஸ்டப்டு' வெஜிடபிள் கறி செய்யலாம்.
* மீதமான குழம்பு, சாம்பாரை பயன்படுத்தி சுவையான டிபன் சுலபமாக செய்யலாம். அவற்றில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் உடனடி கிச்சடி ரெடி.
* பிரட் மீந்து விட்டதா? அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி, உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து 'கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.
* மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
* கொத்தமல்லிச் சட்னி மீந்துவிட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் போல் சுவையாக இருக்கும்.
* இடியாப்பம் மீந்துவிட்டதா? அதை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு. நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் தேவைப் படும்போது சுவையான வற்றலாக பயன்படுத்தலாம்.
* சமையலுக்கு வாங்கிய முட்டைக்கோஸ் மிச்சமாகிவிட்டதா? கோஸை பொடிப்பொடியாக நறுக்கி, அத்துடன் நிறைய வெங்காயத்தையும் நறுக்கிப்போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி இக்கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்புத் தூள், மிளகாய்ப்பொடி கலந்துகொண்டு லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து சுவையான பக்கோடா தயார் செய்யலாம்.
* தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதைக் கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால், மிருதுவாக தோசை ருசியுடன் இருக்கும்.
* சாதம் மீந்துவிட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடாம் போல பிழிந்து வெயிலில் காய வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன், சுவையிலும் அசத்தும்.
* பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க, உசிலி சுவையாக இருக்கும்.
- சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் யாராவது உணவை வீணாக்கினால், அவர்கள் ரூ.20 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
உணவு வீணாவதைத் தடுக்க இந்த புதுமையான முடிவை எடுத்துள்ளது. உணவை வீணாக்குவதற்கு அபராதம் விதித்து கையால் எழுதப்பட்ட உணவக அறிவிப்பு கார்டு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் இதே போன்ற விதி இருந்தால் உணவு வீணாவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.
உணவை வீணாக்கக்கூடாது என்பது சரிதான் ஆனால் ஒருவர் எப்படி தங்களுக்குப் பிடிக்காத உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் நோக்கில் உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
- எடையை ஏற்படுத்தாமல் இரவு முழுவதும் உங்களை நிறைவாக வைத்திருக்கும் புரதத்தையும் வழங்குகிறது.
- பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
இன்றைய காலக்கட்டத்தில் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது என்பது பலருக்கும் சவாலாகவே இருந்து வருகிறது. காலையில் சீக்கிரம் எழுந்திருக்க எத்தனை அலாரம் வைத்தாலும் அதனை அணைத்துவிட்டு மறுபடியும் தூங்குவதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக இரவு உணவிற்கு நீங்கள் சாப்பிடுவது அடுத்த நாள் காலையில் நீங்கள் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் உணர்கிறீர்கள் என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் உண்ணும் இரவு நேர உணவு செரிமானம், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கத்தின் தரம் மற்றும் நீரேற்றம் ஆகியவற்றை பாதிக்கிறது. இவை அனைத்தும் நிதானமான தூக்கம் மற்றும் உற்சாகமான தொடக்கத்திற்கான முக்கிய காரணிகளாகும்.
மெலடோனின் உற்பத்தியை ஆதரிக்கும், ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தும் மற்றும் கனமான தன்மையைத் தவிர்க்கும் சீரான இரவு உணவு ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். மறுபுறம், கனமான, கொழுப்பு நிறைந்த அல்லது அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் தூக்க சுழற்சிகளை சீர்குலைத்து, அடுத்த நாள் உங்களை சோர்வாகவோ அல்லது சோம்பலாகவோ உணர வைக்கும்.
இரவில் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உடல் ஓய்வெடுக்கவும், மிகவும் திறமையாக சரிசெய்யவும் உதவும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க விரும்பினால், உங்கள் இரவு உணவில் சேர்க்க 5 சிறந்த உணவுகள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
1. சால்மன் மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்த சால்மன், மெலடோனின் உற்பத்தியை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இது மனநிலை மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் செரோடோனின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது புத்துணர்ச்சியுடன் எழுவதற்கு முக்கியமாகும்.
2. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
இவை கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. அவை தசைகளை தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்தை ஆதரிக்க உதவுகின்றன. இனிப்பு சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக வெளியிடும் ஆற்றலையும் வழங்குகிறது. இது இரவில் உங்களை எழுப்பக்கூடிய ரத்த சர்க்கரை குறைவதைத் தடுக்கிறது.
