search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Impact"

    • மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டெய்னர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள், நிலக்கரி யார்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் 40 ஆயிரம் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும், வண்டலூர் சாலை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கின்றன.

    இந்நிலையில் மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரியிடம் மனு அளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.


    இந்நிலையில் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வல்லூர் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையில் ஏற்படும் தூசிகள் கடை முழுவதும் பரவி வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் வராததால் ஓட்டல்கள், டிபன் கடைகள், டீக் கடைகளை வியாபாரிகள் மூடி வருகிறார்கள். மேலும் காய்கறி, பழக்கடைகள் முழுவதும் தூசி மற்றும் மணலால் நிரம்பி காணப்படுவதால் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணிவரையும் திறந்து வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் கடையை காலி செய்து விட்டு வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு மேலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது.
    • மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனைகளும் இங்கு ஏராளம். இருந்த போதிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். திருவனந்தபுரம் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் ஆஸ்பத்திரிகளை போன்று நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. இதனால் வசதி படைத்த வர்கள் கூட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற விரும்பு கின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் கேரள மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரு சிக்கலான நிலை உருவாகி இருக்கிறது. கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் எதிரொலித்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாதம் அது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டது. பல துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிதி நெருக்கடி மருத்துவத் துறையையும் பாதித்துள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருந்து விநியோகத்தில் ஏராளமான வினியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அரசு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வழங்கி வந்தபடி இருந்தது. இந்நிலையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பல மாதங்களாக மாநில அரசு வழங்காமல் உள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.143கோடி தொகையை விநியோகஸ்தர்களுக்கு மாநில அரசு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவ னந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.50கோடி வரை பாக்கி வைத்துள்ளது.

    அதேபோல் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ17.55 கோடியும், கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ23.14 கோடியும், எர்ணாகுளம் பொது மருத்துவமனை ரூ10.97 கோடியும், கோழிக்கோடு பொது மருத்துவமனை ரூ3.21 கோடியும் பாக்கி வைத்துள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு அறுவை சிகிச்சை நிறுவன விநியோகஸ்தர்கள் மாநில அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க அரசு நடவ டிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த அறுவை சிகிச்சை உபகரண நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அந்தந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிதொகையை வருகிற 31-ந்தேதிக்குள் கட்ட தவறி னால், உபகரணங்கள் சப்ளை நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது. அதன் எதிரொலியாக அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அங்கு இருதய அறுவை சிகிச்சைகள் ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. பின்பு இரண்டு மாத நிலுவை தொகையான 6 கோடி ரூபாயை அரசு செலுத்தியபிறகே விநியோ கஸ்தர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை உபகரணங்களை சப்ளை செய்தனர். பின்பு தான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கின.

    இந்தநிலையில் தற்போது அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்கள் சப்ளையை நிறுத்துவோம் என்று கூறி இருப்பதால் தற்போது மீண்டும் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

    அவர்கள் கூறியிருப்பது போல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் சப்ளையை நிறுத்தினால் மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி களில் ஏப்ரல் மாதம் முதல் அறுவை சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தட்டுப் பாடு ஏற்படும்.

    இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நோயா ளிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

    தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு நோயாளிக்கும் தேதி குறிப்பிடப்பட்டே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையே நிலவி வருகிறது.

    இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது முற்றிலும் தடைபடும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    அறுவை சிகிச்சை நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முற்றிலுமாக வழங்கி, பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    • காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
    • நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும்.

    ஊட்டி:

    கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் வனநோய் என்ற குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 53 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியானார்கள். குறிப்பாக அங்குள்ள உத்தரகர்நாடகம் ஷிவமொகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.

    தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

    இந்த வகை காய்ச்சலை பி.சி.ஆர். மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம். இந்த நோய் ஓரிரு வாரங்களில் குணமாகி விடும். சிலருக்கு தீவிர எதிர்விளைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள தை அடுத்து தமிழக எல்லை யோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்ப டுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரி டீன் கீதா லட்சுமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும். கா்நாடகம், கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால், அந்த மாநிலங்களில் ஏற்படும் டெங்கு, குரங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்துக்குள் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகமும், சுகாதார துறையும் நடவடி க்கை எடுத்து வருகிறது.

