search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protesting"

    • தேசியக்கொடியை முண்டாசாக அணிந்து வந்திருந்ததால் பரபரப்பு
    • உறவினர்கள் சொத்துக்களை அபகரித்ததாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை. 

    ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மனைவி, மாமியார், மகள், மற்றும் குழந்தையுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் தவுலத் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது போராட்ட த்தில் ஈடுபட்ட பெண் கூறியதாவது:-

    எங்களுக்கு மேட்டு ப்பாளையம் பகுதியில் 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனது உறவினர்கள், எனக்கு தெரியாமலேயே தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு விற்று விட்டனர்.

    அதில் எனக்கான பங்கையும் அவர்கள் தரவில்லை. இதுதொ டர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    • சேலத்தில் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை:சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யும் வரை கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் தொடரும்
    • மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் அறிவிப்பு

    புதுக்கோட்டை , 

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட மைய உயர்மட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் கலந்துகொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் அரசுக்கு நற்பெயர் பெற்று தரும் விதமாக மகளிர் உரிமை திட்டம் , இணைய சான்றுகள் , பட்டா மாறுதல் போன்ற பணிகளில் சிறப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே முருங்கப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தபோது மேடை சரிந்து விழுந்ததாக கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    பொதுவாக கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது காவல் துறைப் பணி என்பது அனைவருக்கும் தெரியும். கூட்டம் நெரிசல் ஆகாமல் விழாவை நடத்த வேண்டிய பொறுப்பு ஒருங்கிணைத்த வருவாய் துறை சாரும்.

    சரியான திட்டமிடல் இல்லாமல், சரியான வழிகாட்டு என்று நெறிமுறைகள் இல்லாமல் விழாவினை ஒருங்கிணைத்த அதிகாரிகள் உள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

    மேலும் இது போன்ற முகாம்களுக்கு செலவினங்களை செய்யும் கிராம நிர்வாக அலுவலர் பெயரில் எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை கண்டித்து சேலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது

    பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படும் வரையில் போராட்டத்தை விரிவு படுத்த உள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற செயலால் அரசுக்கும் கடைநிலை அரசு ஊழியர்களுக்கும் பிணக்கு ஏற்படும் போது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டா முறையாக பதியப்படாததை கண்டித்துதிருமயம் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
    • 32 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்கள்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை, திருமயம் தாலுகா, ராயபுரம் வாசுகிபுரத்தில் 32 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை முறையாக பதியப்படாததை கண்டித்து, திருமயம் தாசில்தார் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். சங்கர்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் சலோமி, மாவட்ட செயலாளர்ஜீவானந்தம், வெகுஜன அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள் ஸ்ரீதர் சண்முகம், நாராயணன், ஜனார்த்தனன், அசோகன், கவிபாலா, பாண்டிசெல்வி, சுசிலா, வைகை ராணி, வீரமணி, பெருமாள், வீரையா, நல்லதம்பி, ரகுமான் உள்ளிட்டோர் பேசினர். 

    • போலீசாருடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
    • நாம் தமிழர் கட்சியினர் திடீரென இயக்குனர் அலுவலகத்திற்கு கொடிகளுடன் வந்தனர். செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    கொரோனா கால கட்டத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் 165 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

    கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

    இக்கட்டான காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனால் அவ்வப்போது 3 மாதத்திற்கு ஒருமுறை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதிக்கு பிறகு அவர்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட வில்லை. அதேநேரத்தில் சட்டசபையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய வர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதனிடையே புதுவை அரசின் சுகாதாரத் துறைக்கு 105 நர்சுகளை நியமிக்க அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்த பணி யிடங்களில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கி நிரப்ப வேண்டும் என நர்சுகள் வலியுறுத்தினர்.

    இன்று பாரதி பூங்கா வில் காலை 9 மணிக்கு அவர்கள் திரண்டனர். காலை 11 மணியளவில் அவர்கள் திடீரென சட்டசபையை அடுத்துள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வரும் நேரம் என்பதால், அவர்களை இயக்குனர் அலுவலகத்துக்குள் செல்லும்படி கூறினர்.

    ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து அவர்களை வலுக்கட்டாயமாக, குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர்.

