search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Production"

    • உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
    • கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பல்லடம், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.

    கடந்த 1-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5-ந் தேதி 92 ரூபாய், 10-ந் தேதி 82 ரூபாய், 15-ந் தேதி 98 ரூபாய், 20-ந் தேதி 82 ரூபாய், 25-ந் தேதி 88 ரூபாய் என படிப்படியாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.

    கடந்த 27-ந் தேதி 98 ரூபாய், நேற்று 107 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த 20-ந் தேதி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 107 ரூபாயாக உயர்ந்ததால் 10 நாட்களில் கொள்முதல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. ஒரு கோழி 3 கிலோ, 2.7 கிலோ, 2.5 கிலோ என்ற நிலையில் இருந்தது. தற்போது 2 கிலோ, 2.2 கிலோவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக, 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழிகள், 41 நாட்கள் கழித்து பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு 5 வாரத்துக்கு முன்பே, 4 வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்திவிட்டனர்.

    அதனால் வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தற்போது வாரம் 4.50 கோடி கிலோ விற்பனையாகும் நிலையில், 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி சரிந்துள்ளது. அதன் காரணமாக கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
    • உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர்மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பா ளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.

    இங்கு வாங்கப்படும் வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைப்பர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,170 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,220 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.

    • விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும்.
    • ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும்

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்துக்கு உட்பட்ட கோட்டமங்கலம் பகுதியில் உள்ள பாசிப்பயறு கோ 8 ஆதார நிலை 1 விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும். பசுமைப்புரட்சிக்குப்பிறகு பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவையை பூர்த்தி செய்ததிலும், உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதற்கும் நல்ல முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, அதிக மகசூல் அளித்த ரகங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு தரமான விதைப்பண்ணைகள் அமைத்து, வயலாய்வுகள் மேற்கொண்டு பெறப்பட்ட சான்று செய்யப்பட்ட விதைகள் முக்கிய காரணமாக இருந்தன. ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும். தற்போது ஆதார நிலை விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாசிப்பயறு கோ 8 ரகமானது 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிற பாசிப்பயறு ரகங்களுடன் ஒப்பிடும் போது 55 முதல் 60 நாட்களில் வளர்ந்து ஏக்கருக்கு 340 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஒரு செடிக்கு 20 முதல் 25 காய்களுடனும், ஒரு காய்க்கு 10 முதல் 14 விதைகள் உடன் 1000 தானியங்களின் எடை 35 முதல் 45 கிராம் கொண்டதாக இருக்கும். அஸ்வினி தண்டு துளைப்பான், மஞ்சள் மொசைக் வைரஸ் மற்றும் வேர் அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. விதைப்பண்ணை பூ பருவத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது விதை ஆதாரம், பயிர் விலகு தூரம், கலவன்கள் சதவீதம், வயல் தரம் உள்ளிட்ட காரணிகள் ஆய்வு செய்யப்படும். கலவன்கள் குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் ஆதார நிலை விதை பண்ணைக்கு 0.1 சதவீதம் , சான்று நிலைக்கு 0.2 சதவீதம் இருக்குமாறு வயல் தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு வயல் தரங்கள் பராமரிக்கப்படாத விதை பண்ணைகள் தகுதி நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சரவணன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

    • 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது.
    • காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், அட்டவணை இன துணை திட்டத்தின் கீழ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் தலைமையில், அட்டவணை இன மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது. இம்முகாம் நேற்று நிறைவு பெற்றது.

    3 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களான காளான் சூப் பவுடர், காளான் ஜாம், காளான் ஊறுகாய், காளான் பாயாசம், சிறுதானிய காளான் பிஸ்கட், சிறுதானிய காளான் கேக் போன்றவை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் காளான் அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல், உலர்ந்த காளான் மற்றும் காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா தொகுத்து வழங்கினார்.

    • உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உரிய விலை இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவ தால் உப்பு உற்பத்தி அதி கரித்துள்ளது. மாவட்டத்தில் தமிழ்நாட்டு உப்பு நிறுவனம் வாலிநோக்கம் பகுதியிலும், தனியார் உப்பு உற்பத்தி நிறு வனங்கள் மூலம் திருப்புல்லாணி, தேவிபட்டினம், நதிப்பாலம், கோப்பேரிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.உப்பு உற்பத்தி காலம் வட கிழக்கு பருவமழை முடிந்த பின் மார்ச் முதல் அக் டோபர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும்.