    இதில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை யாருக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகள் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆழ்வார்திருநகரி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிய ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    அதேநேரம் இதுவரை பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிகளாக இருந்து வந்த உடன்குடி பகுதியில், கனமழை காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஆறு மற்றும் ஏராளமான தற்காலிகமான நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாமே சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

    இந்த ஆண்டு எல்லாமே முழுமையாக நிரம்பிவிட்டது என்று விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்துடன் இணைந்த சடைய நேரி கால்வாயில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    இதனால் உடன்குடி அருகே உள்ள சடையனேரி குளம் கிழக்கு பகுதி உடைந்தது, அதில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள மெஞ்ஞானபுரம், மானிக்கபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, மருதூர் கரை, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, என்.எஸ். நகர், சிங்கராயபுரம், வட்டன் விளை, வெள்ளாளன் விளை, சீயோன்நகர், செட்டி விளை, சிதம்பரபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள கருப்பட்டி, கற்கண்டு அனைத்தும் மழையிலும், வெள்ள நீரிலும் நனைந்தும் நாசமாயின.

    மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தற்காலிகமாக சுமார் 10 நாட்கள் வேறு இடங்களில் செயல்பட்டது. இதன் காரணமாக உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் நேர்வழி சாலையும், உடன்குடியில் இருந்து பரமன் குறிச்சி செல்லும் நேர்வழிச் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது.


    நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் மக்கள் சுமார் 25 நாட்களாக பல கிலோமீட்டர் சுற்றி சுற்றி சென்று வந்தனர்.

    இந்நிலையில், வட்டன் விளை மற்றும் சீயோன்நகர் பகுதியில் முதல் கட்டமாக ஏராளமான பம்புசெட், நீர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை அருகில் உள்ள செம்மணல் தேரியில் கொண்டு சேர்க்கும் பணி இரவு பகலாக 10 நாட்கள் நடந்தது.

    தண்ணீர் அப்புறப்படுத்தவில்லை. குறையவும் இல்லை, அடுத்து மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மருதூர் கரையில் சாலையை உயர்த்தி 15 நாட்களுக்கு பின் போக்குவரத்தை தொடங்கினர். உடன்குடியில் இருந்து செட்டியாபத்து மெஞ்ஞான புரம் வழியாக நெல்லைக்கு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பின்பு சியோன் நகர் அருகே பல லாரி மணல் மற்றும் கற்களை கொட்டி தரைப் பாலத்தை சுமார் 25 அடி உயர்த்தி 25 நாட்களுக்குப் பின் போக்குவரத்தை தொடங்கினர்.

    ஆனாலும் இன்று வரை சுமார் 40 நாட்கள் ஆகியும் வட்டன் விளை ஊருக்குள் பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வர முடியாத அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்திற்கு இன்னும் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள தேங்காய்கள் மற்றும் விவசாய பொருட்ககளை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு தற்காலிக படகு போல அமைத்து அதில் சென்று தேங்காய் மற்றும் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

    தோட்டத்திற்கு நீச்சலில் செல்கிறார்கள். வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.


    இன்று வரை விவசாயிகள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வடியாத வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

    இது பற்றி விவசாயிகள் கூறும் போது, நிரந்தரமாக வடிகால் அமைத்தால் தான் இனி தண்ணீர் வடியும். தண்ணீர் வடிவதற்கு எந்த விதமான சூழ்நிலையும் தற்போது இல்லை.

    தண்ணீர் தேங்கி 40 நாட்களை கடந்து விட்டதால் அதிகமான அளவில் சேறும்சகதியும் சேர்ந்து விட்டதால் தேங்கியதண்ணீர் பூமிக்குள் இறங்கும் நிலைமை இல்லை.

    அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்தால் தான் எங்கள் விவசாயங்களை நாங்கள் காப்பாற்ற முடியும். மீண்டும் புதியதாக விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

    தரைமேல்பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற ஒரு சினிமாபாடலை பாடிக்கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீருக்குள் சென்று தங்கள் தோட்டத்தில் உள்ள விவசாய பயிர்களை வெளியே கொண்டு வருவது மிகவும் பரிதாபமாகவும், பரிதவிப்பாகவும் உள்ளது.

    • உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் செத்து மிதக்கின்றன.

    சென்னை:

    சென்னை, எண்ணூர் பெரியகுப்பத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழி ற்சாலையில் மூலப்பொருளான அமோனியா திரவம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 12,500 டன் கொள்திறன் கொண்ட சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    அம்மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் உள்ள சிறு துறை முகத்திலிருந்து குழாய்கள் மூலமாக திரவ வடிவில் மைனஸ் 33 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் இத்தொழிற்சாலை சேமிப்பு தொட்டியில் சேகரி க்கப்பட்டு, உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொழி ற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் குழாயில் கசிவு ஏற்பட்டு அமோனியா வாயு பரவியது.

