search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவனம்"

    • பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்காக வந்து உள்ளனர்.

    அதில் 450-க்கும் மேற் பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

    நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ். வின் பாஸ்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிலை தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மேலும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக காலணி தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, போக்குவரத்து விமான உதிரி பாகங்கள், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு எலக்ட்ரானிக்ஸ், வேளாண் உணவு, பொறியியல் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அமர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    இன்று 2-ம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்துள்ளனர்.

    இதற்காக குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மின் வாகனம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், ஜவுளி வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள், விண்வெளி தொழில் நுட்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

    இதில் 20 நிறுவனங்கள் தமிழக அரசால் முதலீட்டு உதவி செய்யப்பட்டதாகும். மேலும் 10 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவையாகும். இதை முதலீட்டாளர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர்.

    முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விளக்கங்களை கூறினார்கள். இதற்கான அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் முன்னிலையில் இன்றும் தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்து நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். அப்போது அவரது முன்னிலையில் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது எத்தனை லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன என்ற தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • முன்னனி ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ), TCS iON நிறுவனத்துடன் இணைந்து 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்ப டிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் அனிமேசன் சம்பந்த ப்பட்ட பயிற்சிகள் இணை யதளம் வழியாக கற்றுத்தந்து முன்னனி ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

    தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை பெற பி.இ., பி.டெக்., பி.சி.ஏ., பி.எஸ்.சி. (சி.எஸ்)., பி.எஸ்.சி. (சி.எஸ் & ஐ.டி)., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., (சி.எஸ்)., எம்.எஸ்.சி (சி.எஸ் & ஐ.டி)., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற 12-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது வரை உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், TCS iON நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் என்.க்யூ.டி. தேர்ச்சி பெற வேண்டும்.

    இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் TCS iON நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.

    இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் TCS iON நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

    இப்பயிற்சியை பெற www.tahdco.com (http://www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

    அல்லது 04364-211 217 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
    • இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப் பட்டியில் நிதி மோசடி செய்த வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டா ளர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.

    இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதையடுத்து கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராள மானோர் இந்த நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து நிதி நிறுவனத்தை அவர்களது மகள் சவுந்தர்யா, அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகி யோர் நடத்தி வந்ததாக தெரி கிறது.மேலும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு தொகை உள்ளிட்ட வற்றை வழங்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • புத்தக விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இந்திய தண்டனை சட்டம் உள்பட பொது அறிவு நூல்களும் நிறைய விற்பனையாகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் கடந்த 14 ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து இந்த விழா நாளையுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது. இதில், முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    இது தவிர, உணவு அரங்கங்களும், பண்பாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் காலையில் இலக்கிய அரங்கமும், மாலையில் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை - சிந்தனை அரங்கமும் நடைபெறுகின்றன. இதனால், கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன.

    நாள்தோறும் சுமார் 11 ஆயிரம் போ் வந்து செல்கின்றனா். குறிப்பாக, மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து தினமும் சுமாா் 8 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பொதுமக்கள் சுமாா் 3 ஆயிரம் பேரும் வருகின்றனா். இதைவிட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 9 நாள்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் போ் வந்து சென்றுள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

    நாளையுடன் புத்தகத் திருவிழா முடிவடைய உள்ளதால் வருகை தந்த தந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்கும் .

    இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு பெரும்பான்மையாக மாணவ, மாணவிகளே வருகின்றனா். பாடப் புத்தகங்கள், கையேடுகள் மட்டுமல்லாமல், திருக்கு, பாரதியாா், பாரதிதாசன் கவிதைகள், தலைவா்கள் பற்றிய நூல்கள், படக்கதைகளுடன் கூடிய நூல்களை வாங்கிச் செல்கின்றனா். கல்லூரி மாணவா்களில் 50 சதவீத அளவில் போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள், நீட் தோ்வு நூல்கள், சாரண இயக்க நூல்கள் போன்றவற்றை வாங்குகின்றனா். பிற இலக்கிய நூல்கள், நாவல்களை வாங்கும் மாணவா்களும் கணிசமான அளவில் இருக்கின்றனா்.

    இலக்கிய ஆா்வலா்கள், புத்தக வாசிப்பு பழக்கம் உள்ளவா்கள் போன்றோா் வரலாற்று, சமூக நாவல்கள், ஐம்பெரும் காப்பியகள், கதைகள், மொழிபெயா்ப்பு நூல்களை அதிகமாக வாங்கிச் செல்கின்றனா். தவிர, இந்திய தண்டனை சட்டம் உள்பட பொது அறிவு நூல்களும் நிறைய விற்பனையாகின்றன.

    மாணவா்கள் வருகை அதிகமாக இருப்பதன் மூலம் புத்தக விற்பனையும் நன்றாக உள்ளது. இதன் மூலம் வாசிப்பு பழக்கம் மேம்பட்டு வருவது தெரிய வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புத்தக விற்பனை கூடுதலாக இருப்பதாக பபாசி செயலா் முருகன் தெரிவித்துள்ளார்.

    கந்து வட்டி வழக்கு தொடர்பாக சிக்கிய மல்லூர் தி.மு.க. பிரமுகர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு 700 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம் :

    சேலம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 31), பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் மல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பூபதியிடம் (42) ரூ.50 ஆயிரம் கடன் பெற்றார். அதற்காக வட்டி 30 ஆயிரம் சேர்த்து 80 ஆயிரம் திருப்பி கொடுத்தார்.

    மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டு சவுந்தர்ராஜன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கை வாபஸ் பெறவும், ரூ.10 ஆயிரம் வட்டி கேட்டும் மீண்டும் பூபதி தொந்தரவு செய்து வந்தார்.

    இது குறித்து மல்லூர் போலீஸ் நிலையத்தில் சவுந்தர்ராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் பூபதி மீது கந்து வட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரூரல் டி.எஸ்.பி. தையல் நாயகி மற்றும் போலீசார் பூபதிக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த பூர்த்தி செய்யப்படாத வெற்று பத்திரங்கள், உறுதிமொழி பத்திரங்கள், காசோலை உள்பட 700 ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×