    இதனால் செவிலியர் களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் நர்சுகள் சுகா தாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நுழைந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொரோனா காலத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியேவர அச்சப்பட்ட காலத்தில் பணி செய்தோம். எங்கள் உயிரையும் பொருட் படுத்தாமல், கொரோனா காலத்தில் பணியாற்றிய எங்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் திடீரென இயக்குனர் அலுவலகத்திற்கு கொடிகளுடன் வந்தனர். செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து இயக்கு னர் அலுவலகத்தில் நுழைவு வாயிலை போலீசார் மூடினர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • அரசுக்கு எதிராக மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    மதுரை

    திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மோனிகாரணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சட்டமன்ற எதிர் கட்சி துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அரசாணை வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து பூமி பூஜை நடத்தப்பட்டு, நில எடுப்பு பணி தொடங்கப் பட்டது. தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    அதேபோல் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில ஒப்படைப்பு பணி நடை பெற்று, டெண்டர் கோரப் பட்டது. தற்போது பழைய நிலையத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல் கட்ட திட்டமிடப்பட்டு அந்த திட்டமும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது கூட, மத்திய அரசு சில டோல்கேட் அகற்றப்படும் அறிவித்தது. அதில் கப்பலூர் டோல்கேட்டையும் அகற்ற தமிழக அரசு வலியு றுத்த வேண்டும்.

    திருமங்கலம் தொகுதியில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பாராமுகம் தான் காட்டப் பட்டு வருகிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்துடன் திருமங்கலம் தொகுதியின் அடிப்படை வசதி குறித்தும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கோரியும், ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தும் எந்த நடவ டிக்கை எடுக்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை திருமங்கலம் தொகுதிகளுக்கு செய்து கொடுத்தோம். தற்போது எந்த திட்டங்களும், நிதியும் வரவில்லை.

    திருமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் பணி, புதிய பஸ்நிலையம் திட்டம், அதேபோல் கப்பலூர் டோல்கேட் அகற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அனுமதியை பெற்று தி.மு.க. அரசை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தை நடத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை அபகரித்துக் கொண்டதாக கூறி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • அபகரித்த வீட்டை தன்னால் மீட்க முடியாமல் மாரிமுத்து குடும்பத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 7-வது வார்டு அத்தாணி நாகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (50) இவர் தனது மனைவி பெரியநாயகம் (45) என்பவரின் பெயரில் உள்ள வீட்டை அதே பகுதியை சேர்ந்த சிலர் வீடு தனக்கு சொந்தம் என்று கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை அபகரித்துக் கொண்டதாக கூறி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அபகரித்த வீட்டை தன்னால் மீட்க முடியாமல் மாரிமுத்து குடும்பத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது வீட்டை மீட்டெடுக்க முடியாத விரக்தியில் மாரிமுத்து மனைவி பெரியநாயகம்(45) தாயார் கனகாம்பாள்(75) சித்தப்பா அங்கப்பன்(65) உறவினர் குமார்(50) ஆகியோர் தனது வீட்டிற்கு வெளியே கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கீர்த்தி. மற்றும் தாரமங்கலம் போலீசார் மாரிமுத்து குடும்பத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூரில் மத்திய அரசைக் கண்டித்து 13-ம்தேதி மறியல் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யு.சி. அறிவித்து உள்ளது
    • மறியலில் கலந்து கொள்ள பொதுச்செயலாளர் தண்டபாணி அழைப்பு விடுத்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி சங்கத்தின் பொதுச் செயலர் த.தண்டபாணி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, மத்திய அரசின் பல திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய அரசு கணக்கு தணிக்கை துறை மக்களவையில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யதுள்ளது. மேலும் பங்கு வர்த்தகத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளியான அதானி குழுமம் பல லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து வரும் அரியலூரில் வரும் 13-ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம் நடைபெறும். இதில பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ரெ.நல்லுச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ப.ராஜதுரை, துணைச் செயலர் ந. கோவிந்தசாமி, பொருளாளர் கு.வெள்ளையம்மாள், கயர்லாபாத் கிளை நிர்வாகி து.ராஜா, கல்லக்குடி கிளை நிர்வாகிகள் ஆ.பெரியசாமி, கு.வனிதா, பானுமதி, சாந்தி, முருகேசன், எருத்துக்காரன்பாட்டி கிளை மருதமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 324 பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 842 யூடிசி ஊழியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
    • ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே அவர்கள் ஒன்று கூடினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 6-ந் தேதி துறைரீதியிலான தேர்வு நடைபெற உள்ளது.