    இதனால் அதனை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதிக்கப் பட்டனர். அவர்களுக்கு கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான மக்கள் அமோனியா வாயுவில் இருந்து தப்பிப்பதற்காக திருவொற்றியூர் டோல்கேட் வரை வந்து அந்த பகுதியில் தஞ்சம் அடைந்தனர். மேலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வாயு கசிவை நிறுத்தினார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 நுரையீரல் நிபுணர்களை கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையின் தரத்தை மதிப்பீடு செய்ய தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காற்றில் 0.57 பிபிஎம் அம்மோனியா வாயு கலந்திருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் வாயு கசிவின்போது, தொழிற்சாலை நுழைவு வாயிலில் 28 பிபிஎம் அம்மோனியா வாயு இருந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 51 சதவீதம் அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே அமோனியா வாயுவை சுவாசித்தவர்களுக்கு காய்ச்சலும் பரவ தொடங்கியுள்ளது. முதலில் அவர்களுக்கு தொண்டை எரிச்சலுடன் சளி தொற்று காணப்பட்டது. பின்னர் காய்ச்சல் ஏற்பட்டது. அமோனியா வாயுவை சுவாசித்த 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தொழிற்சாலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவில் பெண்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். சில ஆண்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே அமர்ந்திருந்தனர்.

    இன்று காலையில் மீண்டும் பொதுமக்கள் திரண்டு வந்து 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். உரத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டு இருந்தாலும், அதை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே குழாயில் ஏற்பட்ட கசிவால் அமோனியா கடலில் கலந்தது. இதனால் எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் செத்து மிதக்கின்றன. மேலும் கடல் நீர் வெள்ளை நிறமாக மாறியதுடன் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
    • எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்த எண்ணெய் படலம் கடலில் பழவேற்காடு வரை படர்ந்தது. இதனால் பழவேற்காடை சுற்றி உள்ள மீனவ கிராமமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.ஏற்கனவே புயல் காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் எண்ணெய் படலத்தால் சுமார் 40 கிராம மீனவர்கள் மீன்பி டிக்க கடலுக்கு செல்லாமல் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பழவேற்காடு பகுதி மீனவ கிராமமக்கள் தங்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் 40 மீனவ கிராமமக்கள் நிவாரணம் கேட்டு நாளை சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்து போராட்டம் அறிவித்து உள்ளனர்.இதற்கான ஆயத்த பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திலும் மனு அளித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சுதாகர், திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகுமார், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், மாவட்ட மீன் வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோர் மீனவ கிராம மக்களை அழைத்து பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்ட பத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மாவட்ட கலெக்டர் தலைைமயில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    நாளை நடைபெறும் போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க திட்டும் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, 40 கிராமமீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மீன் பிடிக்க செல்லவில்லை. எண்ணை கழிவால் ஆயிர த்திற்கும் மேற்பட்டமீன்பிடி வலைகள் படகுகள் சேதமடைந்துள்ளன. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே மீனவ கிராம மக்கள் முடிவெடுத்து பேரணியில் குடும்பமாக பழவேற்காடு, பொன்னேரி ,மீஞ்சூர், திருவெற்றியூர் சாலை வழியாக சென்னை கோட்டை வரை நடந்தே சென்று கோரிக்கை மனு வழங்க உள்ளோம் என்றார்.

    • பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.
    • பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து செட்டியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், பாளையங்கோட்டை வழியாக நெல்லை செல்லும் போக்குவரத்து பாதை மிகவும் முக்கியமான போக்குவரத்து நிறைந்த பாதையாகும்.

    இந்தப் பாதையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளது. உடன்குடியில் இருந்து தினசரி 20 முறை நெல்லைக்கு பஸ் சென்றது. தற்போது ஏற்பட்டு கனமழை காரணமாக செட்டியாபத்து, லட்சுமிபுரம், மருதூர் கரை, நாசரேத் மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்னும் வெள்ளம் வடியவில்லை.

    பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி- நெல்லை இடையே போக்குவரத்து இன்று 10-வது நாளாக தொடங்கவில்லை.

    இந்த வழித்தடத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வந்து செல்வார்கள். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.

    இந்தப் பாதையை உடனடியாக சரி செய்து உடன்குடி -நெல்லைக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மாநில பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 475 பேர் வந்துள்ளனர்.