3. கீரைகள்
மெக்னீசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இலைக் கீரைகள், ஓய்வை ஊக்குவிக்கின்றன. மற்றும் இரவில் செரிமானத்தை உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடல் அமைதியாக இருக்க உதவுகின்றன மற்றும் இரவு நேர விழிப்பு அல்லது அமைதியற்ற தூக்கத்தின் வாய்ப்புகளைக் குறைக்கின்றன.

4. கொண்டைக்கடலை அல்லது பருப்பு
சிறந்த தாவர அடிப்படையிலான புரத மூலங்களான கொண்டைக்கடலை மற்றும் பயறு வகைகளில் வைட்டமின் B6 உள்ளது, இது மெலடோனின் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது. அவற்றின் நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. மற்றும் இரவு முழுவதும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது.
5. கிரேக்க தயிர்
டிரிப்டோபன் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும் கிரேக்க தயிர், மூளை டிரிப்டோபனைப் பயன்படுத்தி மெலடோனின் மற்றும் செரோடோனின் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது எடையை ஏற்படுத்தாமல் இரவு முழுவதும் உங்களை நிறைவாக வைத்திருக்கும் புரதத்தையும் வழங்குகிறது.
6. பாதாம்
பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன, அவை தரமான தூக்கத்தை ஆதரிக்கின்றன. இரவு உணவில் ஒரு சிறிய பகுதியை சாப்பிடுவது உடல் ஓய்வெடுக்கவும் ஓய்வுக்குத் தயாராகவும் உதவும், அதே நேரத்தில் மூளைக்கு ஊட்டமளிக்கும்.
7. பிரவுன் ரைஸ் அல்லது குயினோவா
பழுப்பு அரிசி அல்லது குயினோவா போன்ற முழு தானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, இன்சுலின் வெளியீட்டை ஊக்குவிக்கின்றன. இது மூளையில் டிரிப்டோபனை அதிகரிக்கிறது. இந்த சிக்கலான கார்போ-ஹைட்ரேட்டுகள் நிலையான ஆற்றல் மட்டங்களையும் பராமரிக்கின்றன.
8. வாழைப்பழத் துண்டுகள்
இரவு உணவிலோ அல்லது இனிப்புப் பண்டத்திலோ சிறிது வாழைப்பழத்தைச் சேர்ப்பது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தை வழங்குகிறது. இவை இரண்டும் இயற்கையான தசை தளர்த்திகளாகும். அவற்றின் இயற்கையான சர்க்கரைகள், மிதமாகச் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரையை அதிகரிக்காது. ஆனால் தூக்கத்திற்கு மென்மையான மாற்றத்தை ஆதரிக்கின்றன.
9. மூலிகை தேநீர்
இது ஒரு உணவாக இல்லாவிட்டாலும், இரவு உணவை முடிக்கும்போது கெமோமில் போன்ற அமைதியான தேநீர் குடிப்பது சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். இந்த தேநீர்கள் லேசான மயக்க பண்புகளைக் கொண்டுள்ளன. பதட்டத்தைக் குறைக்கின்றன. மேலும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க நிம்மதியான தூக்கத்தைத் தூண்ட உதவுகின்றன.
10. பூசணி விதைகள்
மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் டிரிப்டோபான் நிறைந்த பூசணி விதைகள் ஒரு சிறந்த இரவு நேர சிற்றுண்டியாகும். அவை நரம்பியக்கடத்தி செயல்பாடு மற்றும் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கின்றன, அவை நிம்மதியான தூக்கத்திற்கும் உற்சாகமான காலைக்கும் அவசியமானவை.
இரவு உணவிற்கு லேசான, ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் குறைவான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது தரமான தூக்கத்தையும், புத்துணர்ச்சியூட்டும், துடிப்பான காலையையும் உங்களுக்கு அமைக்கும்.
- டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும்.
- சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்க்கும் பழக்கத்தால் தங்கள் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்காது
சாப்பிடும்போது டி.வி., ஸ்மார்ட்போன் பார்க்கும் பழக்கம் பல இளைஞர்களுக்கும் உண்டு. அப்படி டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது சிலரது அன்றாட பழக்கமாகமாறிவிட்டது. ஆனால், டி.வி., ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், டி.வி., ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகளுக்கு இந்த பழக்கம் காரணமாகிறது. அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்...