    உப்பளங்களில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படும். இந்தாண்டு தென் மேற்கு பருவமழை காலங்களில் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதி கரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.

    ராமநாதபும் மாவட்டத்தில் ஒரு சீசனில் 2.5 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும். உப்பு உற்பத்தியில் மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் 29 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். தற்போது வெப்பம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தியும் அதிக ரித்திருப்பதால் உற்பத்தி யாளர்களும், உப்பள தொழிலாளர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    தற்போது உப்பளங்களில் உப்பு மலை போல் குவிக்கப் பட்டுள்ளது. டன் உப்பு சில மாதங்களுக்கு முன் வரை டன் ரூ.2500 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் உப்பு ரூ 1200 முதல் ரூ 1600 வரை விற்பனை ஆகிறது. தற்போதுள்ள விலைவாசி மற்றும் கூலி ஆட்களின் சம்பளம் உயர்வு உள்ளிட்ட வைகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலை போதுமானதாக இல்லை. ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    சீசன் முடிய சில மாதங்களே உள்ள நிலை யில் உப்பளங்களில் தொழி லாளர்கள் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை யில் சரிவு ஏற்பட்டுள்ளது உரிமையாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது.

    • பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ,000 மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.கறிக்கோழி நுகா்வை பொறுத்தே பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி விலை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா். புரட்டாசி விரதம் காரணமாக தற்போது கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது.இதனால் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி 25 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சின்னசாமி கூறியதாவது:-

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கோழிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன. தற்போது புரட்டாசி மாத விரதம் காரணமாக கோழி இறைச்சி நுகா்வு குறைந்துவிட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கம் அடைவதை தவிா்க்கும் வகையில் 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்றாா்.

    • மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
    • அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உரிமம் பெற்ற மீன வர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .

    இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    6 லட்சம் மீன் குஞ்சுகள்

    நடப்பாண்டில் முதல்கட்ட மாக அணை யின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையம் காவிரியாற்றில் மீன்வளத்துறை சார்பில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் ரோகு 4.5 லட்சமும், மிர்கால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆர்.டி.ஓ. தணிகாசலம், சதாசிவம்

    எம்.எல்.ஏ. (பா.ம.க.) மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா்.

    மங்கலம்:

    கழிவுப்பஞ்சு விலை உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட காரணங்களால் 160 ஓ.இ. மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது தொடா்பாக திருப்பூரை அடுத்த மங்கலத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மறுசூழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவை, திருப்பூா், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 680 ஓ.இ.(ஓபன் எண்ட் மில்கள்) மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 290 மில்களில் காடா துணிக்குத் தேவையான கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், திருப்பூா், கோவை, வெள்ளக்கோவில், உடுமலை, ராஜாபாளையம் ஆகிய பகுதிகளில் கிரே உற்பத்திக்கான ஓ.இ.மில்கள் அதிக அளவில் உள்ளன. கிரே நூல்களை பயன்படுத்தி விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

    கலா் நூல்களில் பெட்ஷீட், லுங்கி, துண்டு, மெத்தை விரிப்பு உள்ளிட்ட ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருளான கழிவுப்பஞ்சு பருத்தி விலையில் இருந்து சுமாா் 75 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் மின்சார கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான பீக் ஹவா்ஸ் கட்டணம் , டிமாண்ட் சாா்ஜ் கட்டணத்தால் தொழில் நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, கழிவுப் பஞ்சு விலையை கட்டுப்படுத்தக் கோரியும் மின்சார கட்டணத்தை குறைக்கக் கோரியும், ஓ.இ.மில்களில் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் முதல்கட்டமாக தமிழகத்தில் 160 ஓ.இ. மில்களில் உற்பத்தி நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 2.70 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.

    மேலும் எஞ்சியுள்ள ஆா்டா்களை முடித்தவுடன் ஓரிரு நாள்களில் அனைத்து மில்களும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது 2.5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்றாா்.

    • மதுரையில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் 20-ந் தேதி நடைபெறுகிறது.
    • உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவன பிரதிநிதிகள் இன்று காலை நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் சமீபத்தில் முதல்- அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டணங்களை குறைத்தால் மட்டுமே சிறுதொழில் நிறு வனங்கள் தங்கு தடையின்றி இயங்க முடியும். எனவே மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மனு கொடுத்தோம்.