    ஏற்கனவே 8 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ள நிலையில் கூடுதலாக இரு குழுக்கள் வர உள்ளன. மீட்புப் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 41 இடங்களில் மழை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 502 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 பேர் தங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் 9 முகாம்களில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 முகாம்களில் 870 குடும்பங்களைச் சேர்ந்த 4,056 பேர் தங்கியுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 235 இடங்களில் மழை நிவாரண முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் தாமிரபரணி நீர் புகுந்துள்ளது. சில இடங்களில் குளங்கள் உடைந்து உள்ளன. அந்தப் பகுதிகளில் படகுகள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை மாநகரைப் பொருத்தவரையில் மேலப் பாளையம், தச்சநல்லூர் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.

    சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக் கூடிய இடங்களில் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்கவும் ஆவின் பால் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • விலைவாசி, வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே சாட்சி யாபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மான சாராம்சத்தின் விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டதிற்கு ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலா ளருமான லட்சுமி நாரா யணன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேஷ், மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய தாவது:-

    கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் திறக்கப்பட அடிப்படை காரணம் தி.மு.க. தான். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மது கடை களையும் மூடவில்லை, மிகப்பெரிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை. புதிய திட்டங்க ளையும் அறிவிக்கவில்லை.

    கடந்த கால எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி களில் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று பொற்கால ஆட்சி நடத்தப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து மதத்தினர்களும் புனித யாத்திரை மேற்கொள்ள கோடிக் கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மாணவ- மாணவிகளுக்கு விலை யில்லா மடிக்கணினி, மிதிவண்டி அதேபோன்று மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வழங்கப்பட்டது.

    நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்பதற்காக அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 ஆயிரம் டாக்டர்கள் உருவாகி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகள், தொழிலா ளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்ப டைந்து, விலைவாசி உயர்வு, வரி உயர்வால் பொது மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்ட த்தில் தலைமை கழக பேச்சாளர் பலகுரல் சந்தானம், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், விருதுநகர் மாவட்ட முன்னாள் இந்து சமய அறங்கா வலர் குழுத் தலைவர் பல ராம், மாமன்ற உறுப்பினர் கரை முருகன், சிவகாசி ஒன்றிய கழக துணை செயலாளர் இளநீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • யாருக்காவது காய்ச்சல், டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும்
    • காய்ச்சல் அறிகுறி ஏற்படுபவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி(வயது 28). குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    டெங்குவால் கடந்த 2 நாட்களில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

    புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம், குரும்பாபேட் பகுதியில் மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர். யாருக்காவது காய்ச்சல், டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும் என்று சுகாதாரக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட்ட பிறகு இயல்பு நிலை திரும்பி விடும் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குவதாலும் காலதாமத சிகிச்சையாலும் உயிர்ப்பலி ஏற்படுகிறது. காய்ச்சல் அறிகுறி ஏற்படுபவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    வீட்டையும் சுற்றுபுறத்தையும் மக்கள் சுத்தமாக வைக்க வேண்டும். கொசு உருவாகாத வகையில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    • 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதுஅடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது .கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், லால்பேட்டை, வேப்பூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடும் வெயிலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு ெபாதுமக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    வானமாதேவி - 32.0, குப்பநத்தம் - 31.0,குறிஞ்சிப்பாடி - 30, வடக்குத்து - 30,அண்ணாமலைநகர் - 26.4,விருத்தாசலம் - 26.0, பரங்கிப்பேட்டை - 22.8, கடலூர் - 21,கொத்தவாச்சேரி - 21, பண்ருட்டி - 20, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 18, கலெக்டர் அலுவலகம் - 17.2, லக்கூர் - 15.4,. காட்டுமயிலூர் - 15,காட்டுமன்னார்கோவில் - 14.3, புவனகிரி - 14, மீ-மாத்தூர் - 14, சிதம்பரம் - 11, வேப்பூர் - 10,தொழுதூர் - 8.5, சேத்தியாதோப்பு - 8, லால்பேட்டை - 8, பெல்லாந்துறை - 6.2,கீழ்செருவாய் - 4.

    கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 423.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    • மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    அம்பத்தூர்:

    அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை விரைவு மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயிலில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த விரைவு மின்சார ரெயில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நிற்காது.

    இந்த நிலையில் காலை 8:15 மணியளவில் கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் வந்தபோது ஒரு பெட்டியில் பயணம் செய்த கல்லூரி மாணவர் திடீரென அவசர கால அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    அபாய சங்கிலியை பிடித்து இழுத்த கல்லூரி மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    ×