* பல சிக்கல்கள்
ஸ்மார்ட்போன், டி.வி. பார்க்கும் பழக்கத்தை குறைக்காவிட்டால், நாளடைவில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் கண் பலவீனம், உடல் பருமன், வயிற்று பிரச்சனைகள், வாயு பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் டென்ஷன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
* கவனம்
இப்படி டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்ப்பதால் அவர்களால் சாப்பிடுவதில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இதனால் உணவை மென்று சாப்பிடாமல், விழுங்கி சாப்பிடுவார்கள். இதனால், செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இரவில் இப்படி சாப்பிட்டால் தூக்கம் சீர்குலையும்.
* அதிகம்
டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும். இதனால் உண்ட உணவு எளிதாக ஜீரணமாகாது. சில சமயங்களில், அதிகப்படியான உணவினால் மூச்சுவிடக்கூட முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும்.
* உறவு பாதிப்பு
சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்க்கும் பழக்கத்தால் தங்கள் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்காது. சாப்பிட்ட பிறகும் அந்த பழக்கத்தை தொடரும்போது அவர்கள் தனி உலகத்தில் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டுவிடும். இதனால் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த விளைவு டீன் ஏஜ் பருவத்தினரை அதிகமாக பாதிக்கிறது. சாப்பிடும்போது, சில நேரங்களில் ஸ்மார்ட்போனில் அதிகமாக கவனத்தை வைப்பதால், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. இது உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முடிந்தவரை சாப்பிடும் போது டி.வி., போன் பார்க்காமல் இருப்பதை தவிர்க்கவும். அதுதான் நல்லதும் கூட.
- ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
- புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
குறைந்த நேரத்தில் பயணிகளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்வதால் இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
நேற்று திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்தன.
இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழுத்து மூலமாக புகார் அளித்தனர்.
இதையடுத்து புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. உணவுக்காக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கூறும் போது,
புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவின் தரத்தினை ஆய்வு செய்யும் வகையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் வரும் 25-ந் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பகுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பால் பொருட்களில் உள்ள கலப்படங்கள் குறித்தும், மசாலாப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் அஜினோ மோட்டோ மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், உப்பில் அயோடின் பரிசோதனை மேற்கொள்ளவும், எண்ணெய் வகைகளில் வேறு எண்ணெய் கலப்படம் குறித்தும், பருப்பு வகைகளில் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும், டீ மற்றும் காப்பியில் இரும்புத் துகள்கள் மற்றும் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள்அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பது குறித்து இவ்வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சம்பத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கசாமி, கார்த்திக், ஜேம்ஸ், மகேஷ் மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வக நடமாடும் வாகனப் பணியாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.
- அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடும் செயல்பட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை பாதிப்பாக மாறும் நிலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவை செய்யவிரைவாக அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பருவமழை பாதிப்பின்போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.
மின்சாரம், கைபேசி, குடிநீர், மருத்துவமனை ஆகியவைகளை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடு ம்செயல்பட வேண்டும்.
அப்படி செயல்பட்டால் நான் மனிதநேயத்தோடு செயல்பட்டதற்கான உரிய மதிப்பு மக்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜி பாஸ்கர், அண்ணாதுரை, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடை ஆய்வு.
- பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து அங்கிருக்கும் வருகை பதிவேடு மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடம் சரியாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
அங்கு லேப்டாப், எக்ஸ்ரே கருவிகளை பார்வையிட்டார் மேலும் மருத்துவர் ராஜ்குமாரிடம் விபரங்களை கேட்டறிந்தார் பிறகு மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.
அங்கு அரிசி எடை உள்ளிட்ட பொருட்களின் தரம் சரியாக இருக்கிறதா என்றும் அங்கு வாங்கும் நபர்களிடம் பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.
இதனை அடுத்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.
பிறகு மதுக்கூர் வடக்கு பகுதியில் வயலில் நானோ யூரியா செயல் விளக்க ஆய்வு மேற்கொண்டார்.
50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கினார்.
இந்த ஆய்வு போது மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜி, பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் மதுக்கூர் உதவி வேளாண்மை இயக்குனர் திலகவதி மற்றும் அதிகாரிகள் பல கலந்து கொண்டனர்.
- அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.
- ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் பெருமாள் கீழ வீதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமயலறை கட்டடம் இல்லாததால், அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.
எனவே, உயர்நிலைப் பள்ளிக்கு சமயலறை கட்டடம் கட்ட வேண்டுமென நாகை எம்.எல்.ஏவிடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.
இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