    324 பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 842 யூடிசி ஊழியர்கள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வுப்பாடத்தில் பழைய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது. இதை பாடத்திட்டமாக வைத்து படிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள்  போராட்டம் நடத்தினர். ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே அவர்கள் ஒன்று கூடினர். பாடத்திட்ட புத்தக நகலை கிழித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    • புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
    • அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 44-வது டிவிசன், புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

    இவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் அளித்த உத்தரவின்படி, உடனடியாக சாலை, சாக்கடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செய லாளர் செல்வக் கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் சூரிய மூர்த்தி, மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன், துணைத் தலைவர்கள் பழனி, பெரியசாமி, மண்டல தலைவர் பால கஜேந்திரன், செயலாளர் சம்பத்குமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்மா பேட்டை போலீசார், அவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இத னால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை மற்றும் விழுப்புரம் பகுதியில் இருந்து பஸ்கள் சர்வீஸ் ரோடு வழியாக சென்று வருகின்றன.

    இந்நிலையில் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார் கோவில், பகுதிகளில் மேம்பால பணிகள் முடிவடைந்த நிலையில் பஸ்கள் அவ்வழியாக மேம்பாலத்தில் செல்கின்றன.

    சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் செல்வதில்லை. இதனை கண்டித்து திருவாண்டார் கோவில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருபுவனை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் அனைத்து பஸ்களும் சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். திருவாண்டார் கோவில் வழிதடத்தில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆர்.டி.ஓ. அலுவலர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தப்படும் என்றும் அந்த கூட்டத்தில் இதுபற்றி பேசி முடிவு செய்யலாம் என்று போலீசார் சமரசம் செய்தனர்.

    இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • 3 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும்.
    • மத்திய அமைச்சர்கள் கோவைக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்.

    கோவை,

    தமிழகத்தில் உள்ள 7 பஞ்சாலைகளின் ஆலை வாயில் முன்பு என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பங்கஜா மில் ரோட்டில் என்.டி.சி பஞ்சாலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும். பரிதவிக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் வழங்கவேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.

    சம்பளம் கொடுத்து பென்ஷன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும். 3 ஆண்டு போனஸ், இதர பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை நடத்தினர்.

    இதேபோல் கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள முருகன் மில்ஸ் வாயில் முன்பாக பஞ்சாலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 1800 நிரந்தர மற்றும் 1200 ஒப்பந்த தொழிலாளர்கள் என 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மில்லில் வேலை செய்யும் குடும்பத்தினர்கள் தங்களுடைய வருவாய் இழந்து கஷ்டமான சூழலில் உள்ளனர்.

    மத்திய அரசைக் கண்டித்து, தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்திய அமைச்சர்கள் கோவைக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இந்த போராட்டத்தில் ஹெச்.எம்.எஸ், ஏ.டி.பி, சி.ஐ.டி.யு.ஐ, என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு, சி.எம்.எல். எஃப், டாக்டர் அம்பேத்கர் என்.டி.எல்.எப் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

    • மதுரையில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் 20-ந் தேதி நடைபெறுகிறது.
    • உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவன பிரதிநிதிகள் இன்று காலை நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் சமீபத்தில் முதல்- அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டணங்களை குறைத்தால் மட்டுமே சிறுதொழில் நிறு வனங்கள் தங்கு தடையின்றி இயங்க முடியும். எனவே மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மனு கொடுத்தோம்.

    ஆனால் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. எனவே சிறு, குறுந்தொழில் நிறுவ னங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது. இந்த நிலையில் திருச்சி செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி தமிழகம் முழுவதும் வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு செய்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் மதுரை மாவட்ட த்தில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளன. அன்றைய தினம் காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தாழ்வழுத்த மின் சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுககு, 50 கிலோவாட் வரை ரூ.35 ஆகவும், 51 முதல் 112 கிலோவாட் வரை ரூ.75 ஆகவும் குறைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உச்ச பயன்பாடு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத் திற்கு 25 சதவீத மின் கட்டண உயர்வை 15 சதவீதம் ஆக குறைப்பது தொடர்பாக அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது. ஆனாலும் இதனால் பெரிய அளவில் பலன் இல்லை.

    தமிழக மின்வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் கால தாமதப் படுத்து கின்றனர். லட்சக்கணக்கில் பணம் செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பின் அளவை குறைக்க முடியும் என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனால் எண்ணற்ற சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் சிறு தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

    கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை மீட்பது தொடர்பான உயர் மட்டக் குழுவின் 50 பரிந்துரைகளை உடனடி யாக செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் ககளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×