search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "institute"

    • அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • முன்னனி ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ), TCS iON நிறுவனத்துடன் இணைந்து 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்ப டிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் அனிமேசன் சம்பந்த ப்பட்ட பயிற்சிகள் இணை யதளம் வழியாக கற்றுத்தந்து முன்னனி ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

    தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை பெற பி.இ., பி.டெக்., பி.சி.ஏ., பி.எஸ்.சி. (சி.எஸ்)., பி.எஸ்.சி. (சி.எஸ் & ஐ.டி)., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., (சி.எஸ்)., எம்.எஸ்.சி (சி.எஸ் & ஐ.டி)., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற 12-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது வரை உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், TCS iON நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் என்.க்யூ.டி. தேர்ச்சி பெற வேண்டும்.

    இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் TCS iON நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.

    இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் TCS iON நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

    இப்பயிற்சியை பெற www.tahdco.com (http://www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

    அல்லது 04364-211 217 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும்.
    • இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் பேருந்து நிலையத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்ப பெற வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும், 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக அமையும்.

    இந்த கொள்கையின்படி தற்போதுள்ள 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 48,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே தேசிய கல்விக் கொள்கை 2020 உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

    தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கமலநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் ராஜேஷ் மற்றும் அனைத்து ஆசிரிய சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேசியக் கல்விக்கொள்கை 2020 திரும்பப்பெறவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி புதிய பேருந்துநிலையத்தில் மாநில துணைத்தலைவர் நா.அசோக்குமார் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    • கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.
    • நிறுவனம் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் வராண்டா எக்ஸெல் என்ற நிறுவனம் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளை எடுத்தனர். நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் சசிகுமார், வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி, கணிதத்துறை தலைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா, ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஸ்வரி, உடற்கல்வித்துறை இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    ×