    ஆனால் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. எனவே சிறு, குறுந்தொழில் நிறுவ னங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது. இந்த நிலையில் திருச்சி செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி தமிழகம் முழுவதும் வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு செய்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் மதுரை மாவட்ட த்தில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளன. அன்றைய தினம் காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தாழ்வழுத்த மின் சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுககு, 50 கிலோவாட் வரை ரூ.35 ஆகவும், 51 முதல் 112 கிலோவாட் வரை ரூ.75 ஆகவும் குறைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உச்ச பயன்பாடு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத் திற்கு 25 சதவீத மின் கட்டண உயர்வை 15 சதவீதம் ஆக குறைப்பது தொடர்பாக அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது. ஆனாலும் இதனால் பெரிய அளவில் பலன் இல்லை.

    தமிழக மின்வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் கால தாமதப் படுத்து கின்றனர். லட்சக்கணக்கில் பணம் செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பின் அளவை குறைக்க முடியும் என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனால் எண்ணற்ற சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் சிறு தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

    கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை மீட்பது தொடர்பான உயர் மட்டக் குழுவின் 50 பரிந்துரைகளை உடனடி யாக செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் ககளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல்.
    • 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) தண்ணீர் தினத்தன்று கிராமசபா கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.

    இக்கிராமசபா கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினம், 2022-23 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதித்தல், சுத்தமான் குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் விரிவான கிராம சுகாதாரம் பற்றி எடுத்துரைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து இக்கிராமசபையில் விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே, இக்கிராமசபா கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை விவாதித்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடன்குடி சுற்றுப்புற பகுதிகிராமங்களில் பனைமரத்தில் பதநீர் எடுக்கும் பணி தொடங்கியது.
    • ஒரு லிட்டர் பதநீர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உடன்குடி:

    உடன்குடிசுற்றுப்புற பகுதிகிராமங்களில் பனைமரத்தில் பதநீர் எடுக்கும் பணி தொடங்கியது. கருப்பட்டி உற்பத்தி விரைவில் தொடங்கும் என தெரிவித்தனர். உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உருவாகும் கருப்பட்டி உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு ஊர் ஊராக சென்று விற்பனை ஆகும்.

    ஒவ்ேவாறு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என 5 மாதங்கள் நடைபெறும். இந்த ஆண்டு இப்பகுதியில் மழைமிக மிக குறைவாக பெய்ததால் பனைமரத்தில் ஏறி இறங்கி, பதநீர் எடுக்கும் பணி முன்னதாக தொடங்கி, தற்போது பதநீர் வந்துவிட்டது. குறைவான பதநீர் இருப்பதால் இதைகாய்ச்ச முடியாது என்பதற்காக பதநீராகவே விற்பனை செய்கின்றனர்,

    ஒரு லிட்டர் பதநீர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உடன்குடி பகுதியில் பல இடங்களில் பதனீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. இது பற்றிபதநீர் விற்பனை செய்த ஒரு பெண் கூறியதாவது:-

    தற்போது குறைவாகவே பதநீர் கிடைப்பதால் அதை விற்பனை செய்கிறோம், கூடுதலாக பதநீர் வரும்போது கருப்பட்டி தயார் செய்து விற்பனை செய்வோம். எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் கருப்பட்டியை விரைவில் உற்பத்தி செய்வோம் என்று கூறினார்.

    • அட்மா திட்டத்தின் கீழ் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயிற்சி, தளிகை கிராம கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • தளிகை கிராம கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஜெயந்தி கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனம் குறித்து பயிற்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டாரம் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயிற்சி, தளிகை கிராம கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    சிறப்பு பயிற்றுநரான குமாரப்பாளையம், ரிட்டிக்ஷா சுற்றுசூழல் பண்ணை மற்றும் வர்த்தக மேலாளர் மதன்ராஜ், அசோலா உற்பத்தியும் அதன் பயன்பாடுகளும், அசோலாவின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள், பாத்திகளில் அசோலா உற்பத்தி, பராமரிப்பு, அறுவடை போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி வழங்கினார்.

    தளிகை கிராம கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஜெயந்தி கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனம் குறித்து பயிற்சியளித்தார். நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, அசோலா மற்றும் பசுந்தீவன உற்பத்தியின் அவசியம் குறித்து பயிற்சி வழங்கினார்.

    வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார், தோட்டக்கலைத்துறை உதவி தோட்டக்கலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர்.

    அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவேற்றம் செய்து, பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    ×